மேலும் அறிய

நவக்கிரக கோயில்களில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ள ரூ.41 கோடி நிதி

வாழ்வில் உள்ள தடைகள் நீங்கி மன அமைதி, மகிழ்ச்சி கிடைப்பதாக ஐதீகம். இதனால் சிவன் கோயில்களில் நவக்கிரக சன்னதி தனித்துவமாக அமைந்திருக்கும், அங்கு சுற்றி வந்து பக்தர்கள் வழிபாடு செய்வார்கள்.  

தஞ்சாவூர்: தஞ்சை, நாகை, மயிலாடுதுறை மாவட்டத்தில் நவக்கிரக கோயில்களில் ரூ.41 கோடியில் சுற்றுலா பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்யப்பட உள்ளன என அதிகாரிகள் தரப்பில் கூறினர்.

ஜாதகத்தில் உள்ள கிரக தோஷங்களுக்கு பரிகாரம் செய்வதற்காக நவக்கிரக கோவில்களுக்கு செல்வது உண்டு. கிரகங்கள் நல்ல நிலையை எட்டும் போது உடல்நலம் மேம்படும், செல்வமும், செழிப்பும் பெறுகும் என்று நம்பப்படுகிறது. மேலும் வாழ்வில் உள்ள தடைகள் நீங்கி மன அமைதி, மகிழ்ச்சி கிடைப்பதாக ஐதீகம். இதனால் சிவன் கோயில்களில் நவக்கிரக சன்னதி தனித்துவமாக அமைந்திருக்கும், அங்கு சுற்றி வந்து பக்தர்கள் வழிபாடு செய்வார்கள்.  ஆனால் நவக்கிரகங்களுக்கு தனித்தனியாகவும் கோயில்கள் உள்ளன.

நவக்கிரக கோயில்கள் 9 ஆகும். இதில் 8 கோயில்கள் தமிழகத்தில் உள்ளன. ஒரு கோயில் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ளது. இதில் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறையில் சூரியனார்கோயில் (சூரியன்) உள்ளது. தஞ்சையை அடுத்த திருவையாறு அருகே உள்ள திங்களூரில் சந்திரன் கோயில் (சந்திரன்) உள்ளது. கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் நாகநாதர் (ராகு) கோயில், கஞ்சனூரில் அக்னீஸ்வரர் கோயில் (சுக்கிரன்-வெள்ளி) உள்ளது.

திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் (குரு- வியாழன்) கோயில் உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயில் (செவ்வாய்) உள்ளது. பூம்புகார் அருகே உள்ள திருவெண்காட்டில் சுவேதாரண்யேஸ்வரர் (புதன்) கோயில், கீழப்பெரும்பள்ளத்தில் நாகநாதர் (கேது) கோயில் உள்ளது. புதுச்சேரி மாவட்டம் காரைக்கால் திருநள்ளாறில் சனிபகவான் கோயிலும் உள்ளது. இந்த கோயில்கள் அனைத்தும் மிகவும் பிரசித்தி பெற்றவை.

இந்த கோயில்களுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நாளுக்கு நாள் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் வருவதால் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளில் சிரமம் ஏற்படுகிறது. இதையடுத்து நவக்கிரக கோயில்களுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் மேற்கொள்ள இந்திய சுற்றுலாத்துறை முடிவு செய்து நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இதுகுறித்து சுற்றுலாத்துறை அதிகாரிகள் கூறுகையில், தமிழகத்தில் நவக்கிரக கோயில்கள் தஞ்சை மாவட்டத்தில் 4 கோயில்களும், திருவாரூர் மாவட்டத்தில் ஒரு கோயிலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 3 கோயில்களும் உள்ளன. இந்த கோயில்களில் சுற்றுலாப்பயணிகளுக்கு வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ.40 கோடியே 94 லட்சத்து 49 ஆயிரத்து 676 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

இதில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள 4 கோயில்களுக்கு ரூ.15 கோடியும், திருவாரூர், மயிலாடுதுறையில் உள்ள 4 கோயில்களுக்கு ரூ.26 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் தங்கும் அறை, கழிவறை வசதி, குடிநீர் வசதி, நடைபாதை அமைத்தல், வாகன நிறுத்துமிடம், விளக்கு வசதி, மழைநீர் வடிகால் வசதி, சுற்றுச்சுவர் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மேற் கொள்ளப்படுகின்றன. 

இதில் ஒரு சில கோயில்களில் இந்த பணிகள் தொடங்கி உள்ளன. சில இடங்களில் இதற்கான ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் ஒவ்வொரு கோயில்களுக்கும் குறிப்பிட்ட காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அதிகபட்சமாக பணிகள் தொடங்கி 10 மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய இயலும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூரில் கண்களை கட்டிக் கொண்டு மாதர் சங்கம், மாணவர் சங்கம் போராட்டம்: எதற்காக தெரியுங்களா?
தஞ்சாவூரில் கண்களை கட்டிக் கொண்டு மாதர் சங்கம், மாணவர் சங்கம் போராட்டம்: எதற்காக தெரியுங்களா?
கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: மனித சங்கிலி அமைத்து உழவர்கள் பாதுகாப்பு சங்கத்தினர் போராட்டம்
கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: மனித சங்கிலி அமைத்து உழவர்கள் பாதுகாப்பு சங்கத்தினர் போராட்டம்
கும்பகோணத்தில் லாரி உரிமையாளர்கள் திடீர் தர்ணாவால் பரபரப்பு
கும்பகோணத்தில் லாரி உரிமையாளர்கள் திடீர் தர்ணாவால் பரபரப்பு
உயர்நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தக் கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்
உயர்நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தக் கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget