மேலும் அறிய

கைவினைப்பொருட்கள் மேம்பாட்டு ஆணையத்தை புதுச்சேரியில் இருந்து தஞ்சைக்கு மாற்ற கோரிக்கை

தஞ்சாவூரில் அதிகளவு கைவினைக் கலைஞர்கள் உள்ளதால், கைவினைப் பொருட்களின் ஏற்றுமதிக்கான வழிகாட்டு மையத்தை தஞ்சாவூரில் தொடங்க வேண்டும்.

தஞ்சாவூரில் அதிகளவு கைவினைக் கலைஞர்கள் உள்ளதால், கைவினை பொருட்களின் ஏற்றுமதிக்கான வழிகாட்டு மையத்தை தஞ்சாவூரில் தொடங்க வேண்டும் என புவிசார் குறியீடு பொருட்களின் வழக்கறிஞர் ப.சஞ்சய்காந்தி தெரிவித்துள்ளார். இந்திய ஏற்றுமதி பொருட்களின் கூட்டமைப்பு சார்பில், தஞ்சாவூரில் கைவினைப் பொருட்களின் சந்தைப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி செய்தல் தொடர்பான கருத்தரங்க கூட்டம் நடைபெற்றது. கருத்தரங்குக்கு கூட்டமைப்பின் துணை இயக்குநர் செல்வநாயகி வரவேற்றார். உதவி இயக்குநர் பாக்கியவேல் தலைமை வகித்தார். கூட்டத்தில் தஞ்சாவூர் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சகுந்தலா, முன்னோடி வங்கி மேலாளர் சீனிவாசன், பூம்புகார் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் ஸ்ரீகண்டஸ்தபதி ஆகியோர் உரையாற்றினர்.

கருத்தரங்கில் புவிசார் குறியீடு பொருட்களின் வழக்கறிஞர் ப.சஞ்சய்காந்தி பேசுகையில், இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் 45 கைவினைப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் 9 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது. இந்த பொருட்களை வடிவமைக்கும் கைவினை கலைஞர்கள் அவசியம் புவிசார் குறியீடுக்கான  சான்றிதழை பெற வேண்டும். அங்கீகாரம் பெற்ற கலைஞர்கள் தான் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியும். வெளிநாடுகளில் விற்பனை செய்வதற்கு பதிவெண் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.


கைவினைப்பொருட்கள் மேம்பாட்டு ஆணையத்தை புதுச்சேரியில் இருந்து தஞ்சைக்கு மாற்ற கோரிக்கை

மேலும், புவிசார் குறியீடு பெற்ற பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் போது, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன அமைச்சகத்தின் சான்று,  இந்திய ஏற்றுமதி பொருட்களின் கூட்டமைப்பின் சான்றிதழ், புவிசார் குறியீடு பொருட்கள் உற்பத்திக்கான சான்றிதழை அவசியம் பெற வேண்டும்.தற்போது இணையதளத்தில் கைவினைப் பொருட்கள் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தலுக்கு பிரத்தியோகமாக பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகம் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் நம்முடைய கைவினைப் பொருட்களை வாங்கி பயனடையும் நிலை ஏற்பட்டுள்ளதால், கைவினை கலைஞர்கள் இதனை நல்வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு, டிஜிட்டல் சந்தைப்படுத்துதலில் இணைந்து கொள்ள வேண்டும்.


கைவினைப்பொருட்கள் மேம்பாட்டு ஆணையத்தை புதுச்சேரியில் இருந்து தஞ்சைக்கு மாற்ற கோரிக்கை

தஞ்சாவூரில் அதிகளவு கைவினைக் கலைஞர்கள் உள்ளதால், கைவினைப் பொருட்களின் ஏற்றுமதிக்கான வழிகாட்டு மையத்தை தஞ்சாவூரில் தொடங்க வேண்டும். கைவினை கலைஞர்கள் சான்றுகளை பெற வேண்டுமானால், புதுச்சேரிக்கு செல்ல வேண்டியுள்ளது.மத்திய அரசின் கைவினைப் பொருட்களின் மேம்பாட்டு ஆணையம் புதுச்சேரியில் உள்ளதை தஞ்சாவூருக்கு மாற்ற வேண்டும். மத்திய அரசு கைவினை கலைஞர்களுக்கு தேசிய விருதுகள் வழங்கும் போது புவிசார் குறியீடு பெற்ற பொருட்களை பரிசாக வழங்கி, அப்பொருட்களுக்கு கூடுதல் மதிப்பை அளிக்க வேண்டும், தஞ்சையில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு மத்திய அரசு விருதுகளை வழங்கும் போது, தஞ்சையில் உள்ளவர்களுக்கு தான் வழங்க வேண்டும்.

வெளியூர்களில் தயாரித்து,தஞ்சை ஒவியம் என்று விற்பனை செய்கிறார்கள். அது போன்ற பொருட்களுக்கு தேசிய விருதோ மற்ற விருதோ வழங்க கூடாது என்றார்.கருத்தரங்கில் கைவினைப் பொருட்கள் வடிவமைப்பாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள், தொழில் முனைவோர் பலர் கலந்து கொண்டனர்.

தலைப்பு செய்திகள்

இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
ஏரியை தூர்வார 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சோழர்கள் பயன்படுத்திய ‘குமிழித்தூம்பு’
ஏரியை தூர்வார 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சோழர்கள் பயன்படுத்திய ‘குமிழித்தூம்பு’
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget