மேலும் அறிய

குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்... வீட்டை விட்டு வெளியில் செல்ல முடியாமல் மக்கள் அவதி

குடியிருப்பில் புகுந்த மழை நீர் கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் சூழ்ந்துள்ளது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே மாரியம்மன்கோவில் பகுதியில் சுந்தரம் மீனா நகர் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கன மழை காரணமாக முழங்கால் அளவிற்கு மழை நீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ளது. 

குடியிருப்பில் புகுந்த மழை நீர் கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் சூழ்ந்துள்ளது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் முதியோர்கள் அலுவலகத்திற்கு செல்பவர்கள் என அனைத்து தரப்பினரும் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.


குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்... வீட்டை விட்டு வெளியில் செல்ல முடியாமல் மக்கள் அவதி

குறிப்பாக தண்ணீர் அதிக அளவில் தேங்கியுள்ளதால் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை உள்ளது. தண்ணீர் வழியாக விஷ ஜந்துக்கள் வீட்டுக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக குடியிருப்புவாசிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். 

கடந்த 15 வருடங்களாக மழை பெய்தால் இதே பிரச்சினை சந்தித்து வருவதாகவும் பலமுறை மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தென்னை மரம் சாய்ந்தது

தஞ்சை பள்ளியக்ஹாரம் பகுதியில் டிட்வா புயல் காரணமாக முறிந்து விழ இருந்த தென்னை மரத்தினை தீயணைப்பு துறையினர் பாதுகாப்பாக வெட்டி அகற்றினர். தென்னை மரம் கீழே விழுந்ததும் மரத்தில் இருந்த இளநீர் காய்களை அப்பகுதி மக்கள் போட்டி போட்டு பறித்து சென்றனர்.

தஞ்சை பள்ளியக்ரஹாரம் பகுதியில் உள்ள அருள்மிகு நீலமேக பெருமாள் கோயிலில் ஏராளமான தென்னை மரங்கள் உள்ளன. இங்குள்ள தென்னை மரம் ஒன்று டிட்வா புயல் காரணமாக வேரோடு சாய்ந்து எந்த நேரமும் கீழே விழக்கூடிய நிலையில் இருந்தது.

இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் சாலையின் குறுக்கே லாரியை நிறுத்தி போக்குவரத்தை வேறு திசையில் மாற்றம் செய்து அனுப்பினர். தென்னை மரம் எந்த நேரத்திலும் சாய்ந்து விழலாம் என்ற நிலை இருந்தது. இதனால் அப்பகுதியில் யாரும் செல்லாமல் இருக்க பொதுமக்கள் பாதுகாப்பாக அப்பகுதியில் நின்றிருந்தனர்.


குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்... வீட்டை விட்டு வெளியில் செல்ல முடியாமல் மக்கள் அவதி

தொடர்ந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் லாவகமாக பொதுமக்களுக்கும், குடியிருப்புகளுக்கும் எந்தவித சேதம் ஏற்படாத வகையில் மரம் அறுக்கும் எந்திரம் மூலம் லாவகமாக மரத்தை கீழே சாய்த்தனர். அதுவரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அப்பகுதி மக்கள் மரம் கீழே விழுந்ததும் வேகமாக ஓடிச் சென்று போட்டி போட்டுக் கொண்டு மரத்தில் இருந்த இளநீரை எடுத்துச் சென்றனர். இருப்பினும் யாருக்கும் பாதிப்பு இல்லாத வகையில் மரத்தை வெட்டி அகற்றிய தீயணைப்புத்துறையினரை சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டினர்.

தலைப்பு செய்திகள்

அடுத்த கட்ட தீவிர போராட்ட அறிவிப்பு வெளியிடப்படும்... செவிலியர்கள் எச்சரிக்கை
அடுத்த கட்ட தீவிர போராட்ட அறிவிப்பு வெளியிடப்படும்... செவிலியர்கள் எச்சரிக்கை
சக்கராப்பள்ளியில் 12-ல் மக்கள் நேர்காணல் முகாம்! முன்கூட்டியே மனு அளிக்க கலெக்டர் ரேவதி அழைப்பு
சக்கராப்பள்ளியில் 12-ல் மக்கள் நேர்காணல் முகாம்! முன்கூட்டியே மனு அளிக்க கலெக்டர் ரேவதி அழைப்பு
மக்களே 10ம் தேதி முக்கியமான நாள்... தஞ்சை கலெக்டர் அறிவிப்பு எதற்காக?
மக்களே 10ம் தேதி முக்கியமான நாள்... தஞ்சை கலெக்டர் அறிவிப்பு எதற்காக?
மத்திய அரசுக்கு எதிராக 10ல் ‘மறியல்’: தஞ்சையில் 4 மையங்களில் களமிறங்கும் தொழிற்சங்கங்கள்–விவசாயிகள்
மத்திய அரசுக்கு எதிராக 10ல் ‘மறியல்’: தஞ்சையில் 4 மையங்களில் களமிறங்கும் தொழிற்சங்கங்கள்–விவசாயிகள்

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Japanese SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
Embed widget