மேலும் அறிய

குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்... வீட்டை விட்டு வெளியில் செல்ல முடியாமல் மக்கள் அவதி

குடியிருப்பில் புகுந்த மழை நீர் கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் சூழ்ந்துள்ளது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே மாரியம்மன்கோவில் பகுதியில் சுந்தரம் மீனா நகர் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கன மழை காரணமாக முழங்கால் அளவிற்கு மழை நீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ளது. 

குடியிருப்பில் புகுந்த மழை நீர் கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் சூழ்ந்துள்ளது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் முதியோர்கள் அலுவலகத்திற்கு செல்பவர்கள் என அனைத்து தரப்பினரும் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.


குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்... வீட்டை விட்டு வெளியில் செல்ல முடியாமல் மக்கள் அவதி

குறிப்பாக தண்ணீர் அதிக அளவில் தேங்கியுள்ளதால் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை உள்ளது. தண்ணீர் வழியாக விஷ ஜந்துக்கள் வீட்டுக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக குடியிருப்புவாசிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். 

கடந்த 15 வருடங்களாக மழை பெய்தால் இதே பிரச்சினை சந்தித்து வருவதாகவும் பலமுறை மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தென்னை மரம் சாய்ந்தது

தஞ்சை பள்ளியக்ஹாரம் பகுதியில் டிட்வா புயல் காரணமாக முறிந்து விழ இருந்த தென்னை மரத்தினை தீயணைப்பு துறையினர் பாதுகாப்பாக வெட்டி அகற்றினர். தென்னை மரம் கீழே விழுந்ததும் மரத்தில் இருந்த இளநீர் காய்களை அப்பகுதி மக்கள் போட்டி போட்டு பறித்து சென்றனர்.

தஞ்சை பள்ளியக்ரஹாரம் பகுதியில் உள்ள அருள்மிகு நீலமேக பெருமாள் கோயிலில் ஏராளமான தென்னை மரங்கள் உள்ளன. இங்குள்ள தென்னை மரம் ஒன்று டிட்வா புயல் காரணமாக வேரோடு சாய்ந்து எந்த நேரமும் கீழே விழக்கூடிய நிலையில் இருந்தது.

இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் சாலையின் குறுக்கே லாரியை நிறுத்தி போக்குவரத்தை வேறு திசையில் மாற்றம் செய்து அனுப்பினர். தென்னை மரம் எந்த நேரத்திலும் சாய்ந்து விழலாம் என்ற நிலை இருந்தது. இதனால் அப்பகுதியில் யாரும் செல்லாமல் இருக்க பொதுமக்கள் பாதுகாப்பாக அப்பகுதியில் நின்றிருந்தனர்.


குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்... வீட்டை விட்டு வெளியில் செல்ல முடியாமல் மக்கள் அவதி

தொடர்ந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் லாவகமாக பொதுமக்களுக்கும், குடியிருப்புகளுக்கும் எந்தவித சேதம் ஏற்படாத வகையில் மரம் அறுக்கும் எந்திரம் மூலம் லாவகமாக மரத்தை கீழே சாய்த்தனர். அதுவரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அப்பகுதி மக்கள் மரம் கீழே விழுந்ததும் வேகமாக ஓடிச் சென்று போட்டி போட்டுக் கொண்டு மரத்தில் இருந்த இளநீரை எடுத்துச் சென்றனர். இருப்பினும் யாருக்கும் பாதிப்பு இல்லாத வகையில் மரத்தை வெட்டி அகற்றிய தீயணைப்புத்துறையினரை சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டினர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

திமுக வேட்பாளர் சண். ராமநாதனுக்கு பெருகும் ஆதரவு: வல்லத்தில் தேர்தல் அலுவலகம் திறப்பு
திமுக வேட்பாளர் சண். ராமநாதனுக்கு பெருகும் ஆதரவு: வல்லத்தில் தேர்தல் அலுவலகம் திறப்பு
வேட்பாளர் அறிவிக்கப்படாத நிலையில் பாஜக நிர்வாகி சுயேட்சையாக வேட்புமனு தாக்கல்
வேட்பாளர் அறிவிக்கப்படாத நிலையில் பாஜக நிர்வாகி சுயேட்சையாக வேட்புமனு தாக்கல்
நாச்சியார்கோவில் ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தேரோட்டம்
நாச்சியார்கோவில் ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தேரோட்டம்
தஞ்சாவூரில் 100% வாக்குப்பதிவை உறுதி செய்ய கலெக்டர் அதிரடி! முதல் வாக்காளர்கள் உறுதிமொழி
தஞ்சாவூரில் 100% வாக்குப்பதிவை உறுதி செய்ய கலெக்டர் அதிரடி! முதல் வாக்காளர்கள் உறுதிமொழி
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?
வேட்பாளர் தேர்வில் இழுபறி..மாணிக்கம் தாகூர் திடீர் விலகல்!பரபரக்கும் காங்கிரஸ் கூடாரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“செந்தில் பாலாஜி என்றாலே செயல்வீரர், செயல்வீரர் என்றாலே செந்தில் பாலாஜி” - கோவை பிரச்சாரத்தில் புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்
“செந்தில் பாலாஜி என்றாலே செயல்வீரர், செயல்வீரர் என்றாலே செந்தில் பாலாஜி” - கோவை பிரச்சாரத்தில் புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்
Chennai Bus ; பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு !! காத்திருப்பு நேரம் குறைய புதிய திட்டம்
Chennai Bus ; பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு !! காத்திருப்பு நேரம் குறைய புதிய திட்டம்
Tamil Nadu New DGP: தமிழக தேர்தல் களம் பரபரப்பு! புதிய DGP நியமனம்: விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டு காரணமா?
தமிழக தேர்தல் களம் பரபரப்பு! புதிய DGP நியமனம்: விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டு காரணமா?
சிறுபான்மையினர் நிறுவனங்களை முடக்க சதி? ஏன் இந்த பிடிவாதம்? - மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்த விஜய்
சிறுபான்மையினர் நிறுவனங்களை முடக்க சதி? ஏன் இந்த பிடிவாதம்? - மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்த விஜய்
திமுக வேட்பாளர் சண். ராமநாதனுக்கு பெருகும் ஆதரவு: வல்லத்தில் தேர்தல் அலுவலகம் திறப்பு
திமுக வேட்பாளர் சண். ராமநாதனுக்கு பெருகும் ஆதரவு: வல்லத்தில் தேர்தல் அலுவலகம் திறப்பு
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: நாளை முதல் எழும்பூர் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்; பணியை முன்பே முடித்து தெற்கு ரயில்வே அசத்தல்
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: நாளை முதல் எழும்பூர் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்; பணியை முன்பே முடித்து தெற்கு ரயில்வே அசத்தல்
வஞ்சித்த மத்திய அரசு! திமுக கூட்டணிக்கு ஆதரவு: கொந்தளித்த விவசாயிகள்
வஞ்சித்த மத்திய அரசு! திமுக கூட்டணிக்கு ஆதரவு: கொந்தளித்த விவசாயிகள்
தெற்கில் மோடி அதிரடி: புதுவையில் ரோடு ஷோ... சென்னையில் ஆலோசனை... நாளை கேரளா பயணம்!
தெற்கில் மோடி அதிரடி: புதுவையில் ரோடு ஷோ... சென்னையில் ஆலோசனை... நாளை கேரளா பயணம்!
Embed widget