மேலும் அறிய

Pugar Petti: தஞ்சாவூர்: கோடையிலும்  தேங்கி நிற்கும் தண்ணீர் - சிவகாமிபுரம் ரயில்வே கீழ்ப்பாலத்தில் அவலம்!

விவசாயிகள்,தொழிலாளிகள் இந்த பாலம் வழியாக தான் தஞ்சை உட்பட அருகில் உள்ள பல ஊர்களுக்கு செல்கின்றனர்.இந்நிலையில் இந்த ரயில்வே கீழ் பாலத்தில் மழை பெய்தால் அதிகளவு வடிய வழியின்றி தேங்கி நிற்கிறது.

தஞ்சை அருகே சிவகாமிபுரம் வழியாக வண்ணாரப்பேட்டைக்கு செல்லும் ரயில்வே கீழ்ப்பாலத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகனங்களில் செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

தஞ்சையை அருகே சிவகாமிபுத்தில் ரயில்வே கேட் அமைந்துள்ளது. இந்த ரயில்வே கேட்டை தாண்டி தான் வண்ணாரப்பேட்டைக்கு  செல்ல முடியும். ரயில் வரும் நேரங்களில் வெகு நேரம் பஸ், லாரி, பைக்குகள்  என்று நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. மேலும் விவசாய இடுபொருட்கள் ஏற்றிய வாகனங்களும் காத்திருக்கும் நிலை இருந்து வந்தது.

தொடர்ந்து இதுபோல் இப்பகுதியில் தொடர்ந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வந்தது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து கடந்த  மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் ரயில்வே கீழ்ப்பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இப்பணி முடிந்து கீழ்ப்பாலம் வழியாக பஸ், பைக், கார், வேன், சரக்கு வாகனங்கள் வண்ணாரப்பேட்டைக்கு சென்று வருகின்றன. தினமும் இதுபோல் நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. போக்குவரத்து நெரிசல் இன்றி வாகனங்கள் சென்று  வருகின்றன.

விவசாயிகள், தொழிலாளிகள் பைக்குகளில் இந்த பாலம் வழியாக தான் தஞ்சை உட்பட அருகில் உள்ள பல ஊர்களுக்கு செல்கின்றனர். தங்களின் வயல்களுக்கு தேவையான இடுபொருட்களையும் கொண்டு செல்கின்றனர். இந்நிலையில் இந்த ரயில்வே கீழ் பாலத்தில் மழை பெய்தால் அதிகளவு வடிய வழியின்றி தேங்கி நிற்கிறது.

இதனால் பஸ்கள் வண்ணாரப்பேட்டைக்கு வருவதில்லை. சிவகாமிபுரம் கீழ்ப்பாலத்தில் தண்ணீர் நிற்கிறது. செல்லமுடியாது என்று தெரிவித்து விடுகின்றனர். இந்த பஸ்சை நம்பி தஞ்சையில் உள்ள பள்ளிகளில் படிக்கும் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் உள்ளனர். பஸ் வராத நிலையில் அவர்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். பைக்குகளிலும் கீழ்ப்பாலத்தில் செல்ல முடியாமல் போகிறது. இதனால் வல்லம் வழியாக சுற்றிக் கொண்டு செல்கின்றனர் அல்லது ஆலக்குடிக்கு வந்து ரயிலில் செல்லும் நிலை உள்ளது.

மழைக்காலத்தில் மட்டும் தண்ணீர் தேங்குவதில்லை. கோடைகாலத்திலும் இந்த கீழ்ப்பாலத்தில் தரையில் தண்ணீர் ஊறுகிறது. இதனால் எப்போதும் சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் இரவு நேரத்தில் தஞ்சைக்கு சென்று விட்டு, பணி முடிந்து பைக்கில் வருபவர்கள் சறுக்கி கீழே விழுந்து விபத்துக்கு உள்ளாகின்றனர். ‌எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து வண்ணாரப்பேட்டை பொதுமக்கள் கூறுகையில், சிவகாமிபுரத்தில் இப்பகுதியை சேர்ந்த பலருக்கும் வயல்கள் உள்ளது. மேலும் விவசாயத் தொழிலாளர்களும் இந்த கீழ்ப்பாலத்தை கடந்துதான் செல்ல வேண்டும். மழைக்காலத்தில் அதிகளவு தண்ணீர் தேங்கி நிற்பதால் வயலுக்கு தேவையான உரம், பூச்சி மருந்துகள் போன்றவற்றை எடுத்துச் செல்ல முடிவதில்லை. மேலும் பஸ் ஊருக்குள் வராததால் பள்ளி மாணவ, மாணவிகளும் பாதிக்கப்படுகின்றனர். இது மழைக்காலத்தில் மட்டுமின்றி கோடைக்காலத்திலும் தண்ணீர் ஊறுகிறது. இதனால் சேறும் சகதியுமாக உள்ளது. எனவே இதற்கு உரிய வகையில் தீர்வு காண வேண்டும். மழைநீர் தேங்காமல் நிற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Indigo Flights: ரூ.827 கோடி..கடுப்பான மத்திய அரசு - இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ஆப்பு? முடியாத குழப்பம்
Indigo Flights: ரூ.827 கோடி..கடுப்பான மத்திய அரசு - இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ஆப்பு? முடியாத குழப்பம்
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Indigo Flights: ரூ.827 கோடி..கடுப்பான மத்திய அரசு - இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ஆப்பு? முடியாத குழப்பம்
Indigo Flights: ரூ.827 கோடி..கடுப்பான மத்திய அரசு - இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ஆப்பு? முடியாத குழப்பம்
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Embed widget