மேலும் அறிய

மயிலாடுதுறையில் ஓடும் பேருந்தில் பற்றிய தீ... அதிர்ஷ்டவசமாக உயிரித்தப்பிய பயணிகள்

பொறையாறு அருகே ஒடும் பேருந்து நடுரோட்டில் திடீரென தீ பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பள்ளி, கல்லூரிகள், பொது போக்குவரத்து பேருந்து சேவை நிறுத்தப்பட்டிந்தது. அரசு  பேருந்துகள் பல மாதங்களாக இயக்கப்படாமல் அந்தந்த ஊர் பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை சற்று குறையத் தொடங்கியதை அடுத்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு பொது போக்குவரத்திற்கும் அனுமதி அளித்தது. அதனைத் தொடர்ந்து பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகள் அவசர கதியில் மீண்டும் இயக்க பயன்பாட்டுக்கு வந்தது.


மயிலாடுதுறையில் ஓடும் பேருந்தில் பற்றிய தீ... அதிர்ஷ்டவசமாக உயிரித்தப்பிய பயணிகள்

இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை பேருந்து நிலையத்திலிருந்து இருந்து இன்று காலை காரைக்காலை நோக்கி புதுச்சேரி மாநில அரசு பேருந்து சென்றது. பேருந்தை ஓட்டுநர் செந்தில் ஓட்டிசெல்ல நடந்துனர் பரசுராமன் என்பவர் பணியில் இருந்துள்ளார். தொடர்ந்து பேருந்து பொறையாறு பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு மீண்டும் காரைக்கால் நோக்கி பேருது புறப்பட்ட போது ராஜீவ்புறம் என்ற இடத்தில் பேருந்தின் எஞ்சினில் மின் இணைப்பில் ஏற்பட்ட  கோளாறு காரணமாக திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. 


மயிலாடுதுறையில் ஓடும் பேருந்தில் பற்றிய தீ... அதிர்ஷ்டவசமாக உயிரித்தப்பிய பயணிகள்

இதனைக் கண்ட ஓட்டுநர் பாதுகாப்பாக பேருந்தை சாலையோரத்தில் நிறுத்தினார். தொடர்ந்து அவசர அவசரமாக பயணிகள் அனைவரும் இறக்கி விடப்பட்டனர். இதனால் பேருந்தில் பயணித்த 20 பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயம் எதுவும் ஏற்படாமல் உயிர் தப்பினர். மேலும் பேருந்து நடத்துனர் பொறையார் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் விரைந்து வந்து தீயை போராடி அணைத்தனர். 


மயிலாடுதுறையில் ஓடும் பேருந்தில் பற்றிய தீ... அதிர்ஷ்டவசமாக உயிரித்தப்பிய பயணிகள்

மேலும் பேருந்து எரிந்த இடத்திற்கு உடனடியாக புதுச்சேரி சாலை போக்குவரத்து கழக அமைச்சர் சந்திரபிரியங்கா, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் காரைக்கால் போக்குவரத்து கழக அதிகாரிகள் சம்பவ இடத்தில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். இது குறித்து பொறையார் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஓடும் பேருந்து நடுரோட்டில் தீப்பிடித்த சம்பவம் அப்பகுதியில் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


மயிலாடுதுறையில் ஓடும் பேருந்தில் பற்றிய தீ... அதிர்ஷ்டவசமாக உயிரித்தப்பிய பயணிகள்

இதுகுறித்து பேருந்தில் பயணம் செய்த பயணிகள் கூறுகையில் வைரஸ் தொற்று காரணமாக தமிழ்நாடு அரசும் புதுச்சேரி அரசும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து, பொது போக்குவரத்தை தடை செய்திருந்தது இதன் காரணமாக பேருந்துகள் பல மாதங்களாக இயக்கப்படாமல் பணிமனைகளில் பராமரிப்பு இன்றி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த சூழலில் ஊரடங்கு தளர்வு காரணமாக தற்போது மீண்டும் பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் பணிமனைகளில் பராமரிப்பின்றி நிறுத்தி வைக்கப்பட்ட பேருந்துகள் சரிவர பழுது பார்க்காமல் மீண்டும் சாலைகளில் இயக்கப்பட்டது இந்த தீ விபத்திற்கு காரணம் என்றும் பொதுமக்கள் உயிர் மீது அலட்சியம் காட்டாமல் அரசு பேருந்துகளை சரியான முறையில் ஆய்வு செய்து  இயக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget