மேலும் அறிய

ஊதிய உயர்வு பேச்சு வார்த்தையை தொடங்காவிட்டால் விரைவில் போராட்டம் - மின்வாரிய ஊழியர்கள் எச்சரிக்கை

கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றாவிட்டால் அனைத்து சங்க மின்சார ஊழியர்களை திரட்டி தொடர் போராட்டம் நடத்த முடிவு

தஞ்சாவூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு  தமிழ்நாடு மின்சார தொழிலாளர் சம்மேளனத்தின் 65 வது ஆண்டு   அமைப்பு நாள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க திட்டத் தலைவர் ஏ.முபாரக்பாட்சா தலைமை வகித்தார்.  65வது ஆண்டு அமைப்பு நாள் கொடியினை ஏஐடியூசி மாவட்ட செயலாளர் ஆர். தில்லைவனம் ஏற்றி வைத்தார். தமிழ்நாடு மின்சார தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில துணை தலைவர் பொன்.தங்கவேல் சிறப்புரையாற்றினார். வங்கி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் க.அன்பழகன், அரசு போக்குவரத்து தொழிற்சங்க மாநில துணை தலைவர் துரை.மதிவாணன், ஓய்வு பெற்றோர் சங்க பொதுச்செயலாளர் பி.அப்பாதுரை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.மின்சார சம்மேளன நிர்வாகிகள் வி.ஞானசேகரன், கே.நாகராஜன் , பி.சுயம்பு,எம். பாஸ்கர், செல்வநாயகம்,வி. வரதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இறுதியில் நிர்வாகி எம்செல்லகுமார் நன்றி கூறினார்.


ஊதிய உயர்வு பேச்சு வார்த்தையை தொடங்காவிட்டால் விரைவில் போராட்டம் - மின்வாரிய ஊழியர்கள் எச்சரிக்கை
இதில், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணி புரிகின்ற ஊழியர்கள் அனைவருக்கும்         1.12 2019  முதல் ஊதிய உயர்வு பேசி அமல்படுத்தப்பட்டிற்க  வேண்டும், ஆனால் இதுநாள் வரை ஊதிய உயர்வு பேசப்படாமல் கிடப்பில் உள்ளது. உடனடியாக ஊதிய உயர்வுபேச்சு வார்த்தை பேசிமுடித்து சம்பள உயர்வு ஏற்படுத்த வேண்டும், ஒப்பந்த பணியாளர்களை அடையாளம் கண்டு தினக்கூலி ரூபாய் 380 வழங்கிட வேண்டும், அவர்களை படிப்படியாக நிரந்தரம் செய்யப்படவேண்டும், மின் வாரியத்தில் காலியாக உள்ள 55 ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பிடத் துரித நடவடிக்கை எடுத்திட வேண்டும்,மின்சார  ஊழியர்களின் வேலை பளுவை குறைக்க வேண்டும், புதிதாக தொடங்கப்பட்ட துணை மின் நிலையங்களுக்கு, போதுமான ஊழியர்களை நியமித்து, புதிய பதவிகளை உடனடியாக அளித்து, அதிகாரிகளை நியமனம் செய்ய வேண்டும், கேங்மேன் பணியாளர்களின் பயிற்சிக் காலத்தை குறைக்க வேண்டும்.


ஊதிய உயர்வு பேச்சு வார்த்தையை தொடங்காவிட்டால் விரைவில் போராட்டம் - மின்வாரிய ஊழியர்கள் எச்சரிக்கை

அவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும், அவரவர் சொந்த மாவட்டங்களுக்கு பணியிட மாறுதல் செய்திட வேண்டும், பணியின் போது இறப்பவர்களின் வாரிசுதாரர்களுக்கு பணி வழங்க வேண்டும். பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மின்சார பணியாளர்களுக்கு தரமான பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும், மழை காலங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பாதுகாப்பான கோட் உள்ளிட்டவைகளை வழங்க வேண்டும். மின்சார ஊழியர்களுக்கு புதிய நவீன முறையில் இயந்திரங்களை போதுமான பயிற்சியளித்து வழங்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேற்கொண்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றாவிட்டால் அனைத்து சங்க மின்சார ஊழியர்களை திரட்டி தொடர் போராட்டம் நடத்தப்படும் என முடிவு செய்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

அடுத்த கட்ட தீவிர போராட்ட அறிவிப்பு வெளியிடப்படும்... செவிலியர்கள் எச்சரிக்கை
அடுத்த கட்ட தீவிர போராட்ட அறிவிப்பு வெளியிடப்படும்... செவிலியர்கள் எச்சரிக்கை
சக்கராப்பள்ளியில் 12-ல் மக்கள் நேர்காணல் முகாம்! முன்கூட்டியே மனு அளிக்க கலெக்டர் ரேவதி அழைப்பு
சக்கராப்பள்ளியில் 12-ல் மக்கள் நேர்காணல் முகாம்! முன்கூட்டியே மனு அளிக்க கலெக்டர் ரேவதி அழைப்பு
மக்களே 10ம் தேதி முக்கியமான நாள்... தஞ்சை கலெக்டர் அறிவிப்பு எதற்காக?
மக்களே 10ம் தேதி முக்கியமான நாள்... தஞ்சை கலெக்டர் அறிவிப்பு எதற்காக?
மத்திய அரசுக்கு எதிராக 10ல் ‘மறியல்’: தஞ்சையில் 4 மையங்களில் களமிறங்கும் தொழிற்சங்கங்கள்–விவசாயிகள்
மத்திய அரசுக்கு எதிராக 10ல் ‘மறியல்’: தஞ்சையில் 4 மையங்களில் களமிறங்கும் தொழிற்சங்கங்கள்–விவசாயிகள்

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
Indias Best SUV: இங்க எஸ்யுவி-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
இங்க SUV-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
Embed widget