மேலும் அறிய

மும்முரம்... வெகு மும்முரம்: தஞ்சாவூரில் பொங்கல் பானைகள், மண் அடுப்பு தயாரிக்கும் பணி விறுவிறுப்பு

பொங்கல் பண்டிகைக்கு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே பொங்கல் பானைகள், மண் அடுப்புகள் தயாரிக்கும் பணிகள் நடைபெறும்.

தஞ்சாவூர்: தஞ்சையில் பொங்கல் பானைகள், மண் அடுப்பு தயாரிக்கும் பணிகள் மிக மும்முரமாக நடைபெற்று வருகிறது. இன்னும் சில நாட்களே இருப்பதால் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 

தமிழர்களின் பண்டிகைகளுள் மிக முக்கியமான பண்டிகை என்றால் அது பொங்கல் பண்டிகை தான். இந்த பண்டிகையை தமிழர் திருநாளாக தை மாதம் 1ம் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 21 நாட்களே உள்ளன. பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் போகிப் பண்டிகையாகவும், மறுநாள் மாட்டுப் பொங்கல் பண்டிகையும், அதற்கு அடுத்த நாள் காணும் பொங்கல் என 4 நாட்கள் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.


மும்முரம்... வெகு மும்முரம்: தஞ்சாவூரில் பொங்கல் பானைகள், மண் அடுப்பு தயாரிக்கும் பணி விறுவிறுப்பு

பொங்கல் பண்டிகை அன்று அதிகாலையில் குளித்துவிட்டு புத்தாடை அணிந்து வீட்டு வாசலில் மண்பானையில் பொங்கலிட்டு கதிரவனுக்கு படைப்பது வழக்கம். இந்த பொங்கல் படையலில் கரும்பு, வாழைப்பழம், மஞ்சள், இஞ்சி கொத்து ஆகியவையும் இடம்பெறும்.

இந்த பொங்கல் பண்டிகை தமிழர்களின் கலாசாரம் மற்றும் பண்பாட்டின் அடையாளமாக திகழ்கிறது. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் வசித்து வரும் தமிழர்கள், சாதி, மதம் கடந்து பொங்கல் பண்டிகையை கொண்டாடுகின்றனர். பொங்கல் பண்டிகைக்கு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே பொங்கல் பானைகள், மண் அடுப்புகள் தயாரிக்கும் பணிகள் நடைபெறும். அதன்படி தஞ்சை கீழவாசல் குயவர் தெருவில்  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாரம்பரிய பொங்கல் மண்பானைகள், பொங்கல் மண் அடுப்புகள் தயாரிக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த பகுதியில் முன்பெல்லாம் திரும்பிய திசையெங்கும் கால் வைத்து நடக்க முடியாத அளவிற்கு பொங்கல் பானைகள், மண் அடுப்புகள் தயாரித்து தெருக்கள் முழுவதும் காயவைத்து இருப்பார்கள். ஆனால் இன்றோ நிலைமை தலைகீழாக உள்ளது. அங்கொன்றும் இங்கொன்றுமாக அரிதாக ஒரு சிலர் தயாரித்து வருகின்றனர். இங்கு தயார் செய்யும் மண்பானைகள், அடுப்புகளை பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காகவும் அனுப்பி வைக்கிறார்கள்.

இது குறித்து பாரம்பரியமாக மண்பாண்ட தொழில் செய்து வரும் தொழிலாளர்கள் தரப்பில் கூறுகையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் மண்பானை,பொங்கல் மண் அடுப்புகள் தயார் செய்து வருகிறோம். இந்த பகுதியில் 100 குடும்பங்கள் மண்பாண்ட தொழில் செய்து வந்தோம். எல்லோரும் தொழிலை விட்டு சென்றதால் தற்போது 5 குடும்பங்கள் மட்டுமே செய்து வருகிறோம்.

பாரம்பரிய தொழில் அழிந்து விடக்கூடாது என்பதற்காக கஷ்டப்பட்டு செய்து வருகிறோம். வருமானம் ரொம்ப குறைந்து போய் விட்ட காரணத்தால் அனைவரும் வேறு தொழிலுக்கு சென்று விட்டனர். மேலும் பானைகள், அடுப்புகள் செய்வதற்கு மண் கிடைப்பது மிகுந்த சிரமமாக உள்ளது. பொங்கல் பானை, அடுப்புகளை சுடவைப்பதற்காக வைக்கோல் ஒரு கட்டு 100 ரூபாய்க்கு விற்கப்பட்டது இன்று 300 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

1000 ரூபாய்க்கு விற்ற தென்னை மட்டை 2 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்குகிறோம். மேலும் தற்போது பொதுமக்கள் பித்தளை, அலுமினிய பாத்திரங்களில் பொங்கல் வைக்கிறார்கள். இது போன்ற பொருட்களை தவிர்த்து பொங்கலுக்கு மண்பானை, மண் அடுப்பு வாங்கி எங்கள் வாழ்வாதாரத்தை காப்பற்ற வேண்டும். எங்கள் வாழ்க்கை மக்கள் கையில்தான் உள்ளது.

அடுத்த தலைமுறைக்கு பொங்கல் பானை, மண் அடுப்பு செய்ய ஆட்களே இருக்காது. மேலும் மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு தொழில் மையம் அமைத்து தர வேண்டும். மண் பாண்டங்களை காய வைப்பதற்கு அமைக்க இடம் ஒதுக்கி செட் அமைத்து தர வேண்டும். மண் எடுப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தலைப்பு செய்திகள்

பட்டுக்கோட்டையில் இன்று மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் 
பட்டுக்கோட்டையில் இன்று மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் 
தரக்கட்டுப்பாட்டு அதிகாரியின் அதிரடி: கும்பகோணத்தில் உர இருப்பு குறித்து திடீர் ஆய்வு
தரக்கட்டுப்பாட்டு அதிகாரியின் அதிரடி: கும்பகோணத்தில் உர இருப்பு குறித்து திடீர் ஆய்வு
பேரிடர் வந்தாலும் பதறாதீங்க மாணவாஸ்... என்ன செய்யணும்? செய்முறை பயிற்சி நிறைவு
பேரிடர் வந்தாலும் பதறாதீங்க மாணவாஸ்... என்ன செய்யணும்? செய்முறை பயிற்சி நிறைவு
பாடாலூரில் பரபரப்பு: பள்ளி, கல்லூரி மாணவிகள் 2 பேர் மாயம்: போலீசார் தீவிர விசாரணை
பாடாலூரில் பரபரப்பு: பள்ளி, கல்லூரி மாணவிகள் 2 பேர் மாயம்: போலீசார் தீவிர விசாரணை

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலினின் 6 கேள்விகள்! என்னென்ன?
MK Stalin: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலினின் 6 கேள்விகள்! என்னென்ன?
MK Stalin: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்.. விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்!
MK Stalin: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்.. விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்!
ராஜகம்பீரமா போகனுமா..? Royal Enfield Meteor 350 பைக்கில் போங்க - விலை எவ்ளோ?
ராஜகம்பீரமா போகனுமா..? Royal Enfield Meteor 350 பைக்கில் போங்க - விலை எவ்ளோ?
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
ஒரே சார்ஜில் 212 கி.மீட்டர் மைலேஜ்.. TVS-சின் அட்டகாசமான 3 இ ஸ்கூட்டர்கள் என்னென்ன?
ஒரே சார்ஜில் 212 கி.மீட்டர் மைலேஜ்.. TVS-சின் அட்டகாசமான 3 இ ஸ்கூட்டர்கள் என்னென்ன?
Tuticorin Prisoner: தூத்துக்குடி ”கைதி அருணாச்சலம் மரணம் லாக்-அப் டெத் அல்ல, நடந்தது என்ன?” காவல்துறை விளக்கம்
தூத்துக்குடி ”கைதி அருணாச்சலம் மரணம் லாக்-அப் டெத் அல்ல, நடந்தது என்ன?” - காவல்துறை விளக்கம்
5 ஸ்டார் ரேட்டிங்.. மாருதி டிசையர், விக்டோரிஸ், இன்விக்டோ வரிசையில் இணைந்த புது எஸ்யுவி!
5 ஸ்டார் ரேட்டிங்.. மாருதி டிசையர், விக்டோரிஸ், இன்விக்டோ வரிசையில் இணைந்த புது எஸ்யுவி!
காலை உணவுத் திட்டத்துக்கு எஸ்டி திட்ட நிதியா? வெளியான அதிர்ச்சித் தகவல்; உடனே மாற்ற கோரிக்கை!
காலை உணவுத் திட்டத்துக்கு எஸ்டி திட்ட நிதியா? வெளியான அதிர்ச்சித் தகவல்; உடனே மாற்ற கோரிக்கை!
Embed widget