மேலும் அறிய

காவல் நிலையம் ‛பார்’ ஆனது; பிடிபட்ட சரக்கு ‛சேல்’ ஆனது; மொத்த ஸ்டேஷனும் சஸ்பென்ட்!

சட்ட விரோதமாகப் விற்கப்பட்ட 434 மதுபான பாட்டில்களை மே 8 ஆம் தேதி திருச்சிற்றம்பலம் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். முறையாக வழக்குப் பதிவு செய்யாமல், தொடர்புடைய நபரை கைது செய்வதை விடுத்து, எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்துள்ளனர். இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீசாரே அந்த மதுபாட்டில்களை பின்னர் விற்றுள்ளனர்.

மதுபான பாட்டில்கள் விற்பனை:திருச்சிற்றம்பலம் காவல் ஆய்வாளர்உள்பட 4 பேர் பணியிடை நீக்கம்
 
கொரோனா தாக்கத்தின் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த மாதம் பத்தாம் தேதியில் இருந்து ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதனையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள மதுபான கடைகளை மூடி கடைகளுக்கு சீல் வைத்து மறு உத்தரவு வரும் வரை திறக்கக்கூடாது என ஆணை பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மது விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து காவல்துறையினருக்கு புகார் வந்ததையடுத்து தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்து மதுபான கடைகளிலும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபான பாட்டில்களை வேறொரு நபருக்கு விற்றதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, திருச்சிற்றம்பலம் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். பொது முடக்கம் காரணமாக டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்ட நிலையில், சட்ட விரோதமாக மதுபானம் விற்கப்படுவதாகப் பரவலாகப் புகார்கள் எழுந்தன. இதைத் தடுப்பதற்காகக் காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகேயுள்ள திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்தினர் அப்பகுதியில் சட்ட விரோதமாகப் பதுக்கி வைத்து விற்கப்பட்ட 434 மதுபான பாட்டில்களை மே 8 ஆம் தேதி திருச்சிற்றம்பலம் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். ஆனால், அதை முறையாக வழக்குப் பதிவு செய்யாமல், தொடர்புடைய நபரை கைது செய்வதை விடுத்து, எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்துள்ளனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட மதுபான பாட்டில்களை காவல் நிலையத்தினர் வேறொரு தனி நபரிடம் விற்றுவிட்டதாகப் புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக தஞ்சாவூர் சரகக் காவல் துணைத் தலைவர் உத்தரவின் பேரில் பட்டுக்கோட்டை துணைக் கண்காணிப்பாளர் புகழேந்தி கணேசன் விசாரணை மேற்கொண்டார். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் காவல் துணைத் தலைவரிடம் துணைக் கண்காணிப்பாளர் அறிக்கை அளித்தார்.

காவல் நிலையம் ‛பார்’ ஆனது; பிடிபட்ட சரக்கு ‛சேல்’ ஆனது; மொத்த ஸ்டேஷனும் சஸ்பென்ட்!
 
இதைத்தொடர்ந்து, திருச்சிற்றம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் அனிதா கிரேசி, உதவி ஆய்வாளர் ராஜ்மோகன், சிறப்பு உதவி ஆய்வாளர் துரையரசன், தலைமைக் காவலர் ராமமூர்த்தி ஆகியோரை தஞ்சாவூர் சரகக் காவல் துணைத் தலைவர் பிரவேஷ் குமார் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் இதுபோன்ற சம்பவங்களில் காவல்துறையினர் யாரேனும் ஈடுபட்டால் அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என தஞ்சை சரக டிஐஜி எச்சரித்துள்ளார். போலீசாரே காவல் நிலையத்தில் வைத்து மதுபானங்களை விற்றதும், அதற்கு இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர் உடந்தையாக இருந்ததும், இதுவரை நடைபெறாத நிகழ்வு. பிளாக்கில் விற்பவர்களை பிடித்து கைது செய்யும் போலீசார், அவற்றை பிளாக்கில் விற்றுள்ளனர். அவர்கள் மீது ஏன் வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்கிற கேள்வியும் எழாமல் இல்லை.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Latest Gold Silver Rate: வரலாற்றில் முதன்முறையாக ரூ.51,000 கடந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.1,120 அதிகரிப்பு..
வரலாற்றில் முதன்முறையாக ரூ.51,000 கடந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.1,120 அதிகரிப்பு..
Breaking News LIVE : மக்களவை தேர்தல்: ஈரோட்டில் இன்று பரப்புரை தொடங்குகிறார் கமல்ஹாசன்..!
Breaking News LIVE : மக்களவை தேர்தல்: ஈரோட்டில் இன்று பரப்புரை தொடங்குகிறார் கமல்ஹாசன்..!
EPS On Sasikala: ”சசிகலா காலில் விழுந்தது தப்பா?” - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்
EPS On Sasikala: ”சசிகலா காலில் விழுந்தது தப்பா?” - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்
Mallikarjun Kharge On Modi: உங்க பாவத்துக்கு காங்கிரஸ் மீது பழியா? - பிரதமர் மோடிக்கு கார்கேவின் 3 கேள்விகள்..
உங்க பாவத்துக்கு காங்கிரஸ் மீது பழியா? - பிரதமர் மோடிக்கு கார்கேவின் 3 கேள்விகள்..
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Jothimani Issue -'’5 வருசமா எங்க போனீங்க?’’ ஜோதிமணியை சுத்துப்போட்ட பெண்கள்Sowmiya anbumani - ஹிந்தியில் வாக்கு கேட்ட செளமியா அன்புமணி வைரலாகும் வீடியோ!Thangar Bachan - ”அத கொஞ்சம் நிறுத்துங்க” திடீரென ஒலித்த செல்போன்! கடுப்பான தங்கர் பச்சான்KC Veeramani - ”பழி போடாதீங்க A.C.சண்முகம்..இந்தப் பக்கம் வர முடியாது” எச்சரிக்கும் K.C. வீரமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Latest Gold Silver Rate: வரலாற்றில் முதன்முறையாக ரூ.51,000 கடந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.1,120 அதிகரிப்பு..
வரலாற்றில் முதன்முறையாக ரூ.51,000 கடந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.1,120 அதிகரிப்பு..
Breaking News LIVE : மக்களவை தேர்தல்: ஈரோட்டில் இன்று பரப்புரை தொடங்குகிறார் கமல்ஹாசன்..!
Breaking News LIVE : மக்களவை தேர்தல்: ஈரோட்டில் இன்று பரப்புரை தொடங்குகிறார் கமல்ஹாசன்..!
EPS On Sasikala: ”சசிகலா காலில் விழுந்தது தப்பா?” - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்
EPS On Sasikala: ”சசிகலா காலில் விழுந்தது தப்பா?” - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்
Mallikarjun Kharge On Modi: உங்க பாவத்துக்கு காங்கிரஸ் மீது பழியா? - பிரதமர் மோடிக்கு கார்கேவின் 3 கேள்விகள்..
உங்க பாவத்துக்கு காங்கிரஸ் மீது பழியா? - பிரதமர் மோடிக்கு கார்கேவின் 3 கேள்விகள்..
Watch Video: ஆறுதல் கூற வந்த மலிங்கா.. மதிக்காமல் தள்ளிவிட்டாரா ஹர்திக் பாண்டியா? வைரலாகும் வீடியோ!
ஆறுதல் கூற வந்த மலிங்கா.. மதிக்காமல் தள்ளிவிட்டாரா ஹர்திக் பாண்டியா? வைரலாகும் வீடியோ!
Easter: ஈஸ்டர் திருநாளை கொண்டாட சென்றபோது பேருந்து கவிழ்ந்து விபத்து - 45 பேர் பலியான சோகம்
Easter: ஈஸ்டர் திருநாளை கொண்டாட சென்றபோது பேருந்து கவிழ்ந்து விபத்து - 45 பேர் பலியான சோகம்
5 Years Of Super Deluxe : புனிதங்களை எல்லாம் நொறுக்கினார் குமாரராஜா.. 5 ஆண்டுகளை கடந்த சூப்பர் டீலக்ஸ்
புனிதங்களை எல்லாம் நொறுக்கினார் குமாரராஜா.. 5 ஆண்டுகளை கடந்த சூப்பர் டீலக்ஸ்
Mukhtar Ansari Dies: உத்தரபிரதேசத்தை ஆட்டுவித்த முக்தார் அன்சாரி உயிரிழப்பு - யார் இவர்? வரலாறு சொல்வது என்ன?
Mukhtar Ansari Dies: உத்தரபிரதேசத்தை ஆட்டுவித்த முக்தார் அன்சாரி உயிரிழப்பு - யார் இவர்? வரலாறு சொல்வது என்ன?
Embed widget