மேலும் அறிய

பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் - மயிலாடுதுறையில் நடந்தது என்ன?

மயிலாடுதுறை ரயில் நிலைய மேம்படுத்தும் பணிக்கு காணொலி  மூலம் பிரதமர் நரேந்திர மோடி  அடிக்கல் நாட்டியுள்ளார்.

இந்திய ரயில்வே துறையை நவீனப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு சமீபகாலமாக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்திய ரயில்வே துறையில் மிகவும் அதிவேக ரயிலாகவும், மிகவும் சொகுசான ரயிலாகவும் வந்தே பாரத் ரயில் இயங்கி வருகிறது. அதேபோல, ரயில்வே பணிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசு பல திட்டங்களை கொண்டு வந்துள்ளது. அதில் ஒன்று 'அம்ரித் பாரத்’ திட்டம்.  இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 508 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளது. இந்த 508 ரயில்நிலையங்கள்  புனரமைக்கப்பட்டு புதுப் பொலிவு பெற உள்ளது. 


பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் - மயிலாடுதுறையில் நடந்தது என்ன?

பிரதமர் நிகழ்ச்சி:

இதற்காக பிரதமர் மோடி இன்று (ஆகஸ்ட் 6) அடிக்கல் நாட்டி துவக்கிவைத்துள்ளார். டெல்லியில் இருந்தப்படியே காணொலி மூலம் ரயில் நிலையங்களை  மேம்படுத்தும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். 25,000 கோடி ரூபாய் செலவில் 508 ரயில் நிலையங்கள் புனரமைக்கப்பட உள்ளது.  இந்த 508 ரயில் நிலையங்கள் இன்று பணிகள் தொடங்கப்பட்டு, 2025-ஆம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  இந்த பணியின்போது, ரயில் நிலையங்களில் நகரும் படிக்கட்டுகள், பயணிகள் காத்திருக்கும் அறைகள், கூடுதல் நடைமேடைகள், லிப்ட் வசதி, வாகன நிறுத்த வசதி, கேமரா பொருத்துதல், நுழைவு வாயில் சீரமைப்பு போன்ற பணிகள் நடைபெற உள்ளது.


பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் - மயிலாடுதுறையில் நடந்தது என்ன?

இந்த 'அம்ரித் பாரத்' திட்டம் மூலம் உத்தர பிரதேசத்தில் 55, பீகாரில் 49, மகாராஷ்டிராவில் 44, மேற்கு வங்கத்தில் 37, மத்திய பிரதேசத்தில் 34, அசாமில் 32, ஒடிசாவில் 25, பஞ்சாபில் 22, குஜராத், தெலங்கானாவில் தலா 21, ஜார்க்கண்டில் 20, ஆந்திராவில் 18, ஹரியானாவில் 15, கர்நாடகாவில் 13  ஆகியவை புனரமைக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டை பொறுத்தவரை 18 ரயில் நிலையங்கள் புனரமைக்கப்பட உள்ளன. அதன்படி, செங்கல்பட்டு, பெரம்பூர், கூடுவாஞ்சேரி, திருவள்ளூர், திருத்தணி, கும்மிடிப்பூண்டி, அரக்கோணம், சேலம், கரூர், திருப்பூர், போத்தனூர், தென்காசி, விருதுநகர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், விழுப்புரம், நாகர்கோவில், ஜோலார்பேட்டை ஆகிய 18 ரயில் நிலையங்கள் 381 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட உள்ளன.


பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் - மயிலாடுதுறையில் நடந்தது என்ன?

இந்நிலையில், அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் ரயில் நிலையங்களை மறு வடிவமைப்பு செய்யும் பணிக்காக மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் தொடக்க விழாவில் நடைபெற்றது. இத்திட்டத்தின்கீழ் சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மயிலாடுதுறை ரயில் நிலையம் மறு வடிவமைப்பு செய்யப்பட உள்ளது. இதற்காக மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் இன்று நடைபெற்ற விழாவில் மக்களவை உறுப்பினர் ராமலிங்கம், சட்டப்பேரவை உறுப்பினர் ராஜகுமார், பாஜக நிர்வாகிகள் மற்றும் ரயில்வே நிலைய அதிகாரிகள் கலந்து கொண்டனர். 


பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் - மயிலாடுதுறையில் நடந்தது என்ன?

சலசலப்பு:

இந்த சூழலில் இவ்விழாவில் பேசுவதற்கு பாஜக மயிலாடுதுறை மாவட்ட தலைவர் அகோரத்தை பேச அனுமதிக்கவில்லை எனக்கூறி இதைக் கண்டித்து விழா மேடையின் முன்பு பாஜக நிர்வாகிகள் 30-க்கும் மேற்பட்டோர் திரண்டு பாஜக மாவட்ட தலைவரை பேச அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி கூச்சலிட்டனர். இதனால் விழா மேடையில் சலசலப்பு ஏற்பட்டு பதற்றம் நிலவியது.

இதைத்தொடர்ந்து அவர்களை சமாதானம் செய்து வைத்த ரயில்வே அதிகாரிகள், பாஜக மாவட்ட தலைவர் பேசுவார் என அறிவித்தனர். இதனால் பாஜக நிர்வாகிகள், பாரத் மாதா கி ஜே என வெற்றி முழக்கங்களை எழுப்பியவாறு தங்கள் இருக்கையில் அமர்ந்தனர். இதை தொடர்ந்து பாஜக மாவட்ட தலைவர் அகோரம் மேடையில் சிறிது நேரம் பேசினார்.

மேலும் பல சுவாரஸ்யமான செய்திகளை காண :
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
அப்போலோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி
அப்போலோ மருத்துவமனையில் இருந்து எல்.கே. அத்வானி டிஸ்சார்ஜ்!
Embed widget