மேலும் அறிய

திருவாரூரில் நகராட்சி குப்பை கிடங்கால் மக்கள் அவதி - நோய்த்தொற்றுக்கு ஆளாவதாக வேதனை

’’அரசுத்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர், அமைச்சர்கள் என பலரிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை’’

திருவாரூர் நகராட்சிக்குள்பட்ட 31 வார்டுகளில் சுமார் 3 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். மாவட்ட தலைநகராக திருவாரூர் இருப்பதால் அண்மை காலமாக குடியிருப்பு பகுதிகள் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட குப்பை கிடங்கு நெய்விளக்கு தோப்பு பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. நகர் முழுவதும் உருவாகும் டன் கணக்கிலான குப்பைகள் நெய்விளக்குத்தோப்புப் பகுதியில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவிலான குப்பைக் கிடங்கில் கொட்டப்படுகிறது. இங்கு கொட்டப்படும் குப்பைகளை அடையாளம் தெரியாத நபர்கள் கொளுத்தி விடுவதால் இப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறி சுற்றுசூழல் சீர்கேடு ஏற்படுகிறது. 

திருவாரூரில் நகராட்சி குப்பை கிடங்கால் மக்கள் அவதி - நோய்த்தொற்றுக்கு ஆளாவதாக வேதனை
 
மழைக் காலங்களில் நகராட்சியில் பல இடங்களிலிருந்து எடுத்துச் செல்லப்படும் கழிவறை கழிவுநீர் குப்பை கிடங்கில் முன்பகுதியில் வெளியேற்றுவதாகவும், அந்த நீர் குடியிருப்பு பகுதிகளுக்கு வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குப்பைக் கிடங்கு அருகில் இருக்கும் மயானத்தில் நகராட்சிப் பகுதிகளிலிருந்து செல்லும் 70 சதவீத சடலங்கள் எரியூட்டப்படுகிறது. மயானத்தில் இடைவிடாமல் சடலங்கள் எரிந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. மயானத்தின் சுற்றுச்சுவர் பல இடங்களில் சேதமாகி இருக்கிறது. குப்பைக் கிடங்கு மற்றும் மயானத்திலிருந்து வெளியேறும் புகையினால் இருதய நோய் மற்றும் பார்வையிழப்புகளை அப்பகுதி மக்களுக்கு ஏற்படுவதாக கூறப்படுகிறது. நெய்விளக்குத்தோப்பு பகுதி மக்கள் மனைவரி, குடிநீர்வரி என அரசின் அனைத்து வரிகளையும் செலுத்துவதாக கூறுகின்றனர். இப்பகுதியில் மக்கள் வசித்தால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனத் தெரிந்தே கடந்த கால நகராட்சி நிர்வாகம் குடியிருக்க அனுமதி வழங்கியிருக்கிறது. அடுத்து வரும் நிர்வாகமும் கடந்த கால நடைமுறைய பின்பற்றி வருகிறது. எனவே மக்களைப் பாதிக்காத வகையில் குப்பை கிடங்கு மற்றும் மயானத்தை சீரமைக்க வேண்டும் அல்லது வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூரில் நகராட்சி குப்பை கிடங்கால் மக்கள் அவதி - நோய்த்தொற்றுக்கு ஆளாவதாக வேதனை
 
இதுகுறித்து நெய்விளக்கு தோப்பு பகுதியில் வசிக்கும் மக்கள் கூறுகையில், கடந்த நான்கு தலைமுறைகளாக இந்த பகுதியில்தான் நாங்கள் வசித்து வருகிறோம். நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில் நகராட்சி குப்பை கிடங்கை மக்கள் இல்லாத இடத்திற்கு மாற்ற வேண்டும் என பலமுறை மாவட்ட ஆட்சியர், மற்றும் பல அரசுத்துறை அதிகாரிகள், அமைச்சர்கள், என பலரிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. குப்பை கிடங்கில் இருந்து வரும் துர்நாற்றம் காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வீட்டில் பல நபர்களுக்கு யானைக்கால் நோய், இருதய நோய் உள்ளிட்ட பல்வேறு தொற்று நோய்களுக்கு ஆளாக்கப்படுகிறோம். உடனடியாக நகராட்சி குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்றி தர வேண்டும் என இந்த பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Pongal Parisu 2026: ரூ.3000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு - இன்று அறிவிப்பை வெளியிடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்?
Pongal Parisu 2026: ரூ.3000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு - இன்று அறிவிப்பை வெளியிடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்?
Sivakarthikeyan: ”ஜனநாயகனை கொண்டாடுங்க, அண்ணன் -தம்பி பொங்கல்” பராசக்தி ஆடியோ லாஞ்ச் - சிவகார்த்திகேயன் பேச்சு
Sivakarthikeyan: ”ஜனநாயகனை கொண்டாடுங்க, அண்ணன் -தம்பி பொங்கல்” பராசக்தி ஆடியோ லாஞ்ச் - சிவகார்த்திகேயன் பேச்சு
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
ABP Premium

வீடியோ

MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்
OPS joins TVK |தவெகவில் இணையும் OPS?DEAL-ஐ முடித்த செங்கோட்டையன் காலரைத் தூக்கும் விஜய்
Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Parisu 2026: ரூ.3000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு - இன்று அறிவிப்பை வெளியிடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்?
Pongal Parisu 2026: ரூ.3000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு - இன்று அறிவிப்பை வெளியிடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்?
Sivakarthikeyan: ”ஜனநாயகனை கொண்டாடுங்க, அண்ணன் -தம்பி பொங்கல்” பராசக்தி ஆடியோ லாஞ்ச் - சிவகார்த்திகேயன் பேச்சு
Sivakarthikeyan: ”ஜனநாயகனை கொண்டாடுங்க, அண்ணன் -தம்பி பொங்கல்” பராசக்தி ஆடியோ லாஞ்ச் - சிவகார்த்திகேயன் பேச்சு
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
தேமுதிக மாநாட்டில் கூட்டணி அறிவிப்பு.. விஜய பிரபாகரன் தகவல் - ஜனவரி 9-ல் என்ன நடக்கப்போகிறது?
தேமுதிக மாநாட்டில் கூட்டணி அறிவிப்பு.. விஜய பிரபாகரன் தகவல் - ஜனவரி 9-ல் என்ன நடக்கப்போகிறது?
DMK VCK Alliance: இரட்டை இலக்கத்தில்தான் சீட் வேண்டும்.. அடம்பிடிக்கும் விசிக! ஓகே சொல்லுமா திமுக?
DMK VCK Alliance: இரட்டை இலக்கத்தில்தான் சீட் வேண்டும்.. அடம்பிடிக்கும் விசிக! ஓகே சொல்லுமா திமுக?
Embed widget