மேலும் அறிய

திருவாரூரில் நகராட்சி குப்பை கிடங்கால் மக்கள் அவதி - நோய்த்தொற்றுக்கு ஆளாவதாக வேதனை

’’அரசுத்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர், அமைச்சர்கள் என பலரிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை’’

திருவாரூர் நகராட்சிக்குள்பட்ட 31 வார்டுகளில் சுமார் 3 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். மாவட்ட தலைநகராக திருவாரூர் இருப்பதால் அண்மை காலமாக குடியிருப்பு பகுதிகள் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட குப்பை கிடங்கு நெய்விளக்கு தோப்பு பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. நகர் முழுவதும் உருவாகும் டன் கணக்கிலான குப்பைகள் நெய்விளக்குத்தோப்புப் பகுதியில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவிலான குப்பைக் கிடங்கில் கொட்டப்படுகிறது. இங்கு கொட்டப்படும் குப்பைகளை அடையாளம் தெரியாத நபர்கள் கொளுத்தி விடுவதால் இப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறி சுற்றுசூழல் சீர்கேடு ஏற்படுகிறது. 

திருவாரூரில் நகராட்சி குப்பை கிடங்கால் மக்கள் அவதி - நோய்த்தொற்றுக்கு ஆளாவதாக வேதனை
 
மழைக் காலங்களில் நகராட்சியில் பல இடங்களிலிருந்து எடுத்துச் செல்லப்படும் கழிவறை கழிவுநீர் குப்பை கிடங்கில் முன்பகுதியில் வெளியேற்றுவதாகவும், அந்த நீர் குடியிருப்பு பகுதிகளுக்கு வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குப்பைக் கிடங்கு அருகில் இருக்கும் மயானத்தில் நகராட்சிப் பகுதிகளிலிருந்து செல்லும் 70 சதவீத சடலங்கள் எரியூட்டப்படுகிறது. மயானத்தில் இடைவிடாமல் சடலங்கள் எரிந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. மயானத்தின் சுற்றுச்சுவர் பல இடங்களில் சேதமாகி இருக்கிறது. குப்பைக் கிடங்கு மற்றும் மயானத்திலிருந்து வெளியேறும் புகையினால் இருதய நோய் மற்றும் பார்வையிழப்புகளை அப்பகுதி மக்களுக்கு ஏற்படுவதாக கூறப்படுகிறது. நெய்விளக்குத்தோப்பு பகுதி மக்கள் மனைவரி, குடிநீர்வரி என அரசின் அனைத்து வரிகளையும் செலுத்துவதாக கூறுகின்றனர். இப்பகுதியில் மக்கள் வசித்தால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனத் தெரிந்தே கடந்த கால நகராட்சி நிர்வாகம் குடியிருக்க அனுமதி வழங்கியிருக்கிறது. அடுத்து வரும் நிர்வாகமும் கடந்த கால நடைமுறைய பின்பற்றி வருகிறது. எனவே மக்களைப் பாதிக்காத வகையில் குப்பை கிடங்கு மற்றும் மயானத்தை சீரமைக்க வேண்டும் அல்லது வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூரில் நகராட்சி குப்பை கிடங்கால் மக்கள் அவதி - நோய்த்தொற்றுக்கு ஆளாவதாக வேதனை
 
இதுகுறித்து நெய்விளக்கு தோப்பு பகுதியில் வசிக்கும் மக்கள் கூறுகையில், கடந்த நான்கு தலைமுறைகளாக இந்த பகுதியில்தான் நாங்கள் வசித்து வருகிறோம். நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில் நகராட்சி குப்பை கிடங்கை மக்கள் இல்லாத இடத்திற்கு மாற்ற வேண்டும் என பலமுறை மாவட்ட ஆட்சியர், மற்றும் பல அரசுத்துறை அதிகாரிகள், அமைச்சர்கள், என பலரிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. குப்பை கிடங்கில் இருந்து வரும் துர்நாற்றம் காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வீட்டில் பல நபர்களுக்கு யானைக்கால் நோய், இருதய நோய் உள்ளிட்ட பல்வேறு தொற்று நோய்களுக்கு ஆளாக்கப்படுகிறோம். உடனடியாக நகராட்சி குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்றி தர வேண்டும் என இந்த பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தலைப்பு செய்திகள்

இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
ஏரியை தூர்வார 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சோழர்கள் பயன்படுத்திய ‘குமிழித்தூம்பு’
ஏரியை தூர்வார 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சோழர்கள் பயன்படுத்திய ‘குமிழித்தூம்பு’
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget