மேலும் அறிய

திருவாரூரில் நகராட்சி குப்பை கிடங்கால் மக்கள் அவதி - நோய்த்தொற்றுக்கு ஆளாவதாக வேதனை

’’அரசுத்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர், அமைச்சர்கள் என பலரிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை’’

திருவாரூர் நகராட்சிக்குள்பட்ட 31 வார்டுகளில் சுமார் 3 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். மாவட்ட தலைநகராக திருவாரூர் இருப்பதால் அண்மை காலமாக குடியிருப்பு பகுதிகள் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட குப்பை கிடங்கு நெய்விளக்கு தோப்பு பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. நகர் முழுவதும் உருவாகும் டன் கணக்கிலான குப்பைகள் நெய்விளக்குத்தோப்புப் பகுதியில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவிலான குப்பைக் கிடங்கில் கொட்டப்படுகிறது. இங்கு கொட்டப்படும் குப்பைகளை அடையாளம் தெரியாத நபர்கள் கொளுத்தி விடுவதால் இப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறி சுற்றுசூழல் சீர்கேடு ஏற்படுகிறது. 

திருவாரூரில் நகராட்சி குப்பை கிடங்கால் மக்கள் அவதி - நோய்த்தொற்றுக்கு ஆளாவதாக வேதனை
 
மழைக் காலங்களில் நகராட்சியில் பல இடங்களிலிருந்து எடுத்துச் செல்லப்படும் கழிவறை கழிவுநீர் குப்பை கிடங்கில் முன்பகுதியில் வெளியேற்றுவதாகவும், அந்த நீர் குடியிருப்பு பகுதிகளுக்கு வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குப்பைக் கிடங்கு அருகில் இருக்கும் மயானத்தில் நகராட்சிப் பகுதிகளிலிருந்து செல்லும் 70 சதவீத சடலங்கள் எரியூட்டப்படுகிறது. மயானத்தில் இடைவிடாமல் சடலங்கள் எரிந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. மயானத்தின் சுற்றுச்சுவர் பல இடங்களில் சேதமாகி இருக்கிறது. குப்பைக் கிடங்கு மற்றும் மயானத்திலிருந்து வெளியேறும் புகையினால் இருதய நோய் மற்றும் பார்வையிழப்புகளை அப்பகுதி மக்களுக்கு ஏற்படுவதாக கூறப்படுகிறது. நெய்விளக்குத்தோப்பு பகுதி மக்கள் மனைவரி, குடிநீர்வரி என அரசின் அனைத்து வரிகளையும் செலுத்துவதாக கூறுகின்றனர். இப்பகுதியில் மக்கள் வசித்தால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனத் தெரிந்தே கடந்த கால நகராட்சி நிர்வாகம் குடியிருக்க அனுமதி வழங்கியிருக்கிறது. அடுத்து வரும் நிர்வாகமும் கடந்த கால நடைமுறைய பின்பற்றி வருகிறது. எனவே மக்களைப் பாதிக்காத வகையில் குப்பை கிடங்கு மற்றும் மயானத்தை சீரமைக்க வேண்டும் அல்லது வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூரில் நகராட்சி குப்பை கிடங்கால் மக்கள் அவதி - நோய்த்தொற்றுக்கு ஆளாவதாக வேதனை
 
இதுகுறித்து நெய்விளக்கு தோப்பு பகுதியில் வசிக்கும் மக்கள் கூறுகையில், கடந்த நான்கு தலைமுறைகளாக இந்த பகுதியில்தான் நாங்கள் வசித்து வருகிறோம். நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில் நகராட்சி குப்பை கிடங்கை மக்கள் இல்லாத இடத்திற்கு மாற்ற வேண்டும் என பலமுறை மாவட்ட ஆட்சியர், மற்றும் பல அரசுத்துறை அதிகாரிகள், அமைச்சர்கள், என பலரிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. குப்பை கிடங்கில் இருந்து வரும் துர்நாற்றம் காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வீட்டில் பல நபர்களுக்கு யானைக்கால் நோய், இருதய நோய் உள்ளிட்ட பல்வேறு தொற்று நோய்களுக்கு ஆளாக்கப்படுகிறோம். உடனடியாக நகராட்சி குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்றி தர வேண்டும் என இந்த பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தலைப்பு செய்திகள்

பலருக்கு மறுவாழ்வு அளித்த சுரேந்தரின் மனிதநேயம்: மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்
பலருக்கு மறுவாழ்வு அளித்த சுரேந்தரின் மனிதநேயம்: மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்
ஆபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் கால்நடை தடுப்பு... நோயாளிகள் பெரும் அவதி: எங்கே தெரியுமா?
ஆபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் கால்நடை தடுப்பு... நோயாளிகள் பெரும் அவதி: எங்கே தெரியுமா?
பட்டுக்கோட்டையில் இன்று மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் 
பட்டுக்கோட்டையில் இன்று மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் 
தரக்கட்டுப்பாட்டு அதிகாரியின் அதிரடி: கும்பகோணத்தில் உர இருப்பு குறித்து திடீர் ஆய்வு
தரக்கட்டுப்பாட்டு அதிகாரியின் அதிரடி: கும்பகோணத்தில் உர இருப்பு குறித்து திடீர் ஆய்வு

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NTA: உள்ளேயே கறுப்பு ஆடுகள்; நீட் வினாத்தாள் கசிவு- 47 என்டிஏ அதிகாரிகள் அதிரடி டிஸ்மிஸ்!
NTA: உள்ளேயே கறுப்பு ஆடுகள்; நீட் வினாத்தாள் கசிவு- 47 என்டிஏ அதிகாரிகள் அதிரடி டிஸ்மிஸ்!
MK STALIN : “Sorry சொன்னால் போதுமா?” என கேட்டீங்க.. நீங்க எங்கே ஒளிந்திருக்கீங்க.? CM விஜய்யை கேள்வி கேட்கும் ஸ்டாலின்
“Sorry சொன்னால் போதுமா?” என கேட்டீங்க.. நீங்க எங்கே ஒளிந்திருக்கீங்க.? CM விஜய்யை கேள்வி கேட்கும் ஸ்டாலின்
Actress Jyothika : அமைச்சரே உடனே ராஜினாமா பண்ணுங்க.! தைரியமாக இறங்கி அடித்த நடிகை ஜோதிகா
அமைச்சரே உடனே ராஜினாமா பண்ணுங்க.! தைரியமாக இறங்கி அடித்த நடிகை ஜோதிகா
Chengalpattu metro rail : அடி தூள்.! செங்கல்பட்டு வரை மெட்ரோ ரயில்.. எதிர்பார்த்த மக்களுக்கு அசத்தல் அறிவிப்பு வந்தாச்சு
அடி தூள்.! செங்கல்பட்டு வரை மெட்ரோ ரயில்.. எதிர்பார்த்த மக்களுக்கு அசத்தல் அறிவிப்பு வந்தாச்சு
Thirumavalavan:
Thirumavalavan: "தர்மேந்திர பிரதான் பாவம்.." திருமாவளவன் திடீரென ஏன் அப்படி பேசினார்?
Sanam Shetty:
Sanam Shetty: "நான் தளபதி ரசிகை.." சனம் ஷெட்டியிடம் மைக்கைப் பிடுங்கி அனுப்பிய மாணவர்கள் - நீங்களே பாருங்க
TASMAC SHOP : பாட்டிலுக்கு ரூ.10 வாங்கினால் இனி தப்பிக்க முடியாது.! என்னென்ன Punishment.? லிஸ்ட் போட்ட டாஸ்மாக்
பாட்டிலுக்கு ரூ.10 வாங்கினால் இனி தப்பிக்க முடியாது.! என்னென்ன Punishment.? லிஸ்ட் போட்ட டாஸ்மாக்
ஆபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் கால்நடை தடுப்பு... நோயாளிகள் பெரும் அவதி: எங்கே தெரியுமா?
ஆபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் கால்நடை தடுப்பு... நோயாளிகள் பெரும் அவதி: எங்கே தெரியுமா?
Embed widget