மேலும் அறிய

பார்க்கிங் ஒழுங்கின்மை: பெரம்பலூர் போக்குவரத்திற்கு பெரும் தலைவலி!

பெரம்பலூா் சாலையின் இருபுறமும், இருசக்கர வாகனங்கள் மற்றும் பிற வாகனங்களால் சாலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.

தஞ்சாவூர்: சாலையோரம் நிறுத்தப்படும் பைக், கார் மற்றும் பிற வாகனங்களால் பெரம்பலூா் நகா் போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்று பொதுமக்கள் வலியறுத்தி உள்ளனர்.

கிராமப் பகுதிகளைச் சோ்ந்த மக்கள் கூடும் இடமாகவும், தனியாா் மற்றும் அரசுக் கல்லூரிகள் உள்ள இடமாகவும், வங்கிகள், வணிக வளாகங்கள், சுற்றியுள்ள கிராமப்புறங்களை சென்னைக்கு இணைக்கும் பேருந்து நிலையம், நாள்தோறும் பல ஆயிரம் பொதுமக்கள் கூடும் பகுதியாக பெரம்பலூா் நகரம் திகழ்ந்து வருகிறது. இங்குள்ள சாலையின் இருபுறமும், இருசக்கர வாகனங்கள் மற்றும் பிற வாகனங்களால் சாலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

இதனால் தினம், தினம், போக்குவரத்து நெரிசலில் சிக்கி இப்பகுதி மக்கள் படும் பாடு சொல்லி மாள முடியாத ஒன்றாகும். பெரம்பலூா் நகரின் ஒருபுறம் சாலையோரம் பெருகி வரும் சிறு வியாபாரிகளின் கடைகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ள நிலையில், மறுபுறம் சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்துக்கு மேலும் இடையூறு விளைகிறது. நகரின் பிரதானப் பகுதியில் வாகன ஓட்டுனர் தங்களின் இஷ்டத்திற்கு வாகனங்களை நிறுத்தி விடுகின்றனர். அதிலும் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டுநா்களும், பொதுமக்களும் சிரமத்தை அனுபவிக்க வேண்டியுள்ளது.

குறிப்பாக கடைவீதி, தலைமை அஞ்சலகத் தெரு, பழைய பேருந்து நிலையம், வடக்கு மாதவிச் சாலை, எளம்பலூா் சாலை, மார்க்கெட் தெரு, சங்குப்பேட்டை, புகா் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் பத்திரப் பதிவு அலுவலகம், வங்கிகள், துணி, நகைக் கடைகள் அதிகமாக இருப்பதால், இங்கு வரும் பொதுமக்கள் அவா்கள் வாகனங்களை சாலையோரம் நிறுத்தி விடுகின்றனா். அதோடு மட்டுமல்லாமல் அங்குள்ள கடைக்காரரா்களும், அவா்களது கடைக்குரிய பொருள்களை சாலையோரம் வைத்துவிடுவதால் சாலையின் பரப்பளவு குறுகிவிடுகிறது. இதனால், போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வு காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த போக்குவரத்து நெரிசலையும், தொடா் விபத்துகளையும் தடுப்பதற்காக பேருந்து நிலையம், பாலக்கரை, விளாமுத்தூா் சாலை, சங்குப்பேட்டை, கனரா வங்கி சாலை, காமராஜா் வளைவு ஆகிய இடங்களில் பல லட்சம் மதிப்பில் தானியங்கி சிக்னல்கள் அமைக்கப்பட்டன. இதில், காமராஜா் வளைவு, விளாமுத்தூா் பிரிவுச்சாலை பகுதியில் அமைக்கப்பட்ட சிக்னல் மட்டுமே செயல்படுகிறது. இதர பகுதிகளில் உள்ள சிக்னல்களை முறையாக பராமரிக்காததால், அவை அனைத்தும் பழுதடைந்து வெறும் காட்சிப் பொருளாக உள்ளது.

போக்குவரத்து காவலா்களும் இல்லாததால் அடிக்கடி சாலை விபத்துகளும் நிகழ்ந்து வருகிறது. தானியங்கி சிக்னல்களை சீரமைத்து காலை முதல் இரவு 8 மணி வரை செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால், இந்த சாலைகளில் செல்லும் வாகன ஓட்டுனர்களும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். நகரின் பிரதானச் சாலைகளில் ஒன்றிரண்டு போக்குவரத்து போலீசார் நிறுத்தப்பட்டிருந்தாலும், அவா்கள் போக்குவரத்து நெரிசலை முறைப்படுத்துவதில் கவனம் செலுத்துவதில்லை என்றும் பொதுமக்கள் தரப்பில் குற்றம் சாட்டுகின்றனர். 

பெரம்பலூா் நகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனங்களால், போக்குவரத்து நெரிசலும் அதிகளவில் காணப்படுகிறது. இவற்றைக் கட்டப்படுத்த போக்குவரத்து போலீஸாா் சொற்ப அளவில் உள்ளனா். ஊா்க்காவல் படையைச் சோ்ந்தவா்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தாலும், அவா்களை வாகன ஓட்டுநா்கள் பொருட்படுத்துவதில்லை.

போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் பெரம்பலூா் பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன், சாலையை ஆக்கிரமித்தவாறு தேவையற்று நிறுத்தப்படும் வாகன ஓட்டுநா்களை எச்சரித்து அவற்றை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சிக்னல்களை சரி செய்து போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் அனைத்து தரப்பினரின் விருப்பமாகும். 

Advertisement

தலைப்பு செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை... டிரைவரை போக்சோவில் கைது செய்து போலீசார் அதிரடி
சிறுமிக்கு பாலியல் தொல்லை... டிரைவரை போக்சோவில் கைது செய்து போலீசார் அதிரடி
ஆற்றில் சரித்திர பதிவேடு குற்றவாளி சடலமாக மீட்பு – உடலை வைத்து உறவினர்கள் திடீர் சாலை மறியல்!
ஆற்றில் சரித்திர பதிவேடு குற்றவாளி சடலமாக மீட்பு – உடலை வைத்து உறவினர்கள் திடீர் சாலை மறியல்!
உயிருக்கு உலை வைக்கும் சக்கரா வாய்க்கால்! அதிகாரிகளே, எப்போது தடுப்புச்சுவர் கட்டப்போகிறீர்கள்?
உயிருக்கு உலை வைக்கும் சக்கரா வாய்க்கால்! அதிகாரிகளே, எப்போது தடுப்புச்சுவர் கட்டப்போகிறீர்கள்?
150 ஆண்டுகாலக் காத்திருப்பு... 120% நெரிசலில் தவிக்கும் ரயில் பாதை! விடிவு காலம் எப்போது?
150 ஆண்டுகாலக் காத்திருப்பு... 120% நெரிசலில் தவிக்கும் ரயில் பாதை! விடிவு காலம் எப்போது?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Rahul gandhi | ”காலை வாரி விடக்கூடாது! காங்கிரஸை விமர்சிக்காதீங்க” நேரடியாகவே சொன்ன ராகுல்
Nellai brother murdered sister | காதலித்த அக்காவை வெட்டி கொலை செய்த தம்பி! நெல்லையில் பகீர் சம்பவம்
C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS: ஆட்சியில் நடப்பதை சொல்வதற்கும் சென்சார் போர்டா? தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
EPS: ஆட்சியில் நடப்பதை சொல்வதற்கும் சென்சார் போர்டா? தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
படுத்த படுக்கையில் பாஜக; நிர்வாகிகளுக்கு ஐடியா மேல் ஐடியா கொடுத்த நயினார் நாகேந்திரன் - என்ன?
படுத்த படுக்கையில் பாஜக; நிர்வாகிகளுக்கு ஐடியா மேல் ஐடியா கொடுத்த நயினார் நாகேந்திரன் - என்ன?
பிட்டு படம் எடுத்திருக்கான் என்று கலாய்த்த நண்பன்..ஆதிக்கிற்கு ஆதரவாக விஜய் கொடுத்த செம ரிப்ளை
பிட்டு படம் எடுத்திருக்கான் என்று கலாய்த்த நண்பன்..ஆதிக்கிற்கு ஆதரவாக விஜய் கொடுத்த செம ரிப்ளை
Singappen Task Force: இந்தியாவில் முதல்முறை; சீறும் சிங்கப்பெண்கள்- சிறப்பு அதிரடி படையை தொடங்கிவைத்த சிஎம் விஜய்!  
Singappen Task Force: இந்தியாவில் முதல்முறை; சீறும் சிங்கப்பெண்கள்- சிறப்பு அதிரடி படையை தொடங்கிவைத்த சிஎம் விஜய்!  
6 மாதத்திற்கு முன்பே தவெக அரசை மு.க.ஸ்டாலின் விமர்சித்தது ஏன்? முன்னாள் அமைச்சர் தந்த விளக்கம்!
6 மாதத்திற்கு முன்பே தவெக அரசை மு.க.ஸ்டாலின் விமர்சித்தது ஏன்? முன்னாள் அமைச்சர் தந்த விளக்கம்!
மணல் கடத்தல் லாரியால் வந்த வினை - காவல் நிலையம் செல்லும் வழியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
மணல் கடத்தல் லாரியால் வந்த வினை - காவல் நிலையம் செல்லும் வழியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
திருச்செந்தூர் கோயில் போலி டிக்கெட் மோசடி: முன்ஜாமின் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
திருச்செந்தூர் கோயில் போலி டிக்கெட் மோசடி: முன்ஜாமின் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
பட்ஜெட் விலை.. அசத்தலான மைலேஜ்! குடும்பஸ்தனுங்களுக்கான இ ஸ்கூட்டர் Ampere Magnus Grand!
பட்ஜெட் விலை.. அசத்தலான மைலேஜ்! குடும்பஸ்தனுங்களுக்கான இ ஸ்கூட்டர் Ampere Magnus Grand!
Embed widget