மேலும் அறிய

பார்க்கிங் ஒழுங்கின்மை: பெரம்பலூர் போக்குவரத்திற்கு பெரும் தலைவலி!

பெரம்பலூா் சாலையின் இருபுறமும், இருசக்கர வாகனங்கள் மற்றும் பிற வாகனங்களால் சாலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.

தஞ்சாவூர்: சாலையோரம் நிறுத்தப்படும் பைக், கார் மற்றும் பிற வாகனங்களால் பெரம்பலூா் நகா் போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்று பொதுமக்கள் வலியறுத்தி உள்ளனர்.

கிராமப் பகுதிகளைச் சோ்ந்த மக்கள் கூடும் இடமாகவும், தனியாா் மற்றும் அரசுக் கல்லூரிகள் உள்ள இடமாகவும், வங்கிகள், வணிக வளாகங்கள், சுற்றியுள்ள கிராமப்புறங்களை சென்னைக்கு இணைக்கும் பேருந்து நிலையம், நாள்தோறும் பல ஆயிரம் பொதுமக்கள் கூடும் பகுதியாக பெரம்பலூா் நகரம் திகழ்ந்து வருகிறது. இங்குள்ள சாலையின் இருபுறமும், இருசக்கர வாகனங்கள் மற்றும் பிற வாகனங்களால் சாலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

இதனால் தினம், தினம், போக்குவரத்து நெரிசலில் சிக்கி இப்பகுதி மக்கள் படும் பாடு சொல்லி மாள முடியாத ஒன்றாகும். பெரம்பலூா் நகரின் ஒருபுறம் சாலையோரம் பெருகி வரும் சிறு வியாபாரிகளின் கடைகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ள நிலையில், மறுபுறம் சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்துக்கு மேலும் இடையூறு விளைகிறது. நகரின் பிரதானப் பகுதியில் வாகன ஓட்டுனர் தங்களின் இஷ்டத்திற்கு வாகனங்களை நிறுத்தி விடுகின்றனர். அதிலும் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டுநா்களும், பொதுமக்களும் சிரமத்தை அனுபவிக்க வேண்டியுள்ளது.

குறிப்பாக கடைவீதி, தலைமை அஞ்சலகத் தெரு, பழைய பேருந்து நிலையம், வடக்கு மாதவிச் சாலை, எளம்பலூா் சாலை, மார்க்கெட் தெரு, சங்குப்பேட்டை, புகா் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் பத்திரப் பதிவு அலுவலகம், வங்கிகள், துணி, நகைக் கடைகள் அதிகமாக இருப்பதால், இங்கு வரும் பொதுமக்கள் அவா்கள் வாகனங்களை சாலையோரம் நிறுத்தி விடுகின்றனா். அதோடு மட்டுமல்லாமல் அங்குள்ள கடைக்காரரா்களும், அவா்களது கடைக்குரிய பொருள்களை சாலையோரம் வைத்துவிடுவதால் சாலையின் பரப்பளவு குறுகிவிடுகிறது. இதனால், போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வு காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த போக்குவரத்து நெரிசலையும், தொடா் விபத்துகளையும் தடுப்பதற்காக பேருந்து நிலையம், பாலக்கரை, விளாமுத்தூா் சாலை, சங்குப்பேட்டை, கனரா வங்கி சாலை, காமராஜா் வளைவு ஆகிய இடங்களில் பல லட்சம் மதிப்பில் தானியங்கி சிக்னல்கள் அமைக்கப்பட்டன. இதில், காமராஜா் வளைவு, விளாமுத்தூா் பிரிவுச்சாலை பகுதியில் அமைக்கப்பட்ட சிக்னல் மட்டுமே செயல்படுகிறது. இதர பகுதிகளில் உள்ள சிக்னல்களை முறையாக பராமரிக்காததால், அவை அனைத்தும் பழுதடைந்து வெறும் காட்சிப் பொருளாக உள்ளது.

போக்குவரத்து காவலா்களும் இல்லாததால் அடிக்கடி சாலை விபத்துகளும் நிகழ்ந்து வருகிறது. தானியங்கி சிக்னல்களை சீரமைத்து காலை முதல் இரவு 8 மணி வரை செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால், இந்த சாலைகளில் செல்லும் வாகன ஓட்டுனர்களும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். நகரின் பிரதானச் சாலைகளில் ஒன்றிரண்டு போக்குவரத்து போலீசார் நிறுத்தப்பட்டிருந்தாலும், அவா்கள் போக்குவரத்து நெரிசலை முறைப்படுத்துவதில் கவனம் செலுத்துவதில்லை என்றும் பொதுமக்கள் தரப்பில் குற்றம் சாட்டுகின்றனர். 

பெரம்பலூா் நகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனங்களால், போக்குவரத்து நெரிசலும் அதிகளவில் காணப்படுகிறது. இவற்றைக் கட்டப்படுத்த போக்குவரத்து போலீஸாா் சொற்ப அளவில் உள்ளனா். ஊா்க்காவல் படையைச் சோ்ந்தவா்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தாலும், அவா்களை வாகன ஓட்டுநா்கள் பொருட்படுத்துவதில்லை.

போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் பெரம்பலூா் பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன், சாலையை ஆக்கிரமித்தவாறு தேவையற்று நிறுத்தப்படும் வாகன ஓட்டுநா்களை எச்சரித்து அவற்றை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சிக்னல்களை சரி செய்து போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் அனைத்து தரப்பினரின் விருப்பமாகும். 

Advertisement

தலைப்பு செய்திகள்

பார்க்கிங் ஒழுங்கின்மை: பெரம்பலூர் போக்குவரத்திற்கு பெரும் தலைவலி!
பார்க்கிங் ஒழுங்கின்மை: பெரம்பலூர் போக்குவரத்திற்கு பெரும் தலைவலி!
பயனாளிகளே... உங்கள் இல்லம் தேடி தாயுமானவர் வர்றார்: தஞ்சை கலெக்டர் அறிவிப்பு
பயனாளிகளே... உங்கள் இல்லம் தேடி தாயுமானவர் வர்றார்: தஞ்சை கலெக்டர் அறிவிப்பு
Ariyalur District power cut: அரியலூர் மாவட்டத்தில் நாளை மறுநாள் (05-06-2026 ) மின்தடை - பாதிக்கப்படும் பகுதிகளின் விபரம் இதோ
Ariyalur District power cut: அரியலூர் மாவட்டத்தில் நாளை மறுநாள் (05-06-2026 ) மின்தடை - பாதிக்கப்படும் பகுதிகளின் விபரம் இதோ
Thanjavur power cut: தஞ்சையில் நாளை (03-06-2026 ) மின்தடை - பாதிக்கப்படும் பகுதிகளின் விபரம் இதோ
Thanjavur power cut: தஞ்சையில் நாளை (03-06-2026 ) மின்தடை - பாதிக்கப்படும் பகுதிகளின் விபரம் இதோ
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள்; முக்கிய பதிவை வெளியிட்ட முதல்வர் விஜய்!
CM Vijay: கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள்; முக்கிய பதிவை வெளியிட்ட முதல்வர் விஜய்!
ஸ்கூலே முடிக்கலை, அதுக்குள்ளயா? ஐஐஎம்மில் வைபவ் மாடல்! ஐபிஎல்லில் அசத்தும் சூர்யவன்ஷி!
ஸ்கூலே முடிக்கலை, அதுக்குள்ளயா? ஐஐஎம்மில் வைபவ் மாடல்! ஐபிஎல்லில் அசத்தும் சூர்யவன்ஷி!
TMC Rift: ”கட்சிக்கு நீங்க தான் தலைவர், ஆனா சட்டமன்றத்த நாங்க பாத்துக்குறோம்” மம்தாவுக்கு ஆர்டர் போடும் MLAக்கள்
”கட்சிக்கு நீங்க தான் தலைவர், ஆனா சட்டமன்றத்த நாங்க பாத்துக்குறோம்” மம்தாவுக்கு ஆர்டர் போடும் MLAக்கள்
Trump New Tariff: மீண்டும் வரி ஆட்டத்தை தொடங்கிய ட்ரம்ப்; 60 நாடுகள் மீது கூடுதலாக 12.5%; US பரிந்துரையால் அதிர்ச்சி
மீண்டும் வரி ஆட்டத்தை தொடங்கிய ட்ரம்ப்; 60 நாடுகள் மீது கூடுதலாக 12.5%; US பரிந்துரையால் அதிர்ச்சி
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.! யார் யார் எந்த மாவட்டத்திற்கு.? இதோ முழு லிஸ்ட்
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.! யார் யார் எந்த மாவட்டத்திற்கு.? இதோ முழு லிஸ்ட்
Inverter Battery Tips: கோடைல இன்வெர்ட்டர் ரொம்ப முக்கியம் கண்ணு.! பேட்டரி வேகமா குறையுதா.? காரணமும், டிப்ஸும் இதோ
கோடைல இன்வெர்ட்டர் ரொம்ப முக்கியம் கண்ணு.! பேட்டரி வேகமா குறையுதா.? காரணமும், டிப்ஸும் இதோ
TN DGP: மக்களை அலறவிடும் குற்றங்கள்..! தினந்தோறும் தொடரும் சோகம் - புதிய டிஜிபி செய்யப்போவது என்ன?
மக்களை அலறவிடும் குற்றங்கள்..! தினந்தோறும் தொடரும் சோகம் - புதிய டிஜிபி செய்யப்போவது என்ன?
வங்கிமீது பழி ஏன்? மகாராஷ்டிராவால் சாத்தியமாகும் பயிர்க்கடன் தள்ளுபடி தமிழகத்தில் ஆகாதது ஏன்? அன்புமணி கேள்வி
வங்கிமீது பழி ஏன்? மகாராஷ்டிராவால் சாத்தியமாகும் பயிர்க்கடன் தள்ளுபடி தமிழகத்தில் ஆகாதது ஏன்? அன்புமணி கேள்வி
Embed widget