மேலும் அறிய

கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதத்தை 22% ஆக அதிகரிப்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு

’’17 சதவீதம் ஈரப்பதமுள்ள நெல் மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும் என்பதால்,  விவசாயிகள் நெல்லை விற்க முடியாமல்  அவதிப்பட்டு வருகின்றனர்’’

காவிரி டெல்டா மாவட்டங்களில், சுமார் 4 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்ட நெல் அறுவடைப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து  வருவதால் அறுவடை செய்யப்படும் நெல்லில் ஈரப்பதம் அதிகமாக காணப்படுகிறது. மத்திய அரசின் விதிப்படி நேரடி கொள்முதல் நிலையங்களில் 17 சதவீதம் ஈரப்பதமுள்ள நெல் மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும் என்பதால்,  விவசாயிகள் நெல்லை விற்க முடியாமல்  அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் ஏராளமான விவசாயிகள் நெல் மணிகளை, கொள்முதல் நிலையங்கள் முன்பும், நெடுஞ்சாலைகளிலும் நெல்லை கொட்டி காய வைத்து பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகின்றனர். என்றாலும் தொடர்ந்து மழை பெய்வதால் நெல் காய்வதில்லை. ஈரப்பதத்தில் 22 சதவீதம் வரை தளர்வு அளிக்க வேண்டுமென  விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.


கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதத்தை 22% ஆக அதிகரிப்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு

இந்த கோரிக்கையை ஏற்ற தமிழக அரசும், மத்திய அரசுக்கு கடிதம் எழுதி கோரிக்கை விடுத்திருந்தது. அதன்பேரில் இந்திய உணவு கழகத்தின் தரக் கட்டுப்பாட்டுப் பிரிவு தென் மண்டலத் துணை இயக்குநர் எம்.இசட்.கான் தலைமையில் தொழில்நுட்ப அலுவலர்கள் பி.பிரபாகரன், சி.யூனுஸ் உள்ளிட்ட மத்திய குழுவினர் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டனர். திருவையாறு அருகே அரசூரில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்த மத்திய குழுவினர் நெல் குவியலிலிருந்து மாதிரிகள் சேகரித்தனர்.

பின்னர், நெல் மணிகளை பார்வையிட்டு சோதனை செய்தனர். தொடர்ந்த நெல் மூட்டைகளை கொண்டு வந்த விவசாயிடம் நடவு, அறுவடை செய்தது எப்போது, அறுவடைக்கு முன்பு மழை பெய்ததா அல்லது அதன் பிறகு மழை பெய்ததா என விசாரித்தனர். விவசாயிகள் எடுத்த வந்த நெல் மணிகளை ஈரப்பதத்தை இயந்திரம் மூலம் சோதனையிட்டனர். இதில் முதலில் வந்த நெல் மணிகளில் 18.3 சதவீதமும், இரண்டாவதாக வந்த நெல் மணிகளில் 21 சதவீதமும் ஈரப்பதம் இருந்தது. அதனை படிவத்தில் பூர்த்தி செய்து, அனைத்து அலுவலர்கள், விவசாயிகளிடம் கையெழுத்து பெற்று சென்றனர். மேலும் நெல்லை சிறிதளவு ஆய்வுக்காக  எடுத்துச் சென்றனர்.


கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதத்தை 22% ஆக அதிகரிப்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு

பின்னர் செய்தியாளர்களிடம் துணை இயக்குநர் கான் கூறுகையில், தற்போது நெல்லில் ஈரப்பதம் தொடர்பாக மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதுதொடர்பான அறிக்கையை 15 நாட்களுக்குள் மத்திய அரசிடம் அளிக்க உள்ளோம். அதன் பிறகு மத்திய அரசு முடிவு செய்யும் என்றார். இவர்களுடன்  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக இணை மேலாண் இயக்குநர் சங்கீதா, தஞ்சாவூர் முதுநிலை மண்டல மேலாளர் என்.உமாமகேஸ்வரி உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதை தொடர்ந்து மடிகை, தென்னமநாடு, ஒரத்தநாடு புதூர் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Nissan Compact MPV: ரூ.6 லட்சத்துக்கே.. நிசானின் பெரிய புதிய 7 சீட்டர் கார் - என்னென்ன இருக்கு? டிச.18 லாஞ்ச்
Nissan Compact MPV: ரூ.6 லட்சத்துக்கே.. நிசானின் பெரிய புதிய 7 சீட்டர் கார் - என்னென்ன இருக்கு? டிச.18 லாஞ்ச்
சபரிமலை மண்டல பூஜை: தரிசன முன்பதிவு துவக்கம்! முக்கிய அறிவிப்பு வெளியீடு! | பக்தர்கள் கவனத்திற்கு
சபரிமலை மண்டல பூஜை: தரிசன முன்பதிவு துவக்கம்! முக்கிய அறிவிப்பு வெளியீடு! | பக்தர்கள் கவனத்திற்கு
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Embed widget