மேலும் அறிய

மத ரீதியான பிரச்சாரங்கள் செய்யப்பட்டவில்லை - தஞ்சாவூர் மாவட்ட கல்வி அலுவலர் அறிக்கை

மத ரீதியான பிரச்சாரங்கள் ஏதும் செய்யப்பட்டவில்லை என விசாரணையில் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பள்ளி மாணவி  லாவன்யா தற்கொலை செய்து கொண்ட மைக்கேல்பட்டி இப்பள்ளியில் மத ரீதியான பிரச்சாரங்கள் ஏதும் தலைமையாசிரியராலோ அல்லது மற்ற ஆசிரியர்களாலோ, மாணவ, மாணவிகளிடம் செய்யப்பட்டவில்லை என தஞ்சாவூர் மாவட்டக்கல்வி அலுவலரின் அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

தஞ்சாவூர் கல்வி மாவட்டம், மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ் 2 பயின்ற மாணவி இறப்பு தொடர்பாக, தஞ்சாவூர் மாவட்டக்கல்வி அலுவலரின் விசாரணை அறிக்கை வெளியானது.

அதில், தற்கொலை செய்து கொண்ட மாணவி 8-ம் வகுப்பிலிருந்து மைக்கேல்பட்டியில் படித்து வந்தார்.  மாணவியின் சொந்த ஊர் அரியலூர் மாவட்டம், வடுகபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் என்பதால் அப்பள்ளியின் அருகில் உள்ள மதகண்ணிகைகள் வாழும் இல்லத்தில் தங்கி கல்வி பயின்று வந்துள்ளார். மாணவிக்கு உடலிலும், உதட்டிலும் வெண்புள்ளிகள் (vitilgo) உள்ளதாக விசாரணையில் தெரிய வருகிறது. 2020 கரோனா பெருந்தொற்று ஏற்படுவதற்கு முன் பள்ளியில் அரசு மற்றும் தொடர் விடுமுறை விடும்பொழுது, இல்லத்தில் உள்ள மற்ற மாணவிகள் அவரவது சொந்த ஊர்களுக்கு தாய், தந்தையர்களிடம் செல்லும் போது, இம்மாணவி மட்டும் ஊருக்கு செல்லாமல் மதகன்னியாஸ்திரிகள் இல்லத்தில் விடுமுறையை கழித்து பள்ளியில் தொடர்ந்து பயின்று வந்துள்ளார்.


மத ரீதியான பிரச்சாரங்கள் செய்யப்பட்டவில்லை - தஞ்சாவூர் மாவட்ட கல்வி அலுவலர் அறிக்கை

 

கொரோனா காலத்துக்குப் பிறகு காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்ச்சி அறிவிக்கப்பட்ட போது மார்ச் 2020ல் பத்தாம் வகுப்பில் 487 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்துள்ளார். மாணவி 2020-21ம் கல்வியாண்டில் ப்ளஸ்1 வகுப்பில் தொடர்ந்து இப்பள்ளி கல்வி பயின்று நேரடி வகுப்பில் பிப்ரவரி 2021-ல் 9 நாட்களும் மார்ச் 2021 ல் 9 நாட்களும் ஆக மொத்தம் 18 நாட்கள் நேரடி வகுப்பில் கல்வி பயின்றுள்ளார். மற்ற நாட்களில் இணைய வழிக்கல்வி நடைபெறும்போது மற்ற அனைத்து மாணவ, மாணவிகளும் கலந்து கொள்ளும் போது இம்மாணவி மட்டும் இணையவழி வகுப்பில் பங்கு பெறவில்லை என தெரியவருகிறது.

ப்ளஸ் 2 வகுப்பில் செப்டம்பரில் 12 நாட்களும், அக்டோபரில் 14 நாட்களும், நவம்பரில் 13 நாட்களும், டிசம்பரில் 21 நாட்களும் மற்றும் ஜனவரியில் 10 நாட்களும் மதகன்னியாஸ்திரிகள் இல்லத்தில் தங்கி கல்வி பயின்று வந்துள்ளார் என தெரியவருகிறது. ஜன.10-ஆம் தேதி மாணவிக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டதால் (வயிற்று வலி மற்றும் வாந்தி) பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவரின் சொந்த ஊருக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.


மத ரீதியான பிரச்சாரங்கள் செய்யப்பட்டவில்லை - தஞ்சாவூர் மாவட்ட கல்வி அலுவலர் அறிக்கை

ஜன.15-ம் தேதி பள்ளிக்கு போலீசார்,  சென்று விசாரணை மேற்கொண்டபோது தான் பள்ளியில் அம்மாணவி தோட்டத்துக்கு வைத்துள்ள களைக்கொல்லிக்கான பூச்சி மருந்தை குடித்து தஞ்சாவூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பள்ளி தலைமையாசிரியை ஆரோக்கியமேரி தெரிவித்தார். மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் கடந்த பத்து ஆண்டுகளில் 5,270 இந்து மாணவ, மாணவியர்களும், 2,290 கிறிஸ்தவ மாணவ, மாணவியர்களும், 179 இஸ்லாமிய மாணவ, மாணவியர்களும் கல்வி பயின்றுள்ளது தெரியவந்தது.  மேலும், இந்த கல்வி ஆண்டில் 444 இந்து மாணவ, மாணவிகளும், 219 கிறிஸ்தவ மாணவ, மாணவிகளும், 405 இஸ்லாமிய மாணவ, மாணவிகளும் 6-ம் வகுப்பு முதல் ப்ளஸ் 2 வரை படித்து வருகின்றனர்.


மத ரீதியான பிரச்சாரங்கள் செய்யப்பட்டவில்லை - தஞ்சாவூர் மாவட்ட கல்வி அலுவலர் அறிக்கை

இந்த பள்ளிக்கு ஆண்டுதோறும் கல்வித்துறை அதிகாரிகளால் ஆய்வும் செய்யப்பட்டுள்ளது. இப்பள்ளிக்கு முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் நேரடியாக ஆய்வு மேற்கொண்ட போதெல்லாம் மாணவ, மாணவிகளிடமிருந்து மதம் சார்ந்த புகார்கள் ஏதும் வரவில்லை.கிறிஸ்தவ மேலாண்மை நிறுவனத்தினரால் இப்பள்ளி நடத்தப்பட்டாலும், அதிகளவில் இந்து மத மாணவர்கள் கல்வி பயின்றுள்ளனர். இப்பள்ளியில் மத ரதியான பிரச்சாரங்கள் ஏதும் தலைமையாசிரியராலோ அல்லது மற்ற ஆசிரியர்களாலோ, மாணவ, மாணவிகளிடம் செய்யப்பட்டவில்லை  என விசாரணையில் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Breaking News LIVE: பாஜக, இந்து, ஆர்.எஸ்.எஸ்.. ராகுல் காந்தி உரையில் சில பகுதிகள் நீக்கம்..
Breaking News LIVE: பாஜக, இந்து, ஆர்.எஸ்.எஸ்.. ராகுல் காந்தி உரையில் சில பகுதிகள் நீக்கம்..
PM Modi: வெளுத்து வாங்கிய ராகுல் காந்தி - மக்களவையில் பிரதமர் மோடி இன்று பதிலடி கொடுப்பாரா?
வெளுத்து வாங்கிய ராகுல் காந்தி - மக்களவையில் பிரதமர் மோடி இன்று பதிலடி கொடுப்பாரா?
Rahul Gandhi: 10 ஆண்டுகள்.. கப்சிப்பென இருந்த மக்களவை.. ராகுல் ஆவேசம், குறுக்கிட்ட பிரதமர் மோடி..
10 ஆண்டுகள்.. கப்சிப்பென இருந்த மக்களவை.. ராகுல் காந்தியின் ஆவேசம், குறுக்கிட்ட பிரதமர் மோடி..
Sunita Williams: தொடரும் சிக்கல்,  சர்வதேச விண்வெளி மையத்தில் சுனிதா வில்லியம்ஸின் நிலை இதுதான்..! இஸ்ரோ தலைவர் விளக்கம்
Sunita Williams: தொடரும் சிக்கல், சர்வதேச விண்வெளி மையத்தில் சுனிதா வில்லியம்ஸின் நிலை இதுதான்..! இஸ்ரோ தலைவர் விளக்கம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK vs PMK : அடித்து விரட்டிய திமுக! பழி வாங்கிய பாமக! அழுது புலம்பும் ஜெகத்ரட்சகன்! நடந்தது என்ன?DK Shivakumar vs Siddaramaiah : துணை முதல்வர் பதவிக்கு ஆப்பு?வேட்டு வைக்கும் சித்தராமையா!MK Stalin Vs Vijay | திமுக அடி மடியிலேயே.. சவால் விடும் விஜய்..! BEAST MODE ஆரம்பம்Rahul Gandhi | ”அய்யோ பாவம் ராகுல் இது நியாயமா பிர்லா?” சபையில் நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Breaking News LIVE: பாஜக, இந்து, ஆர்.எஸ்.எஸ்.. ராகுல் காந்தி உரையில் சில பகுதிகள் நீக்கம்..
Breaking News LIVE: பாஜக, இந்து, ஆர்.எஸ்.எஸ்.. ராகுல் காந்தி உரையில் சில பகுதிகள் நீக்கம்..
PM Modi: வெளுத்து வாங்கிய ராகுல் காந்தி - மக்களவையில் பிரதமர் மோடி இன்று பதிலடி கொடுப்பாரா?
வெளுத்து வாங்கிய ராகுல் காந்தி - மக்களவையில் பிரதமர் மோடி இன்று பதிலடி கொடுப்பாரா?
Rahul Gandhi: 10 ஆண்டுகள்.. கப்சிப்பென இருந்த மக்களவை.. ராகுல் ஆவேசம், குறுக்கிட்ட பிரதமர் மோடி..
10 ஆண்டுகள்.. கப்சிப்பென இருந்த மக்களவை.. ராகுல் காந்தியின் ஆவேசம், குறுக்கிட்ட பிரதமர் மோடி..
Sunita Williams: தொடரும் சிக்கல்,  சர்வதேச விண்வெளி மையத்தில் சுனிதா வில்லியம்ஸின் நிலை இதுதான்..! இஸ்ரோ தலைவர் விளக்கம்
Sunita Williams: தொடரும் சிக்கல், சர்வதேச விண்வெளி மையத்தில் சுனிதா வில்லியம்ஸின் நிலை இதுதான்..! இஸ்ரோ தலைவர் விளக்கம்
Australia Student Visa: இந்திய மாணவர்கள் ஷாக்..! விசா கட்டணத்தை இரண்டு மடங்காக உயர்த்திய ஆஸ்திரேலியா - காரணம் என்ன?
இந்திய மாணவர்கள் ஷாக்..! விசா கட்டணத்தை இரண்டு மடங்காக உயர்த்திய ஆஸ்திரேலியா - காரணம் என்ன?
Crime: கற்பூர கட்டிகள் கொண்டு சிறுமியை எரித்துக்கொன்ற 10-ஆம் வகுப்பு மாணவன்.. ஏன் இந்த பயங்கரம்?
கற்பூர கட்டிகள் கொண்டு சிறுமியை எரித்துக்கொன்ற 10-ஆம் வகுப்பு மாணவன்.. ஏன் இந்த பயங்கரம்?
Bottle Radha Teaser : பா. ரஞ்சித் தயாரிப்பில் 'பாட்டில் ராதா' டீசர் வெளியானது.. கிக்கா என்ன இருக்கு?
Bottle Radha Teaser : பா. ரஞ்சித் தயாரிப்பில் 'பாட்டில் ராதா' டீசர் வெளியானது.. கிக்கா என்ன இருக்கு?
Varalaxmi Sarathkumar : தாய்லாந்தில் திருமணம்... கோலாகலமாக நடைபெற்ற வரலட்சுமியின் மெஹந்தி பங்க்ஷன்...
தாய்லாந்தில் திருமணம்... கோலாகலமாக நடைபெற்ற வரலட்சுமியின் மெஹந்தி பங்க்ஷன்...
Embed widget