மேலும் அறிய

‛உள்ளாட்சி தேர்தலில் வெற்றி நமதே...’ -முன்னாள் அமைச்சர் காமராஜ் பேச்சு!

அதிமுகவிற்கு 100 சதவீத வெற்றியை தருவார்கள். இந்த வெற்றியை ஒருங்கிணைக்கும் பணியில் நிர்வாகிகள் பம்பரமாய் சுழன்று பணியாற்ற வேண்டும். -காமராஜ்

உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீத வெற்றியை பெறுவோம். நன்னிலத்தில் நடைபெற்ற செயல்வீரர் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்  காமராஜ் பேச்சு.
 
நன்னிலத்தில் அதிமுகவின் நன்னிலம் பேரூராட்சிக் கழக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் மாவட்டச் செயலாளரும் நன்னிலம் சட்டமன்ற உறுப்பினருமான காமராஜ்  தலைமை வகித்தார். கூட்டத்திற்கு கட்சியின் அமைப்புச் செயலாளர் கோபால் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நன்னிலம் ஒன்றிய செயலாளர்  முன்னாள் ஒன்றியக்குழு தலைவர்  உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்  காமராஜ் பேசியதாவது...
 
நன்னிலம் சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் என்னை வெற்றிபெற செய்ததற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நன்னிலம் தொகுதியின் தேவைகளை நிறைவேற்றுகின்ற வகையில், எல்லா காலமும் உங்கள் வீட்டுப் பிள்ளையாக இருந்து பணியாற்றுவேன் என்பதை நன்றியோடு உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் நன்னிலம் சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் வளர்ச்சிப்பணிகள் நடைபெற்றுள்ளது. அந்த வகையில் நன்னிலம் பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இணைப்பு பாலங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நகரின் மையப்பகுதியில் மக்களின் நெடுநாளைய கோரிக்கையான அரசினர் கலைக்கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது. 

‛உள்ளாட்சி தேர்தலில் வெற்றி நமதே...’ -முன்னாள் அமைச்சர் காமராஜ் பேச்சு!
மிக நவீன முறையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ரூ 3 கோடி மதிப்பில் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு புதிய அலுவலக கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. பேருந்து நிலையத்திலுள்ள நெருக்கடியை குறைக்கும் வகையில் பரந்து விரிந்த பரப்பில் புதிய பேருந்து நிலையம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது.  இதுபோன்ற பல்வேறு பணிகள் நன்னிலம் பேரூராட்சியில் நடைபெற்றுள்ளது. இதையெல்லாம் மனதில் வைத்து நன்னிலம் நகர மக்கள் தொடர்ந்து அதிமுகவிற்கு ஆதரவு அளித்து வருகின்றனர். 

‛உள்ளாட்சி தேர்தலில் வெற்றி நமதே...’ -முன்னாள் அமைச்சர் காமராஜ் பேச்சு!
நடைபெற உள்ள நன்னிலம் பேரூராட்சி தேர்தலிலும் அதிமுகவிற்கு 100 சதவீத வெற்றியை தருவார்கள். இந்த வெற்றியை ஒருங்கிணைக்கும் பணியில் நிர்வாகிகள் பம்பரமாய் சுழன்று பணியாற்ற வேண்டும். சாகுபடி செய்யப்பட்ட நெல்லை கொள்முதல் செய்யும் வகையில் அனைத்து இடங்களிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது திறந்துள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் மழையை கருத்தில் கொண்டு நெல் மூட்டைகள் தேங்காமல் கொள்முதல் செய்ய வேண்டும். தற்போது குறுவை பயிருக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுவருகிறது. உடனடியாக அனைத்து பகுதிகளுக்கும் தேவையான தண்ணீரைக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு ஈடுபட வேண்டும். இவ்வாறு முன்னாள் அமைச்சர் காமராஜ் கூறினார்.
உள்ளாட்சி தேர்தலையொட்டி கட்சியினரை உற்சாகப்படுத்தும் விதமாக முன்னாள் அமைச்சர் பேசியிருக்கும் நிலையில், திமுக தரப்பிலும் உள்ளாட்சி தேர்தலை சந்திப்பதற்கான தீவிர வியூகம் அமைக்கப்பட்டு வருகிறது. 

தலைப்பு செய்திகள்

இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
ஏரியை தூர்வார 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சோழர்கள் பயன்படுத்திய ‘குமிழித்தூம்பு’
ஏரியை தூர்வார 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சோழர்கள் பயன்படுத்திய ‘குமிழித்தூம்பு’
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
TN Weather News: சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Embed widget