மேலும் அறிய

கும்பகோணத்தை தனிமாவட்டமாக அறிவிக்கும் வரை போராட்டத்தில் ஈடுபட நாம் தமிழர் கட்சி முடிவு

’’நாங்கள் கேட்டது தனி மாவட்டம், கிடைத்தது மாநகராட்சி; இதனால் வரிகளால் மக்கள் திண்டாடுவார்கள்’’

கும்பகோணத்தை மாவட்ட தலைநகரமாக்க வேண்டும் என 50 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் போராடி வந்தால், கடந்த அதிமுக ஆட்சியின் போது, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்பி. உதயகுமார் தஞ்சையை பிரித்து கும்பகோணம் தனிமாவட்ட அறிவிப்பு விரைவில் வெளியாகும் என உறுதியளித்தார்.  ஆனால் அதன் பின் இந்த அறிவிப்பு கிடப்பில் போடப்பட்டது. பின்னர் மீண்டும் ஆர்ப்பாட்டம், போராட்டம், கோலம் வரைதல், மனு அனுப்புதல் போன்ற பல்வேறு விதமாக அரசின் கவனத்தை ஈர்க்கும் விதங்களில் கும்பகோணம் பகுதி மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

கும்பகோணத்தை தனிமாவட்டமாக அறிவிக்கும் வரை போராட்டத்தில் ஈடுபட நாம் தமிழர் கட்சி முடிவு

நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தல் பரப்புரையின் போது, திமுக தலைவர் முக.ஸ்டாலின், திமுக ஆட்சி அமைந்தால், கும்பகோணம் புதிய மாவட்டம் அறிவிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என திருக்கடையூரிலும், ஒரத்தநாட்டிலும் தெரிவித்தார். ஆனால் பதவி ஏற்று, சட்டமன்றம் நடைபெற்று வரும் நிலையில், கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்காமல் இருந்து வந்தனர். இதனை தொடர்ந்து கும்பகோணத்தை  புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, கும்பகோணம் பகுதி பொது மக்கள் திரட்டி, சென்னையில் போராட்டம் நடத்த, கும்பகோணம் புதிய மாவட்ட கோரும் ஒருங்கிணைப்பு குழுவினர் முடிவு செய்திருந்தனர். பின்னர் அதிகாரிகள் கேட்டு கொண்டதற்கு இணங்க போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

கும்பகோணத்தை தனிமாவட்டமாக அறிவிக்கும் வரை போராட்டத்தில் ஈடுபட நாம் தமிழர் கட்சி முடிவு

இந்நிலையில் கடந்த 24 ஆம் தேதி சட்டமன்ற கூட்டத்தின் போது, கும்பகோணம் மாநகராட்சியாக தமிழக அரசு அறிவித்தது. இதனால் கும்பகோணம் பகுதி மக்கள் விரக்தி அடைந்துள்ளனர். கும்பகோணத்தை புதிய மாவட்டமாக விரைவில் அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு நாம்தமிழர் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு நகர செயலாளர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். கும்பகோணம் தொகுதி செயலாளர் ஆனந்த் முன்னிலை வகித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் மணிசெந்தில் கண்டன உரையாற்றினார்.

இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தமிழக அரசை வலியுறுத்தும் விதமாக கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க கோரி முழக்கமிட்டனர். இது குறித்து தொகுதி செயலாளர் ஆனந்த் கூறுகையில்,

கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றோம். பல்வேறு கட்சி, அமைப்புகள் சேர்ந்து குழு அமைத்து சென்னையில் போராட்டம் நடத்த முடிவு செய்தோம். அதிகாரிகள் கேட்டு கொண்டதற்கிணங்க போராட்டத்தை ஒத்திவைத்துள்ளோம். அதற்குள் கடந்த 24ஆம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடரின் போது, தமிழக முதல்வர், கும்பகோணத்தை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று அறிவித்துள்ளார். ஆனால் கும்பகோணம் மக்களாகிய நாங்கள் கேட்டது தனி மாவட்டம், கிடைத்தது மாநகராட்சி. இதனால் வரிகளால் மக்கள் திண்டாடுவார்கள்.

கும்பகோணம் பகுதி மக்களின் கோரிக்கையை புறக்கணித்துவிட்டு மாநகராட்சி என வெற்று அறிவிப்பினை வெளியிட்டிருக்கிற திமுக அரசின் வஞ்சகச் செயலை கண்டித்து கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். எனவே, தமிழக அரசு நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே 110 விதியின் கீழ் கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்காவிட்டால்,  தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

தலைப்பு செய்திகள்

இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
ஏரியை தூர்வார 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சோழர்கள் பயன்படுத்திய ‘குமிழித்தூம்பு’
ஏரியை தூர்வார 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சோழர்கள் பயன்படுத்திய ‘குமிழித்தூம்பு’
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget