மேலும் அறிய

மேகதாட்டு அணை கட்டும் திட்ட அறிக்கை தாக்கல் செய்ய அனுமதித்ததை கண்டித்து தஞ்சையில் ரயில் மறியல்

காவிரி மேலாண்மை ஆணையத்தில் விவாதிக்க எடுத்துக் கொண்டதும் எந்த வகையிலும் ஏற்கத்தக்கது அல்ல. இது ஏற்கனவே காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளுக்கு முற்றிலும் மாறானது. 

தஞ்சாவூா்: மேகதாட்டு அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசின் ஜல் சக்தி நீர்வளத்துறை அமைச்சகம் அனுமதி கொடுத்தது மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தில் விவாதிக்க எடுத்துக் கொண்டதை கண்டித்து தஞ்சையில் இன்று தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடந்தது.

காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டக்கூடாது என்று காவிரி நடுவர் மன்றமும், உச்ச நீதிமன்றமும் மிகத் தெளிவாக உத்தரவிட்டு அது மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டது. ஒரு ஆற்றின் குறுக்கே அணைக் கட்டும்போது கீழே உள்ள மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் செய்யக்கூடாது என்பது உலகளாவிய கோட்பாடாகும்.


மேகதாட்டு அணை கட்டும் திட்ட அறிக்கை தாக்கல் செய்ய அனுமதித்ததை கண்டித்து தஞ்சையில் ரயில் மறியல்

மேகதாது  அணை வந்தால் தமிழகத்தில் குடிநீர் பஞ்சம் ஏற்படும். டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும். கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசின் ஜல் சக்தி நீர்வளத்துறை அமைச்சகம் அனுமதி கொடுத்ததும் காவிரி மேலாண்மை ஆணையத்தில் விவாதிக்க எடுத்துக் கொண்டதும் எந்த வகையிலும் ஏற்கத்தக்கது அல்ல. இது ஏற்கனவே காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளுக்கு முற்றிலும் மாறானது. 

மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசிற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது மத்திய அரசின் அழுத்தத்தால் தான். மேகதாது அணைக்கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க  அனுமதி அளித்ததை கண்டிப்பது என்பது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று காலை 12 மணியளவில் சென்னை செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து போராட்டம் நடத்தப்பட்டது. 

அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கோஷங்கள் எழுப்பினர். மேலும் மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுத்து அணை கட்டாமல் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். பின்னர் போலீசார் ரயில் மறியலில் ஈடுபட்ட 112 விவசாயிகளை கைது செய்து அழைத்து சென்றனர். இதனால் ரயில் நிலைய பகுதியில் பரபரப்பு நிலவியது. விவசாயிகள் மறியல் போராட்டத்தை அடுத்து மயிலாடுதுறைக்கு சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்றது.

பாதுகாப்பு ஏற்பாடுகளை டவுன் டிஎஸ்பி சோமசுந்தரம் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சந்திரா, மணிகண்டன் மற்றும் ஏராளமான போலீசார் மேற்கொண்டனர். 
 
மறியல் போராட்டம் குறித்து தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க மாநில தலைவர் பழனியப்பன் கூறுகையில், மேகதாட்டு அணை கட்டுவதற்கான வரைவு அறிக்கையை தாக்கல் செய்யலாம் என்று கூறியதை வன்மையாக கண்டித்து ரயில் மறியல் போராட்டம் நடத்தி உள்ளோம். தொடர்ந்து மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்து வருகிறது. மேகதாட்டில் அணை கட்டுவதை மத்திய அரசு தடுத்து ராசிமணலில் அணை கட்ட அனுமதி வழங்க வேண்டும்.

மேகதாட்டு அணை கட்டினால் தமிழ்நாடு பாலைவனம் ஆகிவிடும். 20 மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்படுவர். 22 மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படும். இந்த விஷயத்தில் தமிழக முதல்வர் மௌனம் காப்பதையும் கண்டிக்கிறோம். தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மாநில முதல்வர்களை சந்தித்து மனு கொடுத்து மேகதாட்டு அணை விவகாரம் குறித்து நடவடிக்கை எடுக்க கேட்க உள்ளோம் என்றார். 

தலைப்பு செய்திகள்

தஞ்சை மாவட்டத்தில் நீர்நிலைகளில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி குறித்து ஓய்வு நீதிபதி ஆய்வு
தஞ்சை மாவட்டத்தில் நீர்நிலைகளில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி குறித்து ஓய்வு நீதிபதி ஆய்வு
நடுவழியில் அதிகரித்த பிரசவ வலி...  தஞ்சாவூர் அருகே 108 ஆம்புலன்சிலேயே குவா...குவா!!!
நடுவழியில் அதிகரித்த பிரசவ வலி...  தஞ்சாவூர் அருகே 108 ஆம்புலன்சிலேயே குவா...குவா!!!
சர்வர் கோளாறு... ரேஷன் கடை எந்திரங்களை ஒப்படைத்து பணியாளர்கள் போராட்டம்: கும்பகோணத்தில் பெரும் பரபரப்பு
சர்வர் கோளாறு... ரேஷன் கடை எந்திரங்களை ஒப்படைத்து பணியாளர்கள் போராட்டம்: கும்பகோணத்தில் பெரும் பரபரப்பு
ஆபாச பேச்சு... ஓய்வு உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது: உடந்தையாக இருந்த ஆசிரியையும் கைது
ஆபாச பேச்சு... ஓய்வு உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது: உடந்தையாக இருந்த ஆசிரியையும் கைது

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
IPL 2027: அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
Kanyakumari District Holiday : 3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
Hyundai Tucson: ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
Embed widget