மேலும் அறிய

தஞ்சையில் பரபரப்பு: மகனின் சிகிச்சை வேண்டி தாய் தீக்குளிக்க முயற்சி! கலெக்டர் அலுவலகத்தில் சோகம்

எங்களை ஏமாற்றி எனது மகனின் வலது கால் முட்டியை அகற்றி விட்டனர். அதன் பின்னர் தற்போது வரை பல இடங்களில் மருத்துவம் செய்தும் என் மகனை நடக்க வைக்க முடியவில்லை.

தஞ்சாவூர்: கால் முட்டி பாதிப்புக்கு சிகிச்சை பெற்றும் நடக்க முடியாமல் தவிக்கும் தனது மகனுக்கு சரியான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தாய் தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் தன் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர். அப்போது கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த அய்யம்பேட்டை அருகே உள்ள மாத்தூரை சேர்ந்த செல்வம் மனைவி சாரதா (42) என்பவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த பாட்டிலை எடுத்து அதிலிருந்து மண்எண்ணெய்யை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் விரைந்து சென்று சாரதாவிடம் இருந்து பாட்டிலை பறிமுதல் செய்து உடல் மீது தண்ணீர் ஊற்றினர். பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் சாரதா, தனக்கு இரண்டு மகள் , 1 மகன்  உள்ளனர். கணவர் கூலி வேலை செய்து வருகிறார். தனது மகன் தற்போது பாலிடெக்னிக் படித்து வருகிறார். தனது மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது கீழே விழுந்ததில் வலது முட்டி அடிபட்டது. இதையடுத்து எனது மகனை திருச்சியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதித்தோம்.

ஆனால் அங்கு எங்களை ஏமாற்றி எனது மகனின் வலது கால் முட்டியை அகற்றி விட்டனர். அதன் பின்னர் தற்போது வரை பல இடங்களில் மருத்துவம் செய்தும் என் மகனை நடக்க வைக்க முடியவில்லை. இதனால் சென்னையில் உள்ள மருத்துவமனையில் வைத்து மகனுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை . இதனால் விரக்தி அடைந்து மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றேன் என்று போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து தொடர்ந்து சாரதாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு அவருக்கு இதுபோன்று மண்எண்ணெய் ஊற்றிக் கொள்வது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று அறிவுரை அளித்து அவரது கோரிக்கை மனுவை கலெக்டர் அலுவலகத்தில் கொடுக்கச் செய்தனர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது ‌.

விவசாயிகள் வேதனை மனு

நடப்பு குறுவை சாகுபடியில் புகையான் பூச்சியின் தாக்குதலால் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே காப்பீட்டு நிறுவனம் மற்றும் மாவட்ட வேளாண் அலுவலர்கள் நேரில் பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பூதலூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜனிடம் மனு அளித்தனர். 

அந்த விவசாயிகள் தெரிவித்துள்ளதாவது: தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் கோவில்பத்து, கங்கை சமுத்திரம், நாச்சியார்பட்டி பகுதியில் உரிய காலத்தோடு குறுவை நெல் சாகுபடி செய்துள்ளோம். அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெல் பயிரை புகையான் பூச்சி கடுமையாக தாக்கி மகசூல் வெகுவாக பாதிப்படைந்துள்ளது. பூதலூர் பகுதியில் சுமார் 1600 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதில் ஆயிரம் ஏக்கருக்கு மேல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏக்கருக்கு ரூபாய் 35 ஆயிரம் வரை செலவு செய்து விவசாயம் செய்து உள்ளோம். சில வயல்களில் அறுவடை முடிந்துள்ளது. ஏக்கருக்கு சுமார் 20 மூட்டை தான் விளைச்சல் வந்துள்ளது.

இன்னும் அறுவடை ஒரு வாரத்தில் நிறைவடையும் நிலையில் பூச்சி தாக்குதலால் அறுவடை செய்யப்படாமல் உள்ளது. எனவே மாவட்ட வேளாண் அலுவலர்கள் விரைந்து நேரில் பார்த்து உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

வெயிலா... மேகமா... மழையா? “குடை எடுத்துச் செல்வோமா... வேண்டாமா?” தஞ்சை மக்கள் குழம்பும் இன்றைய வானிலை
வெயிலா... மேகமா... மழையா? “குடை எடுத்துச் செல்வோமா... வேண்டாமா?” தஞ்சை மக்கள் குழம்பும் இன்றைய வானிலை
ரயில் வரும் போது தண்டவாளத்தில் நின்றவரை காப்பாற்றும் முயற்சி… கேட்கீப்பரும் ரயில் மோதி பலியான சோகம்
ரயில் வரும் போது தண்டவாளத்தில் நின்றவரை காப்பாற்றும் முயற்சி… கேட்கீப்பரும் ரயில் மோதி பலியான சோகம்
சுதந்திர தினத்தை வரவேற்கும் ராஜராஜ சோழனின் கம்பீர சின்னம்... கோபுரம் முன்பு செல்ஃபி எடுத்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்!
சுதந்திர தினத்தை வரவேற்கும் ராஜராஜ சோழனின் கம்பீர சின்னம்... கோபுரம் முன்பு செல்ஃபி எடுத்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்!
ஆன்லைன் மது விற்பனைக்கு எதிர்ப்பு; பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
ஆன்லைன் மது விற்பனைக்கு எதிர்ப்பு; பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Anbumani: பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
Kite Festival : காத்தாடி திருவிழா! 2 நாள் விடுமுறையில் குடும்பத்துடன் சென்று ரசிக்கலாம் – அனுமதி இலவசம்; எங்கே தெரியுமா?
காத்தாடி திருவிழா! 2 நாள் விடுமுறையில் குடும்பத்துடன் சென்று ரசிக்கலாம் – அனுமதி இலவசம்; எங்கே தெரியுமா?
Gold and silver rate today : தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய விலை நிலவரம் இதோ..
தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய நிலவரம் இதோ..
CM Vijay DVAC: லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
திமுக ஆட்சியில் ரூ.37 ஆயிரம் EB பில்.. இப்போ ரூ.13 ஆயிரம்.. எனக்கு அதிகமாக வரல.. வசமாக சிக்கிய வைஷாலி!
திமுக ஆட்சியில் ரூ.37 ஆயிரம் EB பில்.. இப்போ ரூ.13 ஆயிரம்.. எனக்கு அதிகமாக வரல.. வசமாக சிக்கிய வைஷாலி!
Embed widget