மேலும் அறிய

மேகதாது அணை திட்ட வரைவு அறிக்கை விவகாரம்: தஞ்சையில் தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு இன்று தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூா்: மேகதாது அணை விவகாரத்தில் திட்ட வரைவு அறிக்கை தயாரிக்க வழங்கப்பட்ட அனுமதியை திரும்பபெற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சையில் தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது

தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு இன்று தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். மாநிலத் தலைவர் முகமது இப்ராஹிம் கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் காவிரி குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட திட்ட வரைவு அறிக்கை தயார் செய்ய வழங்கப்பட்ட அனுமதியை உச்சநீதிமன்றம் திரும்ப பெற வேண்டும். வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கி தஞ்சையில் அவரது முழு உருவ சிலை , நினைவு ஆலயம் அமைக்க வேண்டும். நெல்லுக்கு ஈரப்பதம் 22 சதவீதமாக உயர்த்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் ஒன்றிய தலைவர்கள் ஜமால் முகமது (திருவையாறு), ரமேஷ் ( அம்மாபேட்டை), அன்பழகன் ( பாபநாசம்), மகேஷ் காளிமுத்து ( பேராவூரணி), ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் கோவிந்தராஜ், காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவர் ரவிச்சந்தர், திருவையாறு கரும்பு விவசாயிகள் சங்கம் அறிவழகன், தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்க மாநிலத் துணைச் செயலாளர் சசிகுமார், இளைஞரணி தலைவர் ராஜேஷ் கண்ணன், மகளிர் அணி செயலாளர் இந்திரா காந்தி, தஞ்சை மாவட்ட செயலாளர் மகேஸ்வரன் , மாவட்ட பொருளாளர் அருணாச்சலம், மாவட்ட தலைவர்கள் அரியலூர் தேசிங்கு, மதுரை  ராஜு, மயிலாடுதுறை தாமஸ், திருவாரூர் அல்லாபிச்சை, புதுக்கோட்டை வால்மீகி நாதன், கடலூர் கிருபாகரன், திருச்சி தீபன் ராஜ், மாவட்ட செயலாளர் அரியலூர்  பிச்சைபிள்ளை , தஞ்சை மாவட்ட துணைத்தலைவர்கள் வீராசாமி , சின்ன குஞ்சு, முருக சரவணன், மாவட்ட செய்தி தொடர்பாளர் மணிகண்டன், மாவட்ட துணை செயலாளர் பிரசாந்த்  உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மருந்து, விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தினர் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்க கூடாது , மருந்து விலை நிர்ணயம் ஏழை எளிய மக்களை பாதிக்காத வகையில்  உருவாக்க வேண்டும்,  சுகாதாரத்திற்காக ஒன்றிய அரசு ஒதுக்கக்கூடிய நிதியை மேலும் உயர்த்த வேண்டும். மத்திய அரசு தொழிலாளர்களான தங்களுக்கு பாதுகாப்பாக இருந்த 29 தொழிலாளர் நல சட்டங்களை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சாதகமாக 4 தொகுப்புகளாக மாற்றி முழுமையாக அமல்படுத்த முடிவெடுத்துள்ளனர்.

அரசின் இந்த முடிவு எங்களுடைய எதிர்காலத்தையும் குடும்பத்தின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் எனவே ஒன்றிய அரசு இந்த 4 சட்ட தொகுப்புகளை திரும்பப் பெற வேண்டும் , மருந்து விற்பனை பிரதிநிதிகளுக்கு பொருந்தக்கூடிய சட்டமான விற்பனை அபிவிருத்தி பணியாளர்கள் சட்டம் 1976 ஐ மாற்றக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

நாளை சென்னையில் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர். மத்திய அரசு எங்களது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை என்றால் அனைத்து மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும்  எச்சரிக்கை விடுத்தனர்.

தலைப்பு செய்திகள்

தஞ்சையில் இஞ்சி விலை கிடுகிடு உயர்வு! வரத்து குறைந்ததால் உச்சம்: இல்லத்தரசிகள் அதிர்ச்சி
தஞ்சையில் இஞ்சி விலை கிடுகிடு உயர்வு! வரத்து குறைந்ததால் உச்சம்: இல்லத்தரசிகள் அதிர்ச்சி
ரேஷன் அரிசி கடத்தினால் கைது மட்டும் இல்லை... குண்டர் சட்டமும் பாயும்!
ரேஷன் அரிசி கடத்தினால் கைது மட்டும் இல்லை... குண்டர் சட்டமும் பாயும்!
பயமுறுத்தும் பட்டுப்போன மரம்... பள்ளி மாணவர்களுக்கு அபாயம்: வெட்டி அகற்ற வலியுறுத்தல்
பயமுறுத்தும் பட்டுப்போன மரம்... பள்ளி மாணவர்களுக்கு அபாயம்: வெட்டி அகற்ற வலியுறுத்தல்
சாலையை இரண்டாகப் பிரிக்கும் பள்ளம்! சித்திரக்குடி – ஆலக்குடி சாலையில் விபத்து அபாயம்
சாலையை இரண்டாகப் பிரிக்கும் பள்ளம்! சித்திரக்குடி – ஆலக்குடி சாலையில் விபத்து அபாயம்

வீடியோ

CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்
Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs ADMK:
TVK vs ADMK: "திமுக-வுடன் கூட்டுக்களவாணி ஆட்சி.. கொடநாடைப் பேசினால் நடுங்குபவர்.." இபிஎஸ்-ஐ விளாசிய தவெக!
Special Bus: வார லீவு.. ஊருக்கு போறீங்களா? ஸ்பெஷல் பஸ் ரெடியா இருக்குது! எங்கே இருந்து எவ்வளவு பேருந்துகள்?
Special Bus: வார லீவு.. ஊருக்கு போறீங்களா? ஸ்பெஷல் பஸ் ரெடியா இருக்குது! எங்கே இருந்து எவ்வளவு பேருந்துகள்?
NEET UG Result 2026: நீட் தேர்வு முடிவுகள் எப்போது? வெளியான தகவல்! காத்திருக்கும் 20 லட்சம்+ மாணவர்கள்!
NEET UG Result 2026: நீட் தேர்வு முடிவுகள் எப்போது? வெளியான தகவல்! காத்திருக்கும் 20 லட்சம்+ மாணவர்கள்!
India Condemn Hormuz Attack: ஹார்முஸில் டேங்க்கரை தாக்கிய ஈரான்; பலியான இந்திய மாலுமி; தாக்குதலை நிறுத்தக்கூறி இந்தியா கண்டனம்
ஹார்முஸில் டேங்க்கரை தாக்கிய ஈரான்; பலியான இந்திய மாலுமி; தாக்குதலை நிறுத்தக்கூறி இந்தியா கண்டனம்
இனி சிபிஎஸ்இ 9, 10ஆம் வகுப்புகளில் மூன்றாம் மொழி கட்டாயம்: வெளியான புதிய அறிவிப்பு
இனி சிபிஎஸ்இ 9, 10ஆம் வகுப்புகளில் மூன்றாம் மொழி கட்டாயம்: வெளியான புதிய அறிவிப்பு
Senthil Balaji: விசாரணைக்கு வந்தா என்னை கைது செய்யக்கூடாது.! போலீசாருக்கு செந்தில் பாலாஜி பரபரப்பு கடிதம்
விசாரணைக்கு வந்தா என்னை கைது செய்யக்கூடாது.! போலீசாருக்கு செந்தில் பாலாஜி பரபரப்பு கடிதம்
600 கி.மீட்டர் மைலேஜ்... இளைஞர்களின் நாடித்துடிப்பு Yamaha FZ Blue Flex - இந்த பைக் எவ்ளோ விலை?
600 கி.மீட்டர் மைலேஜ்... இளைஞர்களின் நாடித்துடிப்பு Yamaha FZ Blue Flex - இந்த பைக் எவ்ளோ விலை?
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 vs புல்லட் 350: மைலேஜ், விலை,டிசைன்- எது பெஸ்ட்? முழு ஒப்பீடு
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 vs புல்லட் 350: மைலேஜ், விலை,டிசைன்- எது பெஸ்ட்? முழு ஒப்பீடு
Embed widget