மேலும் அறிய

சட்சட்டென்று நடவடிக்கை... மேயர் சண்.ராமநாதனின் துரித செயல்பாட்டிற்கு பெண்கள் பாராட்டு

வெளியூரில் இருந்து குடும்ப சூழலுக்காக பெண்கள் பணிக்கு வருகின்றனர். அவர்களை இரவு நேரத்தில் சீக்கிரமே வீட்டிற்கு அனுப்புங்கள். அவர்கள் பஸ் இல்லாமல் வீட்டிற்கு தாமதமாக செல்கின்றனர்,

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மேயர் சண்.ராமநாதன் எடுத்த நடவடிக்கை பெண்கள் மத்தியில் பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறது.

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் சுகாதாரமற்ற நிலையில் இருக்கிறது. போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன என்று புகார்கள் மாநகராட்சி மேயர் மற்றும் நிர்வாகத்தினருக்கு வந்தது. இதையடுத்து இன்று தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் மேயர் சண்.ராமநாதன் திடீரென ஆய்வு செய்தார்.

அப்போது நடைமேடையை ஆக்கிரமித்து கடைகள் அமைத்திருந்த வியாபாரிகளிடம் பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் கடைகளை அமைக்குமாறு அறிவுறுத்தினார். மேலும், நடைமேடைகளில் நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆக்கிரமிப்புகளை 3 நாட்களுக்குள் வியாபாரிகள் அகற்றிக் கொள்ள வேண்டும். இல்லாவிடில் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.


சட்சட்டென்று நடவடிக்கை... மேயர் சண்.ராமநாதனின் துரித செயல்பாட்டிற்கு பெண்கள் பாராட்டு

பயணிகள் நடந்து செல்லக்கூட இடமில்லாத நிலை உள்ளது என்று தெரிவிக்கின்றனர். மக்களுக்கு இடையூறாக இருக்கவே கூடாது என்று வியாபாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். அப்போது பஸ்சுக்காக காத்திருந்த மாணவர்களிடம் நீங்கள் எந்த பள்ளியில் படிக்கிறீர்கள்? காலதாமதம் ஆகி விட்டது. இன்னும் பள்ளிக்கு செல்லவில்லையா? என விசாரித்தார். பின்னர் கல்விதான் அசைக்க முடியாத செல்வம். எனவே நன்றாக படிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். 

மேயர் சண்.ராமநாதன் ஆய்வுப்பணியில் ஈடுபட்டுள்ளதை கண்ட சில பெண்கள் வேகமாக வந்து அவரிடம் தயங்கியபடியே நின்றனர். உடன் அவர்களை பார்த்த மேயர் சண். ராமநாதன், என்ன விஷயம் சொல்லுங்கள் என்று தெரிவிக்க, அந்த பெண்கள் நாங்கள் தஞ்சையில் உள்ள ஒரு ஜவுளி கடையில் வேலை பார்க்கிறோம். நாங்கள் வெளியூரில் இருந்து இங்கு வேலைக்கு வருகிறோம்‌. எங்களுக்கு பணி இரவு 9 மணிக்கு முடிவடையும். அதன் பிறகு, நாங்கள் வீட்டிற்கு செல்வதற்கு நீண்ட நேரம் ஆகிறது. சில நேரத்தில் பஸ் இல்லாமல் மிகவும் அவதிக்குள்ளாகிறோம் என்று தெரிவித்தனர்.

அடுத்த நொடியே அந்த ஜவுளிக்கடையின் மேலாளரை மேயர் சண்.ராமநாதன் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். வெளியூரில் இருந்து குடும்ப சூழலுக்காக பெண்கள் பணிக்கு வருகின்றனர். அவர்களை இரவு நேரத்தில் சீக்கிரமே வீட்டிற்கு அனுப்புங்கள். அவர்கள் பஸ் இல்லாமல் வீட்டிற்கு தாமதமாக செல்கின்றனர். உங்கள் நிறுவன உரிமையாளரிடம் தெரிவியுங்கள் என்று கூறி உடன் நடவடிக்கை எடுத்தார். சில நிமிடத்திலேயே அந்த ஜவுளி நிறுவன நிர்வாகத்தினர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து வெளியூரிலிருந்து வரும் பெண்களை இரவு 8 மணிக்கு பணி முடித்து வீட்டிற்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளோம் என்று தகவல் தெரிவித்தனர். மேயர் சண்.ராமநாதனின் இந்த அதிரடி நடவடிக்கை பெண்கள் மத்தியில் பாராட்டுக்களை குவித்தது.

தொடர்ந்து, அங்குள்ள கழிவறைக்குள் சென்று தூய்மையாக இருக்கிறதா? என பார்வையிட்டார். மேலும், பஸ் நிலையத்தின் அனைத்து பகுதிகளுக்கும் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் மேயர் சண்.ராமநாதன் நிருபர்களிடம் கூறியதாவது: தஞ்சை பழைய பஸ் நிலையம் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதாக வந்த புகாரை அடுத்து இன்று காலை ஆய்வு செய்தோம். அப்போது நடைமேடையை ஆக்கிரமித்து கடைகள் அமைத்திருந்த வியாபாரிகளிடம் பயணிகள் நடந்து செல்ல இடையூறு ஏற்படாத வகையில் கடைகள் அமைக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

தொடர்ந்து, வருகிற திங்கட்கிழமை இதேப்போல், ஆய்வுக்கு வருவோம். அப்போது அகற்றப்படாத கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதேப்போல, நடைமேடைகளில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும், அங்குள்ள பொது கழிவறையால் அருகில் உள்ள மண்டபத்தில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, அந்த கழிவறையை வேறு இடத்திற்கு மாற்றவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது மாநகராட்சி துணை மேயர் டாக்டர். அஞ்சுகம் பூபதி, 25-வது வார்டு கவுன்சிலர் தெட்சிணாமூர்த்தி, நகர் நல அலுவலர் நமச்சிவாயம் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். 

தலைப்பு செய்திகள்

சக்கராப்பள்ளியில் 12-ல் மக்கள் நேர்காணல் முகாம்! முன்கூட்டியே மனு அளிக்க கலெக்டர் ரேவதி அழைப்பு
சக்கராப்பள்ளியில் 12-ல் மக்கள் நேர்காணல் முகாம்! முன்கூட்டியே மனு அளிக்க கலெக்டர் ரேவதி அழைப்பு
மக்களே 10ம் தேதி முக்கியமான நாள்... தஞ்சை கலெக்டர் அறிவிப்பு எதற்காக?
மக்களே 10ம் தேதி முக்கியமான நாள்... தஞ்சை கலெக்டர் அறிவிப்பு எதற்காக?
மத்திய அரசுக்கு எதிராக 10ல் ‘மறியல்’: தஞ்சையில் 4 மையங்களில் களமிறங்கும் தொழிற்சங்கங்கள்–விவசாயிகள்
மத்திய அரசுக்கு எதிராக 10ல் ‘மறியல்’: தஞ்சையில் 4 மையங்களில் களமிறங்கும் தொழிற்சங்கங்கள்–விவசாயிகள்
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
Agriculture Budget : வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
Kia Carens: ஆகஸ்ட் அதிரடி- கியா கேரன்ஸ் கிளாவிஸ், EV-க்கு ரூ.1.2 லட்சம் சலுகைகள்!
Kia Carens: ஆகஸ்ட் அதிரடி- கியா கேரன்ஸ் கிளாவிஸ், EV-க்கு ரூ.1.2 லட்சம் சலுகைகள்!
Gold and silver rate today : சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
பட்ஜெட் விலையில் பிரீமியம் பைக்குகள்: அட்டகாச லுக்கில் மிடில் கிளாஸுக்கு ஏத்த மாஸ் பைக்ஸ் என்ன?
பட்ஜெட் விலையில் பிரீமியம் பைக்குகள்: அட்டகாச லுக்கில் மிடில் கிளாஸுக்கு ஏத்த மாஸ் பைக்ஸ் என்ன?
Viral Video: வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு, சாப்டனும்” மகள்களின் வீடியோ
வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு,சாப்டனும்” மகள்களின் வீடியோ
TN Govt Debt: தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
Embed widget