மேலும் அறிய

மாமூல் கேட்டு தாக்கப்பட்ட சமூக ஆர்வலர் - போலீஸ் கைவிரித்த நிலையில் கலெக்டரிடம் முறையீடு

மூன்று நாட்களாக உணவு வரவில்லை என சமூக ஆர்வலரை தேடி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரண்ட ஆதரவற்ற முதியவர்கள்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பெரம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சமூக ஆர்வலர் பாரதிமோகன். வெளிநாடு சென்றுவிட்டு தாயகம் (இந்தியா) திரும்பியுள்ள இவர், மயிலாடுதுறை சாலைகளில் ஒருவேளை உணவிற்கு கூட வழியில்லாமல் தவித்து வரும் ஆதரவற்ற முதியவர்களை கண்டு வேதனையடைந்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவர்களுக்கு உதவ வேண்டும் என்று முடிவு செய்த பாரதிமோகன், அவரது பெயரிலேயே அறக்கட்டளை ஒன்றை தொடங்கி, ஆதரவறறவர்களை தேடி உணவு வழங்க தொடங்கினார். யாரும் உறவுகள் இன்றி இருக்கும் ஆதரவற்றவர்கள், மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களை தேடிப் பிடித்து அவர்களுக்கு முடி திருத்தம் செய்து அவர்களை தூய்மைப்படுத்தும் சேவைப் பணியையும் செய்து வருகிறார்.


மாமூல் கேட்டு தாக்கப்பட்ட சமூக ஆர்வலர் - போலீஸ் கைவிரித்த நிலையில் கலெக்டரிடம் முறையீடு

கடந்த 2012 -ஆம் ஆண்டு முதல் மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரியும் ஆதரவற்ற நபர்களை தூய்மைப்படுத்தி அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் முயற்சியில் ஈடுபட்ட பாரதிமோகன், இதுவரை 500க்கும் மேற்பட்டவர்களுக்கு உதவி செய்துள்ளார். மேலும் இவரது சேவையை பாராட்டி கோயம்புத்தூர் கோல்டன் ஹியூமன் பீஸ் பல்கலைக்கழகம் பாரதி மோகனுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. மேலும் அவர்களுக்கு பல்வேறு சேவைகள் செய்து வரும் நிலையில் சில நாட்களுக்கு முன்னர் கிளியனூர் பகுதியில் மாலை நேரத்தில் அவரது வாகனத்தை வழிமறித்த சிலர் மாமூல் கேட்டு வாகனத்தை அடித்து உடைத்ததோடு, வாகனத்தில் இருந்த சிலரை தாக்கியுள்ளனர்.


மாமூல் கேட்டு தாக்கப்பட்ட சமூக ஆர்வலர் - போலீஸ் கைவிரித்த நிலையில் கலெக்டரிடம் முறையீடு

இதில் படுகாயம் அடைந்த பாரதி மோகன், சகோதரர் தனுஷ்கோடி மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இந்நிலையில் தாக்குதல் குறித்து பெரம்பூர் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்ட போதும் தாக்குதல் நடத்தியவர்களை விட்டுவிட்டு புகார் அளித்த பாரதிமோகன் குடும்பத்தினர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தங்களுக்கு நியாயம் வேண்டும் எனக் கூறி காவல் துறையே நடவடிக்கை எடுக்கவில்லை கை விரித்து விட்டதாக கூறி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல மணி நேரம் காத்திருந்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதியை நேரில் சந்தித்து பாரதி மோகன் குடும்பத்தினர் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனர்.


மாமூல் கேட்டு தாக்கப்பட்ட சமூக ஆர்வலர் - போலீஸ் கைவிரித்த நிலையில் கலெக்டரிடம் முறையீடு

தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும், தாங்கள் மீண்டும் சேவை செய்ய வேண்டும், என மாவட்ட ஆட்சியரிடம் கைகூப்பி கும்பிட்டு மன்றாடி கேட்டனர். இதனை கேட்ட மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். இந்நிலையில் பாரதிமோகன் அறக்கட்டளை தினமும் சாலையோரங்களில் கைவிடப்பட்டவர்களுக்கு உணவு அளித்து வந்த நிலையில் கடந்த நான்கு தினங்களாக உணவு வரவில்லை என தவித்த ஆதரவற்றோர்கள் அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று விசாரித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், தினமும் ஆதரவின்றி தவிப்போர்களுக்கு உணவு அளிப்பார்கள், அவர்கள் நான்கு நாட்களாக எங்களுக்கு உணவு தரவில்லை, எங்களைக் காணவும் வரவில்லை, அவர்களைப் பார்த்து என்ன பிரச்சனை என்று விசாரித்து செல்வதாக கூறினர்.


மாமூல் கேட்டு தாக்கப்பட்ட சமூக ஆர்வலர் - போலீஸ் கைவிரித்த நிலையில் கலெக்டரிடம் முறையீடு

பிறகு பிரச்சினையை கேட்டு கலெக்டரிடம் நாங்களும் மன்றாடி கேட்கிறோம் எங்களைப் போன்றவர்களுக்கு அவர்கள் உணவு அளித்து வருகிறார்கள். அவர்களுக்கு ஒரு பிரச்சனை என்று கேட்கும் போது எங்களது மனசு தாங்கவில்லை. மாவட்ட ஆட்சியர் சமூக விரோதிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தினமும் ஆதரவற்றவர்களுக்கு பாரதி மோகன் அறக்கட்டளை உணவு அளிக்க வேண்டும் என்று ஆதரவற்றவர்கள் கேட்டுக்கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay: விஜய் பெயரைக்கூட சொல்லாத செங்கோட்டையன்.. ஈரோடு தவெக பரப்புரையில் பரபரப்பு!
TVK Vijay: விஜய் பெயரைக்கூட சொல்லாத செங்கோட்டையன்.. ஈரோடு தவெக பரப்புரையில் பரபரப்பு!
’’பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்; பெண்கள் நினைச்சா எதையும் செய்வாங்க’’- முதல்வர் ஸ்டாலின் ருசிகரம்
’’பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்; பெண்கள் நினைச்சா எதையும் செய்வாங்க’’- முதல்வர் ஸ்டாலின் ருசிகரம்
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Honda Cars 2026: ஹோண்டா மீண்டு வருமா? அப்க்ரேட் தொடங்கி ஹைப்ரிட் வரை - புத்தாண்டுக்கான மாடல்களின் லிஸ்ட்
Honda Cars 2026: ஹோண்டா மீண்டு வருமா? அப்க்ரேட் தொடங்கி ஹைப்ரிட் வரை - புத்தாண்டுக்கான மாடல்களின் லிஸ்ட்
ABP Premium

வீடியோ

”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்
Virugambakkam DMK Candidate | விருகம்பாக்கம் சீட் யாருக்கு? பிரபாகர்ராஜாவா? தனசேகரனா? திமுகவில் காத்திருக்கும் Twist
கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?
குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: விஜய் பெயரைக்கூட சொல்லாத செங்கோட்டையன்.. ஈரோடு தவெக பரப்புரையில் பரபரப்பு!
TVK Vijay: விஜய் பெயரைக்கூட சொல்லாத செங்கோட்டையன்.. ஈரோடு தவெக பரப்புரையில் பரபரப்பு!
’’பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்; பெண்கள் நினைச்சா எதையும் செய்வாங்க’’- முதல்வர் ஸ்டாலின் ருசிகரம்
’’பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்; பெண்கள் நினைச்சா எதையும் செய்வாங்க’’- முதல்வர் ஸ்டாலின் ருசிகரம்
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Honda Cars 2026: ஹோண்டா மீண்டு வருமா? அப்க்ரேட் தொடங்கி ஹைப்ரிட் வரை - புத்தாண்டுக்கான மாடல்களின் லிஸ்ட்
Honda Cars 2026: ஹோண்டா மீண்டு வருமா? அப்க்ரேட் தொடங்கி ஹைப்ரிட் வரை - புத்தாண்டுக்கான மாடல்களின் லிஸ்ட்
CTET 2026: ஆசிரியர் கனவை நனவாக்க இன்றே கடைசி! விண்ணப்பிப்பது எப்படி? முக்கிய தேதிகள் இதோ!
CTET 2026: ஆசிரியர் கனவை நனவாக்க இன்றே கடைசி! விண்ணப்பிப்பது எப்படி? முக்கிய தேதிகள் இதோ!
Stalin Vs EPS: டெல்லியைக் குளிர்விக்க...பட்டும் படாமல் தொட்டும் தொடாமல் அழுத்தமா.! இபிஎஸ்க்கு எதிராக சீறிய ஸ்டாலின்
டெல்லியைக் குளிர்விக்க...பட்டும் படாமல் தொட்டும் தொடாமல் அழுத்தமா.! இபிஎஸ்க்கு எதிராக சீறிய ஸ்டாலின்
பாமகவில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்.?? ராமதாசுக்கு ஷாக் கொடுக்க அன்புமணி திடீர் நோட்டீஸ்
பாமகவில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்.?? ராமதாசுக்கு ஷாக் கொடுக்க அன்புமணி திடீர் நோட்டீஸ்
Kartik Sharma: காசின்றி பட்டினி, இரவு விடுதியில் தஞ்சம் - ரூ.14.2 கோடியை அள்ளிய CSKவின் கார்திக் சர்மா கதை
Kartik Sharma: காசின்றி பட்டினி, இரவு விடுதியில் தஞ்சம் - ரூ.14.2 கோடியை அள்ளிய CSKவின் கார்திக் சர்மா கதை
Embed widget