மேலும் அறிய

சீர்காழி சட்டை நாதர் கோயிலில் கிடைத்த சிலைகள் யாருக்கும் சொந்தம்? - முடிவுக்காக காத்திருக்கும் தருமபுரம் ஆதீனம், பக்தர்கள்

சீர்காழி கோயிலில் கிடைத்த சிலைகள் குறித்து அருங்காட்சியக குழுவினர் மீண்டும் ஆய்வு செய்து வருகிறனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான பழமையான ஸ்ரீ சட்டைநாதர் சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு மே மாதம் 24 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 16 -ம் தேதி யாகசாலை அமைப்பதற்காக மேற்கு கோபுர வாசல் நந்தவனப் பகுதியில் பள்ளம் தோன்றிய பொழுது 22 ஐம்பொன்னாலான சிலைகளும், 55 பீடம் மற்றும் 462 செப்பேடுகள் மற்றும் பூஜை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது. 


சீர்காழி சட்டை நாதர் கோயிலில் கிடைத்த சிலைகள் யாருக்கும் சொந்தம்? - முடிவுக்காக காத்திருக்கும் தருமபுரம் ஆதீனம், பக்தர்கள்

இதனை அடுத்து ஐம்பொன் சிலைகளும் மற்றும் செப்பேடுகள் கோயிலின் பாதுகாப்பு அறையில் வட்டாட்சியர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு காவல்துறையினர் பாதுகாத்து வருகின்றனர். 17-ம் தேதி இந்து சமய அறநிலையத்துறை ஓலைச்சுவடி பராமரிப்பு, பாதுகாப்பு நூலாக்க திட்ட குழுவை 6 பேர்  கொண்ட  குழுவினர் சீர்காழி சட்டநாதர் கோயிலுக்கு வருகை புரிந்து  கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகளை ஆய்வு மேற்கொண்டார். அப்போது இதுவரை தமிழ்நாட்டில் ஓலை சுவடியில் எழுதிய பதிகங்கள் கிடைக்கப்பட்டுள்ளதாகவும், முதன்முறையாக அதிக அளவு பதிகங்கள் செப்பேடுகளில் எழுதப்பட்டு தற்போது இங்கு சீர்காழி தான் கிடைத்துள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பினர் தெரிவித்தனர். இந்நிலையில் விலைமதிப்பு மிக்க ஐம்பொன் சிலைகள் கோயிலில் வைக்கப்பட்டுள்ளதால் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சுவாமி சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் பாதுகாப்பு கருதி கூடுதலாக இரும்பு கிரில் கேட் பொருத்தப்பட்டுள்ளது. 


சீர்காழி சட்டை நாதர் கோயிலில் கிடைத்த சிலைகள் யாருக்கும் சொந்தம்? - முடிவுக்காக காத்திருக்கும் தருமபுரம் ஆதீனம், பக்தர்கள்

இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மீண்டும் சீர்காழி சட்டை நாதர் கோயிலில் கிடைக்க பெற்ற சிலைகள் குறித்து கடந்த சில தினங்களுக்கு மூன்பு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், கடந்த 16ம் இரவு வேளையில் சிலைகளை எடுத்து பாதுகாப்பாக வைக்கப்பட்டு, அரசுக்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில் இன்று  அவைகள் சரியாக உள்ளதா? காவல்துறை பாதுகாப்பு குறித்தும் மேலும், நாகப்பட்டினம் அருங்காட்சியக காப்பாட்சியர் வரவழைத்து அவர் பார்வையிட்டு சிலைகள் தொடர்பாக கருத்து கேட்பதற்காக ஆய்வு செய்ததாகவும்,  அருங்காட்சியக காப்பாட்சியர் தற்போது சிலை மற்றும் செப்பேடுகள் கெமிக்கல்ஸ் கொண்டு சுத்தம் செய்த பின்னர்தான் ஒரு தெளிவான முடிவுக்கு வரமுடியும் என்றும்,


சீர்காழி சட்டை நாதர் கோயிலில் கிடைத்த சிலைகள் யாருக்கும் சொந்தம்? - முடிவுக்காக காத்திருக்கும் தருமபுரம் ஆதீனம், பக்தர்கள்

தொடர்ந்து வரும் 26 தேதி இது குறித்து ஆய்வு செய்ய ஒரு குழுவுடன் காப்பாட்சியர் வருவதாகவும், அந்த குழுவில் ஆய்வுக்கு பின் அளிக்கும் தகவலின் அடிப்படையில்,  பூமிக்கு அடியில் கிடைத்த சிலைகள் தொடர்பாக அரசு அதற்கான சட்டதிட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு, சிலை தொடர்பாக கேசெட்டில் வெளியீட்டு அதன் பின்னர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இப்போதைக்கு சிலைகள் மற்றும் செப்பேடுகள் குறித்து எவ்வித முடிகளுக்களுக்கும் வர முடியாது, தொல்லியல் துறை அளிக்கும் தகவலின் அடிப்படையில் அரசு அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும் என்றார். இந்நிலையில், ஆட்சியர் கூறியதை போன்று இன்று நாகப்பட்டினம் அருங்காட்சியகம் காப்பாட்சியாளர் மணிமுத்து தலைமையிலான குழுவினர் கோயில் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட சிலைகள் குறித்து சீர்காழி கோட்டாட்சியர் அர்ச்சனா மற்றும் வட்டாட்சியர் செந்தில் முன்னிலையில் ஆய்வு செய்து வருகின்றனர்.


சீர்காழி சட்டை நாதர் கோயிலில் கிடைத்த சிலைகள் யாருக்கும் சொந்தம்? - முடிவுக்காக காத்திருக்கும் தருமபுரம் ஆதீனம், பக்தர்கள்

சிலைகள் மற்றும் செப்பேடுகள் எந்த ஆண்டை சேர்ந்தவை, அளவு, உயரம், அளம், எடை உள்ளிட்ட விபரங்களை சேகரித்து அவற்றின் விபரங்களை அரசுக்கு அறிக்கையாக தாக்கல் செய்ய உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீர்காழி சட்டநாதர் கோயில் பூமிக்கு அடியில் கிடைத்த சிலைகள், செப்பேடுகள் குறித்தும் முழு விவரம் அறிவதற்கு பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்நோக்கி உள்ளனர். மேலும் இப்பகுதி பக்தர்கள் கோயிலில் கிடைத்த சிலைகளை வேறு எங்கும் கொண்டு செல்லாமல் கோயில் வளாகத்திலேயே அரசு அருங்காட்சியகம் அமைத்தது காக்க வேண்டும் என்றும் கோரிக்கையை விடுத்து வருகின்றனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Pongal Gift: பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
Gold Rate Historic Peak: அடேங்கப்பா.! வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை; இன்று காலையிலேயே ரூ.1,600 உயர்வு
அடேங்கப்பா.! வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை; இன்று காலையிலேயே ரூ.1,600 உயர்வு
இளைஞர்களுக்கு அரசு, தனியார் துறைகளில் வாய்ப்புகள்! 2.78 லட்சம் பேருக்கு வேலை, உதவித்தொகை- விவரம்!
இளைஞர்களுக்கு அரசு, தனியார் துறைகளில் வாய்ப்புகள்! 2.78 லட்சம் பேருக்கு வேலை, உதவித்தொகை- விவரம்!
Volkswagen Cars 2026: குவாலிட்டிக்கு பேர் போன ஃபோக்ஸ்வாகன் - புத்தாண்டில் ப்ளான் என்ன? லிஸ்டட் கார்கள் - SUV மட்டுமா?
Volkswagen Cars 2026: குவாலிட்டிக்கு பேர் போன ஃபோக்ஸ்வாகன் - புத்தாண்டில் ப்ளான் என்ன? லிஸ்டட் கார்கள் - SUV மட்டுமா?
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Gift: பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
Gold Rate Historic Peak: அடேங்கப்பா.! வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை; இன்று காலையிலேயே ரூ.1,600 உயர்வு
அடேங்கப்பா.! வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை; இன்று காலையிலேயே ரூ.1,600 உயர்வு
இளைஞர்களுக்கு அரசு, தனியார் துறைகளில் வாய்ப்புகள்! 2.78 லட்சம் பேருக்கு வேலை, உதவித்தொகை- விவரம்!
இளைஞர்களுக்கு அரசு, தனியார் துறைகளில் வாய்ப்புகள்! 2.78 லட்சம் பேருக்கு வேலை, உதவித்தொகை- விவரம்!
Volkswagen Cars 2026: குவாலிட்டிக்கு பேர் போன ஃபோக்ஸ்வாகன் - புத்தாண்டில் ப்ளான் என்ன? லிஸ்டட் கார்கள் - SUV மட்டுமா?
Volkswagen Cars 2026: குவாலிட்டிக்கு பேர் போன ஃபோக்ஸ்வாகன் - புத்தாண்டில் ப்ளான் என்ன? லிஸ்டட் கார்கள் - SUV மட்டுமா?
காலி பணியிடங்கள், ஊதியம்: இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற கோரிக்கை!
காலி பணியிடங்கள், ஊதியம்: இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற கோரிக்கை!
Hero Super Splendor XTEC 125cc: Tank ஃபுல் பண்ணுங்க, 700 கி.மீ போங்க.. மைலேஜில் அசத்தும் ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர்; விலையும் கம்மி
Tank ஃபுல் பண்ணுங்க, 700 கி.மீ போங்க.. மைலேஜில் அசத்தும் ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர்; விலையும் கம்மி
எனக்கு 90, உனக்கு 25 - 65 வயது தான் வித்தியாசம்.. நடுவானில் நடந்த திருமணம் - இணையத்தில் வைரலாகும் க்ளிக்ஸ்
எனக்கு 90, உனக்கு 25 - 65 வயது தான் வித்தியாசம்.. நடுவானில் நடந்த திருமணம் - இணையத்தில் வைரலாகும் க்ளிக்ஸ்
H-1B Visa: இந்தியர்கள் ஷாக்..! H-1B, H-4 விசாக்கள் தாமதமாகும் - காரணத்தை சொன்ன அமெரிக்க தூதரகம்
H-1B Visa: இந்தியர்கள் ஷாக்..! H-1B, H-4 விசாக்கள் தாமதமாகும் - காரணத்தை சொன்ன அமெரிக்க தூதரகம்
Embed widget