மேலும் அறிய

யானையுடன் பொங்கல் கொண்டாடிய மயிலாடுதுறை நகராட்சி ஊழியர்கள்

மயிலாடுதுறை நகராட்சியில் யானையை வரவழைத்து மேளதாளம் முழங்க நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் பணியாளர்கள் முதல் அனைத்து அதிகாரிகளும் சேர்ந்து பொங்கல் வைத்து மகிழ்ந்தனர்.

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையாக கொண்டாடப்பட்டு வரும் பொங்கல் திருநாள் வரும் ஜனவரி 15 - ஆம் தேதி வெகு விமர்சியாக கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில், தமிழக முழுவதும் பள்ளி, கல்லூரிகள், பல்வேறு நிறுவனங்கள்  என பொங்கல் கொண்டாட்டம் கலை கட்டி வருகிறது. அதே போன்று மயிலாடுதுறை மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்களிலும் பொங்கல் பண்டிகை கொண்டாடி வருகின்றனர். 


யானையுடன் பொங்கல் கொண்டாடிய மயிலாடுதுறை நகராட்சி ஊழியர்கள்

இதுபோன்று மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை நகராட்சியில் சிறப்பான முறையில் சமத்துவ பொங்கல்  விழா கொண்டாடப்பட்டது. நகரமன்ற தலைவர் செல்வராஜ் தலைமையில், நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி தொடங்கி, தூய்மை பணியாளர்கள் வரை அனைத்து அதிகாரிகளும், ஊழியர்களும் சேர்ந்து புகையில்லா போகி மற்றும் பொங்கல் திருவிழாவில் அடுப்பில் மண்பானை வைத்து பொங்கல் பொங்கி கரும்பு வைத்து படையல் இட்டு வழிபாடு நடத்தினர். 


யானையுடன் பொங்கல் கொண்டாடிய மயிலாடுதுறை நகராட்சி ஊழியர்கள்

இந்த சமத்துவ பொங்கலுக்கு சிறப்பு விருந்தினராக மாயூரநாதர் கோயில் அபயாம்பிகை யானை வரவழைக்கப்பட்டு யானைக்கு மாலை அணிவித்து ஆசீர்வாதம் பெற்றனர். இந்த பொங்கல் விழாவில், நகராட்சி ஊழியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு, கரும்பு, மஞ்சள், இஞ்சி கொத்து கொடுத்து நகரமன்ற தலைவர், நகராட்சி ஆணையர் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து தெரிவித்து கொண்டு சமத்துவ பொங்கலை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.


இந்து,  இஸ்லாமிய மாணவிகள் இணைந்து பொங்கல் வைத்து மத  நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக நடைபெற்ற சமத்துவ பொங்கல்.

மயிலாடுதுறை அருகே நீடூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் இந்து, முஸ்லிம் மாணவ - மாணவிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர். இரு சமயத்தையும் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை சரிவிகிதத்தில் உள்ள இப்பள்ளியில் இந்து மற்றும் இஸ்லாமிய பண்டிகைகள் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி இப்பள்ளியில் இன்று சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.


யானையுடன் பொங்கல் கொண்டாடிய மயிலாடுதுறை நகராட்சி ஊழியர்கள்

பள்ளித் தாளாளர் ராமன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், ரங்கோலி வரைதல், கயிறு இழுத்தல், கும்மி அடித்தல், கபடி விளையாட்டு உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் இஸ்லாமிய மாணவிகள் ஏராளமானோர் பொங்கல் வைத்தும், கும்மியடித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டது மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக அமைந்தது.


சீர்காழியில் தனியார் பள்ளி, கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம், உறியடித்தல், சிலம்பம் சுற்றுதல் உள்ளிட்ட போட்டிகளுடன் நூற்றுக்கணக்கான மாணவிகள் ஒன்றிணைந்து பாரம்பரிய முறைப்படி பொங்கலை கொண்டாடினர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கீழதென்பாதியில் இயங்கி வரும் விவேகானந்தா தனியார் மகளிர் கல்லூரியில் இன்று பாரம்பரிய பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதற்காக கல்லூரி மாணவிகள் தங்கள் வீடுகளிலிருந்து அரிசி, வெல்லம், முந்திரி, ஏலக்காய், பால் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு வந்திருந்தனர். தொடர்ந்து மாணவிகள் கொண்டு வந்திருந்த பொருட்களை விளையாட்டு மைதானத்தின் நடுவே சுற்றிலும் கரும்புகள் கட்டப்பட்டு அடுப்புகள் வைத்து வண்ணம் தீட்டிய பானைகளில் இனிப்பு விதிக்க பொங்கல் வைத்து, கல்லூரி ஆசிரியர்கள் பொங்கல் வைத்தனர்.  


யானையுடன் பொங்கல் கொண்டாடிய மயிலாடுதுறை நகராட்சி ஊழியர்கள்

தொடர்ந்து  மாணவிகள் பங்கேற்ற உறியடித்தல் போட்டி உள்ளிட்ட போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். தொடர்ந்து பொங்கல் பொங்கி வரும் பொழுது நூற்றுக்கணக்கான மாணவிகள் ஒரே சமயத்தில் பொங்கலோ பொங்கல் என்று உற்சாக குரல் எழுப்பி பொங்கல் பண்டிகையை கொண்டாடினர். மேலும் மாணவிகள் நம்முடைய பாரம்பரியத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த விழா நடத்தப்படுவதாக கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இதேபோன்று சீர்காழியை அடுத்த சுபம் வித்யா மந்திர் சிபிஎஸ்இ பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் கொண்டாடினர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை... டிரைவரை போக்சோவில் கைது செய்து போலீசார் அதிரடி
சிறுமிக்கு பாலியல் தொல்லை... டிரைவரை போக்சோவில் கைது செய்து போலீசார் அதிரடி
ஆற்றில் சரித்திர பதிவேடு குற்றவாளி சடலமாக மீட்பு – உடலை வைத்து உறவினர்கள் திடீர் சாலை மறியல்!
ஆற்றில் சரித்திர பதிவேடு குற்றவாளி சடலமாக மீட்பு – உடலை வைத்து உறவினர்கள் திடீர் சாலை மறியல்!
உயிருக்கு உலை வைக்கும் சக்கரா வாய்க்கால்! அதிகாரிகளே, எப்போது தடுப்புச்சுவர் கட்டப்போகிறீர்கள்?
உயிருக்கு உலை வைக்கும் சக்கரா வாய்க்கால்! அதிகாரிகளே, எப்போது தடுப்புச்சுவர் கட்டப்போகிறீர்கள்?
150 ஆண்டுகாலக் காத்திருப்பு... 120% நெரிசலில் தவிக்கும் ரயில் பாதை! விடிவு காலம் எப்போது?
150 ஆண்டுகாலக் காத்திருப்பு... 120% நெரிசலில் தவிக்கும் ரயில் பாதை! விடிவு காலம் எப்போது?

வீடியோ

Rahul gandhi | ”காலை வாரி விடக்கூடாது! காங்கிரஸை விமர்சிக்காதீங்க” நேரடியாகவே சொன்ன ராகுல்
Nellai brother murdered sister | காதலித்த அக்காவை வெட்டி கொலை செய்த தம்பி! நெல்லையில் பகீர் சம்பவம்
C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS: ஆட்சியில் நடப்பதை சொல்வதற்கும் சென்சார் போர்டா? தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
EPS: ஆட்சியில் நடப்பதை சொல்வதற்கும் சென்சார் போர்டா? தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
படுத்த படுக்கையில் பாஜக; நிர்வாகிகளுக்கு ஐடியா மேல் ஐடியா கொடுத்த நயினார் நாகேந்திரன் - என்ன?
படுத்த படுக்கையில் பாஜக; நிர்வாகிகளுக்கு ஐடியா மேல் ஐடியா கொடுத்த நயினார் நாகேந்திரன் - என்ன?
பிட்டு படம் எடுத்திருக்கான் என்று கலாய்த்த நண்பன்..ஆதிக்கிற்கு ஆதரவாக விஜய் கொடுத்த செம ரிப்ளை
பிட்டு படம் எடுத்திருக்கான் என்று கலாய்த்த நண்பன்..ஆதிக்கிற்கு ஆதரவாக விஜய் கொடுத்த செம ரிப்ளை
Singappen Task Force: இந்தியாவில் முதல்முறை; சீறும் சிங்கப்பெண்கள்- சிறப்பு அதிரடி படையை தொடங்கிவைத்த சிஎம் விஜய்!  
Singappen Task Force: இந்தியாவில் முதல்முறை; சீறும் சிங்கப்பெண்கள்- சிறப்பு அதிரடி படையை தொடங்கிவைத்த சிஎம் விஜய்!  
6 மாதத்திற்கு முன்பே தவெக அரசை மு.க.ஸ்டாலின் விமர்சித்தது ஏன்? முன்னாள் அமைச்சர் தந்த விளக்கம்!
6 மாதத்திற்கு முன்பே தவெக அரசை மு.க.ஸ்டாலின் விமர்சித்தது ஏன்? முன்னாள் அமைச்சர் தந்த விளக்கம்!
மணல் கடத்தல் லாரியால் வந்த வினை - காவல் நிலையம் செல்லும் வழியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
மணல் கடத்தல் லாரியால் வந்த வினை - காவல் நிலையம் செல்லும் வழியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
திருச்செந்தூர் கோயில் போலி டிக்கெட் மோசடி: முன்ஜாமின் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
திருச்செந்தூர் கோயில் போலி டிக்கெட் மோசடி: முன்ஜாமின் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
பட்ஜெட் விலை.. அசத்தலான மைலேஜ்! குடும்பஸ்தனுங்களுக்கான இ ஸ்கூட்டர் Ampere Magnus Grand!
பட்ஜெட் விலை.. அசத்தலான மைலேஜ்! குடும்பஸ்தனுங்களுக்கான இ ஸ்கூட்டர் Ampere Magnus Grand!
Embed widget