மேலும் அறிய

பயிர் இன்சூரன்ஸ் தொகை வழங்கியதில் முறைகேடு; மண்ணை வாரி சாபம் விட்ட விவசாயிகள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் பயிர் இன்சூரன்ஸ் தொகை வழங்கியதில் முறைகேடு, விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மண்ணை வாரி தூற்றி சாபம் விட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆர்.லலிதா, தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கடந்த ஆண்டு 2020 - 21 ஆம் ஆண்டிற்கான பயிர் இன்சூரன்ஸ் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு 16 கோடியே 17 லட்சம் ரூபாய் மட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த ஆண்டு தொடர்ந்து மழை வெள்ளங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கணக்கெடுப்பு நடத்தியதில் புள்ளியியல் துறை மிகப் பெரிய மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும், 281 வருவாய் கிராமங்களில், 53 கிராமங்களுக்கு மட்டுமே பயிர் இழப்பீட்டு தொகை இன்சூரன்ஸ் நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்த விவசாயிகள்,


பயிர் இன்சூரன்ஸ் தொகை வழங்கியதில் முறைகேடு;  மண்ணை வாரி  சாபம் விட்ட விவசாயிகள்

228 கிராமங்களுக்கு ஒரு ரூபாய் கூட வழங்கப்படவில்லை, அரசு மற்றும் விவசாயிகள் பிரீமியம் தொகையாக 150 கோடி ரூபாய் கடந்த ஆண்டு இன்சூரன்ஸ் கம்பெனிக்கு பணம் கட்டிய நிலையில் வெறும் 16 கோடி ரூபாய் மட்டுமே மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், காவிரி டெல்டா மாவட்டங்களை புறங்கணித்து தமிழ்நாட்டில் அமைச்சர்கள் ஆதிக்கம் அதிகம் உள்ள பெரம்பலூர், கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களுக்கு மட்டும் அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினர். 


பயிர் இன்சூரன்ஸ் தொகை வழங்கியதில் முறைகேடு;  மண்ணை வாரி  சாபம் விட்ட விவசாயிகள்

இந்த முறைகேட்டை தடுக்க வேண்டும் என்றும் விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகளுக்கு போதிய இருக்கைகள் வழங்கப்படாததை கண்டித்தும் விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் குறைதீர்க்கும் கூட்டத்தில் தரையில் அமர்ந்து, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள்  வெளியேறி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தங்கள் இன்சூரன்ஸ் கட்டிய பணத்தை ஏமாற்றிய இந்த அரசு, விவசாய துறை சார்ந்த அமைச்சர்கள், இன்சூரன்ஸ் கம்பெனி நாசமாக போகவேண்டும் என மண்ணை வாரி இறைத்து சாபம் விட்டனர். 


பயிர் இன்சூரன்ஸ் தொகை வழங்கியதில் முறைகேடு;  மண்ணை வாரி  சாபம் விட்ட விவசாயிகள்

இதற்கு பதில் அளித்து பேசிய மாவட்ட ஆட்சியர் லலிதா, விவசாயிகள் வேதனையை புரிந்து கொள்ள முடிகிறது என்றும், இது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசுக்கு தனிப்பட்ட முறையில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், தெரிவித்தார். அரசு, விவசாய துறை சார்ந்த அமைச்சர்கள், இன்சூரன்ஸ் கம்பெனி நாசமாக போகவேண்டும் என மண்ணை வாரி விவசாயிகள் இறைத்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

டெல்டா மாவட்டங்களுக்கு சம்பா சாகுபடிக்கு தேவையான யூரியா, டிஏபி, காம்ப்ளக்ஸ் ஆகிய உரங்கள் ரயில் மூலம்  மயிலாடுதுறைக்கு வந்தது.

காவிரி டெல்டா மாவட்டமான மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் தஞ்சாவூர் மாவட்டங்களில் தற்போது சம்பா, தாளடி சாகுபடி பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. டெல்டா மாவட்டங்களில் தனியார் வியாபாரிகள் மூலம் தட்டுப்பாடு இன்றி உரங்கள் கிடைக்க செய்யும் வகையில் ஸ்பிக் கம்பெனி உரங்களான டிஏபி, யூரியா, காம்ப்ளக்ஸ் போன்ற உரங்கள் தூத்துக்குடியில் இருந்து ரயில் வேகன்கள் மூலம் 780 டன் யூரியா, 250 டன் டிஏபி, 250 டன் காம்ப்ளக்ஸ் ஆகிய உரங்கள் மயிலாடுதுறை ரயில்வே நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து லாரிகளில் ஏற்றி மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வியாபாரிகளுக்கு விற்பனை செய்வதற்காக அனுப்பிவைக்கப்பட்டது.

 

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Sengottaiyan: விஜய் கட்சியில் ஜெயலலிதாவின் தளபதி செங்கோட்டையன்... கொங்கு மண்டலத்தில் கெத்து காட்டும் தவெக
விஜய் கட்சியில் ஜெயலலிதாவின் தளபதி செங்கோட்டையன்... கொங்கு மண்டலத்தில் கெத்து காட்டும் தவெக
செங்கோட்டையன் மட்டுமல்ல பாஜக மாஜி மாநில தலைவரும்... தட்டி தூக்கிய விஜய்.! துள்ளி குதிக்கும் தவெக தொண்டர்கள்
செங்கோட்டையன் மட்டுமல்ல பாஜக மாஜி மாநில தலைவரும்... தட்டி தூக்கிய விஜய்.! துள்ளி குதிக்கும் தவெக தொண்டர்கள்
Vijay Seeman: ”விஜய் கட்டுவது குட்டிச்சுவர், யாராலும் ஆட்சி அமைக்க முடியாது” அட்டாக் மோடில் சீமான்
Vijay Seeman: ”விஜய் கட்டுவது குட்டிச்சுவர், யாராலும் ஆட்சி அமைக்க முடியாது” அட்டாக் மோடில் சீமான்
TN Roundup: உருவாகிறது புதிய புயல், தவெகவில் செங்கோட்டையன், தங்கம் விலை  - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: உருவாகிறது புதிய புயல், தவெகவில் செங்கோட்டையன், தங்கம் விலை - தமிழகத்தில் இதுவரை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report
செஞ்சி மஸ்தானுக்கு செக் மா.செ-வாகும் உதய் வலதுகரம் சாட்டையை சுழற்றும் ஸ்டாலின் | DMK | Senji Masthan Vs Senji Siva
ஒரே நொடியில் பறிபோன உயிர் இந்திய வீரர் உயிரிழப்பு பரபரப்பு CCTV காட்சி | Volley Ball Player Hardik Death
தவெகவில் செங்கோட்டையன் பாஜகவின் SLEEPER CELL விஜய்யை காலி செய்ய திட்டமா? | Sengottaiyan Vs TVK
தவெகவில் செங்கோட்டையன்?விஜய் வழங்கும் முக்கிய பதவி!OPERATION கொங்கு மண்டலம் | TVK | Sengottaiyan Joins TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sengottaiyan: விஜய் கட்சியில் ஜெயலலிதாவின் தளபதி செங்கோட்டையன்... கொங்கு மண்டலத்தில் கெத்து காட்டும் தவெக
விஜய் கட்சியில் ஜெயலலிதாவின் தளபதி செங்கோட்டையன்... கொங்கு மண்டலத்தில் கெத்து காட்டும் தவெக
செங்கோட்டையன் மட்டுமல்ல பாஜக மாஜி மாநில தலைவரும்... தட்டி தூக்கிய விஜய்.! துள்ளி குதிக்கும் தவெக தொண்டர்கள்
செங்கோட்டையன் மட்டுமல்ல பாஜக மாஜி மாநில தலைவரும்... தட்டி தூக்கிய விஜய்.! துள்ளி குதிக்கும் தவெக தொண்டர்கள்
Vijay Seeman: ”விஜய் கட்டுவது குட்டிச்சுவர், யாராலும் ஆட்சி அமைக்க முடியாது” அட்டாக் மோடில் சீமான்
Vijay Seeman: ”விஜய் கட்டுவது குட்டிச்சுவர், யாராலும் ஆட்சி அமைக்க முடியாது” அட்டாக் மோடில் சீமான்
TN Roundup: உருவாகிறது புதிய புயல், தவெகவில் செங்கோட்டையன், தங்கம் விலை  - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: உருவாகிறது புதிய புயல், தவெகவில் செங்கோட்டையன், தங்கம் விலை - தமிழகத்தில் இதுவரை
Hong Kong Fire Accident: 32 அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து.. 44 பேர் பலி.. திட்டமிட்ட சதியா?
Hong Kong Fire Accident: 32 அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து.. 44 பேர் பலி.. திட்டமிட்ட சதியா?
ரிஜிஸ்ட்ரேஷன் நம்பருக்கு ரூ.1.17 கோடி.. அப்படி என்ன இருக்கு அதுல? 45 போட்டியாளர்கள், இந்தியாவே ஷாக்
ரிஜிஸ்ட்ரேஷன் நம்பருக்கு ரூ.1.17 கோடி.. அப்படி என்ன இருக்கு அதுல? 45 போட்டியாளர்கள், இந்தியாவே ஷாக்
TN Weather Update: டார்கெட் தமிழகம், 4 மாவட்டங்களுக்கு வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
TN Weather Update: டார்கெட் தமிழகம், 4 மாவட்டங்களுக்கு வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
Weather Forecast: காஞ்சிபுரம் & செங்கல்பட்டு: கனமழை எச்சரிக்கை! ரெட் அலர்ட் எப்போது? IMD வானிலை அறிக்கை வெளியீடு!
Weather Forecast: காஞ்சிபுரம் & செங்கல்பட்டு: கனமழை எச்சரிக்கை! ரெட் அலர்ட் எப்போது? IMD வானிலை அறிக்கை வெளியீடு!
Embed widget