மேலும் அறிய

சீர்காழி அருகே மழையால் இடிந்த ஓட்டு வீடு - மூன்று பேர் படுகாயம்

சீர்காழி அருகே ஓட்டு வீடு இடிந்து விழுந்து மூன்று பேர் படுகாயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

வங்க கடலில் மையம் கொண்ட மிக்ஜாம் புயல் கரையை நெருங்காத நிலையிலேயே தனது கோரமுகத்தை காட்டிக் கொண்டிருக்கிறது. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களை பெருவெள்ளத்தில் தத்தளித்து படிப்படியாக, மூழ்கடித்துக் கொண்டிருக்கிறது மிக்ஜாம் கொண்டு வந்த அதீதமழை. மிக்ஜாம் புயலானது சென்னையில் சராசரியாகவும் சரமாரியாகவும் 20 செ.மீ-க்கும் அதிமான மழையை கொட்டிக் கொண்டிருக்கிறது. சென்னை மாநகரின் அத்தனை புறநகர் பகுதிகளிலும் மிக குறைவான மணிநேரங்களில் மிக மிக அதீதமான மழையை கொட்டிவிட்டது மிக்ஜாம் புயல். வடகிழகு பருவமழையானது 6% பற்றாக்குறையாக இருந்தது. ஆனால் நேற்று இரவு முதல் கொட்டித் தீர்த்த கனமழையால் 29% கூடுதலாக பருவமழை பதிவாகி இருக்கிறது.


சீர்காழி அருகே மழையால் இடிந்த ஓட்டு வீடு - மூன்று பேர் படுகாயம்

சென்னை புறநகர் பகுதிகள் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பொதுவாகவே மழை காலங்களில் சென்னை மாநகரின் புறநகர் பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி தரும். தற்போதைய பெருமழையில் பெரும்பாலான புறநகர்கள் வெள்ளத்தில் மிதந்தும் மூழ்கியும் கொண்டிருக்கின்றன. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இந்த அதீத கனமழையும் வெள்ளமும் எப்போதுதான் ஓயும் என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்னும் 6 மணிநேரத்துக்கு மழை தொடரத்தான் செய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று மாலைக்குப் பிறகு தான் மெல்ல மெல்ல மழையின் அளவுதான் குறையும் எனவும், ஆனாலும் மழை நீடிக்கும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.


சீர்காழி அருகே மழையால் இடிந்த ஓட்டு வீடு - மூன்று பேர் படுகாயம்

பின்னிரவில் இருந்துதான் மழை படிப்படியாக குறையும் என்றும், அதாவது சென்னையில் இன்று முழுவதும் மழை தொடரவே செய்யும் என எச்சரித்துள்ளது வானிலை மையம். அதாவது தற்போது சென்னைக்கு கிழக்கே மிக்ஜாம் புயல் வங்க கடலில் நகர்ந்து கொண்டிருக்கிறது. மிக்ஜாம் புயல் திடீரென 10, 11 கி.மீ வேகத்தில் நகருகிறது, சில நேரங்களில் மணிகு 8 கி.மீ வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. தற்போதைய நிலையில் மிக்ஜாம் புயல் கரையை கடக்க 6 மணிநேரம் அல்லது 7 மணிநேரம் ஆகும் என்பதால் இந்த கால கட்டத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை அல்லது கனமழை நீடிக்கும் என்கின்றனர் வானிலை ஆய்வாளர்கள். சென்னையில் இருந்து சுமார் 100 அல்லது 150 கிமீ தொலைவுக்கு அப்பால் புயல் நகர்ந்த பின்னர்தான் மழையானது நிற்கும் என கூறப்படுகிறது.


சீர்காழி அருகே மழையால் இடிந்த ஓட்டு வீடு - மூன்று பேர் படுகாயம்

இந்நிலையில் தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பெருந்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் 50 வயதான ஜமீல்ராஜ் என்பவரது ஓட்டு வீடு மழையில் நனைந்து வீடு முழுவதும் மழை நீரில் ஊறி பாதிப்படைந்துள்ளது. இந்த நிலையில் இன்று வீட்டில் வழக்கம் போல ஜமீல்ராஜ் அவரது மனைவி கமலாதேவி மற்றும் மகள் சுபஸ்ரீ 20 ஆகியோர் வீட்டில் இருந்தனர். அப்போது திடீரென ஓட்டு வீடு இடிந்து உள்ளே விழுந்துள்ளது. இதில் வீட்டிலிருந்த மூன்று பேரும் படுகாயம் அடைந்தனர் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் ஓடி வந்து வீட்டில் சிக்கி இருந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைகள் சேர்த்தனர். இதுகுறித்து திருவெண்காடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மழையால் வீடு இடித்து விழுந்து மூன்று பேர் காயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

விஜய்யை சந்திக்க அனுமதி மறுப்பா.? தவெகவில் இருந்து விலக திட்டமா.? உண்மையை போட்டுடைத்த செங்கோட்டையன்
விஜய்யை சந்திக்க அனுமதி மறுப்பா.? தவெகவில் இருந்து விலக திட்டமா.? உண்மையை போட்டுடைத்த செங்கோட்டையன்
சபரிமலை தங்கம் கொள்ளை: சி.பி.எம் தொடர்பு, மர்ம முடிச்சுகள்! அமலாக்கத்துறை அதிரடி சோதனை, நடந்தது என்ன?
சபரிமலை தங்கம் கொள்ளை: சி.பி.எம் தொடர்பு, மர்ம முடிச்சுகள்! அமலாக்கத்துறை அதிரடி சோதனை, நடந்தது என்ன?
ஆளுநர் உரை என்ற பெயரில் திமுக பொய்யுரை! இத்தனை கோடி தொழில் முதலீடுகள் உண்மையா? அன்புமணி கேள்வி
ஆளுநர் உரை என்ற பெயரில் திமுக பொய்யுரை! இத்தனை கோடி தொழில் முதலீடுகள் உண்மையா? அன்புமணி கேள்வி
Trump Greenland NATO: கிரீன்லாந்தை உள்ளடக்கிய அமெரிக்க வரைபடம்; நேட்டோ நட்பு நாடுகளை கிண்டலடித்து ட்ரம்ப் பதிவு
கிரீன்லாந்தை உள்ளடக்கிய அமெரிக்க வரைபடம்; நேட்டோ நட்பு நாடுகளை கிண்டலடித்து ட்ரம்ப் பதிவு
ABP Premium

வீடியோ

காக்கி சட்டையுடன் உல்லாசம்!கையும், களவுமாக சிக்கிய DGP!பகீர் வீடியோ
பாதியில் வெளியேறியது ஏன்?”பேசவிடாம மைக் OFF பண்றாங்க” ஆளுநர் பரபரப்பு அறிக்கை | RN Ravi Walk Out
”தாய் மதத்துக்கு திரும்பு”கொந்தளிக்கும் பாஜகவினர்!AR ரஹ்மான் சர்ச்சை பின்னணி?
19 பீர் பாட்டில்கள்... நண்பர்களின் விபரீத போட்டி! பறிபோன உயிர்கள்
வீடியோ எடுத்த பெண் மீது CASE! முந்தைய இரவு நடந்தது என்ன? தீபக்கின் நண்பர் பகீர்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய்யை சந்திக்க அனுமதி மறுப்பா.? தவெகவில் இருந்து விலக திட்டமா.? உண்மையை போட்டுடைத்த செங்கோட்டையன்
விஜய்யை சந்திக்க அனுமதி மறுப்பா.? தவெகவில் இருந்து விலக திட்டமா.? உண்மையை போட்டுடைத்த செங்கோட்டையன்
சபரிமலை தங்கம் கொள்ளை: சி.பி.எம் தொடர்பு, மர்ம முடிச்சுகள்! அமலாக்கத்துறை அதிரடி சோதனை, நடந்தது என்ன?
சபரிமலை தங்கம் கொள்ளை: சி.பி.எம் தொடர்பு, மர்ம முடிச்சுகள்! அமலாக்கத்துறை அதிரடி சோதனை, நடந்தது என்ன?
ஆளுநர் உரை என்ற பெயரில் திமுக பொய்யுரை! இத்தனை கோடி தொழில் முதலீடுகள் உண்மையா? அன்புமணி கேள்வி
ஆளுநர் உரை என்ற பெயரில் திமுக பொய்யுரை! இத்தனை கோடி தொழில் முதலீடுகள் உண்மையா? அன்புமணி கேள்வி
Trump Greenland NATO: கிரீன்லாந்தை உள்ளடக்கிய அமெரிக்க வரைபடம்; நேட்டோ நட்பு நாடுகளை கிண்டலடித்து ட்ரம்ப் பதிவு
கிரீன்லாந்தை உள்ளடக்கிய அமெரிக்க வரைபடம்; நேட்டோ நட்பு நாடுகளை கிண்டலடித்து ட்ரம்ப் பதிவு
BJP President: யார் இந்த நிதின் நபின்? பாஜகவின் புதிய தலைவர் - அமித் ஷாவின் டம்மியா? சொத்து, அரசியல் பயணம்
BJP President: யார் இந்த நிதின் நபின்? பாஜகவின் புதிய தலைவர் - அமித் ஷாவின் டம்மியா? சொத்து, அரசியல் பயணம்
Chennai Power Shutdown: சென்னைல ஜனவரி 21-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் பண்ணப் போறாங்க தெரியுமா.? பாருங்க
சென்னைல ஜனவரி 21-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் பண்ணப் போறாங்க தெரியுமா.? பாருங்க
இனி குளுகுளு பள்ளிகள்தான்.. காலநிலை மாற்றக் கல்வி- மாணவர்களின் எதிர்காலத்தை மாற்றும் ஜில் அறிவிப்பு
இனி குளுகுளு பள்ளிகள்தான்.. காலநிலை மாற்றக் கல்வி- மாணவர்களின் எதிர்காலத்தை மாற்றும் ஜில் அறிவிப்பு
Annamalai: ”அமைச்சர் நேருவின் சாதனைகள்” பட்டியலிட்ட அண்ணாமலை - ”ரூ.7 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை”
Annamalai: ”அமைச்சர் நேருவின் சாதனைகள்” பட்டியலிட்ட அண்ணாமலை - ”ரூ.7 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை”
Embed widget