மேலும் அறிய

சாலை விரிவாக்க பணியின் போது கிடைத்த அம்மன் சிலை!

மயிலாடுதுறை அருகே சாலை விரிவாக்கத்திற்காக தோண்டிய பள்ளத்தில் கண்டெடுக்கப்பட்ட அம்மன் கற்சிலையை, கிராமமக்கள் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் ஆனைமேலகரம் ஊராட்சி மல்லியம் கிராமத்தில் இருந்து அசிக்காடு செல்லும் சாலையில் சாலை விரிவாக்கப்பணி நடைபெற்று வருகிறது. சாலையின் இருபுறமும் சுமார் 2 அடி விரிவாக்கம் செய்வதற்காக அங்குள்ள 2 வது கண்மாய் அருகில் பொக்லைன் இயந்திரம் கொண்டு மண்ணை அள்ளும் பணி நடைபெற்றது வருகிறது. அப்போது மண்ணில் கருங்கலால் ஆன கற்சிலை ஒன்று தட்டுப்பட்டுள்ளது. அதனையடுத்து பொக்லைன் ஓட்டுனர் பள்ளம் தோண்டுவதை நிறுத்தி விட்டு நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளார். இதுகுறித்து, தகவல் அறிந்த அப்பகுதி கிராமமக்கள் அங்கு திரண்டு சிலையின் மீது படிந்து இருந்த மண்னை பத்திரமாக அப்புறப்படுத்தி அச்சிலையை எடுத்துச் சென்று மஞ்சளால் அபிஷேகம் செய்து, பூ, பழம் வைத்து தீபம் ஏற்றி வழிபாடு நடத்தியுள்ளனர். பின்னர், இது தொடர்பாக கிராமமக்கள் அளித்த தகவலின்பேரில் மயிலாடுதுறை வருவாய் ஆய்வாளர் மாரிமுத்து, கிராம நிர்வாக அலுவலர் குலோத்துங்கன் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று, சிலையை மீட்டு மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகத்துக்குக் கொண்டு சென்றனர். அந்த சிலை எந்த நூற்றாண்டை சேர்ந்தது? எப்படி இங்கு வந்தது? எந்த கோவிலுக்கு சொந்தமான சிலை? யாரேனும் கடத்தி வந்து, இந்த பகுதியில் புதைத்து விட்டு சென்றனரா? அல்லது இயற்கை சீற்றத்தினால் இப்பகுதியில் புதையுண்டதா? என பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.


சாலை விரிவாக்க பணியின் போது கிடைத்த அம்மன் சிலை!

மேலும் அந்த சிலையை, அந்த கிராமத்திலேயே வைத்து வழிபாடு நடத்துவதற்காக அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து கோரிக்கை விடுத்துள்ளனர். சாலை விரிவாக்க பணிக்காக தோண்டிய பள்ளத்தில், 3 அடி உயரமுள்ள அம்மன் கற்சிலை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பய பக்தியையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், சுமார் 3 அடி உயரம், 1 அடி அகலம் உள்ள இச்சிலையில் வலது கை பக்கம் லேசாக உடைந்து காணப்படுகிறது. தொல்லியல் துறை அதிகாரிகளின் ஆய்வுக்குப் பின்னரே இச்சிலை எந்த காலத்தையது என்பது என்பது தெரியவரும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சாலை விரிவாக்க பணியின் போது கிடைத்த அம்மன் சிலை!

இந்நிலையில் சிலை கண்டறியபட்டதை மயிலாடுதுறை மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க சிலப்பதிகாரம் புகழ்பெற்ற பூம்புகார், வரலாற்று சிறப்புமிக்க தரங்கம்பாடி உள்ளிட்ட பகுதிகள் அமைந்திருப்பதால் இந்த சிலைக்கும் ஏதேனும் வரலாற்று பதிவு இருக்கும் என்றும், ஆகையால் கிராம மக்கள் சிலை கண்டெடுக்கப்பட்ட இடத்தை மேலும் தோண்டி வேறு ஏதேனும் சிலைகள் உள்ளதா என்றும் இப்பகுதியில் அகழாய்வு மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில் இதுபோன்று பல்வேறு இடங்களில் பூமிக்கு அடியில் பள்ளம் தோண்டும்போது சிலைகள் கிடைப்பதும் அதனை எடுத்துச் செல்லும் வருவாய் துறை அதிகாரிகள் அவற்றை பாதுகாப்பு அறையில் வைத்து விட்டு மேலும் சில தொடர்பான தகவலை சேகரிப்பது இல்லை என்றும், இதனால் பல்வேறு வரலாறுகள் வெளி உலகிற்கு தெரியாமல் போய்விடுகிறது என வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Bangladesh Election: வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Bangladesh Election: வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Ather Rizta Record Sales: குடும்பங்களை கவர்ந்த ஏதர் ரிஸ்டா இ-ஸ்கூட்டர்; 2 ஆண்டுகளில் 2 லட்சம் யூனிட்கள் விற்று அசத்தல்
குடும்பங்களை கவர்ந்த ஏதர் ரிஸ்டா இ-ஸ்கூட்டர்; 2 ஆண்டுகளில் 2 லட்சம் யூனிட்கள் விற்று அசத்தல்
Mexico Vs India Tariff: ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Top 5 Cars India: டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
Embed widget