மேலும் அறிய

சாலை விரிவாக்க பணியின் போது கிடைத்த அம்மன் சிலை!

மயிலாடுதுறை அருகே சாலை விரிவாக்கத்திற்காக தோண்டிய பள்ளத்தில் கண்டெடுக்கப்பட்ட அம்மன் கற்சிலையை, கிராமமக்கள் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் ஆனைமேலகரம் ஊராட்சி மல்லியம் கிராமத்தில் இருந்து அசிக்காடு செல்லும் சாலையில் சாலை விரிவாக்கப்பணி நடைபெற்று வருகிறது. சாலையின் இருபுறமும் சுமார் 2 அடி விரிவாக்கம் செய்வதற்காக அங்குள்ள 2 வது கண்மாய் அருகில் பொக்லைன் இயந்திரம் கொண்டு மண்ணை அள்ளும் பணி நடைபெற்றது வருகிறது. அப்போது மண்ணில் கருங்கலால் ஆன கற்சிலை ஒன்று தட்டுப்பட்டுள்ளது. அதனையடுத்து பொக்லைன் ஓட்டுனர் பள்ளம் தோண்டுவதை நிறுத்தி விட்டு நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளார். இதுகுறித்து, தகவல் அறிந்த அப்பகுதி கிராமமக்கள் அங்கு திரண்டு சிலையின் மீது படிந்து இருந்த மண்னை பத்திரமாக அப்புறப்படுத்தி அச்சிலையை எடுத்துச் சென்று மஞ்சளால் அபிஷேகம் செய்து, பூ, பழம் வைத்து தீபம் ஏற்றி வழிபாடு நடத்தியுள்ளனர். பின்னர், இது தொடர்பாக கிராமமக்கள் அளித்த தகவலின்பேரில் மயிலாடுதுறை வருவாய் ஆய்வாளர் மாரிமுத்து, கிராம நிர்வாக அலுவலர் குலோத்துங்கன் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று, சிலையை மீட்டு மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகத்துக்குக் கொண்டு சென்றனர். அந்த சிலை எந்த நூற்றாண்டை சேர்ந்தது? எப்படி இங்கு வந்தது? எந்த கோவிலுக்கு சொந்தமான சிலை? யாரேனும் கடத்தி வந்து, இந்த பகுதியில் புதைத்து விட்டு சென்றனரா? அல்லது இயற்கை சீற்றத்தினால் இப்பகுதியில் புதையுண்டதா? என பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.


சாலை விரிவாக்க பணியின் போது கிடைத்த அம்மன் சிலை!

மேலும் அந்த சிலையை, அந்த கிராமத்திலேயே வைத்து வழிபாடு நடத்துவதற்காக அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து கோரிக்கை விடுத்துள்ளனர். சாலை விரிவாக்க பணிக்காக தோண்டிய பள்ளத்தில், 3 அடி உயரமுள்ள அம்மன் கற்சிலை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பய பக்தியையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், சுமார் 3 அடி உயரம், 1 அடி அகலம் உள்ள இச்சிலையில் வலது கை பக்கம் லேசாக உடைந்து காணப்படுகிறது. தொல்லியல் துறை அதிகாரிகளின் ஆய்வுக்குப் பின்னரே இச்சிலை எந்த காலத்தையது என்பது என்பது தெரியவரும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சாலை விரிவாக்க பணியின் போது கிடைத்த அம்மன் சிலை!

இந்நிலையில் சிலை கண்டறியபட்டதை மயிலாடுதுறை மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க சிலப்பதிகாரம் புகழ்பெற்ற பூம்புகார், வரலாற்று சிறப்புமிக்க தரங்கம்பாடி உள்ளிட்ட பகுதிகள் அமைந்திருப்பதால் இந்த சிலைக்கும் ஏதேனும் வரலாற்று பதிவு இருக்கும் என்றும், ஆகையால் கிராம மக்கள் சிலை கண்டெடுக்கப்பட்ட இடத்தை மேலும் தோண்டி வேறு ஏதேனும் சிலைகள் உள்ளதா என்றும் இப்பகுதியில் அகழாய்வு மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில் இதுபோன்று பல்வேறு இடங்களில் பூமிக்கு அடியில் பள்ளம் தோண்டும்போது சிலைகள் கிடைப்பதும் அதனை எடுத்துச் செல்லும் வருவாய் துறை அதிகாரிகள் அவற்றை பாதுகாப்பு அறையில் வைத்து விட்டு மேலும் சில தொடர்பான தகவலை சேகரிப்பது இல்லை என்றும், இதனால் பல்வேறு வரலாறுகள் வெளி உலகிற்கு தெரியாமல் போய்விடுகிறது என வேதனை தெரிவிக்கின்றனர்.

தலைப்பு செய்திகள்

சக்கராப்பள்ளியில் 12-ல் மக்கள் நேர்காணல் முகாம்! முன்கூட்டியே மனு அளிக்க கலெக்டர் ரேவதி அழைப்பு
சக்கராப்பள்ளியில் 12-ல் மக்கள் நேர்காணல் முகாம்! முன்கூட்டியே மனு அளிக்க கலெக்டர் ரேவதி அழைப்பு
மக்களே 10ம் தேதி முக்கியமான நாள்... தஞ்சை கலெக்டர் அறிவிப்பு எதற்காக?
மக்களே 10ம் தேதி முக்கியமான நாள்... தஞ்சை கலெக்டர் அறிவிப்பு எதற்காக?
மத்திய அரசுக்கு எதிராக 10ல் ‘மறியல்’: தஞ்சையில் 4 மையங்களில் களமிறங்கும் தொழிற்சங்கங்கள்–விவசாயிகள்
மத்திய அரசுக்கு எதிராக 10ல் ‘மறியல்’: தஞ்சையில் 4 மையங்களில் களமிறங்கும் தொழிற்சங்கங்கள்–விவசாயிகள்
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
Sedan Cars: இனி நாமதான்! இந்திய சந்தையை அதிரவைக்கும் 3 செடான் கார்கள்; மாடல், விலை விவரம்
Sedan Cars: இனி நாமதான்! இந்திய சந்தையை அதிரவைக்கும் 3 செடான் கார்கள்; மாடல், விலை விவரம்
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
Embed widget