மேலும் அறிய

சாலை விரிவாக்க பணியின் போது கிடைத்த அம்மன் சிலை!

மயிலாடுதுறை அருகே சாலை விரிவாக்கத்திற்காக தோண்டிய பள்ளத்தில் கண்டெடுக்கப்பட்ட அம்மன் கற்சிலையை, கிராமமக்கள் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் ஆனைமேலகரம் ஊராட்சி மல்லியம் கிராமத்தில் இருந்து அசிக்காடு செல்லும் சாலையில் சாலை விரிவாக்கப்பணி நடைபெற்று வருகிறது. சாலையின் இருபுறமும் சுமார் 2 அடி விரிவாக்கம் செய்வதற்காக அங்குள்ள 2 வது கண்மாய் அருகில் பொக்லைன் இயந்திரம் கொண்டு மண்ணை அள்ளும் பணி நடைபெற்றது வருகிறது. அப்போது மண்ணில் கருங்கலால் ஆன கற்சிலை ஒன்று தட்டுப்பட்டுள்ளது. அதனையடுத்து பொக்லைன் ஓட்டுனர் பள்ளம் தோண்டுவதை நிறுத்தி விட்டு நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளார். இதுகுறித்து, தகவல் அறிந்த அப்பகுதி கிராமமக்கள் அங்கு திரண்டு சிலையின் மீது படிந்து இருந்த மண்னை பத்திரமாக அப்புறப்படுத்தி அச்சிலையை எடுத்துச் சென்று மஞ்சளால் அபிஷேகம் செய்து, பூ, பழம் வைத்து தீபம் ஏற்றி வழிபாடு நடத்தியுள்ளனர். பின்னர், இது தொடர்பாக கிராமமக்கள் அளித்த தகவலின்பேரில் மயிலாடுதுறை வருவாய் ஆய்வாளர் மாரிமுத்து, கிராம நிர்வாக அலுவலர் குலோத்துங்கன் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று, சிலையை மீட்டு மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகத்துக்குக் கொண்டு சென்றனர். அந்த சிலை எந்த நூற்றாண்டை சேர்ந்தது? எப்படி இங்கு வந்தது? எந்த கோவிலுக்கு சொந்தமான சிலை? யாரேனும் கடத்தி வந்து, இந்த பகுதியில் புதைத்து விட்டு சென்றனரா? அல்லது இயற்கை சீற்றத்தினால் இப்பகுதியில் புதையுண்டதா? என பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.


சாலை விரிவாக்க பணியின் போது கிடைத்த அம்மன் சிலை!

மேலும் அந்த சிலையை, அந்த கிராமத்திலேயே வைத்து வழிபாடு நடத்துவதற்காக அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து கோரிக்கை விடுத்துள்ளனர். சாலை விரிவாக்க பணிக்காக தோண்டிய பள்ளத்தில், 3 அடி உயரமுள்ள அம்மன் கற்சிலை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பய பக்தியையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், சுமார் 3 அடி உயரம், 1 அடி அகலம் உள்ள இச்சிலையில் வலது கை பக்கம் லேசாக உடைந்து காணப்படுகிறது. தொல்லியல் துறை அதிகாரிகளின் ஆய்வுக்குப் பின்னரே இச்சிலை எந்த காலத்தையது என்பது என்பது தெரியவரும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சாலை விரிவாக்க பணியின் போது கிடைத்த அம்மன் சிலை!

இந்நிலையில் சிலை கண்டறியபட்டதை மயிலாடுதுறை மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க சிலப்பதிகாரம் புகழ்பெற்ற பூம்புகார், வரலாற்று சிறப்புமிக்க தரங்கம்பாடி உள்ளிட்ட பகுதிகள் அமைந்திருப்பதால் இந்த சிலைக்கும் ஏதேனும் வரலாற்று பதிவு இருக்கும் என்றும், ஆகையால் கிராம மக்கள் சிலை கண்டெடுக்கப்பட்ட இடத்தை மேலும் தோண்டி வேறு ஏதேனும் சிலைகள் உள்ளதா என்றும் இப்பகுதியில் அகழாய்வு மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில் இதுபோன்று பல்வேறு இடங்களில் பூமிக்கு அடியில் பள்ளம் தோண்டும்போது சிலைகள் கிடைப்பதும் அதனை எடுத்துச் செல்லும் வருவாய் துறை அதிகாரிகள் அவற்றை பாதுகாப்பு அறையில் வைத்து விட்டு மேலும் சில தொடர்பான தகவலை சேகரிப்பது இல்லை என்றும், இதனால் பல்வேறு வரலாறுகள் வெளி உலகிற்கு தெரியாமல் போய்விடுகிறது என வேதனை தெரிவிக்கின்றனர்.

தலைப்பு செய்திகள்

ரேஷன் அரிசி கடத்தினால் கைது மட்டும் இல்லை... குண்டர் சட்டமும் பாயும்!
ரேஷன் அரிசி கடத்தினால் கைது மட்டும் இல்லை... குண்டர் சட்டமும் பாயும்!
பயமுறுத்தும் பட்டுப்போன மரம்... பள்ளி மாணவர்களுக்கு அபாயம்: வெட்டி அகற்ற வலியுறுத்தல்
பயமுறுத்தும் பட்டுப்போன மரம்... பள்ளி மாணவர்களுக்கு அபாயம்: வெட்டி அகற்ற வலியுறுத்தல்
சாலையை இரண்டாகப் பிரிக்கும் பள்ளம்! சித்திரக்குடி – ஆலக்குடி சாலையில் விபத்து அபாயம்
சாலையை இரண்டாகப் பிரிக்கும் பள்ளம்! சித்திரக்குடி – ஆலக்குடி சாலையில் விபத்து அபாயம்
தஞ்சாவூரை பசுமையால் அலங்கரித்த ஆர்ஆர் இன்ஃப்ரா! 8,500 மரக்கன்றுகள் நட்டு சாதனை
தஞ்சாவூரை பசுமையால் அலங்கரித்த ஆர்ஆர் இன்ஃப்ரா! 8,500 மரக்கன்றுகள் நட்டு சாதனை

வீடியோ

Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்
ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Layola Mani : ‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர் – தனி மனித தாக்குதல்..?
‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர்..!
DMK vs Vaiko : வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
RS BHARATHI : செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
ADMK TO TVK : விஜய் கட்சியா? வேண்டாம்ப்பா சாமி ! ரூட்டை மாற்றும் அதிமுக MLA-க்கள்.! - ஷாக்கிங் பின்னணி
விஜய் கட்சியா? வேண்டாம்ப்பா சாமி ! ரூட்டை மாற்றும் அதிமுக MLA-க்கள்.! - ஷாக்கிங் பின்னணி
Chennai Power Cut: சென்னையில ஜூலை 14 (14.07.2026) எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? ஏரியா லிஸ்ட் இதோ
சென்னையில ஜூலை 14 (14.07.2026) எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? ஏரியா லிஸ்ட் இதோ
Stephen Fleming: தோனியை வெச்சு காலத்தை ஓட்டுனது போதும்..! CSK கோச் ஸ்டீஃபன் ஃப்ளெமிங் ராஜினாமா - அடுத்து யார்?
தோனியை வெச்சு காலத்தை ஓட்டுனது போதும்..! CSK கோச் ஸ்டீஃபன் ஃப்ளெமிங் ராஜினாமா - அடுத்து யார்?
VCK Thirumavalavan : ’பொதுவேட்பாளர் சீமான்’ அச்சத்தில் திருமாவளவன் ? காரணம் என்ன ?
’பொதுவேட்பாளர் சீமான்’ அச்சத்தில் திருமாவளவன் ? காரணம் என்ன ?
Embed widget