மேலும் அறிய

ஹரித்ரா நதி என்றழைக்கப்படும் மன்னார்குடி கோயில் குளம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியின் பெருமைக் கொடியை மேலும் உயர்த்துகிறது ராஜகோபால சுவாமி கோயில் குளமான மன்னார்குடி தெப்பக்குளம்.

தஞ்சாவூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியின் பெருமைக் கொடியை மேலும் உயர்த்துகிறது ராஜகோபால சுவாமி கோயில் குளமான மன்னார்குடி தெப்பக்குளம். இதற்கு இன்னொரு பெயர் இருக்கு. ஹரித்ரா நதி என்று அழைக்கின்றனர். 

தமிழகம் எப்போதும் வரலாற்று பெருமைகளை உள்ளடக்கியது. கோயில்கள் மட்டுமின்றி பல்வேறு வகையிலும் தன்னகத்தே ஏராளமான பொக்கிஷம் போன்ற பெருமைகளை கொண்டுள்ளது. திரும்பும் இடம் எல்லாம் ஸ்பெஷல்தான். அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியின் பெருமைக் கொடியை மேலும் உயர்த்துகிறது ராஜகோபால சுவாமி கோயில் குளமான மன்னார்குடி தெப்பக்குளம். இதற்கு இன்னொரு பெயர் இருக்கு. ஹரித்ரா நதி என்று அழைக்கின்றனர். என்னங்க தெப்பக்குளம் என்று சொல்றீங்க நதின்னு சொல்றீங்க என்ற கேள்வி எழலாம்.


ஹரித்ரா நதி என்றழைக்கப்படும் மன்னார்குடி கோயில் குளம்

முன்பு நறுமணமிக்க செண்பகமரங்கள் நிறைந்த காடாக இந்த ஊர் இருந்துள்ளது. பின்னர் நிலத்தை திருத்தி நாடாக்கி உள்ளனர். அதனால்தான் மன்னார்குடிக்கு செண்பகாரண்யம் என்ற பெயரும் உண்டு. இதுமட்டுமின்றி சுத்தவல்லி வளநாடு, ராஜாதி ராஜ சதுர்வேதி மங்கலம்,  குலோத்துங்க சோழ விண்ணகரம், ராஜேந்திர சோழ விண்ணகரம்,  வாசுதேவபுரி, தட்சிணதுவாரகா, வண்டுவராபதி, சுயம்புத்தலம், மன்னவர்குடி,  ராஜமன்னார்குடி என்று பல பெயர்கள் உண்டு.

நதி போன்றுதான் இக்குளம் அமைந்துள்ளது. இதன் காரணப்பெயரை பற்றி அறிந்து கொள்வோம். மன்னார்குடி வரும் பக்தர்களும் சரி, சுற்றுலாப்பயணிகளும் சரி ஹரித்ரா நதி என்கிற இந்த தெப்பக்குளத்தை கண்டு பிரமித்துதான் போய்விடுவார்கள். கோவில்பாதி, குளம்பாதி என்ற பழமொழிக்கு உரித்தான ஊர்தான் மன்னார்குடி. முன்பு மன்னார்குடியில் மொத்தம் 98  குளங்கள் இருந்துள்ளது. என்னங்க ஆச்சரியமாக இருக்கிறதா. உண்மைதான். தற்போது பாதிக்குமேல் இல்லை.

இருப்பினும் மன்னார்குடியில் இன்றும் நுழையும் தெருக்களிலெல்லாம் குளம் இருக்கிறது. இதை வைத்தே மன்னார்குடியின் பெருமையை உணர்ந்து கொள்ளலாம். இவற்றிற்கு எல்லாம் சிகரம் வைத்தது போன்றதுதான் மன்னார்குடி தெப்பக்குளம்.

கோபிலர், கோப்பிரளயர் என்ற இரண்டு முனிவர்களுக்கு பரந்தாமன் கண்ணனாக காட்சி அளித்தார். குளத்தில் கண்ணன் கோபிகையருடன் குளித்துக் கொண்டு இருந்த போது அந்த கன்னிகையரின் உடலில் பூசிய மஞ்சள் (ஹரித்ரா) மற்றும் நறுமணப் பொருட்கள் இக்குளத்தின் தீர்த்தத்தில் படிந்தபடியால் இக்குளம் ஹரித்ரா (மஞ்சள்) என்ற காரணப்பெயரில் அழைக்கப்படுகிறது.

இக்குளம் காவிரியின் மகள் என்றும், 66 கோடி புண்ணிய தீர்த்தங்கள் ஒன்று சேர்ந்தது என்றும் புராண வரலாறு கூறுகின்றன. மன்னார்குடி ராஜகோபால சுவாமிக்கு தினமும் திருமஞ்சன தீர்த்தம் இக்குளத்தில் இருந்து தான் எடுத்துச்செல்லப்படுகிறது.

இக்குளத்தில் வைகாசி, ஐப்பசி, மாசி, பங்குனி மாதங்களிலும் அமாவாசை, பவுர்ணமி, கிரகண காலங்களிலும் ரோகிணி, திருவோண நாட்களிலும் நீராடினால் கண்ணபிரானின் திருவருள் கிடைக்கும் என்றும், மாசி மாதம் முழுவதும் நீராட முடியாமல் போனாலும் கடைசி மூன்று நாட்களாவது நீராடினால் சிறப்பு உண்டு.

மற்ற புண்ணிய தலங்களில் 1 கோடி ஆண்டுகள் இருந்து பெறும் பலனை, ஹரித்ரா நதி கரையில் ஒரு ஆண்டில் அடையலாம் என்று புராணம் கூறுகிறது. பிருகு முனிவர் வேண்டுகோளுக்கு இணங்கி காவிரியை பெரிய குளமாக தேக்கி அதில் ராஜகோபாலன் குளித்ததாக கூறப்படுகிறது.

இந்தியாவின் பெரிய தெப்பக்குளம்  என்றால் அது மன்னார்குடி ஹரித்ரா நதி என்கிற தெப்பக்குளம்தான்.  1,158 அடி நீளமும், 847 அடி அகலமும், 23 ஏக்கர் பரப்பளவும் கொண்டது. இந்த மன்னார்குடி தெப்பக்குளம். பிரமாண்டமாக காட்சி அளிக்கும் இந்த தெப்பக்குளத்தை பார்ப்பதற்காகவே பல மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

“அவர்கள் எங்கே?” பதில் தேடும் டிஎன்ஏ சோதனை! தஞ்சையில் இன்று உறவினர்களிடம் ரத்த மாதிரி சேகரிப்பு
“அவர்கள் எங்கே?” பதில் தேடும் டிஎன்ஏ சோதனை! தஞ்சையில் இன்று உறவினர்களிடம் ரத்த மாதிரி சேகரிப்பு
கல்லில் உறைந்த சோழர்களின் கனவு! அதிசயங்களையே அண்ணாந்து பார்க்க வைத்த தஞ்சை பெரியகோவில்… ஒவ்வொரு கல்லும் சொல்லும் ராஜராஜ சோழனின் மகத்துவம்!
கல்லில் உறைந்த சோழர்களின் கனவு! அதிசயங்களையே அண்ணாந்து பார்க்க வைத்த தஞ்சை பெரியகோவில்… ஒவ்வொரு கல்லும் சொல்லும் ராஜராஜ சோழனின் மகத்துவம்!
தொல்லை அதிகரிப்பு... எலிகளை கிட்டி வைத்து பிடிக்கும் தஞ்சை மாவட்ட விவசாயிகள்
தொல்லை அதிகரிப்பு... எலிகளை கிட்டி வைத்து பிடிக்கும் தஞ்சை மாவட்ட விவசாயிகள்
தீவனப் பயிர்களுக்கான தேவை அதிகரிக்கும் : பேராவூரணியில் ஆட்சியர் ரேவதி கூறியது எதற்காக?
தீவனப் பயிர்களுக்கான தேவை அதிகரிக்கும் : பேராவூரணியில் ஆட்சியர் ரேவதி கூறியது எதற்காக?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Modi Wishes Meloni: Friend மெலோனிக்கு வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி; பதிலாக வந்த நெகிழ்ச்சிப் பதிவு; என்ன சொன்னாங்க.?
Friend மெலோனிக்கு வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி; பதிலாக வந்த நெகிழ்ச்சிப் பதிவு; என்ன சொன்னாங்க.?
Kamarajar Death Controversy : ‘கட்டிப்பிடித்து கதறி அழுத கலைஞர்’ கார் லைட் வெளிச்சத்தில் காமராசருக்கு இடம் தேடிய வரலாறு..!
‘கட்டிப்பிடித்து கதறி அழுத கலைஞர்’ காமராஜர் இறந்தநாளில் நடந்தது இதுதான்..!
Jaishankar Zelensky Meet: ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை தொடருமா இந்தியா.? ஜெலென்ஸ்கியிடம் ஜெய்சங்கர் கூறியது என்ன.?
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை தொடருமா இந்தியா.? ஜெலென்ஸ்கியிடம் ஜெய்சங்கர் கூறியது என்ன.?
Xi Jinping Heart Attack: சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு 2 முறை மாரடைப்பு.?! வாரிசு அறிவிக்காதது ஏன்.? திபெத்திய தலைவர் திடுக்கிடும் தகவல்
சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு 2 முறை மாரடைப்பு.?! வாரிசு அறிவிக்காதது ஏன்.? திபெத்திய தலைவர் திடுக்கிடும் தகவல்
Bigg Boss 10 House: பிக்பாஸ் வீடு எப்படி இருக்கும் தெரியுமா? ஸ்பெஷல் விசிட் அடித்த ஏபிபி நாடு!
Bigg Boss 10 House: பிக்பாஸ் வீடு எப்படி இருக்கும் தெரியுமா? ஸ்பெஷல் விசிட் அடித்த ஏபிபி நாடு!
Ather Konarc Vs Bajaj Chetak: ஏதர் கோனார்க்கா.? பஜாஜ் சேதக்கா.? சிட்டி பயணத்துக்கு எந்த EV ஸ்கூட்டர் பெஸ்ட்.? வாங்க தெரிஞ்சுக்கலாம்
ஏதர் கோனார்க்கா.? பஜாஜ் சேதக்கா.? சிட்டி பயணத்துக்கு எந்த EV ஸ்கூட்டர் பெஸ்ட்.? வாங்க தெரிஞ்சுக்கலாம்
Netanyahu Warns Iran: “எங்களோட மோத ட்ரை பண்ணாதீங்க, அப்படி பண்ணா...“ - ஈரானை மிரட்டும் நெதன்யாகு; என்ன சொன்னார்.?
“எங்களோட மோத ட்ரை பண்ணாதீங்க, அப்படி பண்ணா...“ - ஈரானை மிரட்டும் நெதன்யாகு; என்ன சொன்னார்.?
Nepal Flood: நேபாளத்தில் அதிசயம்..! 9 நாட்கள் கழித்து 2 பேர் உயிருடன் மீட்பு - சுரங்கங்களில் ஒலிக்கும் குரல்கள்
நேபாளத்தில் அதிசயம்..! 9 நாட்கள் கழித்து 2 பேர் உயிருடன் மீட்பு - சுரங்கங்களில் ஒலிக்கும் குரல்கள்
Embed widget