தொழிலாளர் தினம்: தஞ்சை முழுவதும் ஒற்றுமை முழக்கம்
தஞ்சாவூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாநகரச் செயலாளர் வடிவேலன் தலைமையில் மே தினக்கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது.

தஞ்சாவூர்: "வியர்வை சிந்தும் கரங்களே தேசத்தை செதுக்கும் சிற்பிகள்" என்பதை பறைசாற்றும் வகையில், உலகத் தொழிலாளர் தினமான மே தினம் தஞ்சை மாவட்டம் முழுவதும் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது. இதை ஒட்டி தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கொடியேற்று விழாக்கள் நடந்தன.
தஞ்சாவூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாநகரச் செயலாளர் வடிவேலன் தலைமையில் மே தினக்கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. மூத்த தோழர் என்.சீனிவாசன் சிஐடியு கொடியையும், மூத்த தோழர் கோ.நீலமேகம் கட்சிக் கொடியையும் ஏற்றி வைத்தார். இதில், மாநகரக் குழு பி.சத்யநாதன், ஏ.தர்மராஜ், வி.அர்ஜுன், முன்னாள் மாமன்ற உறுப்பினர் த.முருகேசன், பாரதி புத்தகாலயம் கோதண்டபாணி, ஓய்வூதியர் சங்கம் ஆர்.பன்னீர்செல்வம், வாலிபர் சங்கம் பிரேம் குமார், மாதர் சங்க ஹேமா, செல்வி, கிளைச் செயலாளர் லூகாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

குருங்குளம் கிளையில், மே தினக்கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. செங்கொடியினை மாவட்டக் குழு உறுப்பினர் களப்பிரன் ஏற்றினார். இந்நிகழ்ச்சியில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.சரவணன், ஒன்றியக்குழு சௌந்தர்ராஜன், நாகலிங்கம், எம்.விஜயக்குமார், கே.சக்திவேல், சிவா மற்றும் பலர் பங்கேற்றனர்.
இதேபோல் தஞ்சை ஒன்றியம், சர்க்கரை ஆலை கிளையில் மே தின செங்கொடியை ஒன்றியக்குழு உறுப்பினர் எம் விஜயக்குமார் ஏற்றினார். தொழிற்சங்க கொடியினை மாவட்டக் குழு உறுப்பினர் களப்பிரன் ஏற்றினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.சரவணன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சௌந்தர்ராஜன், நாகலிங்கம், கே.சக்திவேல் மற்றும் பலர் பங்கேற்றனர்.
இதேபோல், பால ஆஞ்சநேயர் கோயில், உமையவள் ஆற்காடு, சித்தாயல், அரவிந்த் கண் மருத்துவமனை கிளை ஆகிய இடங்களில் மே தினக்கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் பல்வேறு இடங்களில் 140 ஆவது மே தினக் கொடியேற்று விழா நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலாளர் வி.ஆர்.கே செந்தில்குமார் தலைமை வகித்தார். சின்னக் கழனிவாசல் கிளையில் துவங்கி மருங்கப்பள்ளம், குருவிக்கரம்பை, முனுமாக்காடு, கோட்டைக்காடு, பூவாணம், சொக்கநாதபுரம், அழகியநாயகிபுரம், மல்லிப்பட்டினம் ஆகிய இடங்களில் செங்கொடி ஏற்றி மே தின தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. மக்களுக்கான கோரிக்கைகளை முன்னெடுத்து, தொடர் போராட்டங்களை நடத்தி, வெற்றி பெறவும் சபதம் ஏற்கப்பட்டது.
இதில் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன் கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றினார். வழக்குரைஞர் வீ.கருப்பையா, ஒன்றியக்குழு உறுப்பினர் இளங்கோவன், கிளை செயலாளர்கள் ரங்கசாமி, சிவனேசன், வேலுச்சாமி உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றத்துடன், நிகழ்ச்சிகள் நடைபெற்ற இடங்களிலும் பொதுமக்களும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
பூதலூர் தெற்கு ஒன்றியத்தில் ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர் தலைமையில், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ். தமிழ்ச்செல்வி கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றினார். ஒன்றியக்குழு எம்.ஜி.சரவணன், என்.வசந்தா, வி.அஞ்சலி தேவி, ஏ.முருகன், கே.தமிழரசன், சோலை.ரமேஷ், டி.தமிழ்செல்வன், எஸ்.மலர்கொடி, எஸ்.வியாகுலதாஸ், கே.மருதமுத்து, கே.பழனிசாமி, எல்.ராஜாங்கம், எம்.அறிவழகன் மற்றும் மூன்று குழுவினர் கோவில் பத்து, ரயிலடி, வீரமரசன்பேட்டை, ஆவாரம்பட்டி, சாணூரப்பட்டி, மனையடிப்பட்டி, அயோத்திப்பட்டி, டிபி சானிடோரியம், செங்கிப்பட்டி, சொரக்குடிப்பட்டி, வெண்டையம்பட்டி, தொண்டராயன்பட்டி, புங்கனூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மே தின கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர். முன்னதாக கட்சி அலுவலகத்தில் மூத்த தோழர் முகமது சுல்தான் தலைமையில் கட்சிக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது.
ட்ரெண்டிங் செய்திகள்





















