மேலும் அறிய

திருவாரூரில் இதுவரை இல்லாத அளவுக்கு 1 லட்சத்து 37 ஆயிரத்து 360 ஏக்கரில் நடந்த குறுவை சாகுபடி

’’திருவாரூரில் இயல்பான குறுவை சாகுபடி பரப்பு 90 ஆயிரம் ஏக்கராக உள்ள நிலையில் இந்த ஆண்டு 88 ஆயிரத்து 750 ஏக்கர் குறுவை சாகுபடி செய்ய வேளாண் துறை இலக்கு நிர்ணயித்திருந்தது குறிப்பிடத்தக்கது’’

திருவாரூர் மாவட்டத்தில் எந்த ஆண்டும் இல்லாத அளவில் 1 லட்சத்து 37 ஆயிரத்து 360 ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், உள்ளிட்ட மாவட்டங்களில் நெல் சாகுபடியே பிரதான சாகுபடியாக உள்ளது. இந்நிலையில் காவிரி பிரச்சனை காரணமாக கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு போக சம்பா சாகுபடியை மட்டும் விவசாயிகள் செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டு மேட்டூர் அணை குறித்த காலத்தில் திறக்கப்பட்ட காரணத்தினால் டெல்டா மாவட்டங்களில் மூன்று போகம் சாகுபடி என்பது செய்யப்பட்டது.
 
இந்நிலையில் இந்த ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூன் மாதம் 12ஆம்  தேதி டெல்டா பாசனத்திற்க்காக மேட்டூர் அணையை திறந்து வைத்தார். இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவில் ஒரு லட்சத்து 37 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

திருவாரூரில் இதுவரை இல்லாத அளவுக்கு 1 லட்சத்து 37 ஆயிரத்து 360 ஏக்கரில் நடந்த குறுவை சாகுபடி
 
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவாரூர் மாவட்டத்தில் இயல்பான குறுவை சாகுபடி பரப்பு 90 ஆயிரம் ஏக்கர் ஆகும். திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 88 ஆயிரத்து 750 ஏக்கர் குறுவை சாகுபடி செய்ய வேளாண் துறையால் இலக்கு நிர்ணயிக்கப்பட்டாலும், ஒரு லட்சம் ஏக்கர் வரை குறுவை சாகுபடி நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மேட்டூர் அணை ஜீன் 12ஆம் தேதி திறந்ததாலும், தமிழக அரசு குறுவை தொகுப்பு திட்டத்தை  அறிவித்ததாலும், தூர்வாரும் பணிகள் மூலம் 173 வாய்கால்கள் 16 கோடியே 34 லட்சம் மதிப்பில் காலத்தே தூர் வாரப்பட்டதாலும், எந்த ஆண்டும் இல்லாத அளவில் நடப்பாண்டில் ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 360 ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெற்றுள்ளது.  

திருவாரூரில் இதுவரை இல்லாத அளவுக்கு 1 லட்சத்து 37 ஆயிரத்து 360 ஏக்கரில் நடந்த குறுவை சாகுபடி
 
இது கடந்த ஆண்டு சாகுபடி பரப்பளவைவிட 40 ஆயிரத்து 448 ஏக்கர் கூடுதலாகும். நேரடி நெல் விதைப்பு மூலம் 30 ஆயிரத்து 125 ஏக்கரிலும், இயல்பான நடவு முறையில் 17 ஆயிரத்து 490 ஏக்கரிலும், திருந்திய நெல் சாகுபடி முறையில் 89 ஆயிரத்து 745 ஏக்கரிலும், ஆக மொத்தம் 1 லட்சத்து 37 ஆயிரத்து 360 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. குறுவை தொகுப்புத் திட்டத்தின் கீழ் 720 மெட்ரிக் டன் 50 சதவீதம் மானியத்தில் விவசாயிகளுக்கு நெல் விதைகள் குறுவை சாகுபடிக்கு வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் 100 சதவீதம் மானியத்தில் ரசாயன உரங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 47 ஆயிரத்து 700 ஏக்கருக்கு இலக்கு பெறப்பட்டு இதில் 47 ஆயிரத்து 589 ஏக்கருக்கு 41 ஆயிரத்து 134 விவசாயிகளுக்கு வேளாண் துறையினால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
 
இதுவரை 2,672 மெட்ரிக் டன் யூரியா, 1,485 மெட்ரிக் டன் டி.ஏ.பி. மற்றும் 742 மெட்ரிக் டன் பொட்டாஷ் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலம் 26 ஆயிரத்து 205 விவசாயிகள் 29 ஆயிரத்து 745 ஏக்கருக்கு உரங்கள் பெற்று பயனடைந்துள்ளனர். குறுவை தொகுப்பு திட்டத்தினால் விவசாயிகள் கூடுதல் ஊக்கம் பெற்று, திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை எய்தப் பெறாத மிகப்பெரிய வரலாற்று சாதனை ஆகும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Ration Card: 55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
Embed widget