மேலும் அறிய

பல ஆண்டுகளுக்கு பின் முழு கொள்ளளாவை எட்டிய கும்பகோணம் மகாமகம் குளம்

’’மகாமககுளத்தில் மழை நீரானது சுமார் 20 அடிக்கும் மேல் நிரம்பி இருப்பதால் பக்தர்கள் பொதுமக்கள் யாரும் குளத்தினுள் இறங்கவோ குளிக்கவோ வேண்டாம் என நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை'’

தமிழகத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகாமக பெருவிழா கும்பகோணத்தில்  நடைபெறுகிறது. இப்பெருவிழா ஜீவநதிகளின் பாவங்களையும், முப்பத்துமுக்கோடி தேவர்களின் பாவங்களை போக்கி புண்ணியம் தருவதாகும். இங்கு மகாமக தீர்த்தவாரியின்போது கங்கை, யமுனை, நர்மதா, சரஸ்வதி, காவேரி, கோதாவரி, துங்கபத்ரா, கிருஷ்ணா, சரயு ஆகிய 9 புண்ணிய நதிகள் சங்கமாகி நீராட வருவதாலும், இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகிய அஷ்ட திக்கு பாலகர்களும், பிரம்மதேவனால் ஏற்படுத்தப்பட்ட பிரம்ம தீர்த்தம், நாக, தீர்த்தம் ஆகிய புண்ணிய தீர்த்தங்களில்  இங்கு புனித நீராடவருவதாக ஐதீகம் என்பதால் இந்த மகாமக திருக்குளம் புனிதத்தன்மை வாய்ந்ததாக போற்றப்படுகிறது.

இந்த குளத்தில் 20 தீர்த்தத் கிணறும், குளத்துடன் சோ்த்து 21 தீர்த்த கிணறுகளாகும், கரைகளில் சுற்றுலும் 16 சோடச லிங்கங்களும் உள்ளன. இங்குள்ள சிவனுக்கு ஒன்று ஒன்றுக்கு ஒவ்வொரு பெயா் உண்டு. புனித குளமான மகாமக குளம் சுமார் 6 அரை ஏக்கர் பரப்பளவு கொண்டது. சதுரமாகவும் இல்லாமல், செவ்வகமாக இல்லாமல் அருஉருவமாக காணப்படும்.இந்த குளத்திற்கு அரசலாற்றில் இருந்து தண்ணீர் வருவதற்கும், குளத்தின் தென் கிழக்கு மூலையில் வடிகாலும் உள்ளது. அதனால் அங்குள்ள தெருவிற்கு வடிவாய்க்கால் தெரு என்ற பெயரும் உண்டு. 12 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் மகாமக திருவிழாவின் போது, குளத்தில் உள்ள 20 தீர்த்த கிணறுகளிலும் அந்த தெய்வங்கள் வந்து புனித நீராடுவார்கள் என்பது ஐதீகம்.


பல ஆண்டுகளுக்கு பின் முழு கொள்ளளாவை எட்டிய கும்பகோணம் மகாமகம் குளம்

இதனால் விஷேச நாட்கள் மட்டுமில்லாமல் தினந்தோறும் வெளி மாநில,மாவட்ட, உள்ளூர் பக்தர்கள் புனித நீராடி செல்வார்கள்.கும்பகோணம் பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் தொடர் மழை காரணமாக நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள உலகப் பிரசித்தி பெற்ற மகாமக குளம் அதன் முழு கொள்ளளவை எட்டியது. கும்பகோணம் பகுதியில் கடந்த சில தினங்களாக மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது.  நகர் பகுதியில் அமைந்துள்ள ஏராளமான குளங்களிலும் மழை நீர் நிரம்பி காணப்படுகிறது. அந்த வகையில் கும்பகோணம்  நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள உலகப் பிரசித்தி பெற்ற மகாமக குளம் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இந்த நிலையில் தற்போது கும்பகோணம் பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மகாமக குளம், பல ஆண்டுகளுக்கு பிறகு அதன் முழு கொள்ளளவையும் எட்டி, சில  படிக்கட்டுகளை தவிர,  அனைத்தும் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் குளத்தின் நடுவே அமைந்துள்ள மைய பீடத்தின் மேல்பகுதி சிறிதளவு மட்டுமே வெளியே காட்சியளிக்கிறது.  மகாமககுளத்தில் மழை நீரானது சுமார் 20 அடிக்கும் மேல் நிரம்பி இருப்பதால் பக்தர்கள் பொதுமக்கள் யாரும் குளத்தினுள் இறங்கவோ குளிக்கவோ வேண்டாம் என நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
L Murugan :
L Murugan : "யாருடன் கூட்டணி? தாய் மொழிக்கு முக்கியத்துவம்” அடித்து பேசிய எல்.முருகன்..!
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
P. Chidambaram :  ”தமிழ்நாட்டை பத்தி என்ன தெரியும் ? ஆணவத்தின் உச்சம்” மத்திய அமைச்சரை பொளந்த ப.சிதம்பரம்..!
P. Chidambaram : ”தமிழ்நாட்டை பத்தி என்ன தெரியும் ? ஆணவத்தின் உச்சம்” மத்திய அமைச்சரை பொளந்த ப.சிதம்பரம்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jolarpettai Murder: LIFT-ல் சிக்கிய எம்.பி! 1 மணி நேரம் திக்.. திக்! மயங்கிய காங்.கட்சியினர்”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | Collector

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
L Murugan :
L Murugan : "யாருடன் கூட்டணி? தாய் மொழிக்கு முக்கியத்துவம்” அடித்து பேசிய எல்.முருகன்..!
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
P. Chidambaram :  ”தமிழ்நாட்டை பத்தி என்ன தெரியும் ? ஆணவத்தின் உச்சம்” மத்திய அமைச்சரை பொளந்த ப.சிதம்பரம்..!
P. Chidambaram : ”தமிழ்நாட்டை பத்தி என்ன தெரியும் ? ஆணவத்தின் உச்சம்” மத்திய அமைச்சரை பொளந்த ப.சிதம்பரம்..!
Disabled Astronaut: வரலாற்றில் முதல்முறை..! யார் இந்த ஜான் மெக்ஃபால்? விண்வெளிக்கு பறக்கும் மாற்றுத்திறனாளி
Disabled Astronaut: வரலாற்றில் முதல்முறை..! யார் இந்த ஜான் மெக்ஃபால்? விண்வெளிக்கு பறக்கும் மாற்றுத்திறனாளி
3-Language Policy  : “மும்மொழிக் கொள்கையை திமுக எதிர்ப்பது ஏன்” வெளியான உண்மை காரணம்..!
3-Language Policy : “மும்மொழிக் கொள்கையை திமுக எதிர்ப்பது ஏன்” வெளியான உண்மை காரணம்..!
DELHI CM: டெல்லி முதலமைச்சர்  ஆகும் பெண் எம்.எல்.ஏ.,? பிப்.18ம் தேதி பதவியேற்பு? 15 அமைச்சர்களின் லிஸ்ட்..!
DELHI CM: டெல்லி முதலமைச்சர் ஆகும் பெண் எம்.எல்.ஏ.,? பிப்.18ம் தேதி பதவியேற்பு? 15 அமைச்சர்களின் லிஸ்ட்..!
பணியிடத்தில் அலுவலக ரீதியாக ஊழியர்களை கண்டிப்பது குற்றமாகாது: உச்சநீதிமன்றம்
பணியிடத்தில் அலுவலக ரீதியாக ஊழியர்களை கண்டிப்பது குற்றமாகாது: உச்சநீதிமன்றம்
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.