ஜாப் தேடுறவர்களுக்கு ஜாக்பாட்… திருச்சியில் பெரிய வாய்ப்பு!
திருச்சியில் அமைந்துள்ள தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் (ICAR NRCB) இளம் வல்லுனர் பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்: திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் டிகிரி, படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு இருக்குங்க. சம்பளம் எவ்வளவு தெரியுங்களா? ரூ.30000ம்ங்க. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் உடனே உங்கள் விண்ணப்பத்தை அனுப்பிடுங்க.
தமிழகத்தில், திருச்சியில் அமைந்துள்ள தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் (ICAR NRCB) இளம் வல்லுனர் பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிகிரி படித்தவர்கள் இந்த அருமையான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்தப் பணியிடம் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 13.05.2026க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: B.Sc. in Agriculture / Horticulture / Biochemistry / Microbiology / other life sciences படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.30,000, வயது தகுதி: 21 வயது முதல் 45 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகள் படி வயது வரம்பில் குறிப்பிட்ட பிரிவினருக்கு தளர்வு உண்டு. இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://nrcb.org.in/nrcbadmin/webfs/vacancy/YP-I_Novel.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் இந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். மின்னஞ்சல் முகவரி: nrcbrecruitment @gmail.com
விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.05.2026 . எனவே விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் காலதாமதம் செய்யாமல் உடனே உங்கள் விண்ணப்பத்தை அனுப்பிடுங்க.
Before You Go
Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
ட்ரெண்டிங் செய்திகள்






















