மேலும் அறிய

விளைச்சல் அதிகரிப்பால் குறைந்தது விலை... ஆட்டோக்களில் விற்கப்படும் பலாப்பழம்

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு, கீரமங்கலம், ஆலங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் அதிக அளவில் விளைகிறது. இந்த பகுதிகளில் மட்டும் 10 ஆயிரம் ஏக்கரில் பலா சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்: விளைச்சல் அதிகரிப்பால் பலாப்பழம் விலை மலிவாக விற்கப்படுகிறது. தஞ்சாவூர் பகுதிகளில் லோடு ஆட்டோக்களில் எடுத்து வந்து கிலோ ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்களும் இதை ஆர்வமாக வாங்கி செல்கின்றனர்.

தமிழகத்தில் பலாப்பழம் கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதிகளிலும், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளிலும் அதிக அளவில் விளைகிறது. இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு, கீரமங்கலம், ஆலங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் அதிக அளவில் விளைகிறது. இந்த பகுதிகளில் மட்டும் 10 ஆயிரம் ஏக்கரில் பலா சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகளவில் பலாப்பழங்கள் விளைந்துள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தில் அறுவடை செய்யப்படும் பலாப்பழங்கள் அருகில் உள்ள மண்டிகள் மூலம் உள்ளூர், வெளி மாவட்டங்கள், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. வடகாடு பகுதி பலாப்பழம் ருசியாகவும், தித்திப்பாகவும் இருப்பதால், மார்க்கெட்டில் இதற்கு என்று நல்ல வரவேற்பும் உள்ளது.

இந்நிலையில், மண்டிகளுக்கு தற்போது பலாப்பழங்களின் வரத்து அதிகரித்துள்ளது. ஆனால், விலையோ கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் அறுவடை செய்த பழங்களை விவசாயிகள் சொற்ப விலையிலேயே விறபனை செய்து வருகிறார்கள். வியாபாரிகளும், விவசாயிகளிடம் இருந்து டன் கணக்கில் வாங்கி வந்து விற்பனை செய்கிறார்கள்.

முன்பெல்லாம் ஒரு கிலோ பலாப்பழம் ரூ.36க்கு விற்பனை ஆனது. இந் நிலையில், தற்போது விவசாயிகளிடம் ரூ.5க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. சில பலாப்பழ மண்டிகளில் வேண்டா வெறுப்பாக பலாப்பழங்களை வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். சிறிய அளவிலான பழங்களை வாங்கவே மறுக்கின்றனர். தோப்புகளிலும், கடைகளிலும் அழுகிய பழங்கள் அதிகம் காணப்படுகின்றன.

இதனால் விவசாயிகளுக்கு பெருமளவில் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தென் மேற்கு பருவமழையால் தான் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அறுவடை செய்த பலாப்பழங்களை வியாபாரிகள், சரக்கு ஆட்டோக்களில் கொள்முதல் செய்து வந்து கிலோ ரூ.20-க்கு தஞ்சாவூர் பகுதிகளில் விற்பனை செய்கிறார்கள்.

தஞ்சை மாநகரில் மட்டும் 4க்கும் மேற்பட்ட சரக்கு ஆட்டோக்களில் பலாப்பழங்களை கொள்முதல் செய்து வந்து வியாபாரிகள் கூவி, கூவி விற்பனை செய்கிறார்கள். சாலையோரங்களில் வாகனத்தை நிறுத்தி வைத்து கிலோ ரூ.20-க்கு விற்பனை செய்வதால் பொதுமக்களும் அதிக அளவில் வாங்கி செல்கிறார்கள். விலை மலிவாக கிடைப்பதாலும் பலாப்பழம் வாங்க பொதுமக்களும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், வழக்கத்தை விட இந்த ஆண்டு பலாப்பழம் விளைச்சல் அதிகமாக காணப்படுகிறது. தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் விளைவிக்கப்படும் பலாப்பழங்களை வியாபாரிகள் வாங்கிக் கொண்டு தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் எடுத்துச்சென்ற வண்ணம் உள்ளனர். சரக்கு ஆட்டோக்களில் 1 டன் வரை பலாப்பழம் வாங்கி வந்து விற்பனை செய்கிறோம்.

கிலோ ரூ.20க்கு விற்பனை செய்கிறோம். மக்களும் பலாப்பழத்தை வாங்குவதற்கு ஆர்வம் காட்டுகின்றனர். 2 நாட்களுக்கு ஒரு முறை நாங்கள் சென்று பழங்களை கொள்முதல் செய்து வருகிறோம். தஞ்சாவூர் நகர் பகுதிகள் மட்டுமின்றி கிராமப்பகுதிகளுக்கும் சென்று விற்பனை செய்கிறோம். 

கிராமங்களுக்கு செல்லும் போது டீசல் அதிகம் ஆகும் என்பதால் சற்று கூடுதல் விலைக்கு விற்கிறோம். பலாப்பழம் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, செரிமானத்தை மேம்படுத்துவது, இதய ஆரோக்கியத்தை ஆதரிப்பது, தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது, எடை இழப்புக்கு உதவுவது மற்றும் இரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவுவது போன்ற பல நன்மைகளை கொண்டுள்ளது. இதனால் மக்களும் அதிகம் விரும்பி வாங்கி செல்கின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

திமுக வேட்பாளர் சண். ராமநாதனுக்கு பெருகும் ஆதரவு: வல்லத்தில் தேர்தல் அலுவலகம் திறப்பு
திமுக வேட்பாளர் சண். ராமநாதனுக்கு பெருகும் ஆதரவு: வல்லத்தில் தேர்தல் அலுவலகம் திறப்பு
வேட்பாளர் அறிவிக்கப்படாத நிலையில் பாஜக நிர்வாகி சுயேட்சையாக வேட்புமனு தாக்கல்
வேட்பாளர் அறிவிக்கப்படாத நிலையில் பாஜக நிர்வாகி சுயேட்சையாக வேட்புமனு தாக்கல்
நாச்சியார்கோவில் ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தேரோட்டம்
நாச்சியார்கோவில் ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தேரோட்டம்
தஞ்சாவூரில் 100% வாக்குப்பதிவை உறுதி செய்ய கலெக்டர் அதிரடி! முதல் வாக்காளர்கள் உறுதிமொழி
தஞ்சாவூரில் 100% வாக்குப்பதிவை உறுதி செய்ய கலெக்டர் அதிரடி! முதல் வாக்காளர்கள் உறுதிமொழி
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?
வேட்பாளர் தேர்வில் இழுபறி..மாணிக்கம் தாகூர் திடீர் விலகல்!பரபரக்கும் காங்கிரஸ் கூடாரம்
மீண்டும் திமுக ஆட்சி! வெளியான சர்வே முடிவுகள்.. காலரை தூக்கும் ஸ்டாலின்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தெற்கில் மோடி அதிரடி: புதுவையில் ரோடு ஷோ... சென்னையில் ஆலோசனை... நாளை கேரளா பயணம்!
தெற்கில் மோடி அதிரடி: புதுவையில் ரோடு ஷோ... சென்னையில் ஆலோசனை... நாளை கேரளா பயணம்!
Udhayanidhi Net Worth: உதயநிதியின் சொத்து மதிப்பு: எவ்வளவு கோடி, எத்தனை கார்கள் தெரியுமா? - முழு சொத்து விவரம் இதோ
உதயநிதியின் சொத்து மதிப்பு: எவ்வளவு கோடி, எத்தனை கார்கள் தெரியுமா? - முழு சொத்து விவரம் இதோ
CBSE New Syllabus: 9 -12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ புது பாடத்திட்டம் வெளியீடு: என்னென்ன மாற்றங்கள்? பெறுவது எப்படி?
CBSE New Syllabus: 9 -12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ புது பாடத்திட்டம் வெளியீடு: என்னென்ன மாற்றங்கள்? பெறுவது எப்படி?
Ponmudi Case Verdict : பொன்முடி, கெளதமசிகாமணி விடுதலை! செம்மண் வழக்கு: எதிர்பாராத திருப்பம், கண்ணீருடன் வெளியேறிய மகன்!
Ponmudi Case Verdict : பொன்முடி, கெளதமசிகாமணி விடுதலை! செம்மண் வழக்கு: எதிர்பாராத திருப்பம், கண்ணீருடன் வெளியேறிய மகன்!
Thilagabama: தராசுடன் வந்து திலகபாமா வேட்புமனுத் தாக்கல்! பெரம்பூர் தொகுதியில் களைகட்டும் தேர்தல் களம்!
Thilagabama: தராசுடன் வந்து திலகபாமா வேட்புமனுத் தாக்கல்! பெரம்பூர் தொகுதியில் களைகட்டும் தேர்தல் களம்!
சாத்தான்குளம் கொலை வழக்கு: 9 பேருக்கும் தூக்கு தண்டனை கொடுங்க- தண்டனை அறிவிப்பு எப்போது?
சாத்தான்குளம் கொலை வழக்கு: 9 பேருக்கும் தூக்கு தண்டனை கொடுங்க- தண்டனை அறிவிப்பு எப்போது?
TVK Vijay: விஜய் Vs ஸ்டாலின், விஜய் Vs உதயநிதி; வேட்புமனுத் தாக்கலில் தவெக தலைவரின் தரமான சம்பவம்!
TVK Vijay: விஜய் Vs ஸ்டாலின், விஜய் Vs உதயநிதி; வேட்புமனுத் தாக்கலில் தவெக தலைவரின் தரமான சம்பவம்!
Waste Management Rules: குப்பைகளை இனி இப்படித்தான் போடணும்! இல்லேன்னா அபராதம்- நிறுவனங்களுக்கும் ஆப்பு வைத்த அரசு!
Waste Management Rules: குப்பைகளை இனி இப்படித்தான் போடணும்! இல்லேன்னா அபராதம்- நிறுவனங்களுக்கும் ஆப்பு வைத்த அரசு!
Embed widget