மேலும் அறிய

45 ஆண்டுகளுக்குப் பின் தூர்வாரப்படும் முத்தப்பன் வாய்க்கால்.

மயிலாடுதுறை அருகே 45 ஆண்டுகளுக்குப் பிறகு தூர்வாரப்படும் முத்தப்பன் வாய்க்கால். 10 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி.

மயிலாடுதுறை அருகே 45 ஆண்டுகளுக்குப் பிறகு தூர்வாரப்படும் முத்தப்பன் வாய்க்கால். 10 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி.


45 ஆண்டுகளுக்குப் பின் தூர்வாரப்படும் முத்தப்பன் வாய்க்கால்.

கடந்த பல ஆண்டுகளாக மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால் குறுவை சாகுபடிக்கு உரிய நேரத்தில் தண்ணீர் திறக்க முடியாத சூழல் நிலவி வந்தது கடந்த இரண்டு ஆண்டுகளாக மேட்டூர் அணையில் 100 அடிக்கு மேல் நீர்மட்டம் இருந்து வருவதால் கடந்த ஆண்டு ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டு டெல்டா மாவட்ட முழுவதும் பெருமளவு விவசாயம் செய்யப்பட்டது. மேலும் இந்த ஆண்டும் மேட்டூர் அணையில் தற்போது 100 அடி நீர்மட்டம் உள்ளதால் ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்க வேண்டுமென டெல்டா மாவட்ட விவசாயிகள் கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் மறைந்த திமுக தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான மு.கருணாநிதியின் பிறந்தநாள் அன்று தமிழக முதல்வர் 
மு.க.ஸ்டாலின் இந்த ஆண்டு ஜூன் 12ஆம் தேதி டெல்டா மாவட்ட குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்க உத்தரவை பிறப்பித்துள்ளார்.


45 ஆண்டுகளுக்குப் பின் தூர்வாரப்படும் முத்தப்பன் வாய்க்கால்.

இதனிடையே தமிழக அரசு டெல்டா மாவட்டங்களில் ஆறு மற்றும் வாய்க்கால்களில் 65 கோடி ரூபாய் செலவில் தூர் வாரும் பணிகளைத் தொடங்கியுள்ளது. இதில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்கவும், இப்பணிகள் முழுமையாகவும் வேகமாகவும் நடைபெறுவதற்காகவும், 8 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை, சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகளாக நியமனம் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். 


45 ஆண்டுகளுக்குப் பின் தூர்வாரப்படும் முத்தப்பன் வாய்க்கால்.

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஆறுகள், வாய்கால்கள் மற்றும் வடிகால்கள் ஆகியன 431 கிலோ மீட்டர் தூரத்துக்கு முதலமைச்சரின் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின்கீழ் தற்போது தூர்வாரப்படுகிறது. இதற்காக 5 கோடியே 45 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த மே மாதம் 28 ஆம் தேதி கனரக வாகனங்களைக் கொண்டு தூர்வாரும் பணிகள் மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடங்கின. 

இப்பணிகளை வரும் ஜூன் 12 ம் தேதி மேட்டூர் அணையில் பாசனத்திற்காக திறக்கப்படும் காவிரி நீர் கடைமடை பகுதியான மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வந்தடைவதற்கு முன்னதாக முடிக்க திட்டமிடப்பட்டு துரிதமாக நடைபெற்று வருகிறது. 
இந்நிலையில் மயிலாடுதுறை அடுத்த மூவலூர் காவிரி ஆற்றின் நீர் ஒழுங்கியில் இருந்து பிரியும் சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவுள்ள முத்தப்பன் வாய்க்கால் கடந்த 45 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் காடுகளும், புதர்களும் மண்டி பாசனத்திற்கு நீர் செல்லாதவாறு தூர்ந்து போய் காணப்பட்டது. தற்போது 45 ஆண்டுகளுக்குப் பிறகு முதலமைச்சரின் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின்கீழ் பொதுப்பணித்துறை மூலம் 2 லட்சத்தி 75 ஆயிரம்  ரூபாய் மதிப்பீட்டில் தற்போது தூர்வாரப்படுகிறது.


45 ஆண்டுகளுக்குப் பின் தூர்வாரப்படும் முத்தப்பன் வாய்க்கால்.

இதனால் கடந்த பல ஆண்டுகளாக காவிரி நீர் சரிவர வராததால் முறையாக விவசாயம் செய்ய முடியாமல் தவித்து வந்த விவசாயிகள் தற்போது இதன்மூலம் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று விவசாயம் செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது, மேலும் இப்பகுதி சுற்று வட்டார முழுவதும் நிலத்தடி நீர்மட்டமும் உயரும் என்பதால் தமிழக அரசுக்கும், பொதுப்பணித்துறைக்கும் அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் நன்றி தெரிவித்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

பாலைவனமாகும் வயல்கள்... கண்ணீர் விட்டு கதறும் தஞ்சாவூர் விவசாயிகள்
பாலைவனமாகும் வயல்கள்... கண்ணீர் விட்டு கதறும் தஞ்சாவூர் விவசாயிகள்
தஞ்சை மாவட்டமே அதிர்ந்தது... கடன் தள்ளுபடி கோரி விவசாயிகள் நடத்திய ஆர்ப்பாட்டம்
தஞ்சை மாவட்டமே அதிர்ந்தது... கடன் தள்ளுபடி கோரி விவசாயிகள் நடத்திய ஆர்ப்பாட்டம்
காட்சி பொருளாக மாறிய போக்குவரத்து சிக்னல்கள்: தஞ்சையில் விபத்துக்கள் அதிகரிக்கும் அபாயம்
காட்சி பொருளாக மாறிய போக்குவரத்து சிக்னல்கள்: தஞ்சையில் விபத்துக்கள் அதிகரிக்கும் அபாயம்
10,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க இலக்கு: தஞ்சாவூரை GCC  நிறுவனங்களின் புதிய மையமாக மாற்றும் ஹாம்லி நிறுவனம்
10,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க இலக்கு: தஞ்சாவூரை GCC  நிறுவனங்களின் புதிய மையமாக மாற்றும் ஹாம்லி நிறுவனம்

வீடியோ

Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?
Salem Viral Video : ரோடு முழுக்க தீப்பொறி! 2கி.மீ சினிமா பாணி சேஸ்!சேலத்தில் பொதுமக்கள் செஞ்ச அதிரடி!
’’ஐயோ கொடுமை தாங்கல போட்டோ போட கூட PERMISSION’’அனுபமா துருவ் BREAK UP?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS: இபிஎஸ்-க்கு எதிராக டெல்லிக்கு பறந்த புகார்.. அமித்ஷாவின் ரியாக்ஷன் என்ன?
EPS: இபிஎஸ்-க்கு எதிராக டெல்லிக்கு பறந்த புகார்.. அமித்ஷாவின் ரியாக்ஷன் என்ன?
Donald Trump Tariff: ட்ரம்ப்பின் புதிய முடிவால் இந்தியாவுக்கு சிக்கல்.! கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்குமா.? நடந்தது என்ன.?
ட்ரம்ப்பின் புதிய முடிவால் இந்தியாவுக்கு சிக்கல்.! கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்குமா.? நடந்தது என்ன.?
GATE 2027: ஐஐடி சென்னை நடத்தும் கேட் தேர்வு; தேதி அறிவிப்பு; விண்ணப்பம், பாடத்திட்டம், வினாத்தாள்
GATE 2027: ஐஐடி சென்னை நடத்தும் கேட் தேர்வு; தேதி அறிவிப்பு; விண்ணப்பம், பாடத்திட்டம், வினாத்தாள்
Abbas Araghchi Vs Steve Witkoff: “ஒருத்தர கைது பண்ணா மத்தவங்க பயப்படறதுக்கு இது வெனிசுலா இல்ல“: விட்காஃபிடம் கெத்து காட்டிய அரக்சி
“ஒருத்தர கைது பண்ணா மத்தவங்க பயப்படறதுக்கு இது வெனிசுலா இல்ல“: விட்காஃபிடம் கெத்து காட்டிய அரக்சி
Cockroach Delhi Protest : டெல்லியை அதிரவைத்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.! போராட்டத்திற்கான காரணம் என்ன.?
டெல்லியை அதிரவைத்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.! போராட்டத்திற்கான காரணம் என்ன.?
சென்னையில் மழை எப்போது? எங்கெல்லாம் பெய்யும்? - வானிலை மையத்தின் லேட்டஸ்ட் நிலவரம்
சென்னையில் மழை எப்போது? எங்கெல்லாம் பெய்யும்? - வானிலை மையத்தின் லேட்டஸ்ட் நிலவரம்
Ford Company Chennai : தமிழ்நாட்டில் மீண்டும் ஃபோர்டு கார் உற்பத்தி.! குவியப்போகுது முதலீடு.? சிஎம் விஜய் அதிரடி
தமிழ்நாட்டில் மீண்டும் ஃபோர்டு கார் உற்பத்தி.! குவியப்போகுது முதலீடு.? சிஎம் விஜய் அதிரடி
பட்ஜெட் மிட் SUV கார்கள்; மாருதி பிரெஸ்ஸா vs விக்டோரிஸ்- அம்சங்கள், மைலேஜ், விலை..எது பெஸ்ட்?
பட்ஜெட் மிட் SUV கார்கள்; மாருதி பிரெஸ்ஸா vs விக்டோரிஸ்- அம்சங்கள், மைலேஜ், விலை..எது பெஸ்ட்?
Embed widget