மேலும் அறிய

தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர் மழையால் வடிகால் வாய்க்கால்கள் சீரமைக்கும் பணிகள் தீவிரம்

''மாவட்டம் முழுவதும் சுமார் 1 லட்சம் ஏக்கரில் சம்பா நடவு செய்யப்பட்டுள்ளது. இந்த நெற்பயிர் அனைத்தும் இளம் பயிராக இருப்பதால், வயலில் தேங்கியுள்ள மழைநீரில் மூழ்கி அழுகி சேதமானது''

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், மழை வெள்ள பாதிப்புகளை தடுக்கும் விதமாக, வடிகால்களை சீரமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. வடகிழக்கு பருவமழை கடந்த வாரம் தொடங்கியதை அடுத்து, தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.


தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர் மழையால் வடிகால் வாய்க்கால்கள் சீரமைக்கும் பணிகள் தீவிரம்

தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் சுமார் 1 லட்சம் ஏக்கரில் சம்பா நடவு செய்யப்பட்டுள்ளது. இந்த நெற்பயிர் அனைத்தும் இளம் பயிராக இருப்பதால், வயலில் தேங்கியுள்ள மழைநீரில் மூழ்கி அழுகி சேதமானது. இதனால் பல ஆயிரம் ஏக்கர் நாற்றுக்கள் அழுகி நாசமானது. மேலும் நாற்றுக்களை நடவு செய்ய முடியாமல் வீணானது. இதனை தொடர்ந்து விவசாயிகள், பாசன வாய்க்காலை மட்டும் துார் வாரி விட்டு, வடிகால் வாய்க்கால்களை துார் வாராமல் விட்டதால், வயல்களில் மழை நீர் தேங்கியது.  இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட விவசாயிகள், அனைத்து வடிகால் வாய்க்கால்களையும் துார் வார வேண்டும், தண்ணீர் செல்ல முடியாமல் வெங்காயம், ஆகாய தாமரை கொடிகளால், தேங்கியுள்ளதை, உடனடியாக அகற்றி சீர் செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.


தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர் மழையால் வடிகால் வாய்க்கால்கள் சீரமைக்கும் பணிகள் தீவிரம்

அதன்படி, மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்பேரில், பொதுப்பணித்துறையினர்,  தண்ணீர் செல்ல முடியாமல் இருக்கும் அனைத்து வடிகால் வாய்க்கால்களையும், கண்டறிந்து அதனை சீரமைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதனை தொடர்ந்து, பொதுப்பணித்துறையினர் ஆங்காங்கே வாய்க்கால்கள், வடிகால்களில் தண்ணீர் சீராக செல்ல தடையாக உள்ள பகுதிகளை கண்டறிந்து அதனை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, வயலில் தேங்கியுள்ள மழை நீர் வடியாமல் இருக்கும் வடிகால் வாய்க்கால்களான, தஞ்சாவூர் அருகே திட்டை வடிகால் வாய்க்காலில் சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரத்துக்கு,  வெங்காயத்தாமரைகள் உள்ளிட்ட செடி, கொடிகள் படர்ந்து வாய்க்காலில் மழைநீர் வடியவிடாமல் இருந்ததை கண்டறிந்து, அதனை பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மூலம் செடி, கொடிகள் அகற்றும் பணி நடைபெற்றது.


தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர் மழையால் வடிகால் வாய்க்கால்கள் சீரமைக்கும் பணிகள் தீவிரம்

இதே போல் பாபாநாசம் அருகே எடவாக்குடி பகுதியில் உள்ள புத்தார் வடிகால் வாய்க்காலையும், பொதுப்பணித்துறையின் உதவி பொறியாளர் பூங்கொடி தலைமையில் பணியாளர்கள் சீரமைத்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலுள்ள வயல்களில் மழை நீர்,  வடிகால் வாய்க்காலில் வடியாமல் தேங்கி நிற்கிறது. எனவே, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, வடிகால் வாய்க்காலில் உள்ள செடி, கொடிகளை போர்கால அடிப்படையில், துார் வாரும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது மழை காலம் தொடங்கியுள்ள நிலையில் பலத்த மழையின் காரணமாக, வயலில் மழை நீர் தேங்காமல் இருப்பதற்கு, போர்கால அடிப்படையில் துார் வாரும் பணி முழுவீச்சில் நடைபெறுகிறது. இனி வரும் நாட்களில் வடிகால் வாய்க்கால்களில் செடி கொடிகள் இல்லாதவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
வீடுகள் கட்டுவதை எதிர்க்கவில்லை... சரியான இடத்தில் கட்டுங்கள்! கல்யாணசுந்தரம் எம்.பி. கடும் அதிருப்தி
வீடுகள் கட்டுவதை எதிர்க்கவில்லை... சரியான இடத்தில் கட்டுங்கள்! கல்யாணசுந்தரம் எம்.பி. கடும் அதிருப்தி
மாம்பழத்துக்கு விலை இல்லை... மரங்களை வெட்டும் அவலம்: கும்பகோணத்தில் மாங்காய் உடைத்து நூதனப் போராட்டம்
மாம்பழத்துக்கு விலை இல்லை... மரங்களை வெட்டும் அவலம்: கும்பகோணத்தில் மாங்காய் உடைத்து நூதனப் போராட்டம்
பாதிக்கு பாதி... மதியம் டப்... மாலையில காற்றுல ஜில்: இன்னைக்கு மழை பெய்யுமா தஞ்சாவூருல!!!
பாதிக்கு பாதி... மதியம் டப்... மாலையில காற்றுல ஜில்: இன்னைக்கு மழை பெய்யுமா தஞ்சாவூருல!!!

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
Iran China US: நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
Trump Netanyahu Plan: ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
Mahindra BE 6 New Upgrades: 3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
US Iran War: ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
Embed widget