மேலும் அறிய

தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர் மழையால் வடிகால் வாய்க்கால்கள் சீரமைக்கும் பணிகள் தீவிரம்

''மாவட்டம் முழுவதும் சுமார் 1 லட்சம் ஏக்கரில் சம்பா நடவு செய்யப்பட்டுள்ளது. இந்த நெற்பயிர் அனைத்தும் இளம் பயிராக இருப்பதால், வயலில் தேங்கியுள்ள மழைநீரில் மூழ்கி அழுகி சேதமானது''

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், மழை வெள்ள பாதிப்புகளை தடுக்கும் விதமாக, வடிகால்களை சீரமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. வடகிழக்கு பருவமழை கடந்த வாரம் தொடங்கியதை அடுத்து, தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.


தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர் மழையால் வடிகால் வாய்க்கால்கள் சீரமைக்கும் பணிகள் தீவிரம்

தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் சுமார் 1 லட்சம் ஏக்கரில் சம்பா நடவு செய்யப்பட்டுள்ளது. இந்த நெற்பயிர் அனைத்தும் இளம் பயிராக இருப்பதால், வயலில் தேங்கியுள்ள மழைநீரில் மூழ்கி அழுகி சேதமானது. இதனால் பல ஆயிரம் ஏக்கர் நாற்றுக்கள் அழுகி நாசமானது. மேலும் நாற்றுக்களை நடவு செய்ய முடியாமல் வீணானது. இதனை தொடர்ந்து விவசாயிகள், பாசன வாய்க்காலை மட்டும் துார் வாரி விட்டு, வடிகால் வாய்க்கால்களை துார் வாராமல் விட்டதால், வயல்களில் மழை நீர் தேங்கியது.  இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட விவசாயிகள், அனைத்து வடிகால் வாய்க்கால்களையும் துார் வார வேண்டும், தண்ணீர் செல்ல முடியாமல் வெங்காயம், ஆகாய தாமரை கொடிகளால், தேங்கியுள்ளதை, உடனடியாக அகற்றி சீர் செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.


தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர் மழையால் வடிகால் வாய்க்கால்கள் சீரமைக்கும் பணிகள் தீவிரம்

அதன்படி, மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்பேரில், பொதுப்பணித்துறையினர்,  தண்ணீர் செல்ல முடியாமல் இருக்கும் அனைத்து வடிகால் வாய்க்கால்களையும், கண்டறிந்து அதனை சீரமைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதனை தொடர்ந்து, பொதுப்பணித்துறையினர் ஆங்காங்கே வாய்க்கால்கள், வடிகால்களில் தண்ணீர் சீராக செல்ல தடையாக உள்ள பகுதிகளை கண்டறிந்து அதனை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, வயலில் தேங்கியுள்ள மழை நீர் வடியாமல் இருக்கும் வடிகால் வாய்க்கால்களான, தஞ்சாவூர் அருகே திட்டை வடிகால் வாய்க்காலில் சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரத்துக்கு,  வெங்காயத்தாமரைகள் உள்ளிட்ட செடி, கொடிகள் படர்ந்து வாய்க்காலில் மழைநீர் வடியவிடாமல் இருந்ததை கண்டறிந்து, அதனை பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மூலம் செடி, கொடிகள் அகற்றும் பணி நடைபெற்றது.


தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர் மழையால் வடிகால் வாய்க்கால்கள் சீரமைக்கும் பணிகள் தீவிரம்

இதே போல் பாபாநாசம் அருகே எடவாக்குடி பகுதியில் உள்ள புத்தார் வடிகால் வாய்க்காலையும், பொதுப்பணித்துறையின் உதவி பொறியாளர் பூங்கொடி தலைமையில் பணியாளர்கள் சீரமைத்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலுள்ள வயல்களில் மழை நீர்,  வடிகால் வாய்க்காலில் வடியாமல் தேங்கி நிற்கிறது. எனவே, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, வடிகால் வாய்க்காலில் உள்ள செடி, கொடிகளை போர்கால அடிப்படையில், துார் வாரும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது மழை காலம் தொடங்கியுள்ள நிலையில் பலத்த மழையின் காரணமாக, வயலில் மழை நீர் தேங்காமல் இருப்பதற்கு, போர்கால அடிப்படையில் துார் வாரும் பணி முழுவீச்சில் நடைபெறுகிறது. இனி வரும் நாட்களில் வடிகால் வாய்க்கால்களில் செடி கொடிகள் இல்லாதவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
ABP Premium

வீடியோ

PC Sreeram supports Vijay|‘’அதிகார துஷ்பிரயோகம்!இது டிரம்ப் மண் கிடையாதுவிஜய்க்கு PC ஸ்ரீராம்SUPPORT
Vijay CBI Enquiry | CBI விசாரணையில் TWIST தேர்தலுக்கு முன் குற்றப்பத்திரிகை? அடுத்த சிக்கலில் விஜய்?
Villupuram News|முளைப்பாரி..கும்மியாட்டம்!களைகட்டிய பேரங்கியூர் தென்பெண்ணை ஆற்று திருவிழா
Woman Police with Baby|Traffic-ல் சிக்கிய ஆம்புலன்ஸ்!கைக்குழந்தையுடன் கடமை! மாஸ் காட்டிய பெண் காவலர்
”முடிவு என்கிட்ட தான்” ராகுல் போட்ட ORDER! டெல்லி MEETING-ல் நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
HC Judge Vs Savukku Shankar: “நீதிமன்றத்தையும் நீங்கள் மிரட்ட முடியாது“; சவுக்கு சங்கரை விளாசிய நீதிபதி; கடும் எச்சரிக்கை
“நீதிமன்றத்தையும் நீங்கள் மிரட்ட முடியாது“; சவுக்கு சங்கரை விளாசிய நீதிபதி; கடும் எச்சரிக்கை
Tata Punch vs Nexon: டாடா பஞ்ச் டாப் எண்ட்-ஆ.? மிட்-ஸ்பெக் நெக்ஸான்-ஆ.? உங்கள் பணத்திற்கு சிறந்த SUV எது.?
டாடா பஞ்ச் டாப் எண்ட்-ஆ.? மிட்-ஸ்பெக் நெக்ஸான்-ஆ.? உங்கள் பணத்திற்கு சிறந்த SUV எது.?
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
திருமணம் ஆகாதவர்களுக்கு அவசர கால சேமிப்பு ஏன் அவசியம்?
திருமணம் ஆகாதவர்களுக்கு அவசர கால சேமிப்பு ஏன் அவசியம்?
Embed widget