மேலும் அறிய

நெல்லின் ஈரப்பதம் 21% ஆக உயர்வு; இந்திய உணவு கழக அனுமதிக்கு பின் நடவடிக்கை - அமைச்சர் சக்கரபாணி

திமுக அரசு ஆட்சிக்கு வந்தால் 15 நாட்களில் குடும்ப அட்டை தருவோம் என்று கூறினோம். ஆட்சிக்கு வந்து 17 மாதங்களில் இதுவரை தமிழகம் முழுவதும் 13 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளது.

நெல்லின் ஈரப்பதத்தை 21 சதவீதமாக உயர்த்துவது குறித்து இந்திய உணவு கழகத்தின் அனுமதி பெற்ற பின்பு நடவடிக்கை எடுக்கப்படும் என  உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறினார்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வீடு அற்றவர்களுக்கான வீடு வழங்கும் திட்டம் தொடர்பான ஆய்வு கூட்டம் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் நடைபெற்றது. இதில் 1168 பயனாளிகளுக்கு 11 கோடியே 59 லட்சத்து 17 ஆயிரத்து 865 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் சக்கரபாணி ஆய்வு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில், “நெல்லின் ஈரப்பதம் 21% வேண்டும் என விவசாயிகளும் பல அரசியல் தலைவர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். இதேபோன்று சென்ற ஆண்டும் இதே கோரிக்கை வந்தது. இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் முடிவெடுக்க முடியாது. இந்திய உணவுக் கழகம் அனுமதி கொடுத்தால் தான் 21% ஈரப்பதத்துடன் நெல்லை வாங்க முடியும். ஆனால் அதற்காக ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதி அங்குள்ள அதிகாரிகள் இங்கு வந்து பார்த்துவிட்டு ஈரப்பதம் 21% வாங்கலாமா அந்த அளவுக்கு இங்கு மழை பெய்து இருக்கிறதா என்பதை பார்த்துவிட்டு அவர்கள் டெல்லி சென்று அனுமதி கொடுத்த பிறகுதான் அதை வாங்க முடியும்.


நெல்லின் ஈரப்பதம் 21% ஆக உயர்வு; இந்திய உணவு கழக அனுமதிக்கு பின் நடவடிக்கை - அமைச்சர் சக்கரபாணி

சென்ற ஆண்டும் இதே மாதிரி பிரச்னை வந்த பொழுது முதலமைச்சர் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதி அங்குள்ள அதிகாரிகள் இங்கு வந்து ஆய்வு செய்து விட்டு டெல்லிக்கு சென்ற உடனே 21% வாங்கலாம் என்று அறிவித்தார்கள். அதன் பிறகு நெல்லை வாங்கினோம். இந்தாண்டும் முதலமைச்சரின் மூலம் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதி அந்த அதிகாரிகள் இங்கு வந்து பார்த்துவிட்டு சென்று அறிவித்த பிறகு தான் அதற்கான நடவடிக்கைகளை எடுக்க முடியும். இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு சன்ன ரகத்திற்கு 1960 ரூபாய் இருந்ததை இன்றைக்கு 2150 ரூபாய் அளவுக்கும், அதே மாதிரி பொது ரகத்திற்கு அன்று 1945 ரூபாய் இருந்ததை இன்று 2115 ரூபாய்க்கு எடுக்கிறோம்.இன்றைக்கு 17 மாதங்களில் 200 ரூபாய் உயர்த்தி கொடுத்து இருக்கிறோம். தேர்தல் வாக்குறுதிகளில் கூறியதை முதலமைச்சர் 60% நிறைவேற்றி இருக்கிறார். மீதமுள்ளவற்றையும் கண்டிப்பாக நிறைவேற்றுவோம் என்று பல கூட்டங்களில் கூறியிருக்கிறார். எனவே தேர்தல் வாக்குறுதியில் சொன்ன அனைத்தையும் கண்டிப்பாக வரும் காலங்களில் நிறைவேற்றுவோம்.


நெல்லின் ஈரப்பதம் 21% ஆக உயர்வு; இந்திய உணவு கழக அனுமதிக்கு பின் நடவடிக்கை - அமைச்சர் சக்கரபாணி

11 லட்சம் மெட்ரிக் டன் நெல்லை சேமித்து வைப்பதற்கான நடவடிக்கைகளை தற்போது எடுத்து வருகிறோம். குறிப்பாக இந்த அரசு பொறுப்பேற்ற பின்பு திருவாரூர் மாவட்டத்திற்கு இரண்டு நவீன அரிசி ஆலை 500 மெட்ரிக் டன்னிலும் மேலும் 800 மெட்ரிக் டன் அறைக்கும் ஒரு அரிசி அலையும் இங்கு வரவிருக்கிறது. அதேபோன்று தஞ்சாவூரிலும் மூன்று நவீன அரிசி ஆலைகள் அமையவிருக்கிறது. அதேபோன்று தமிழகம் முழுவதும் 6600 மெட்ரிக் டன் அரைக்க கூடிய அளவிலே 11 நவீன அரிசி ஆலைகள் தனியார் பங்களிப்புடன் விரைவில் கொண்டுவரப்பட இருக்கிறது. அதேபோன்று திமுக அரசு ஆட்சிக்கு வந்தால் 15 நாட்களில் குடும்ப அட்டை தருவோம் என்று கூறினோம். ஆட்சிக்கு வந்து 17 மாதங்களில் இதுவரை தமிழக முழுவதும் 13 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
Embed widget