மேலும் அறிய

நெல்லின் ஈரப்பதம் 21% ஆக உயர்வு; இந்திய உணவு கழக அனுமதிக்கு பின் நடவடிக்கை - அமைச்சர் சக்கரபாணி

திமுக அரசு ஆட்சிக்கு வந்தால் 15 நாட்களில் குடும்ப அட்டை தருவோம் என்று கூறினோம். ஆட்சிக்கு வந்து 17 மாதங்களில் இதுவரை தமிழகம் முழுவதும் 13 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளது.

நெல்லின் ஈரப்பதத்தை 21 சதவீதமாக உயர்த்துவது குறித்து இந்திய உணவு கழகத்தின் அனுமதி பெற்ற பின்பு நடவடிக்கை எடுக்கப்படும் என  உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறினார்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வீடு அற்றவர்களுக்கான வீடு வழங்கும் திட்டம் தொடர்பான ஆய்வு கூட்டம் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் நடைபெற்றது. இதில் 1168 பயனாளிகளுக்கு 11 கோடியே 59 லட்சத்து 17 ஆயிரத்து 865 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் சக்கரபாணி ஆய்வு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில், “நெல்லின் ஈரப்பதம் 21% வேண்டும் என விவசாயிகளும் பல அரசியல் தலைவர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். இதேபோன்று சென்ற ஆண்டும் இதே கோரிக்கை வந்தது. இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் முடிவெடுக்க முடியாது. இந்திய உணவுக் கழகம் அனுமதி கொடுத்தால் தான் 21% ஈரப்பதத்துடன் நெல்லை வாங்க முடியும். ஆனால் அதற்காக ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதி அங்குள்ள அதிகாரிகள் இங்கு வந்து பார்த்துவிட்டு ஈரப்பதம் 21% வாங்கலாமா அந்த அளவுக்கு இங்கு மழை பெய்து இருக்கிறதா என்பதை பார்த்துவிட்டு அவர்கள் டெல்லி சென்று அனுமதி கொடுத்த பிறகுதான் அதை வாங்க முடியும்.


நெல்லின் ஈரப்பதம் 21% ஆக உயர்வு; இந்திய உணவு கழக அனுமதிக்கு பின் நடவடிக்கை - அமைச்சர் சக்கரபாணி

சென்ற ஆண்டும் இதே மாதிரி பிரச்னை வந்த பொழுது முதலமைச்சர் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதி அங்குள்ள அதிகாரிகள் இங்கு வந்து ஆய்வு செய்து விட்டு டெல்லிக்கு சென்ற உடனே 21% வாங்கலாம் என்று அறிவித்தார்கள். அதன் பிறகு நெல்லை வாங்கினோம். இந்தாண்டும் முதலமைச்சரின் மூலம் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதி அந்த அதிகாரிகள் இங்கு வந்து பார்த்துவிட்டு சென்று அறிவித்த பிறகு தான் அதற்கான நடவடிக்கைகளை எடுக்க முடியும். இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு சன்ன ரகத்திற்கு 1960 ரூபாய் இருந்ததை இன்றைக்கு 2150 ரூபாய் அளவுக்கும், அதே மாதிரி பொது ரகத்திற்கு அன்று 1945 ரூபாய் இருந்ததை இன்று 2115 ரூபாய்க்கு எடுக்கிறோம்.இன்றைக்கு 17 மாதங்களில் 200 ரூபாய் உயர்த்தி கொடுத்து இருக்கிறோம். தேர்தல் வாக்குறுதிகளில் கூறியதை முதலமைச்சர் 60% நிறைவேற்றி இருக்கிறார். மீதமுள்ளவற்றையும் கண்டிப்பாக நிறைவேற்றுவோம் என்று பல கூட்டங்களில் கூறியிருக்கிறார். எனவே தேர்தல் வாக்குறுதியில் சொன்ன அனைத்தையும் கண்டிப்பாக வரும் காலங்களில் நிறைவேற்றுவோம்.


நெல்லின் ஈரப்பதம் 21% ஆக உயர்வு; இந்திய உணவு கழக அனுமதிக்கு பின் நடவடிக்கை - அமைச்சர் சக்கரபாணி

11 லட்சம் மெட்ரிக் டன் நெல்லை சேமித்து வைப்பதற்கான நடவடிக்கைகளை தற்போது எடுத்து வருகிறோம். குறிப்பாக இந்த அரசு பொறுப்பேற்ற பின்பு திருவாரூர் மாவட்டத்திற்கு இரண்டு நவீன அரிசி ஆலை 500 மெட்ரிக் டன்னிலும் மேலும் 800 மெட்ரிக் டன் அறைக்கும் ஒரு அரிசி அலையும் இங்கு வரவிருக்கிறது. அதேபோன்று தஞ்சாவூரிலும் மூன்று நவீன அரிசி ஆலைகள் அமையவிருக்கிறது. அதேபோன்று தமிழகம் முழுவதும் 6600 மெட்ரிக் டன் அரைக்க கூடிய அளவிலே 11 நவீன அரிசி ஆலைகள் தனியார் பங்களிப்புடன் விரைவில் கொண்டுவரப்பட இருக்கிறது. அதேபோன்று திமுக அரசு ஆட்சிக்கு வந்தால் 15 நாட்களில் குடும்ப அட்டை தருவோம் என்று கூறினோம். ஆட்சிக்கு வந்து 17 மாதங்களில் இதுவரை தமிழக முழுவதும் 13 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget