மேலும் அறிய

மின்தட்டுப்பாடு இல்லையாம்... அப்போ நேரக்கட்டுப்பாடு எதற்கு? - எடப்பாடி பழனிசாமி கேள்வி

திமுக ஆட்சிக்கு எப்போதெல்லாம் வருகிறதோ, அப்போது மின்வெட்டும் வந்துவிடும். இப்போது மின் வெட்டு வந்துவிட்டது.

தஞ்சாவூர்: டெல்டா பாசன விவசாயிகள் பாதிக்கக்கூடாது என்பதற்காக 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கினேன். இப்போதுள்ள அரசு மும்முனை மின்சாரத்தில் நேரக் கட்டுப்பாடு கொண்டு வந்துள்ளது. ஆனால், மின் தட்டுப்பாடு இல்லை எனக் கூறுகின்றனர். மின் தட்டுப்பாடு இல்லை என்றால், எதற்கு நேரக் கட்டுப்பாடு கொண்டு வர வேண்டும்? என்று  முன்னாள் முதல்வரும், எதிர்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச் செயலருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

தஞ்சாவூரில் நடைபெற்ற முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் எம்.எல்.ஏ., இளைய மகன் கே. இன்பன் - ரத்னா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று மணமக்களை வாழ்த்திய அவர் மேலும் பேசியதாவது:

ஜெயலலிதா காலத்தில் காவிரி பிரச்னையில் நமக்குக் கிடைக்க வேண்டிய நீர் பங்கீடு முழுமையாகக் கிடைக்க சட்டப் போராட்டம் நடத்தப்பட்டது. இப்பிரச்னையில் ஜெயலலிதா முழுமையாக அக்கறை கொண்டு, ஈடுபட்டு 50 ஆண்டு கால காவிரி நதி நீர் பிரச்னைக்கு தீர்வு கண்டார்.

டெல்டா பாசன விவசாயிகள் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் அச்சத்துடன் வாழ்ந்து வந்தனர். இந்த டெல்டா பாசன விவசாயிகளுக்கு இதுதான் உயிர் மூச்சு; இதை வைத்துதான் விவசாயிகளின் வாழ்வாதாரம் அமைந்துள்ளது. எனவே, டெல்டா பாசன விவசாயிகளை எப்படியாவது பாதுகாக்க வேண்டும் என பல முறை என்னை சந்தித்து காமராஜ் ஆதங்கத்துடன் கோரிக்கை வைத்தார்.


மின்தட்டுப்பாடு இல்லையாம்... அப்போ நேரக்கட்டுப்பாடு எதற்கு? - எடப்பாடி பழனிசாமி கேள்வி

இதையடுத்து, மத்திய அரசிடம் பேசியும், போராடியும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை நாங்கள் பெற்றுத் தந்தோம். விவசாயிகளைப் பாதுகாக்கக்கூடிய அற்புதமான சட்டத்தைப் பெற்றுள்ளோம். எனவே, காவிரி நதி நீர் பிரச்னைக்கு தீர்வு கண்டதும், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக பெற்றுத் தந்ததும் ஜெயலலிதாவின் அரசுதான்.

டெல்டா பாசன விவசாயிகள் பாதிக்கக்கூடாது என்பதற்காக 24 மணிநேரமும் மும்முனை மின்சாரம் வழங்கினேன். இப்போதுள்ள அரசு மும்முனை மின்சாரத்தில் நேரக் கட்டுப்பாடு கொண்டு வந்துள்ளது. பகலில் 5 மணிநேரமும், இரவிலும் மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது. ஆனால், மின் தட்டுப்பாடு இல்லை எனக் கூறுகின்றனர். மின் தட்டுப்பாடு இல்லை என்றால், எதற்கு நேரக் கட்டுப்பாடு கொண்டு வர வேண்டும்?

திமுக ஆட்சிக்கு எப்போதெல்லாம் வருகிறதோ, அப்போது மின்வெட்டும் வந்துவிடும். இப்போது மின் வெட்டு வந்துவிட்டது. நெற் பயிர் சிறப்பாக வளர்ந்து விளைச்சல் கொடுக்க வேண்டும். நெற் பயிர் நடவு செய்யப்பட்டவுடன் குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு களை எடுப்பர். அதிமுகவில் களை எடுக்கப்பட்டு விட்டதால், அதிமுக என்கிற பயிர் செழித்து வளர்ந்து விளைச்சலை கொடுக்கும்.

சிலர் அரசியலில் சொந்த நலனுக்காக இருந்து கொண்டிருக்கின்றனர். ஆனால், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா விட்டுச் சென்ற பணியைத் தொடர வேண்டும் என்கிற சேவை மனப்பான்மையுடன் நம்மிடம் உள்ளனர். இங்கு தனி மனித ஆதிக்கம் கிடையாது. தொண்டர்களின் ஆதரவால் இந்த நிலைக்கு வந்துள்ளோம்.

தொண்டர்களால் ஆளப்படும் கட்சி இது. தொண்டர்களின் உழைப்பால் மீண்டும் ஜெயலலிதாவின் அரசு அமையும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் தமாகா தலைவர் ஜி.கே. வாசன், முன்னாள் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக, மணமக்களுக்கு தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை செüந்தரராஜன் வாழ்த்து தெரிவித்தார். திருமண விழா நாளை காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.

தலைப்பு செய்திகள்

தஞ்சை பெரிய கோயில் பகுதியில் ரூ.25 கோடியில் மேம்பாட்டு பணிகள்: விரைவில் டெண்டர்: எம்.பி. முரசொலி மகிழ்ச்சி தகவல்
தஞ்சை பெரிய கோயில் பகுதியில் ரூ.25 கோடியில் மேம்பாட்டு பணிகள்: விரைவில் டெண்டர்: எம்.பி. முரசொலி மகிழ்ச்சி தகவல்
தஞ்சாவூருக்கு இன்று மதியம் துணை குடியரசுத் தலைவர் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் ஹெலிகாப்டரில் ஒத்திகை
தஞ்சாவூருக்கு இன்று மதியம் துணை குடியரசுத் தலைவர் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் ஹெலிகாப்டரில் ஒத்திகை
தமிழகத்திற்கு தண்ணீர் மட்டும் கிடையாது... விற்பனைக்கு மட்டும் பால்? அதிரடியாக களம் இறங்கிய விவசாயிகள்
தமிழகத்திற்கு தண்ணீர் மட்டும் கிடையாது... விற்பனைக்கு மட்டும் பால்? அதிரடியாக களம் இறங்கிய விவசாயிகள்
தஞ்சாவூர் அருகே குறுவை சாகுபடி இல்லாத வயல்கள்... ஆடுகளின் மேய்ச்சல் களமானது
தஞ்சாவூர் அருகே குறுவை சாகுபடி இல்லாத வயல்கள்... ஆடுகளின் மேய்ச்சல் களமானது

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
Embed widget