மேலும் அறிய

குழந்தைகள் திருமணம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே முக்கிய நோக்கம்: மனித உரிமை அமைப்பு

கிராமப்புறங்களில் பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை மற்றும் குழந்தை திருமணம் ஒழிப்பு பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் மனித உரிமை அமைப்பின் முக்கிய பணியாகும்

தஞ்சாவூர்: கிராமப்புறங்களில் பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை மற்றும் குழந்தை திருமணம் ஒழிப்பு பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் மனித உரிமை அமைப்பின் முக்கிய பணியாகும் என்று அதன் தஞ்சை மாவட்ட தலைவர் சுபைதா பேகம் தெரிவித்தார்.

மாவட்ட தலைமை அலுவலகம் திறப்பு

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலையில் மனித உரிமை செல் அமைப்பின் தஞ்சை மாவட்ட தலைமை அலுவலகம் திறப்பு விழா நடந்தது. இதனை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் திறந்து வைத்து குத்துவிளக்கேற்றி வாழ்த்தி பேசினார். சிறப்பு விருந்தினர்களாக கடலூர் மாவட்ட சேர்மன் கண்ணன், தஞ்சாவூர் மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

உறுப்பினர்கள் பங்கேற்பு

நிகழ்ச்சியில் அமைப்பின் துணைத் தலைவர் ஆசாத் தாஸ், மாவட்ட பொதுச்செயலாளர் வள்ளிக்கொடி, அமைப்புச் செயலாளர் கவிதா, பொருளாளர் சுபாஷினி மாவட்ட ஊடக செயலாளர் பிரித்தா பீனிஷ், சட்ட செயலாளர் ஹெலன் ரோஸ் மற்றும் திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை மதுரை, நாகப்பட்டினம் மாவட்ட தலைவர்கள், உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பெண் குழந்தைகள் பாதுகாப்பு

பின்னர் மாவட்ட தலைவர் சுவேதா பேகம் கூறுகையில்,  மனித உரிமை அமைப்பின் பயன்கள் பெண் குழந்தைகள் பாதுகாப்பு பற்றி விளக்கி கூறினார் மேலும் நகர், கிராமப்புறங்களில் பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை, சீண்டல் மற்றும் குழந்தை திருமணம் ஒழிப்பு பற்றி போதிய விழிப்புணர்வு இல்லாத நிலை உள்ளது. இதனை ஹியூமன் ரைட்ஸ் செல் அமைப்பின் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தி கொடுப்பது முக்கிய பணி ஆகும்.

சட்டரீதியான உதவிகளையும் செய்வோம்

மேலும் சட்ட ரீதியான உதவிகளையும் இந்த அமைப்பு செய்யும். பொது மக்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்ள எப்பொழுதும் தயாராக இருக்கிறோம். பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு தற்போதைய காலக்கட்டத்தில் பாலியல் தொல்லைகள், சீண்டல்கள் ஆகியவை அதிகம் நடக்கிறது. அதேபோல் சிறுமிகளுக்கு குட் டச், பேட் டச் போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் எங்களின் முக்கிய நோக்கம். 

இவை குறித்த விழிப்புணர்வு இருந்தாலே போதும் சிறுமிகளும், பெண்களும் தங்களை பாதுகாத்துக் கொள்ள இயலும். முக்கியமாக கிராமப்புறங்களில் போதிய விழிப்புணர்வு இல்லாத நிலை இருந்து வருகிறது. அதை மாற்றி பெண்கள் விழிப்புணர்வு அடைய வேண்டும். மேலும் இதுமட்டுமின்றி தேவையான சட்ட உதவிகளையும் நாங்கள் எப்போதும் செய்து தர தயாராக இருக்கிறோம். எங்கள் உறுப்பினர்கள் எப்போதும் மக்களுக்கு சேவை செய்ய தயாராக உள்ளனர். முக்கியமாக கிராமப்புறத்தை சேர்ந்த பெண்கள் தங்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண எங்களை தொடர்பு கொள்ளலாம். அவர்களுக்கு தேவையான சட்டஉதவிகளை செய்து தருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அதிரடி முடிவு: திருவையாறில் சுயேட்சையாக களமிறங்குகிறாரா கவிஞர் சினேகன்?
அதிரடி முடிவு: திருவையாறில் சுயேட்சையாக களமிறங்குகிறாரா கவிஞர் சினேகன்?
அக்னிபாத் திட்டத்தின் கீழ் இராணுவத்தில் சேர ஒரு சூப்பர் வாய்ப்பு.. ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியீடு- உடனே விண்ணப்பியுங்கள்!
அக்னிபாத் திட்டத்தின் கீழ் இராணுவத்தில் சேர ஒரு சூப்பர் வாய்ப்பு.. ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியீடு- உடனே விண்ணப்பியுங்கள்!
தஞ்சாவூர் வயல்களில் வாத்து மேய்ச்சல்: இயற்கை உரம், அதிக லாபம் தரும் தொழில்! விவசாயிகள் மகிழ்ச்சி
தஞ்சாவூர் வயல்களில் வாத்து மேய்ச்சல்: இயற்கை உரம், அதிக லாபம் தரும் தொழில்! விவசாயிகள் மகிழ்ச்சி
குழந்தையை விலைக்கு வாங்கிய 3 பேர் கைது... தஞ்சையில் அதிர்ச்சி சம்பவம்
குழந்தையை விலைக்கு வாங்கிய 3 பேர் கைது... தஞ்சையில் அதிர்ச்சி சம்பவம்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்
Election commission | 3 நாளில் ரூ.42 கோடி பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை தேர்தல் ஆணையம் அதிரடி
MK Stalin on CV Shanmugam |
Annamalai on Vilathikulam Arrest |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK Candidate List Released : அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.! யார் யார் எந்த தொகுதியில் போட்டி.? இதோ முழு லிஸ்ட்
அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.! யார் யார் எந்த தொகுதியில் போட்டி.? இதோ முழு லிஸ்ட்
Kamal Hassan:
Kamal Hassan: "நீங்க மட்டும் எம்பி ஆனா போதுமா..?" கமல் மீது கடுப்பில் மக்கள் நீதிமய்ய நிர்வாகிகள்!
தமாகாவிற்கு 5 தொகுதி... அத்தனையும் திமுக கோட்டை.!! தாக்குப்பிடிப்பாரா ஜி.கே.வாசன்.?
தமாகாவிற்கு 5 தொகுதி... அத்தனையும் திமுக கோட்டை.!! தாக்குப்பிடிப்பாரா ஜி.கே.வாசன்.?
DMK Alliance: 2021 Vs 2026 - கறாராக பேசி வேலையை முடித்த திமுக - ஆனாலும் நட்டம், எத்தனை தொகுதிகளில் உதயசூரியன்?
DMK Alliance: 2021 Vs 2026 - கறாராக பேசி வேலையை முடித்த திமுக - ஆனாலும் நட்டம், எத்தனை தொகுதிகளில் உதயசூரியன்?
Thirumavalavan: கமலால் கடுப்பான விசிக தொண்டர்கள்..! நள்ளிரவில் நன்றி சொல்லி திருமா போஸ்ட் - என்ன ஆச்சு?
Thirumavalavan: கமலால் கடுப்பான விசிக தொண்டர்கள்..! நள்ளிரவில் நன்றி சொல்லி திருமா போஸ்ட் - என்ன ஆச்சு?
Skoda Discounts: ரூ.5 லட்சம் ஆஃபர் கொடுக்குறோம் - கார் வாங்க வரிங்களா? லிஸ்டில் கைலக், குஷக், ஸ்லாவியா
Skoda Discounts: ரூ.5 லட்சம் ஆஃபர் கொடுக்குறோம் - கார் வாங்க வரிங்களா? லிஸ்டில் கைலக், குஷக், ஸ்லாவியா
Sonia Gandhi: சோனியா காந்தி நள்ளிரவில் மருத்துவமனையில் திடீர் அனுமதி! என்னாச்சு?
Sonia Gandhi: சோனியா காந்தி நள்ளிரவில் மருத்துவமனையில் திடீர் அனுமதி! என்னாச்சு?
RCB Sold: ஆர்சிபி அணி ரூ.16 ஆயிரம் கோடிக்கு விற்பனை- கோலியின் புதிய இந்திய ஓனர் யார் தெரியுமா? - முழு விவரம்
RCB Sold: ஆர்சிபி அணி ரூ.16 ஆயிரம் கோடிக்கு விற்பனை- கோலியின் புதிய இந்திய ஓனர் யார் தெரியுமா? - முழு விவரம்
Embed widget