மேலும் அறிய

கோரிக்கைகளை வலியுறுத்தி தோட்டக்கலை அலுவலர்கள் தஞ்சையில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் பனகல் கட்டிடம் முன்பு தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் நலச்சங்கம், தமிழ்நாடு உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர்: வேளாண்மைத்துறையில் செயல்படுத்திடும் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0-ஐ கைவிட வேண்டும். தோட்டக்கலை வளர்ச்சியை பாதிக்கக்கூடியதும், உழவர்களை பாதிக்க கூடியதுமான இந்த உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0-ஐ அமல்படுத்த கூடாது என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூரில் தோட்டக்கலை அலுவலர்கள் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தஞ்சாவூர் பனகல் கட்டிடம் முன்பு தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் நலச்சங்கம், தமிழ்நாடு உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தோட்டக்கலை உதவி இயக்குனரும் தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் சங்கம் தஞ்சாவூர் மாவட்ட தலைவருமான கே.வள்ளியம்மாள், உதவி தோட்டக்கலை அலுவலரும் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சங்கம் தஞ்சாவூர் மாவட்ட தலைவருமான எஸ்.குடியரசன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசின் வேளாண்மைத்துறையில் செயல்படுத்திடும் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0-ஐ கைவிட வேண்டும். தோட்டக்கலை வளர்ச்சியை பாதிக்கக்கூடியதும், உழவர்களை பாதிக்க கூடியதுமான இந்த உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0-ஐ அமல்படுத்த கூடாது.  வேளாண் விஞ்ஞானிகளை கொண்டு குழு அமைத்து பரிந்துரையின் அடிப்படையில் செயல்படுத்தப்படாத இந்த  திட்டத்தை எந்த காரணத்தை கொண்டும் அமல்படுத்த கூடாது.

தோட்டக்கலை துறை கள அலுவலர்களை அவசர காலத்தில் பணியிடப்பெயர்ச்சி செய்திடுவதை உடனே நிறுத்த வேண்டும். களப்பணியாளர்கள் இணைப்பினை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தோட்டக்கலை துறை வளர்ச்சியை உறுதி செய்திட வேண்டியும் கோஷங்கள் எழுப்பினர்.

இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தோட்டக்கலை உதவி இயக்குனர்கள், தோட்டக்கலை அலுவலர்கள், தோட்டக்கலை துணை அலுவலர்கள், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


கோரிக்கைகளை வலியுறுத்தி தோட்டக்கலை அலுவலர்கள் தஞ்சையில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

அடிப்படை வசதி செய்து கொடுங்க...

கும்பகோணம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் போதிய மருத்துவர்களை நியமிக்க கோரியும், இம்மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த கோரியும் ஜனநாயக கூட்டமைப்பு சார்பில் கும்பகோணம் காந்தி பூங்கா முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கும்பகோணம் மாவட்ட அரசு தலைமை பொது மருத்துவமனையில் கடந்த மாதம் பிரசவத்தின் போது மூன்று குழந்தைகள் உயிரிழந்தது. இதற்கு போதிய மருத்துவர்கள் இல்லாதது காரணம் எனக் கூறப்பட்டது. இந்நிலையில் கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் மருத்துவர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

பிரசவ சிகிச்சை பிரிவில் போதிய மருத்துவர்கள் நியமனம் செய்ய வலியுறுத்தியும், குறிப்பாக மயக்க மருந்து மருத்துவர்கள் 24 மணி நேரமும் மருத்துவமனையில் இருக்கும் வகையில் சுழற்சி முறையில் பணியமர்த்த வேண்டும். மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று கோரிக்கைகளை முன்வைத்து கும்பகோணம் காந்தி பூங்கா முன் ஜனநாயக கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
Top Searched Travel Destinations: 2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
Ration Shop: வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |
சினிமா காதலன் AVM சரவணன் காலமானார் அதிர்ச்சியில் திரையுலகம் | AVM Studios AVM Saravanan Death

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
Top Searched Travel Destinations: 2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
Ration Shop: வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Anbumani Ramadoss : பாமக தலைவர் நான் தான்...! மெகா கூட்டணி குறித்த அன்புமணி பரபரப்பு தகவல்!
Anbumani Ramadoss : பாமக தலைவர் நான் தான்...! மெகா கூட்டணி குறித்த அன்புமணி பரபரப்பு தகவல்!
Top Searched Recipes: சரக்கு முதல் சைட்டிஷ் வரை.. 2025ல் அதிகம் தேடப்பட்ட உணவுகள் .. இட்லி தான் நம்பர் ஒன்..!
Top Searched Recipes: சரக்கு முதல் சைட்டிஷ் வரை.. 2025ல் அதிகம் தேடப்பட்ட உணவுகள் .. இட்லி தான் நம்பர் ஒன்..!
Thiruparankundram Case: திருப்பரங்குன்றம் விவகாரம்.. உள்நோக்கத்துடன் வழக்கு என நீதிபதி கருத்து.. தமிழக அரசு மனு தள்ளுபடி!
Thiruparankundram Case: திருப்பரங்குன்றம் விவகாரம்.. உள்நோக்கத்துடன் வழக்கு என நீதிபதி கருத்து.. தமிழக அரசு மனு தள்ளுபடி!
‘We are not allowing’  இந்து முன்னணியினரை தடுத்து நிறுத்திய போலீஸ் கமிஷனர் - யார் இந்த  லோகநாதன் IPS?
‘We are not allowing’ யார் இந்த மதுரை கமிஷனர் லோகநாதன் IPS..?
Embed widget