மேலும் அறிய

கோரிக்கைகளை வலியுறுத்தி தோட்டக்கலை அலுவலர்கள் தஞ்சையில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் பனகல் கட்டிடம் முன்பு தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் நலச்சங்கம், தமிழ்நாடு உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர்: வேளாண்மைத்துறையில் செயல்படுத்திடும் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0-ஐ கைவிட வேண்டும். தோட்டக்கலை வளர்ச்சியை பாதிக்கக்கூடியதும், உழவர்களை பாதிக்க கூடியதுமான இந்த உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0-ஐ அமல்படுத்த கூடாது என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூரில் தோட்டக்கலை அலுவலர்கள் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தஞ்சாவூர் பனகல் கட்டிடம் முன்பு தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் நலச்சங்கம், தமிழ்நாடு உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தோட்டக்கலை உதவி இயக்குனரும் தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் சங்கம் தஞ்சாவூர் மாவட்ட தலைவருமான கே.வள்ளியம்மாள், உதவி தோட்டக்கலை அலுவலரும் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சங்கம் தஞ்சாவூர் மாவட்ட தலைவருமான எஸ்.குடியரசன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசின் வேளாண்மைத்துறையில் செயல்படுத்திடும் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0-ஐ கைவிட வேண்டும். தோட்டக்கலை வளர்ச்சியை பாதிக்கக்கூடியதும், உழவர்களை பாதிக்க கூடியதுமான இந்த உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0-ஐ அமல்படுத்த கூடாது.  வேளாண் விஞ்ஞானிகளை கொண்டு குழு அமைத்து பரிந்துரையின் அடிப்படையில் செயல்படுத்தப்படாத இந்த  திட்டத்தை எந்த காரணத்தை கொண்டும் அமல்படுத்த கூடாது.

தோட்டக்கலை துறை கள அலுவலர்களை அவசர காலத்தில் பணியிடப்பெயர்ச்சி செய்திடுவதை உடனே நிறுத்த வேண்டும். களப்பணியாளர்கள் இணைப்பினை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தோட்டக்கலை துறை வளர்ச்சியை உறுதி செய்திட வேண்டியும் கோஷங்கள் எழுப்பினர்.

இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தோட்டக்கலை உதவி இயக்குனர்கள், தோட்டக்கலை அலுவலர்கள், தோட்டக்கலை துணை அலுவலர்கள், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


கோரிக்கைகளை வலியுறுத்தி தோட்டக்கலை அலுவலர்கள் தஞ்சையில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

அடிப்படை வசதி செய்து கொடுங்க...

கும்பகோணம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் போதிய மருத்துவர்களை நியமிக்க கோரியும், இம்மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த கோரியும் ஜனநாயக கூட்டமைப்பு சார்பில் கும்பகோணம் காந்தி பூங்கா முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கும்பகோணம் மாவட்ட அரசு தலைமை பொது மருத்துவமனையில் கடந்த மாதம் பிரசவத்தின் போது மூன்று குழந்தைகள் உயிரிழந்தது. இதற்கு போதிய மருத்துவர்கள் இல்லாதது காரணம் எனக் கூறப்பட்டது. இந்நிலையில் கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் மருத்துவர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

பிரசவ சிகிச்சை பிரிவில் போதிய மருத்துவர்கள் நியமனம் செய்ய வலியுறுத்தியும், குறிப்பாக மயக்க மருந்து மருத்துவர்கள் 24 மணி நேரமும் மருத்துவமனையில் இருக்கும் வகையில் சுழற்சி முறையில் பணியமர்த்த வேண்டும். மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று கோரிக்கைகளை முன்வைத்து கும்பகோணம் காந்தி பூங்கா முன் ஜனநாயக கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

PMK ADMK alliance: அன்புமணி பாமகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ் போட்ட லிஸ்ட்.! ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
அன்புமணி பாமகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ் போட்ட லிஸ்ட்.! ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
அரசு உதவிப் பேராசிரியர் தேர்வு.. ஜன.13 கடைசி! செக் வைத்த டிஆர்பி- தவறுகளை சரிசெய்யலாம்!
அரசு உதவிப் பேராசிரியர் தேர்வு.. ஜன.13 கடைசி! செக் வைத்த டிஆர்பி- தவறுகளை சரிசெய்யலாம்!
’DMK FILES’ - முக்கிய ஆதாரத்தோடு டெல்லிக்கு புறப்படும் எடப்பாடி பழனிசாமி - அதிமுகவின் செம பிளான்
’DMK FILES’ - முக்கிய ஆதாரத்தோடு டெல்லிக்கு புறப்படும் எடப்பாடி பழனிசாமி - அதிமுகவின் செம பிளான்
ஆசிரியர்களின் CPS தொகை ரூ.1 கோடி அரசு வசம்! எதிர்க்கும் சங்கங்கள்- வெடிக்கும் போராட்டம்?
ஆசிரியர்களின் CPS தொகை ரூ.1 கோடி அரசு வசம்! எதிர்க்கும் சங்கங்கள்- வெடிக்கும் போராட்டம்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

வெனிசுலாவில் நிலவும் நெருக்கடிமோசமான சிறையில் மதுரோ போரை தொடங்குகிறாரா ட்ரம்ப்? | America Trump Vs Venezuela
America Vs Venezuela
2026-ல் CM ஆவாரா விஜய்? பிரபல ஜோதிடரே சொல்லிட்டாரு இவர் கணிச்சா தப்பாது! | Astrologer Prashanth Kini On Vijay
தங்கத்தை ஓரம் கட்டிய வெள்ளி இனிமே லட்சத்தில் லாபம் பின்னணியில் CHINA, ENGLAND | Silver Price Hike Reason
Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK ADMK alliance: அன்புமணி பாமகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ் போட்ட லிஸ்ட்.! ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
அன்புமணி பாமகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ் போட்ட லிஸ்ட்.! ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
அரசு உதவிப் பேராசிரியர் தேர்வு.. ஜன.13 கடைசி! செக் வைத்த டிஆர்பி- தவறுகளை சரிசெய்யலாம்!
அரசு உதவிப் பேராசிரியர் தேர்வு.. ஜன.13 கடைசி! செக் வைத்த டிஆர்பி- தவறுகளை சரிசெய்யலாம்!
’DMK FILES’ - முக்கிய ஆதாரத்தோடு டெல்லிக்கு புறப்படும் எடப்பாடி பழனிசாமி - அதிமுகவின் செம பிளான்
’DMK FILES’ - முக்கிய ஆதாரத்தோடு டெல்லிக்கு புறப்படும் எடப்பாடி பழனிசாமி - அதிமுகவின் செம பிளான்
ஆசிரியர்களின் CPS தொகை ரூ.1 கோடி அரசு வசம்! எதிர்க்கும் சங்கங்கள்- வெடிக்கும் போராட்டம்?
ஆசிரியர்களின் CPS தொகை ரூ.1 கோடி அரசு வசம்! எதிர்க்கும் சங்கங்கள்- வெடிக்கும் போராட்டம்?
Top Brands Budget Cars: டாப் 5 ப்ராண்ட்களின்.. கம்மி விலை கார்கள்.. பட்ஜெட் மாடல்கள், மைலேஜில் எப்படி? - முழு விவரம்
Top Brands Budget Cars: டாப் 5 ப்ராண்ட்களின்.. கம்மி விலை கார்கள்.. பட்ஜெட் மாடல்கள், மைலேஜில் எப்படி? - முழு விவரம்
’’அரசு ஊழியர்களே முழிச்சுக்கோங்க; 3ஆம் நாளிலேயே பல்லிளித்த தமிழ்நாடு ஓய்வூதியத் திட்டம்’’- அன்புமணி எச்சரிக்கை
’’அரசு ஊழியர்களே முழிச்சுக்கோங்க; 3ஆம் நாளிலேயே பல்லிளித்த தமிழ்நாடு ஓய்வூதியத் திட்டம்’’- அன்புமணி எச்சரிக்கை
Top 10 News Headlines: திண்டுக்கல்லில் ஸ்டாலின், நில்லாமல் ஏறும் தங்கம் விலை, மீண்டும் ISL- 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: திண்டுக்கல்லில் ஸ்டாலின், நில்லாமல் ஏறும் தங்கம் விலை, மீண்டும் ISL- 11 மணி வரை இன்று
ICC BCB: ”இந்தியாவில் விளையாடுங்க, இல்லைன்னா கிளம்புங்க” - வங்கதேசத்திற்கு ஷாக் தந்த ஐசிசி - ரிப்போர்ட்
ICC BCB: ”இந்தியாவில் விளையாடுங்க, இல்லைன்னா கிளம்புங்க” - வங்கதேசத்திற்கு ஷாக் தந்த ஐசிசி - ரிப்போர்ட்
Embed widget