மேலும் அறிய

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கால் தோட்டக்கலைப்பயிர்களை நீர் சூழ்ந்து பாதிப்பு - அதிகாரி நேரில் ஆய்வு

மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் முக்கொம்பு வழியாக கல்லணை அடைந்து அங்கிருந்து கொள்ளிடம், காவிரி ஆறுகளில் திறந்து விடப்படுகிறது. இதனால் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கர்நாடகாவில் பெய்து வரும் தொடர் மழையால் அங்குள்ள அணைகள் நிரம்பி உபரிநீர் மேட்டூர் அணைக்கு திறந்து விடப்பட்டு வருகிறது. மேட்டூர் அணைக்கு வரும் நீரானது குறைந்து வந்த நிலையில் மீண்டும் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 1.30 லட்சம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 1.44 லட்சம் கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 1.40 லட்சம் கன அடியாக குறைந்துள்ளது.

மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் முக்கொம்பு வழியாக கல்லணை அடைந்து அங்கிருந்து கொள்ளிடம், காவிரி ஆறுகளில் திறந்து விடப்படுகிறது. இதனால் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது நடவு செய்யப்பட்டுள்ள குறுவை நெற்பயிர் பாதிக்கப்பட்டு உள்ளது.

இது தவிர தோட்டக்கலைப் பயிர்களான வாழை, மிளகாய், வெண்டை உள்ளிட்ட பல்வேறு பயிர்களும் நீரில் மூழ்கி பாதிப்பு அடைந்துள்ளன. இந்நிலையில் தஞ்சை அடுத்த கோவிந்தநாட்டுச்சேரி கிராமத்தில் வெள்ளத்தால் சூழ்ந்து மூழ்கி உள்ள வாழை, மிளகாய் பயிர்களை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவுறுத்தலின்படி மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் கலைச்செல்வன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


நீரில் மூழ்கிய பயிர்களின் விவரங்களை விவசாயிகளிடம் கேட்டு அறிந்தார். தொடர்ந்து அவர் பல்வேறு இடங்களில் பாதிக்கப்பட்ட தோட்டக்கலைப் பயிர்களை ஆய்வு செய்து வருகிறார். அப்போது அவர் கூறும் போது: வெள்ளப்பெருக்கு குறைந்த உடன் பயிர்களை சூழ்ந்துள்ள வெள்ளம் வடிந்து விடும். அதன் பிறகு தோட்டக்கலை பயிர்களின் சேத விவரங்கள் கணக்கெடுக்கப்படும். அதனை அறிக்கையாக தயார் செய்து மாவட்ட கலெக்டரிடம் கொடுக்கப்படும். பின்னர் சேத விவரங்கள் கலெக்டர் மூலம் சென்னையில் உள்ள தோட்டக்கலை இயக்குனருக்கு அனுப்பப்படும் என்றார்.


கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கால் தோட்டக்கலைப்பயிர்களை நீர் சூழ்ந்து பாதிப்பு - அதிகாரி நேரில் ஆய்வு

இந்த ஆய்வின் போது பாபநாசம் தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் பரிமேலழகன், துணை தோட்டக்கலை அலுவலர் ரவி, உதவி தோட்டக்கலை துறை அலுவலர்கள் காந்தி, வரதராஜன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

தஞ்சை மாவட்டத்தில் மா, வாழை, தக்காளி, வெண்டை, கத்தரி, முள்ளங்கி, கொடிகாய்கறிகள், மரவள்ளி, மஞ்சள், ரோஜா, மல்லிகை, சாமந்தி, வெற்றிலை போன்ற தோட்டக்கலைப் பயிர்கள் முக்கிய பயிர்களாகும். உற்பத்தி, உற்பத்தித்திறன் மற்றும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க, தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை மூலமாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. விவசாயிகளிடையே உயர் உற்பத்தி தொழில் நுட்பங்களை பயன்படுத்தி சாகுபடி செய்ய பசுமைக்குடில், நிழல்வலைக்கூடாரம், நிலப்போர்வை, அதிக மகசூல் தரக்கூடிய காய்கறி குழித்தட்டு நாற்றுகள் மற்றும் பழக்கன்றுகள் வழங்கி திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்தான் மேட்டூரில் இருந்து திறக்கப்பட்ட அதிகளவு தண்ணீரால் தோட்டக்கலைப்பயிர்களை தண்ணீர் சூழ்ந்தது. தற்போதைய நிலையில் தண்ணீர் வடிந்தவுடன் பாதித்த பயிர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை அதிகாரிகள் தெரிவிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget