மேலும் அறிய

திருவாரூரில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை - இடி தாக்கி விவசாய தொழிலாளி உயிரிழப்பு

’’இடி தாக்கி உயிரிழந்த குமாரின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணத்தை வழங்க தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை’’

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. தென் மாவட்டங்கள், மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனவும், சென்னையை பொருத்தவரை நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும், வருகிற 23-ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்றும் நாளையும் குமரிக்கடல் மன்னார்வளைகுடா உள்ளிட்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

திருவாரூரில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை - இடி தாக்கி விவசாய தொழிலாளி உயிரிழப்பு
 
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. திருவாரூர், மன்னார்குடி, கூத்தாநல்லூர், கொரடாச்சேரி, நீடாமங்கலம், உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது. மேலும் கனமழையால் திருவாரூர் ரயில்வே கீழ் பாலம் முழுவதுமாக மழைநீர் வடியாமல் தேங்கியிருந்தது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் இரண்டு அடி அளவு மழை நீரில் கஷ்டப்பட்டு தங்களது வாகனத்தை ஓட்டிச் சென்றனர். உடனடியாக திருவாரூர் நகராட்சி நிர்வாகம் மழை நீரை வடிய வைக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர். இந்த கனமழையின் காரணமாக சம்பா சாகுபடி பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து மழை பெய்தால் பயிர்கள் பாதிக்கப்படும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மேலும் குறுவை அறுவடை பணிகள் தற்பொழுது நடைபெற்று வருவதால் அறுவடைக்கு தயாராக இருந்த நெல்மணிகள் மழை நீரில் மூழ்கி முழுவதுமாக பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது, இதனால் திருவாரூர் மாவட்ட விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.

திருவாரூரில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை - இடி தாக்கி விவசாய தொழிலாளி உயிரிழப்பு
 
இந்த நிலையில் மன்னார்குடி அருகே பாலையூர் என்ற இடத்தில் வயலில் நடவு பணி நடைபெற்று வந்துள்ளது. அப்பொழுது கடுமையான இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்த காரணத்தினால் வயலில் வேலை செய்து கொண்டிருந்த குமார் என்கிற விவசாய தொழிலாளி இடி தாக்கி  கீழே விழுந்தார். உடனடியாக அருகில் இருந்த சக விவசாய கூலித் தொழிலாளர்கள் அவரை மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்த மருத்துவர்கள் அவரை சோதனை செய்த பின்னர் அவர் உயிரிழந்து விட்டார் என தகவல் தெரிவித்தனர். இதனால் அவருடன் வேலை பார்த்த சக தொழிலாளர்களும் அவரது குடும்பத்தினரும் மிகுந்த வேதனை அடைந்தனர். உயிரிழந்த விவசாய கூலி தொழிலாளிக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

புதிய வரலாறு: தஞ்சாவூர் மாநகராட்சிக்கு முதன்முறையாக பெண் ஐஏஎஸ் ஆணையர் நியமனம்
புதிய வரலாறு: தஞ்சாவூர் மாநகராட்சிக்கு முதன்முறையாக பெண் ஐஏஎஸ் ஆணையர் நியமனம்
டாக் ஆப் தி சிட்டி' ஆன லஞ்ச ஒழிப்பு சோதனை: வல்லத்தில் சிக்கிய கணக்கில் வராத பணம்
டாக் ஆப் தி சிட்டி' ஆன லஞ்ச ஒழிப்பு சோதனை: வல்லத்தில் சிக்கிய கணக்கில் வராத பணம்
கும்பகோணம் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இன்று முதல் கலந்தாய்வு தொடக்கம்: விரிவான கால அட்டவணை வெளியீடு
கும்பகோணம் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இன்று முதல் கலந்தாய்வு தொடக்கம்: விரிவான கால அட்டவணை வெளியீடு
திருச்சி - கரூர் நெடுஞ்சாலை விரிவாக்கம்: விபத்துகளைக் குறைக்க நில எல்லைகளைக் கண்டறியும் பணி தீவிரம்!
திருச்சி - கரூர் நெடுஞ்சாலை விரிவாக்கம்: விபத்துகளைக் குறைக்க நில எல்லைகளைக் கண்டறியும் பணி தீவிரம்!

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக
Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
TVK Vijay: தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? பாமக கூட்டத்தில் தவெக பேச்சு
தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? PMK கூட்டத்தில் TVK பேச்சு
Sathyaraj: கட்டப்பா கண்ணீர் வடிக்கலாமா? சத்யராஜை கலாய்த்து தள்ளும் தவெக பாய்ஸ் - இணையத்தில் இதான் ட்ரெண்ட்
Sathyaraj: கட்டப்பா கண்ணீர் வடிக்கலாமா? சத்யராஜை கலாய்த்து தள்ளும் தவெக பாய்ஸ் - இணையத்தில் இதான் ட்ரெண்ட்
இந்தியா கூட்டணி சிதறிவிடக் கூடாது; திமுக பங்கேற்காதது வருத்தமளிக்கிறது: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
இந்தியா கூட்டணி சிதறிவிடக் கூடாது; திமுக பங்கேற்காதது வருத்தமளிக்கிறது: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
வாவ்.. வாட் எ லுக்.. ஸ்டைலும், கம்பீரமும் சேர்ந்த Royal Enfield Shortgun 650! விலை எவ்ளோ?
வாவ்.. வாட் எ லுக்.. ஸ்டைலும், கம்பீரமும் சேர்ந்த Royal Enfield Shortgun 650! விலை எவ்ளோ?
Annamalai: தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
RBI வட்டி விகித அறிவிப்பு இன்று: ரெப்போ ரேட் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு!..
RBI வட்டி விகித அறிவிப்பு இன்று: ரெப்போ ரேட் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு!..
Embed widget