மேலும் அறிய

“ஐம்பொன் சிலைகளை அரசிடம் ஒப்படைக்க மக்கள் தயாராக இல்லை” - எச்.ராஜா

திருட்டு திராவிட மாடல் அரசை நம்பி சீர்காழி சட்டநாதர் கோயிலில் கிடைக்க பெற்ற ஐம்பொன் சிலைகள் மற்றும் செப்பேடுகள்  ஒப்படைக்க மக்கள் தயாராக இல்லை என எச் ராஜா சீர்காழியில் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டநாதர் கோயிலில் கடந்த 16ஆம் தேதி கும்பாபிஷேக பணிகளுக்கு யாகசாலை அமைக்க குழி தோண்டிய போது 22 ஐம்பொன் சிலைகள் 462 தேவார செப்பேடுகள் மற்றும் பூஜை பொருட்கள் கண்டெடுப்பட்டது. இவை அனைத்தும் இரண்டடுக்கு போலீசார் பாதுகாப்புடன்  கோயில் சன்னதியில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது. இதனை இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு செல்வதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மீட்கப்பட்ட சிலைகள் மற்றும் செப்பேடுகளை பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா இன்று நேரில் பார்வையிட்டார்.


“ஐம்பொன் சிலைகளை அரசிடம் ஒப்படைக்க மக்கள் தயாராக இல்லை”  - எச்.ராஜா

அதனைத் தொடர்ந்து சிலைகள் மீட்கப்பட்ட நந்தவனப் பகுதியை பார்வையிட்ட அவர் சிலைகளின் தன்மை குறித்து கோயில் நிர்வாகத்தினரிடம் கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எச்.ராஜா கூறியதாவது: சீர்காழி நகர் முழுவதுமே சிலைகளை கோயிலில் வைத்து பாதுகாக்கப்பட வேண்டும் என சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதை பார்த்தேன். இது ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கையாக உள்ளது. தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான கோயில் வளாகத்திற்கு உள்ளேயே சிலைகள் மீட்கப்பட்டுள்ளதால் அந்த சிலைகளை இங்குள்ள கோயில் வளாகத்திலேயே அருங்காட்சியகம் அமைத்து பராமரிக்க வேண்டும். அதற்கான பாதுகாப்பு வசதிகளை இங்கேயே ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார். 

12 Hours Work: 12 மணி நேர வேலை மசோதாவை எதிர்த்து கிளம்பிய எதிர்ப்பு..தொழிலாளர் சங்கத்தில் போராட்டம் அறிவிப்பு!


“ஐம்பொன் சிலைகளை அரசிடம் ஒப்படைக்க மக்கள் தயாராக இல்லை”  - எச்.ராஜா

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சிலை பாதுகாப்பகத்தில் வைக்கப்படும் சிலைகளே அவ்வப்பொழுது மாறிவிடுவதாக பரவலான குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இதனால் பழமை வாய்ந்த சிலைகளை பாதுகாக்க திராவிட மாடல் அரசினை நம்புவதற்கு இப்பகுதி மக்கள் தயாராக இல்லை என தெரிவித்தார். இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பல கோடி ரூபாய்கள் நிதி முறைகேடு நடைபெற்று வருவதாக குற்றம் சாட்டினார்.

Wrestlers Protest: பாலியல் தொல்லை.. 3 மாதங்களாக FIR பதிவு செய்யாத போலீசார்.. போராட்டத்தில் குதித்த வீராங்கனைகள்..!


“ஐம்பொன் சிலைகளை அரசிடம் ஒப்படைக்க மக்கள் தயாராக இல்லை”  - எச்.ராஜா

குறிப்பாக சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 421.9 கோடி ரூபாய் வரை களவாடப் பட்டிருப்பதாக குற்றம் சாட்டினார். இதுபோல் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ள சூழலில் ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் கண்டெடுக்கப்பட்ட விக்கிரகங்கள் அனைத்தும் இங்கேயே வைத்து பராமரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். அரசின் பாதுகாப்பில் உள்ள சிலை பாதுகாப்பதில் 300 சிலைகள் போலியாக உருவாக்கப்பட்டுள்ளதாக ஐ.ஜி பொன்மாணிக்கவேல் தெரிவித்துள்ளார். எனவே இங்குள்ள சிலைகள் அனைத்தும் ஆதினத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இங்கேயே பராமரிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Naan Mudhalvan: நான் முதல்வன்; அனைத்து அரசுப் பள்ளிகளிலும் உயர்கல்வி ஆலோசனைக் குழு- விவரம்


“ஐம்பொன் சிலைகளை அரசிடம் ஒப்படைக்க மக்கள் தயாராக இல்லை”  - எச்.ராஜா

கர்நாடக தேர்தலை பொருத்தவரைக்கும் அதிமுகவின் கூட்டணி என்பது தமிழகத்தில் தொடர்கிறது. மற்ற மாநிலங்களை பொறுத்தவரை அவர்கள் தனியாக வேட்பாளர்களை நிறுத்தி வருகின்றனர். அதேபோல்தான் தற்போதைய தேர்தலிலும் அவர்கள் தனியாக வேட்பாளர்களை நியமித்துள்ளனர் இதில் எந்த பிரச்சனையும் இல்லை தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக உள்ளது எனவும் தெரிவித்தார்.

TN Corona Spike:சற்று குறைந்த கொரோனா பாதிப்பு: தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களின் நிலை என்ன?

மேலும் பல சுவாரஸ்யமான செய்திகளை காண :

Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget