மேலும் அறிய

தஞ்சையில் அரசு பள்ளி சத்துணவு கூடத்தில் தீவிபத்து - உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்ப்பு

சிலிண்டர் டியூப்பில் கசிவு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் சிலிண்டர் டியூபில் தீ பிடித்து எரிய தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த சமையலர் உடனடியாக தலைமை ஆசிரியரிடம் தகவல் தெரிவித்தார்.

தஞ்சை அருகே உள்ள மருங்குளத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ளது. இப்பள்ளியில் சுமார்  700 க்கும் மேற்ப்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். காலை வழக்கம் போல் பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வந்து வகுப்பறையில் பாடங்களை கவனித்து கொண்டிருந்தனர். பள்ளியின் வளாகத்தில் சத்துணவு மாணவர்களுக்கு மதிய உணவு சமையல்கூடத்தில் தயாராகி கொண்டிருந்தது. இந்த பணியில் சமையலர், உதவியாளர் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.அப்போது திடீரென சிலிண்டர் டியூப்பில் கசிவு ஏற்பட்டது.  ஸ்டவில் இருந்து தீ, சிறிது நேரத்தில்  சிலிண்டர் டியூபில் தீ பிடித்து எரிய தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த சமையலர் உடனடியாக பள்ளி தலைமை ஆசிரியரிடம் தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து தீ அணைப்பான் கருவி கொண்டு உடனடியாக தீ அணைக்கப்பட்டு மற்ற இடங்களுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. பள்ளிக்குள் தீவிபத்து என்ற தகவல் பரவியதயடுத்து, மாணவர்களின் பெற்றோர்கள், பொது மக்கள் பள்ளிக்கு முன் திரண்டனர்.  இதில் அதிஷ்டவசமாக எந்த விதமான விபத்தின்றி மாணவர்கள்  உயிர் பிழைத்தனர்.இருப்பினும் தகவல் அறிந்து வந்த தஞ்சை தீயணைப்பு துறையினர் சிலிண்டரை அகற்றி வேறு சிலிண்டர் பொருத்தினர். இதனால் பெருமளவில் தீ விபத்து தடுக்கப்பட்டு உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.  இந்த சம்பவம் பள்ளியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தஞ்சையில் அரசு பள்ளி சத்துணவு கூடத்தில் தீவிபத்து - உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்ப்பு

இது குறித்து பொது மக்கள் கூறுகையில்,இப்பள்ளியில், ஏழை விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள் படித்து வருகின்றனர்.. இங்கு சுமார் 25 க்கும் மேற்பட்ட மாணவர்கள் சத்துணவு சாப்பிட்டு வருகின்றனர். சமையலுக்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் கேஸின் டீயூப் போடப்பட்டு பல நாட்கள் ஆனதால், பல இடங்களில் விரிசல் விட்டிருந்தது. ஆபத்தான நிலையில் இருக்கும் சிலிண்டரின் டீயூப் குறித்து பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார். ஆனாலும் எந்த பிரச்சனையும் வராது என பள்ளி நிர்வாகத்தினர் இருந்து விட்டனர். சமைக்கும் போது, உணவில் சேர்க்கப்படும் எண்ணை டீயூப்பில் ஒட்டியிருந்ததால், கேஸில் கசிவு ஏற்பட்டு, அதில் ஒட்டியிருந்த எண்ணையில் தீப்பிடித்துள்ளது. சிலிண்டர் வெடித்திருந்தால், அருகிலுள்ள பள்ளி வகுப்பறைகளில் படித்து கொண்டிருந்த மாணவர்களின் நிலை கேள்வி குறியாகியிருக்கும்.

தஞ்சையில் அரசு பள்ளி சத்துணவு கூடத்தில் தீவிபத்து - உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்ப்பு

சமைக்கும் போது தீப்பிடித்ததால், உடனடியாக தீயணைக்கும் கருவியை கொண்டு அணைத்து விட்டனர். பள்ளி மாணவர்கள்  இருந்திருந்தால், பெரும் உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும்.கடந்த 2004 ஆம் ஆண்டு கும்பகோணம் ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில், சத்துணவு கூடத்தில் ஏற்பட்ட தீவிபத்தினால், 94 பள்ளி குழந்தைகள் தீயில் கருகி இறந்தனர். 18 குழந்தைகள் தீக்காயங்களுடன் உயிர் பிழைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சத்துணவு கூடத்தில் பயன்படுத்தப்படும் சிலிண்டர்களின் தரம் குறித்தும், அடுப்பு, டீயூப் தரமானவைகளாக பயன்படுத்த வேண்டும், வாரந்தோறும் மட்டுமில்லாமல், சமைக்க தொடங்கும் போது, டீயூப்,சிலிண்டர்கள் சரியாக இயங்குகிறதா, கேஸ் மணம் வருகிறதா என ஆய்வு செய்திருந்தால், இது போன்ற விபரீதம் நடந்திருக்காது.எனவே, மாவட்ட நிர்வாகம், கேஸ் சிலிண்டர், அடுப்பு, டீயூப்புக்களை தினந்தோறும் பராமரித்து, கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என்றனர்.

தலைப்பு செய்திகள்

Thanjavur power cut 14.07.2026:
Thanjavur power cut 14.07.2026: "திங்கட்கிழமை சார்ஜிங் திருவிழாங்கோ...... செவ்வாய்க்கிழமை தஞ்சையில் கரண்ட் லீவ்!"
மழை பெய்த நேரத்தில் அமைச்சர் மேற்கொண்ட அதிரடி திடீர் ஆய்வுக்கு வரவேற்பு
மழை பெய்த நேரத்தில் அமைச்சர் மேற்கொண்ட அதிரடி திடீர் ஆய்வுக்கு வரவேற்பு
செல்வ வளம் அருளும் செல்வ ராஜகணபதி... சம்வஸ்ராபிஷேக விழாவில் பக்தர்கள் திரளாக பங்கேற்பு!
செல்வ வளம் அருளும் செல்வ ராஜகணபதி... சம்வஸ்ராபிஷேக விழாவில் பக்தர்கள் திரளாக பங்கேற்பு!
வெயிலுக்கு 'பிரேக்' போட்ட மழை... குளிர்ந்த காற்றில் ஹேப்பி மோடில் தஞ்சாவூர் மக்கள்!
வெயிலுக்கு 'பிரேக்' போட்ட மழை... குளிர்ந்த காற்றில் ஹேப்பி மோடில் தஞ்சாவூர் மக்கள்!

வீடியோ

TVK on Senthil Balaji : ”MR. மெகா க்ளீன்! ஓடி ஒளிஞ்சா எப்படி?” செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
Tamilnadu Byelection : ”இடைத்தேர்தல் நடத்த கூடாது” செக் வைத்த நீதிமன்றம்! 5 தொகுதிகள் நிலைமை என்ன?
Senthil balaji on Vijay : ”ஓடு... ஓடு... ஓடு! காப்பாத்துனது யாரு விஜய்” கோபமான செந்தில் பாலாஜி
DMK vs BJP : “யாரு பெருசுன்னு அடிச்சுக்காட்டு
Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Minister: அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
S Janaki Funeral: பாடகி எஸ். ஜானகியின் இறுதி சடங்குகள் - எங்கு? எப்போது? அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் என அறிவிப்பு
பாடகி எஸ். ஜானகியின் இறுதி சடங்குகள் - எங்கு? எப்போது? அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் என அறிவிப்பு
MBBS Seats: 5 ஆண்டுகளில் முதல்முறை..! திருவள்ளூருக்கு ஜாக்பாட் அடிக்குமா? கூடுதல் மருத்துவ இடங்கள் கிடைக்குமா?
5 ஆண்டுகளில் முதல்முறை..! திருவள்ளூருக்கு ஜாக்பாட் அடிக்குமா? கூடுதல் மருத்துவ இடங்கள் கிடைக்குமா?
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை, வெயில் பொளக்கும்? - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை, வெயில் பொளக்கும்? - தமிழக வானிலை அறிக்கை
TVK Vijay: அடக்கி வாசித்தால் திமுகவுக்கு நல்லது.. எச்சரிக்கை விடுத்த தவெக ஐடி விங்.. நடந்தது என்ன?
TVK Vijay: அடக்கி வாசித்தால் திமுகவுக்கு நல்லது.. எச்சரிக்கை விடுத்த தவெக ஐடி விங்.. நடந்தது என்ன?
Tata Tiago: பட்ஜெட்டில் பாதுகாப்பான EV கார் - 285KM ரேஞ்ச், 4 ஸ்டார் ரேட்டிங் - ரூ.4500 போதும், EMI விவரங்கள்
பட்ஜெட்டில் பாதுகாப்பான EV கார் - 285KM ரேஞ்ச், 4 ஸ்டார் ரேட்டிங் - ரூ.4500 போதும், EMI விவரங்கள்
TNEB : மின் இணைப்பை துண்டித்த பிறகும் மின்சாரத்தை பயன்படுத்தினால் இனி அவ்வளவு தான்- எச்சரிக்கும் மின் வாரியம்
மின் இணைப்பை துண்டித்த பிறகும் மின்சாரத்தை பயன்படுத்தினால் இனி அவ்வளவு தான்- எச்சரிக்கும் மின் வாரியம்
அசைவ பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி.. ஒரு வாரம் சிக்கன் விற்பனை நிறுத்தம்.. எப்போ தெரியுமா?
அசைவ பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி.. ஒரு வாரம் சிக்கன் விற்பனை நிறுத்தம்.. எப்போ தெரியுமா?
Embed widget