மேலும் அறிய

கூடுதல் அரசு நெல் கொள்முதல் நிலையம்: திருவாரூர் விவசாயிகள் கோரிக்கை!

நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.பணம் பெறும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்,

திருவாரூர் மாவட்டத்தில் கூடுதல் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க விவசாயிகள் வலியுறுத்தல்.
 
காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, புதுக்கோட்டை, உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி, என 3 போகம் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக மேட்டூர் அணை திறக்கப்படாத காரணத்தினால், குறுவை மற்றும் தாளடி சாகுபடி பணிகளை விவசாயிகள் மேற்கொள்ளவில்லை. மேலும் ஒருபோக சாகுபடி ஆன சம்பா சாகுபடி பணிகளை மற்றும் விவசாயிகள் செய்து வந்தனர். இந்நிலையில் இந்த ஆண்டு மேட்டூர் அணை ஜூன் 12ஆம் தேதி உரிய நேரத்தில் திறக்கப்பட்டதன் காரணத்தினால் பல ஆண்டுகளுக்குப் பிறகு குறுவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
 
திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு ஒரு லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி பணிகள் நடைபெறும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அதே நேரத்தில் தமிழ்நாடு அரசு நிர்ணயித்த இலக்கை விட, திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு ஒரு லட்சத்து 36 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி நடைபெற்று வருகிறது. இது எந்த ஆண்டிலும் இல்லாத அளவில் இந்த ஆண்டு அதிகபட்சமாக குறுவை சாகுபடி பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் 70 சதவிகிதம் விவசாயிகள் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரை நம்பி விவசாயப் பணிகளில் ஈடுபட்டு உள்ளார்கள். மேலும் 30 சதவீத விவசாயிகள் ஆழ்துளை கிணறுகளை நம்பி விவசாயப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

கூடுதல் அரசு நெல் கொள்முதல் நிலையம்: திருவாரூர் விவசாயிகள் கோரிக்கை!
தற்பொழுது குறுவை அறுவடை பணிகள் தொடங்கியுள்ளன. ஆள்துளை கிணறு மூலமாக சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்களது குறுவை நெல் பயிர்களை அறுவடை இயந்திரம் மூலம் அறுவடை செய்து வருகின்றனர். மேலும் ஒரு சில தினங்களில் மேட்டூர் அணையை நம்பி சாகுபடி பணியில் ஈடுபட்ட விவசாயிகள் தங்களது குறுவை நெல் பயிர்களை அறுவடை பணிகளை தொடங்க உள்ள இருக்கிறார்கள். அதே நேரத்தில் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், மன்னார்குடி, நன்னிலம், குடவாசல், நீடாமங்கலம், உள்ளிட்ட பகுதிகளில் 69 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. ஆனால் விவசாயிகளுக்கு கூடுதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். 

கூடுதல் அரசு நெல் கொள்முதல் நிலையம்: திருவாரூர் விவசாயிகள் கோரிக்கை!
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை பாதுகாப்பாக வைக்க முடியவில்லை. ஆகையால் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அதிகமாக திறக்கப்பட்டு விவசாயிகளின் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும். மேலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். விவசாயிகளிடமிருந்து பணம் பெறும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், விவசாயிகளிடமிருந்து கையூட்டு பெறாமல் விவசாயிகளின் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை விவசாயிகள் தமிழ்நாடு அரசுக்கு வைத்துள்ளனர்.
 
 
 

தலைப்பு செய்திகள்

தஞ்சையில் இஞ்சி விலை கிடுகிடு உயர்வு! வரத்து குறைந்ததால் உச்சம்: இல்லத்தரசிகள் அதிர்ச்சி
தஞ்சையில் இஞ்சி விலை கிடுகிடு உயர்வு! வரத்து குறைந்ததால் உச்சம்: இல்லத்தரசிகள் அதிர்ச்சி
ரேஷன் அரிசி கடத்தினால் கைது மட்டும் இல்லை... குண்டர் சட்டமும் பாயும்!
ரேஷன் அரிசி கடத்தினால் கைது மட்டும் இல்லை... குண்டர் சட்டமும் பாயும்!
பயமுறுத்தும் பட்டுப்போன மரம்... பள்ளி மாணவர்களுக்கு அபாயம்: வெட்டி அகற்ற வலியுறுத்தல்
பயமுறுத்தும் பட்டுப்போன மரம்... பள்ளி மாணவர்களுக்கு அபாயம்: வெட்டி அகற்ற வலியுறுத்தல்
சாலையை இரண்டாகப் பிரிக்கும் பள்ளம்! சித்திரக்குடி – ஆலக்குடி சாலையில் விபத்து அபாயம்
சாலையை இரண்டாகப் பிரிக்கும் பள்ளம்! சித்திரக்குடி – ஆலக்குடி சாலையில் விபத்து அபாயம்

வீடியோ

Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்
ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thai Maman Thanga Mothiram : குழந்தைகளுக்கு தங்க மோதிரம் ரெடி.? 4.41 லட்சம் ஒரு கிராம் மோதிரத்திற்கு டெண்டர்- அசத்தும் விஜய் அரசு
குழந்தைகளுக்கு தங்க மோதிரம் ரெடி.? 4.41 லட்சம் ஒரு கிராம் மோதிரத்திற்கு டெண்டர்- அசத்தும் விஜய் அரசு
IND Vs ENG ODI: தொடமுடியாமல் நிற்கும் ட்ராவிட் சாதனை - இங்கிலாந்தில் ரோகித், கோலி சாதிப்பார்களா? இன்று முதல் ODI
தொடமுடியாமல் நிற்கும் ட்ராவிட் சாதனை - இங்கிலாந்தில் ரோகித், கோலி சாதிப்பார்களா? இன்று முதல் ODI
BJP: மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
ARUN IPS: தூக்கி அடிக்கப்பட்ட அருண் ஐபிஎஸ் - 2 மாதங்களில், இவ்ளோ காரணங்கள் இருக்கா? யார் இந்த மகேஷ்வரி?
தூக்கி அடிக்கப்பட்ட அருண் ஐபிஎஸ் - 2 மாதங்களில், இவ்ளோ காரணங்கள் இருக்கா? யார் இந்த மகேஷ்வரி?
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று வெயில் கொளுத்தும்? மழை? தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று வெயில் கொளுத்தும்? மழை? தமிழக வானிலை அறிக்கை
Carens Clavis EV: 490KM ரேஞ்ச் கொடுக்கும் மின்சார காருக்கு ரூ.1.8 லட்சம் தள்ளுபடி - விலை, அம்சங்கள், வசதிகள்
490KM ரேஞ்ச் கொடுக்கும் மின்சார காருக்கு ரூ.1.8 லட்சம் தள்ளுபடி - விலை, அம்சங்கள், வசதிகள்
Gold and silver rate today : ரூ.5000 குறைந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு குஷி- இன்றைய விலை நிலவரம் இதோ...
ரூ.5000 குறைந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு குஷி- இன்றைய விலை நிலவரம் இதோ...
Layola Mani : ‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர் – தனி மனித தாக்குதல்..?
‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர்..!
Embed widget