மேலும் அறிய

கூடுதல் அரசு நெல் கொள்முதல் நிலையம்: திருவாரூர் விவசாயிகள் கோரிக்கை!

நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.பணம் பெறும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்,

திருவாரூர் மாவட்டத்தில் கூடுதல் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க விவசாயிகள் வலியுறுத்தல்.
 
காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, புதுக்கோட்டை, உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி, என 3 போகம் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக மேட்டூர் அணை திறக்கப்படாத காரணத்தினால், குறுவை மற்றும் தாளடி சாகுபடி பணிகளை விவசாயிகள் மேற்கொள்ளவில்லை. மேலும் ஒருபோக சாகுபடி ஆன சம்பா சாகுபடி பணிகளை மற்றும் விவசாயிகள் செய்து வந்தனர். இந்நிலையில் இந்த ஆண்டு மேட்டூர் அணை ஜூன் 12ஆம் தேதி உரிய நேரத்தில் திறக்கப்பட்டதன் காரணத்தினால் பல ஆண்டுகளுக்குப் பிறகு குறுவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
 
திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு ஒரு லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி பணிகள் நடைபெறும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அதே நேரத்தில் தமிழ்நாடு அரசு நிர்ணயித்த இலக்கை விட, திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு ஒரு லட்சத்து 36 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி நடைபெற்று வருகிறது. இது எந்த ஆண்டிலும் இல்லாத அளவில் இந்த ஆண்டு அதிகபட்சமாக குறுவை சாகுபடி பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் 70 சதவிகிதம் விவசாயிகள் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரை நம்பி விவசாயப் பணிகளில் ஈடுபட்டு உள்ளார்கள். மேலும் 30 சதவீத விவசாயிகள் ஆழ்துளை கிணறுகளை நம்பி விவசாயப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

கூடுதல் அரசு நெல் கொள்முதல் நிலையம்: திருவாரூர் விவசாயிகள் கோரிக்கை!
தற்பொழுது குறுவை அறுவடை பணிகள் தொடங்கியுள்ளன. ஆள்துளை கிணறு மூலமாக சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்களது குறுவை நெல் பயிர்களை அறுவடை இயந்திரம் மூலம் அறுவடை செய்து வருகின்றனர். மேலும் ஒரு சில தினங்களில் மேட்டூர் அணையை நம்பி சாகுபடி பணியில் ஈடுபட்ட விவசாயிகள் தங்களது குறுவை நெல் பயிர்களை அறுவடை பணிகளை தொடங்க உள்ள இருக்கிறார்கள். அதே நேரத்தில் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், மன்னார்குடி, நன்னிலம், குடவாசல், நீடாமங்கலம், உள்ளிட்ட பகுதிகளில் 69 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. ஆனால் விவசாயிகளுக்கு கூடுதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். 

கூடுதல் அரசு நெல் கொள்முதல் நிலையம்: திருவாரூர் விவசாயிகள் கோரிக்கை!
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை பாதுகாப்பாக வைக்க முடியவில்லை. ஆகையால் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அதிகமாக திறக்கப்பட்டு விவசாயிகளின் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும். மேலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். விவசாயிகளிடமிருந்து பணம் பெறும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், விவசாயிகளிடமிருந்து கையூட்டு பெறாமல் விவசாயிகளின் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை விவசாயிகள் தமிழ்நாடு அரசுக்கு வைத்துள்ளனர்.
 
 
 

தலைப்பு செய்திகள்

பாதிக்கு பாதி... மதியம் டப்... மாலையில காற்றுல ஜில்: இன்னைக்கு மழை பெய்யுமா தஞ்சாவூருல!!!
பாதிக்கு பாதி... மதியம் டப்... மாலையில காற்றுல ஜில்: இன்னைக்கு மழை பெய்யுமா தஞ்சாவூருல!!!
தஞ்சையை பரபரப்பாக்கிய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய அதிரடி ரெய்டு 
தஞ்சையை பரபரப்பாக்கிய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய அதிரடி ரெய்டு 
கேங்மேன் தொழிலாளர்களுக்கு பதவி உயர்வு எப்போது? தஞ்சையில் ஆர்ப்பாட்டம்
கேங்மேன் தொழிலாளர்களுக்கு பதவி உயர்வு எப்போது? தஞ்சையில் ஆர்ப்பாட்டம்
புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டம்... எதிர்ப்பு தெரிவிக்கும் ஓய்வூதியர்கள்: காரணம் என்ன?
புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டம்... எதிர்ப்பு தெரிவிக்கும் ஓய்வூதியர்கள்: காரணம் என்ன?

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
Senthil Balaji : ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
Innova Crysta: பெருசு, சொகுசு… ரூ.6 லட்சம் முன்பணம் போதும்; இன்னோவா கிரிஸ்டாவை ஈஸியா EMI-ல் வாங்கலாம்- இதோ பிளான்
Innova Crysta: பெருசு, சொகுசு… ரூ.6 லட்சம் முன்பணம் போதும்; இன்னோவா கிரிஸ்டாவை ஈஸியா EMI-ல் வாங்கலாம்- இதோ பிளான்
கர்நாடகா செல்லும் சிஎம் விஜய்.! அதே தேதியில் களத்தில் இறங்கும் திமுக- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
கர்நாடகா செல்லும் சிஎம் விஜய்.! அதே தேதியில் களத்தில் இறங்கும் திமுக- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
Pension : மாத ஓய்வூதிய திட்டம்.! அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஜாக்பாட்- வெளியான ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு
மாத ஓய்வூதிய திட்டம்.! அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஜாக்பாட்- வெளியான ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு
Ajinkya Rahane: 36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
Tata Harrier: டாடாவின் பாதுகாப்பான SUV யாருக்கு செட் ஆகாது? அப்படி என்ன குறை இருக்கு? மாற்று ஆப்ஷன்கள்?
டாடாவின் பாதுகாப்பான SUV யாருக்கு செட் ஆகாது? ஹாரியரில் என்ன குறை இருக்கு? மாற்று ஆப்ஷன்கள்
Ramayana Trailer: ரூ.4,000 கோடி ப்ராஜெக்ட் - ராமாயணா திரைப்பட ட்ரெய்லர் எப்படி இருக்கு? சீரியல் & கார்டூனா?
ரூ.4,000 கோடி ப்ராஜெக்ட் - ராமாயணா திரைப்பட ட்ரெய்லர் எப்படி இருக்கு? சீரியல் & கார்டூனா?
Embed widget