மேலும் அறிய

தஞ்சையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இடிக்கப்படும் மாலை நேர காய்கறி அங்காடி - காய்கறி வியாபாரிகள் சாலை மறியல்

’’மாநகராட்சி அலுவலர்கள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வந்து திடீரென கடையில் உள்ள பொருட்களை உடனடியாக எடுத்துச் செல்லுங்கள், நாங்கள் இடிக்க வந்துள்ளதாக கூறியதாக புகார்’’

தஞ்சை காவிரி சிறப்பங்காடி அருகில் உள்ள மாலை நேர அம்மா காய்கறி அங்காடி சுமார் 60 ஆண்டுகளாக இயங்கி வருகின்றது. இங்கு சுமார் 50 க்கும் மேற்பட்ட மிகவும் ஏழ்மையில் உள்ளவர்கள் மாலை நேரத்தில் காய்கறிகளை விற்பனை செய்து வருவார்கள். இதனால் மாலை நேரத்தில் அனைத்து வகை காய்கறிகளும், கீரை வகைகள் உள்ளிட்டவைகள் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை முறையில் காய்கறிகளை விற்பனை செய்வதால், மாலை நேரத்தில் விற்பனை ஜரூராக நடைபெறும். இதற்காக கடைகளுக்கு கடந்த சில மாதங்கள் முன்பு வரை மாநகராட்சி நிர்வாகம்  குறிப்பிட்ட தொகை  வசூலிக்கப்பட்டு, அதற்கான ரசீதும் வழங்கப்பட்டது.


தஞ்சையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இடிக்கப்படும் மாலை நேர காய்கறி அங்காடி -  காய்கறி வியாபாரிகள் சாலை மறியல்

தஞ்சையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றது. அதன் படி தஞ்சை மேலவீதி, வடக்கு வீதி, தெற்கு வீதிகள் உள்ள சாலைகள் அகற்றப்பட்டு, ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி ஈடுபட தொடங்கப்பட்டுள்ளது. மேலும் சாலை ஒரங்களில் உள்ள நீர் நிலைகள் மேல் உள்ள கட்டிடங்கள், கடைகள், வணிக வளாகங்களை இடித்து, மீட்கப்பட்டு வருகின்றது.இந்நிலையில், தஞ்சை பழைய பேருந்து நிலையம் பின்புறம்  காவேரி சிறப்பங்காடி அருகிலுள்ள அம்மா மாலை நேர காய்கறி அங்காடி கடைகளை தஞ்சை மாநகராட்சி அலுவலர்கள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வந்து திடீரென கடையில் உள்ள பொருட்களை உடனடியாக எடுத்துச் செல்லுங்கள், நாங்கள் இடிக்க வந்துள்ளதாக கூறியதால்,  காய்கறி வியாபாரிகள் அனைவரும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


தஞ்சையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இடிக்கப்படும் மாலை நேர காய்கறி அங்காடி -  காய்கறி வியாபாரிகள் சாலை மறியல்

பின்னர், மேற்கு காவல் நிலைய போலீசார்,  பேச்சுவார்த்தை நடத்தி மாநகராட்சி ஆணையரிடம் அழைத்துச் சென்றார்.  வியாபாரிகள் சங்க நிர்வாகிகள்  மார்க்கெட் சங்க தலைவர் வெ.சேவையா தலைமையில்,  ஆணையர்  சரவணகுமாரிடம்,   இப்பகுதியில் திலகர் திடல் தரைக்கடை காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. நாங்கள் அறுபது வருடகாலமாக இப்பகுதிகள் தரைக்கடை வியாபாரம் செய்து வருகிறோம். 2014 ஆம் ஆண்டு  முதல் ஏஐடியூசி மார்க்கெட் சங்கம் உருவாக்கி பல போராட்டங்கள் நடத்தியதால் அப்போதைய நகர மன்றத் தலைவர் கு.சுல்தான் அவர்களும் இடம் ஒதுக்கி கொடுத்து வியாபாரம் செய்ய அனுமதி அளித்துள்ளார். 


தஞ்சையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இடிக்கப்படும் மாலை நேர காய்கறி அங்காடி -  காய்கறி வியாபாரிகள் சாலை மறியல்

கடுமையான இயற்கை மழை ,வெயில் பாதிப்புகளில்  நாங்கள் வியாபாரம் செய்ய கஷ்டப்பட்டு வந்தோம். எங்களது சங்கம் மூலமாக மேற்கூரை, தரைத்தளம், மின் வசதி வேண்டி விண்ணப்பம் அளித்து, அந்த விண்ணப்பத்தின் அடிப்படையில் 2015 ஆம் ஆண்டு தஞ்சை நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த அடிப்படையில் மேற்கூரையும், சிமென்ட் தரைத் தளமும் அமைத்துக் கொடுக்கப்பட்டது. நாங்கள் முறையாக மாநகராட்சிக்கு உரிய வாடகை செலுத்தி வருகிறோம். மாநகராட்சியால் கொரானா காலத்தில்  வசூல் செய்வதில்லை என முடிவெடுத்ததால் வாடகை வசூல் செய்ய யாரும் வரவில்லை.  இன்றைய தினம் மாநகராட்சிக்குரிய வாடகை தரவில்லை என்று கூறியும், இப்பகுதி கடைகள் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது உடனடியாக உங்கள் பொருட்களை எடுத்துச் செல்லுங்கள் நாங்கள் இடிக்கப்போகிறோம் என்று மாநகராட்சி அதிகாரிகள் கூறினார்கள். என்று தங்கள் தரப்பு நியாயங்களை எடுத்துக் கூறினார்கள். மாநகராட்சி ஆணையரும் இது குறித்து  ஆலோசனை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget