மேலும் அறிய

தேர்தல் ஆணையமா? கைப்பாவையா? தஞ்சையில் கடுமையாக விமர்சித்தது யார்?

பாஜக வலையில் சிக்கியுள்ள அவர் தப்ப முடியாது. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.

தஞ்சாவூர்: பாஜகவின், மோடியின், ஆர்.எஸ்.எஸ்.-ன் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் மாறிவிட்டது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் இரா. முத்தரசன் கடுமையாக விமர்சனம் செய்தார். 

தஞ்சாவூர் கீழவாசல் காமராஜர் சிலை அருகே திமுக வேட்பாளர் சண். இராமநாதனை ஆதரித்து நேற்று இரவு பிரசாரம் செய்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் நடைபெறக்கூடிய சட்டப்பேரவைத் தேர்தல் மிகவும் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெற வேண்டும். ஆனால் தற்போது தேர்தல் ஆணையம் தொடர்ந்து எடுத்து வரக்கூடிய நடவடிக்கைகள், தேர்தல் ஜனநாயக முறையில் அமைதியாக நடைபெறுமா என்கிற அச்சத்தையும், கவலையையும் உருவாக்கி இருக்கிறது.

தேர்தல் ஆணையம் என்பது நமது மிக உயர்ந்த, நாட்டை வழிநடத்துகிற சட்டமான அரசியலமைப்பு சட்டத்தால் உருவாக்கப்பட்ட ஒரு தனித்த, சுதந்திரமாக செயல்படக்கூடிய சிறந்த அமைப்பாகும். அந்த அமைப்புதான் தேர்தலை நடத்துகிறது. ஆனால் அந்த அமைப்பு இன்றைக்கு ஒட்டுமொத்தமாக மோடி, பாஜக, ஆர்.எஸ்.எஸ்.-ன் கைப்பாவையாக மாறிவிட்டது என்பது மிகுந்த கவலை அளிக்கிறது.

மோடியின் உத்தரவை செயல்படுத்தக்கூடிய அமைப்பாக மாறிப்போய்விட்டது. அரசியலமைப்பு சட்டப்படி செயல்படக்கூடிய அமைப்பாக இல்லாமல், ஒரு சுதந்திர சுயாட்சி அமைப்பாக இல்லாமல், மோடி, அமித்ஷா என்ன உத்தரவிடுகின்றனரோ, அதை அடிபணிந்து, ஏற்று, நிறைவேற்றுகிற ஒரு அடிமை அமைப்பாக மாறி இருப்பது என்பது நாட்டினுடைய ஜனநாயகத்துக்கு இழைக்கப்பட்டிருக்கிற மிகப்பெரிய அநீதியாகும்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது தேர்தல் பிரசாரத்தில் தொடர்ந்து தரம் தாழ்ந்து பேசுகிறார்.

இந்தத் தேர்தலில் அவர் வெற்றி பெறப்போவதில்லை என்பதால், ஆவேசப்பட்டு சாபமிடுகிற நிலைமைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார். பாஜக வலையில் சிக்கியுள்ள அவர் தப்ப முடியாது. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றி பெறும். திமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூ., தலைமை குழு உறுப்பினர் பிரச்சாரம்

விஜய் தனது தொண்டர்களை வெறும் ரசிகர்களாக மட்டுமே வைத்து, அவர்களை அரசியல் அற்றவர்களாக மாற்றி வைத்துள்ளார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமை குழு உறுப்பினர் வாசுகி தெரிவித்தார்.

தஞ்சாவூர் சிவகங்கை பூங்கா அருகே திமுக வேட்பாளர் சண். இராமநாதனை ஆதரித்து பிரசாரம் செய்த அவர் பேசியதாவது: விஜய் தனது கட்சி உறுப்பினர்களை அரசியல்படுத்துவதற்கான முயற்சி செய்வதாகத் தெரியவில்லை. அக்கட்சி உறுப்பினர்களுக்கு கொள்கை என்ன என்பதே தெரியவில்லை. விஜய் அண்ணன் வெற்றி பெற வேண்டும் என்பதை மட்டுமே சொல்கின்றனர்.

விஜய் எல்லாவற்றையும் விட்டுவிட்டு மக்களுக்காக அரசியலுக்கு வந்துள்ளதாகக் கூறுகிறார். எம்ஜிஆர் உள்பட எல்லோருமே அவரவர் துறையைச் சார்ந்த பதவிகளை விட்டுவிட்டுத்தான் அரசியலுக்கு வந்துள்ளனர். விஜய் மட்டும் வரவில்லை. விஜய் கொள்கைகளைப் பேசாமல் இளைஞர்களை அரசியல்படுத்தாமல், அவர்களை அரசியல் அற்றவர்களாக்கி, வெறும் ரசிகர்களாக மட்டுமே வைத்துள்ளார்.

கரூரில் இவரை பார்க்க வந்த 41 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், மக்களுக்கு ஏதாவதொன்று என்றால், இந்த விஜய் வருவான் என அவர் பேசுகிறார். ஆனால், கரூரில் 41 பேர் உயிரிழந்தபோது, அவர்களுக்கு இருந்து ஆறுதல் சொல்லாமல், அங்கிருந்து பனையூருக்கு ஓடிவிட்டார். இதுபோன்ற அரசியலை மக்கள் நிராகரிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

எங்கள் உயிரை கூட விடுவோம்...மேகதாதுவில் அணை கட்ட விடமாட்டோம்: நலிவுற்ற விவசாயிகள் சங்கம் திட்டவட்டம்
எங்கள் உயிரை கூட விடுவோம்...மேகதாதுவில் அணை கட்ட விடமாட்டோம்: நலிவுற்ற விவசாயிகள் சங்கம் திட்டவட்டம்
தானியங்கள் சேமிப்பில் தகுந்த பாதுகாப்பு முறைகள்: வேளாண் துறை அட்வைஸ்
தானியங்கள் சேமிப்பில் தகுந்த பாதுகாப்பு முறைகள்: வேளாண் துறை அட்வைஸ்
ஜி.எஸ்.டி விலக்கு... பங்குச்சந்தை அபாயமும் இல்லை! தபால் காப்பீடு எடுக்க ஜூன் 25 வரை நல்ல வாய்ப்பு
ஜி.எஸ்.டி விலக்கு... பங்குச்சந்தை அபாயமும் இல்லை! தபால் காப்பீடு எடுக்க ஜூன் 25 வரை நல்ல வாய்ப்பு
பார்க்கிங் ஒழுங்கின்மை: பெரம்பலூர் போக்குவரத்திற்கு பெரும் தலைவலி!
பார்க்கிங் ஒழுங்கின்மை: பெரம்பலூர் போக்குவரத்திற்கு பெரும் தலைவலி!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
TN Govt MoU: அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
Priya vs Pallavi: ’’ஆணவத்திலும் திமிர்லயும் இருக்கீங்க’’ பள்ளி வளாகத்தில் மேயர் பிரியா- எம்எல்ஏ பல்லவி ஷாக் மோதல்!
Priya vs Pallavi: ’’ஆணவத்திலும் திமிர்லயும் இருக்கீங்க’’ பள்ளி வளாகத்தில் மேயர் பிரியா- எம்எல்ஏ பல்லவி ஷாக் மோதல்!
Peddi Twitter Review: ராம் சரண் ஜான்வி கபூர் காம்போ..! ஆல்ரவுண்டராக பெத்தி படம் பிளாஸ்டா? ஃபிளாப்பா? திரைப்பட விமர்சனம்
ராம் சரண் ஜான்வி கபூர் காம்போ..! ஆல்ரவுண்டராக பெத்தி படம் பிளாஸ்டா? ஃபிளாப்பா? திரைப்பட விமர்சனம்
Alisa Abdullah: பச்சிளங்குழந்தை பற்றி அவதூறு பேச்சு - திருச்சி சூர்யா கைது, தலைமறைவான முக்தாருக்கு வலைவீச்சு
பச்சிளங்குழந்தை பற்றி அவதூறு பேச்சு - திருச்சி சூர்யா கைது, தலைமறைவான முக்தாருக்கு வலைவீச்சு
TVK Vijay: காங்கிரசுக்கு தூக்கிக் கொடுத்தது ஏன்? திமுக இருக்கக் கூடாது, டார்கெட் 2029? தவெகவின் திட்டம் என்ன?
காங்கிரசுக்கு தூக்கிக் கொடுத்தது ஏன்? திமுக இருக்கக் கூடாது, டார்கெட் 2029? தவெகவின் திட்டம் என்ன?
Tamilnadu Round Up: நாளை அமைச்சரவை கூட்டம், அரசுக்கு எதிராக வழக்கு,சிறுமிக்கு பாலியல் தொல்லை - தமிழ்நாட்டில் இதுவரை
நாளை அமைச்சரவை கூட்டம், அரசுக்கு எதிராக வழக்கு,சிறுமிக்கு பாலியல் தொல்லை - தமிழ்நாட்டில் இதுவரை
TNEB-யில் திருடப்பட்ட 18 ஹார்ட் டிஸ்குகள் - டெண்டர், கொள்முதல், விசாரணை ஆவணங்கள் எங்கே? சிக்குவது யார்?
TNEB-யில் திருடப்பட்ட 18 ஹார்ட் டிஸ்குகள் - டெண்டர், கொள்முதல், விசாரணை ஆவணங்கள் எங்கே? சிக்குவது யார்?
Embed widget