மேலும் அறிய

Thiruvarur: பாசன வாய்க்காலில் நீர் வராததால் கருகும் நிலையில் நெல் பயிர்கள் - விவசாயிகள் வேதனை

திருவாரூரில் பாசன வாய்க்காலில் தண்ணீர் வராததால் நேரடி நெல் பயிர்கள் கருகும் நிலை உருவாகியுள்ளதாக விவசாயிகள் வேதனை.

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதி தமிழக முதலமைச்சர் திறந்து வைத்தார். இந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு 15 நாட்கள் ஆன நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் தரையோடு தரையாக தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. திருவாரூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குருவை நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஆற்றில் செல்லக்கூடிய தண்ணீர் வாய்க்காலில் பாய்ந்தால் மட்டுமே விவசாயத்திற்கு பயன்படுத்த முடியும் என்ற நிலையில் திருவாரூர் அருகே மாங்குடி கல்யாணமாதேவி வடகரை சேந்தனாங்குடி தென்னவராயநல்லூர் திருநெய்பேர் உள்ளிட்ட கிராமங்களில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நேரடி நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

Thiruvarur: பாசன வாய்க்காலில் நீர் வராததால்  கருகும் நிலையில் நெல் பயிர்கள் - விவசாயிகள் வேதனை
 
இந்த நிலையில் பாண்டவையாற்றில் தண்ணீர் குறைந்த அளவு செல்வதால் அதிலிருந்து பிரியும் பாசன வாய்க்கால்களில் தண்ணீர் இல்லாத நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக இந்த பகுதிகளில் ஐந்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் நேரடி நெல் பயிர்கள் கருகும் நிலைக்கு உருவாகியுள்ளது. அது மட்டுமன்றி வயல்கள் தண்ணீர் இல்லாமல் வெடித்து காணப்படுகிறது. இன்னும் ஓரிரு தினங்களில் நெல் பயிர்களுக்கு தண்ணீர் வைக்கவில்லை என்றால் பயிர்கள் முற்றிலும் கருகி அழிந்து விடும் எனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

Thiruvarur: பாசன வாய்க்காலில் நீர் வராததால்  கருகும் நிலையில் நெல் பயிர்கள் - விவசாயிகள் வேதனை
 
உடனடியாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் பாண்டவையாற்றில் கூடுதலாக தண்ணீர் திறந்து விட்டு பாசன வாய்க்காலில் தண்ணீர் செல்வதை உறுதிப்படுத்த வேண்டும். இதுவரை ஒரு ஏக்கருக்கு 9 ஆயிரம் ரூபாய் செலவு செய்துள்ளதாகவும், குறிப்பாக உழவு அடிப்பதற்கு ஐந்தாயிரம் ரூபாயும் அண்டை போடுவதற்கு 1500 ரூபாய் விதை நெல் 1300 ரூபாயும் தண்ணீர் பாய்ச்ச தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் என 9 ஆயிரம்  செலவு செய்திருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். ஆகவே மாவட்ட நிர்வாகம் முறை வைக்காமல் கூடுதல் தண்ணீரை திறந்து விட வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
 

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

 

 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget