மேலும் அறிய

தஞ்சையில் முதன்முறையாக வரும் 11ம் தேதி நாய்கள் கண்காட்சி - மாவட்ட கலெக்டர் தகவல்

தஞ்சை நகரில் தெரு நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிவது குறித்து பலமுறை கலெக்டர் கவனத்திற்கு பொதுமக்கள் புகார்கள் கொண்டு சென்றனர்.

தஞ்சாவூர்: தஞ்சையில் வரும் 11-ந் தேதி நாய்கள் கண்காட்சி நடத்தப்பட உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் முதல் முறையாக இந்த கண்காட்சி நடைபெறுகிறது. இதில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் கலந்து கொள்ளலாம் என்று மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாதாக்கோட்டை சாலையில் உள்ள விலங்குகள் வதை தடுப்பு சங்க அலுவலக வளாகத்தில் (எஸ்.பி.சி.ஏ) மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. இதில் தலைமை வகித்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மரக்கன்றுகளை நட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

தஞ்சையில் வரும் 11-ந் தேதி நாய்கள் கண்காட்சி நடத்தப்பட உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் முதல் முறையாக இந்த கண்காட்சி நடைபெறுகிறது. இதில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் கலந்து கொள்ளலாம். தஞ்சை மாவட்டத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும். கண்காட்சியில் கலந்து கொள்ளும் நாய்களுக்கு விலையின்றி வெறிநோய் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாரம்பரிய நாய் வகைகளை பராமரித்து அவற்றின் முக்கியத்துவத்தை அனைவருக்கும் எடுத்து கூற வேண்டும். நாய் இனங்களை பாதுகாக்க வேண்டும், எஸ்.பி.சி.ஏ பணிகளை பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது. எஸ்.பி.சி.ஏ.வில் நாய்களுக்கு கருத்தடை செய்யும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

சுகாதாரமான முறையில் ஒரு ஆபரேஷன் தியேட்டரில் வைத்து இந்த பணி நடக்கிறது . கருத்தடை முடிந்து 3 நாட்களுக்கு நாய்களுக்கு தேவையான உணவு கொடுத்து பராமரித்த பின்னரே அவற்றை வெளியில் விடுகிறோம். எத்தனை நாய்களுக்கு கருத்தடை செய்ய வேண்டும் என்று ஒரு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அவற்றின் அடிப்படையில் பணி நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தஞ்சையில் முதன்முறையாக வரும் 11ம் தேதி நாய்கள் கண்காட்சி - மாவட்ட கலெக்டர் தகவல்

நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் தமிழ்ச்செல்வன், உதவி இயக்குனர் சையது அலி, ஒரத்தநாடு கால்நடை மருத்துவமனை கல்லூரி டீன் நர்மதா, தாசில்தார் சக்திவேல், நாஞ்சிக்கோட்டை ஊராட்சி தலைவர் சத்யராஜ், டாக்டர் ராதிகா மைக்கேல், பேராசிரியர் சுகுமார், லயன்ஸ் கிளப் முகமது ரபிக், பொறியாளர் முத்துக்குமார், எஸ்.பி.சி.ஏ உறுப்பினர் சதீஷ், தஞ்சை ராமதாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தஞ்சை நகரில் தெரு நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிவது குறித்து பலமுறை கலெக்டர் கவனத்திற்கு பொதுமக்கள் புகார்கள் கொண்டு சென்றனர். இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டு வருகிறது.

தஞ்சையில் நாய்கள் கண்காட்சி நடத்தப்பட உள்ளதாக கலெக்டர் தெரிவித்தது குறித்து பொதுமக்கள் கூறுகையில், “தஞ்சையில் இதுபோன்று நாய்கள் கண்காட்சி நடத்தப்படுவது முதல்முறை என்பதால் அதை பார்ப்பதற்கு ஆர்வமுடன் உள்ளோம். மேலும் வீட்டில் எந்த நாய் வகைகளை வளர்க்கலாம் என்பதையும் இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். வீடுகளை பாதுகாக்க சிறந்த நாய் வகை எது என்பதும் தெரிந்து கொள்ளும் ஆர்வம் உள்ளது. தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும் நாய் வளர்ப்பவர்கள் இந்த கண்காட்சி வருவார்கள் என்பதால் பல நாய்களின் வகைகள் குறித்து தெரிந்து கொள்ள இயலும்” என்று தெரிவித்தனர்.

 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget