மேலும் அறிய

தஞ்சை மாநகராட்சி ஆணையருக்கு எதிராக திமுகவினர், சாலையோர வியாபாரிகள் போராட்டம்

செருப்பு கடையில் வேலை பார்க்கும் தஞ்சை கரந்தையை சேர்ந்த ரமேஷ் (51) தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி

தஞ்சை அண்ணா சிலையில் இருந்து பனகல் கட்டிடம் செல்லக்கூடிய சாலையோரத்தில் செல்போன் கடைகள், துணிக்கடைகள், செல்போன் பழுது பார்க்கும் கடைகள், டீக்கடைகள், செருப்பு கடைகள் என 54 கடைகள் உள்ளன.  இக்கடைகள் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது. மழைநீர் வடிகால் மீது இந்த கடைகள் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கடைகளை அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மேலும் இந்த கடைகள் பகுதியில் மழைநீர் வடிகால் கட்டவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக கடைகளை காலி செய்ய மாநகராட்சி வலியுறுத்தியது. இந்த நிலையில் கடந்த 8ஆம் தேதி கடைகளை காலி செய்ய மாநகராட்சி அதிகாரிகள் பொக்லின் இயந்திரத்தோடு அங்கு சென்றனர். அப்போது அங்கிருந்த வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் கடைகள் இடிக்கப்படவில்லை. அப்பகுதியில் உள்ள கடை வியாபாரிகள் தொடர்ந்து கடைகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

தொடர்ந்து, தற்போது கடைகள் இருக்கும் இடத்திற்கு பின்பகுதியில் தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் கடைகளை இடிக்க ஏதுவாக மின் இணைப்பை துண்டிக்க மாநகராட்சி கடிதமும் மின் வாரியத்துக்கு எழுதி உள்ளது. இதனை தொடர்ந்து, மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கடைகளை இடிக்க போவதாக தகவல் பரவியது. இதையடுத்து அந்த பகுதியில் உள்ள வியாபாரிகள் மற்றும் தி.மு.க.வினர் அங்கு திரண்டு வந்தனர். இதையடுத்து தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ராஜகுமார் தலைமையில் அங்கு போலீசாரும் குவிக்கப்பட்டனர். கடை வியாபாரிகள் மற்றும் திமுகவினர் அந்த பகுதியில் சாலை ஓரம், காலை 10 மணி முதல் மாலைவரை அவர்கள் அங்கேயே திரண்டும், அமர்ந்திருந்தனர்.


தஞ்சை மாநகராட்சி ஆணையருக்கு எதிராக திமுகவினர், சாலையோர வியாபாரிகள் போராட்டம்

இது குறித்து திமுகவினர் கூறுகையில், இந்த கடைகளால் யாருக்கும் பாதிப்பு இல்லை. தற்போது கடைகளை இடிக்க வேண்டாம். இதனை நம்பி 500 குடும்பங்கள் உள்ளன. இங்கு கடைகள் இருந்தால் தான் எங்களுக்கு வாழ்வாதாரம். ஆனால் மாற்று இடம் கூட வழங்காமல் கடைகளை இடிக்க மாநகராட்சி முயல்கிறது.  மேலும், திமுக ஆட்சிக்கு பங்கம் விளைவிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், ஆணையர் செயல்படுகின்றார்கள். திமுக எம்எல்ஏ சார்பில், கொடுக்க செல்லும் நிர்வாகிகளை உள்ளே அனுமதிப்பதில்லை. தற்போதுள்ள ஆணையர் யாருக்கோ சகாயம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுகின்றார். இது குறித்து முதல்வரிடம் புகார் அளிக்கவுள்ளோம். உள்ளாட்சி தேர்தல் விரைவில் அறிவிக்க போகும் நிலையில், திமுக மீது ஆட்சி மீது பழிச்சொல் ஏற்படுத்த வேண்டும் என்று இது போன்ற பணியில் ஈடுபடுகின்றார்.  எனவே எங்களுக்கு இந்த பகுதிலேயே கடைகள் நடத்த அனுமதிக்க வேண்டும், வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும், எங்களின் வாழ்வாதாரத்தையும் காக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றனர்.

இந்நிலையில் மாலை 4 மணிக்கு இந்த கடைகளுக்கு செல்லும் மின்இணைப்புகளை துண்டிப்பதற்காக மாநகராட்சி அதிகாரிகள் வந்தனர். இதையடுத்து போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டனர். இதையடுத்து மின் இணைப்புகளை துண்டிப்பதற்காக மின் வாரிய அதிகாரிகள், ஊழியர்களும் அங்கு வந்தனர். அப்போது அங்கு திரண்டு இருந்த வியாபாரிகள் மற்றும் தி.மு.க.வினர் மாநகராட்சி அதிகாரிகள், போலீசாரை முற்றுகையிட்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர். அப்போது அங்கு செருப்பு கடையில் வேலை பார்க்கும் தஞ்சை கரந்தையை சேர்ந்த ரமேஷ் (51) தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். பின்னர் வியாபாரிகள், திமுகவினர் காப்பாற்றினர்.


தஞ்சை மாநகராட்சி ஆணையருக்கு எதிராக திமுகவினர், சாலையோர வியாபாரிகள் போராட்டம்

இதையடுத்து அங்கு இருந்த அவரை போலீசார் மீட்டு அவர் மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர்  ரமேஷை, போலீஸ் ஜீப்பில் ஏற்றி தஞ்சை நகர கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மின் வாரிய அதிகாரிகள், வியாபாரிகள் மற்றும் தி.மு.க.வினரும் கலைந்து சென்றனர். முன்னதாக வியாபாரிகள் அந்த பகுதியில் உள்ள கடைகளை அடைத்து இருந்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மண்ணின் உயிர் நண்பன் மண்புழு... மண்வளத்தை பெருக்கும் அற்புத சக்தி!
மண்ணின் உயிர் நண்பன் மண்புழு... மண்வளத்தை பெருக்கும் அற்புத சக்தி!
இதய நோய்கள் அதிகரிப்பு… உயிர் காக்க போராடும் அவசர சிகிச்சை பிரிவு: மீனாட்சி மருத்துவமனை நிபுணர்கள் விளக்கம்
இதய நோய்கள் அதிகரிப்பு… உயிர் காக்க போராடும் அவசர சிகிச்சை பிரிவு: மீனாட்சி மருத்துவமனை நிபுணர்கள் விளக்கம்
விவசாயிகளின் கொந்தளிப்பு... தஞ்சை கோட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!
விவசாயிகளின் கொந்தளிப்பு... தஞ்சை கோட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!
சிபிஐ, இ.டி. விசாரணை வந்தாலே அவுட்... விஜய்யின் ஸ்ட்ரிக்ட் அரசியல் முடிவு!
சிபிஐ, இ.டி. விசாரணை வந்தாலே அவுட்... விஜய்யின் ஸ்ட்ரிக்ட் அரசியல் முடிவு!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA
உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் தமிழ்ப்பெண் வழக்கறிஞர்! யார் இந்த மோகனா?
கோவை சிறுமி வழக்கு 2 பேர் மீதும் குண்டாஸ் வெளியவே வர முடியாது IG ரம்யா அதிரடி
காரை ஓட்டி கொன்ற சிறுவன் ஜாமீனில் வெளிவந்த தந்தை குத்தாட்டம் போட்ட குடும்பம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Ramesh: திருச்செந்தூரில் அடாவடி..! அமைச்சரிடமே ரூ.4000 லஞ்சம் வாங்கிய அர்ச்சகர்கள் - கொத்தாக சிக்கிய கும்பல்
திருச்செந்தூரில் அடாவடி..! அமைச்சரிடமே ரூ.4000 லஞ்சம் வாங்கிய அர்ச்சகர்கள் - கொத்தாக சிக்கிய கும்பல்
Minister Ramesh: சாமி கும்பிடுவதில் சிரமம்.. பக்தர்கள் நடத்தப்படும் விதத்தில் அதிருப்தி! அமைச்சர் ரமேஷ் உடனடியாக சரி செய்வாரா?
Minister Ramesh: சாமி கும்பிடுவதில் சிரமம்.. பக்தர்கள் நடத்தப்படும் விதத்தில் அதிருப்தி! அமைச்சர் ரமேஷ் உடனடியாக சரி செய்வாரா?
Top 10 News Headlines: “தமிழ்நாடு காங்கிரஸில் ஊழல்“, பினராயி விஜயன் மகளுக்கு சிக்கல், அமெரிக்காவிற்கு ஈரான் பதிலடி - 11 மணி செய்திகள்
“தமிழ்நாடு காங்கிரஸில் ஊழல்“, பினராயி விஜயன் மகளுக்கு சிக்கல், அமெரிக்காவிற்கு ஈரான் பதிலடி - 11 மணி செய்திகள்
கதறிய சிறுமி... மிரட்டிய கொடூரன்: மயிலாடுதுறையில் கேஸ் ஸ்டவ் மெக்கானிக்கை தட்டி தூக்கிய மகளிர் போலீஸ்!
கதறிய சிறுமி... மிரட்டிய கொடூரன்: மயிலாடுதுறையில் கேஸ் ஸ்டவ் மெக்கானிக்கை தட்டி தூக்கிய மகளிர் போலீஸ்!
Gold Silver Rate May 29th: போச்சுடா.! ரூ.5000 கூடிடுச்சே.! தங்கம், வெள்ளியின் இன்றைய விலை என்ன தெரியுமா.?
போச்சுடா.! ரூ.5000 கூடிடுச்சே.! தங்கம், வெள்ளியின் இன்றைய விலை என்ன தெரியுமா.?
திருச்சி - சார்லபள்ளி வாராந்திர ரயில் நிரந்தரச் சேவையாக மாறுகிறது... ரயில்வே நிர்வாகத்தின் அறிவிப்பு
திருச்சி - சார்லபள்ளி வாராந்திர ரயில் நிரந்தரச் சேவையாக மாறுகிறது... ரயில்வே நிர்வாகத்தின் அறிவிப்பு
CV Shanmugam: சிவி சண்முகம் தவெக-வில் இணைவது உறுதி? விஜய் தரப்போகும் பதவி என்ன தெரியுமா?
CV Shanmugam: சிவி சண்முகம் தவெக-வில் இணைவது உறுதி? விஜய் தரப்போகும் பதவி என்ன தெரியுமா?
Hardik Pandya: ”நீ கிளிச்ச வரைக்கும் போதும்” சொந்த காசில் சூனியம் - ஹர்திக்கிற்கு கும்புடு, ரோகித்தை நாடும் மும்பை
”நீ கிளிச்ச வரைக்கும் போதும்” சொந்த காசில் சூனியம் - ஹர்திக்கிற்கு கும்புடு, ரோகித்தை நாடும் மும்பை
Embed widget