மேலும் அறிய

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அரசு ஊழியர் - மாவட்ட ஆட்சியருக்கு எதிராக அரசு ஊழியர்கள் போராட்டம்

உண்மை நிலையினை ஆராயாமல் மாவட்ட கலெக்டர் தனிச்சையாக நடவடிக்கை எடுத்துள்ளதாக புகார்

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் பணி நீக்கம், தற்காலிகப் பணி நீக்கத்தை ரத்து செய்ய  வலியுறுத்தி, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக முன்பு ஊராக வளர்ச்சி துறை அலுவலர்கள் கூட்டமைப்பு சார்பில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் ராஜன் தலைமை வகித்தார். ஊரக வளர்ச்சித் துறை பொறியாளர் சங்க மாவட்டத் தலைவர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். இதில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் உண்மை நிலையினை ஆராயாமல், ஊழியர்களின் விளக்கத்தினை கேட்காமல், அதிகாரத்தை பயன்படுத்தி,  தன்னிச்சையாக, முடிவெடுத்து தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள உதவி பொறியாளர் ஹேமலதா, பணிமேற்பார்வையாளர்கள் திருமாறன், செந்தில்குமார் ஆகியோரின்தற்காலிக பணிநீக்கத்தினையும், கணினி உதவியாளர் சாந்தி பணி நீக்கத்தினையும், மாவட்ட ஆட்சியர் உடனடியாக விலக்கி கொள்ள வேண்டும்.இப்பிரச்சினை தொடர்பாக கூட்டமைப்பு நிர்வாகிகளுடன், மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தி, சுமுக தீர்வு காணவேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.


பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அரசு ஊழியர் - மாவட்ட ஆட்சியருக்கு எதிராக அரசு ஊழியர்கள் போராட்டம்

இந்நிலையில், மாவட்ட நிர்வாகம் கோரிக்கை தொடர்பாக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வந்தனர். இதுவரை தற்காலிக பணி நீக்கம், பணி நீக்கம் ரத்து செய்யப்படாத நிலையில், தஞ்சாவூர் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள்  ஒட்டுமொத்த சிறுவிடுப்பு போராட்டம் எடுத்து, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் கவன ஈர்ப்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.  இதனால் அன்றாடம் நடைபெறும் பணிகள் தேக்கமடைந்தன. இதில், மாவட்ட கலெக்டரின் எதேச்சதிகாரப் போக்குடன் ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்களிடம் நடந்து கொள்வதை கண்டித்து முழக்கங்கள் எழுப்பட்டன. தொடர்ந்து மாலை கூட்டமைப்பு கூட்டத்தில் அடுத்த கட்ட போராட்டத்தினை நடத்துவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என நிர்வாகிகள் தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஊராக வளர்ச்சி துறை அனைத்து நிலை பணியாளர்கள் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அரசு ஊழியர் - மாவட்ட ஆட்சியருக்கு எதிராக அரசு ஊழியர்கள் போராட்டம்

இதுகுறித்து போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள்கூறுகையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் உண்மை நிலையினை ஆராயாமல் மாவட்ட கலெக்டர் தனிச்சையாக நடவடிக்கை எடுத்துள்ளார். ஊழியர்களை அழைத்து உரிய விசாரணை செய்து, உண்மை தன்மையை தெரிந்து கொண்டு, தவறுகள் செய்திருந்தால், நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் மாவட்ட கலெக்டர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி தற்காலிக பணி நீக்கம் செய்திருப்பது, அவரது அதிகார போக்கை காட்டுகின்றது. பலத்த மழையிலும், கஷ்டப்பட்டு, ஆண், பெண்கள் பணியாளர்கள், பணியினை மேற்கொண்டு வரும் போது, உரிய விசாரணை செய்யாமல் நடவடிக்கை எடுத்துள்ளார். இது போன்ற நடவடிக்கையால், மற்ற பணியாளர்களுக்கும் இது போன்ற நிலை வந்தால், அவர்களுக்கும் இதே நிலை தான் ஏற்படும். மாவட்ட கலெக்டர் உடனடியாக தற்காலிகமாக பணி நீக்கத்தை ரத்து செய்யா விட்டால், தொடர் போராட்டம் விரைவில் நடத்தப்படும் என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

கதறிய தாய்... கரம் கொடுத்த மனிதநேயம்: கும்பகோணத்தை நெகிழ வைத்த பாசப்போராட்டம்
கதறிய தாய்... கரம் கொடுத்த மனிதநேயம்: கும்பகோணத்தை நெகிழ வைத்த பாசப்போராட்டம்
ராஜகுருவாக அருள்பாலிக்கும் குரு பகவான்: திட்டை கோயிலில் நாளை குருபெயர்ச்சி சிறப்பு வழிபாடு!
ராஜகுருவாக அருள்பாலிக்கும் குரு பகவான்: திட்டை கோயிலில் நாளை குருபெயர்ச்சி சிறப்பு வழிபாடு!
டெல்லி ஜனாதிபதி மாளிகையில் இன்று தமிழர்களின் பெருமை நாள்!
டெல்லி ஜனாதிபதி மாளிகையில் இன்று தமிழர்களின் பெருமை நாள்!
பல சுவைகள் சேர்ந்த சங்கமம்… தஞ்சை மணம் வீசும் கதம்ப சாதம்!
பல சுவைகள் சேர்ந்த சங்கமம்… தஞ்சை மணம் வீசும் கதம்ப சாதம்!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

3 அதிமுக MLA ராஜினாமா ஆட்டத்தை தொடங்கிய தவெக அதிர்ச்சியில் SP வேலுமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jose Charles Martin: மதத்தைக் காட்டி ஜோஸ் மார்ட்டினுக்கு அமைச்சர் பதவி மறுப்பா? பாண்டிச்சேரியில் நடப்பது என்ன?
Jose Charles Martin: மதத்தைக் காட்டி ஜோஸ் மார்ட்டினுக்கு அமைச்சர் பதவி மறுப்பா? பாண்டிச்சேரியில் நடப்பது என்ன?
Horse Trading : ‘குதிரை பேரம்’ என்றால் என்ன ? எதற்கு அரசியலில் இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது..?
‘குதிரை பேரம்’ என்றால் என்ன ? சொல்ல காரணம் இதுதான்!
Junior NTR: அரைச்ச மாவையே அரைக்காதீங்க! கேஜிஎஃப் இயக்குனர் பிரசாந்த் நீலை கழுவி ஊற்றும் ரசிகர்கள்!
Junior NTR: அரைச்ச மாவையே அரைக்காதீங்க! கேஜிஎஃப் இயக்குனர் பிரசாந்த் நீலை கழுவி ஊற்றும் ரசிகர்கள்!
" அப்பா ஆட்சி நடப்பதாக உதயநிதி நினைக்கிறார் " அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் பதிலடி
Edappadi Palanisami: புதிய கரகாட்ட கோஷ்டிக்கு விரைவில் பாடம்.. தவெக-வை வறுத்தெடுத்த எடப்பாடி பழனிசாமி!
Edappadi Palanisami: புதிய கரகாட்ட கோஷ்டிக்கு விரைவில் பாடம்.. தவெக-வை வறுத்தெடுத்த எடப்பாடி பழனிசாமி!
இடி, மின்னலுடன் வெளுக்கப்போகும் மழை - தமிழகத்தின் மழை மற்றும் வெப்பநிலை நிலவரம் இதோ
இடி, மின்னலுடன் வெளுக்கப்போகும் மழை - தமிழகத்தின் மழை மற்றும் வெப்பநிலை நிலவரம் இதோ
CV Shanmugam: சிவி சண்முகத்தை நம்புனது தப்பா போச்சே! கதி கலங்கி நிற்கும் EPS எதிர்ப்பு அதிமுக MLA-க்கள்!
CV Shanmugam: சிவி சண்முகத்தை நம்புனது தப்பா போச்சே! கதி கலங்கி நிற்கும் EPS எதிர்ப்பு அதிமுக MLA-க்கள்!
’TVK அலுவலகமாக மாறிய தலைமைச் செயலகம்?’ விமர்சனத்திற்குள்ளாகும் அமைச்சர்களின் செயல்பாடுகள்..!
’TVK அலுவலகமாக மாறிய தலைமைச் செயலகம்?’ இங்குதான் உறுப்பினர் சேர்க்கையா!
Embed widget