மேலும் அறிய

’மயிலாடுதுறையில் மாற்றுத்திறனாளியிடம் 2000 லஞ்சம்’- மனிதாபிமானமற்ற தனி வட்டாட்சியர் கைது

’’லஞ்சம் கொடுக்க மனம் இல்லாததால் இதுகுறித்து நாகை லஞ்ச ஒழிப்பு  போலீசாரிடம் ராமச்சந்திரன் புகார் மனு கொடுத்தார்’’

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே காரைமேடு கிராமத்தை சேர்ந்தவர் 61 வயதான ராமச்சந்திரன். இவரது மனைவி தையல்நாயகி. மாற்று திறனாளியான  இவருக்கு மாற்று திறனாளி சான்று வழங்கி  உதவி தொகை கோரி தரங்கம்பாடி தாலுகா அலுவலகத்தில் உள்ள சமூக பாதுகாப்பு தனி தாசில்தார் பாலமுருகனிடம் விண்ணப்பித்து இருந்தார். அதற்கு 2000 ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என்று சமூக பாதுகாப்பு நலத்துறை தனி தாசில்தார் பாலமுருகன் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.


’மயிலாடுதுறையில் மாற்றுத்திறனாளியிடம் 2000 லஞ்சம்’- மனிதாபிமானமற்ற தனி வட்டாட்சியர் கைது

லஞ்சம் கொடுக்க மனம் இல்லாததால் இதுகுறித்து நாகை லஞ்ச ஒழிப்பு  போலீசாரிடம் ராமச்சந்திரன் புகார் மனு கொடுத்தார். புகாரை பெற்று கொண்ட நாகை லஞ்ச ஒழிப்பு துறை துணை சூப்பிரண்டு சித்திர வேலு தலைமையில் லஞ்சம் ஒழிப்பு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ் குமார், அருள்மொழி மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் தரங்கம்பாடி தாசில்தார் அலுவலகத்திற்கு மாறு வேடத்தில் வந்தனர். அப்போது ராமச்சந்திரனிடம் போலீசார் ரசாயன பவுடர் தடவிய ரூபாய்  2 ஆயிரத்தை கொடுத்து அனுப்பி ரகசியமாக கண்காணித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X

அதனைத் தொடர்ந்து பணத்தை பெற்று கொண்ட தனி தாசில்தார் பாலமுருகனை மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் கையும் களவுமாக  பிடித்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை  கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


’மயிலாடுதுறையில் மாற்றுத்திறனாளியிடம் 2000 லஞ்சம்’- மனிதாபிமானமற்ற தனி வட்டாட்சியர் கைது

நல்ல உடல்நிலை உள்ளவர்கள் ஏதேனும் ஒரு வகையில் தங்களுக்கான வாழ்வாதாரத்திற்கு வருவாயினை உருவாக்கி கொள்கின்றனர். ஆனால்  உடலளவில் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கான வாழ்வாதாரத்திற்கான வருவாய் என தேட முடியாத சூழலில் அரசு அவர்களுக்கு உதவித்தொகையினை வழங்கி வருகிறது. அந்த உதவி தொகையினை பெறுவதற்கு அரசு வழிவகை செய்தாலும் அதனைப் பெறுவதற்கு அதிகாரிகள் பெறும் முட்டுக்கட்டைகளாக இருந்து வருகின்றனர்.  


’மயிலாடுதுறையில் மாற்றுத்திறனாளியிடம் 2000 லஞ்சம்’- மனிதாபிமானமற்ற தனி வட்டாட்சியர் கைது

அவர்களின் நிலையை சற்றும் மனதில் கொள்ளாமல்  அவர்களிடம் லஞ்சம் கேட்டு அவர்களை அலைக்கழிப்பதும், இடம் லஞ்சம் பெற்று உதவித்தொகை வழங்கி வருவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. பலரும் இதுதொடர்பாக அவர் அளிக்க தயங்கி தங்களுக்கு காரியம் நடந்தால் போதும் என லஞ்சம் கேட்கும் அதிகாரிகளுக்கு அவர்கள் கேட்கும் நிறைஞ்ச தொகையை கொடுத்து விடுகின்றனர். இதற்கு அப்பாற்பட்டு ஒரு சிலர் மட்டும் லஞ்சம் கொடுக்க மனமின்றி, இதுகுறித்த புகாரினை லஞ்ச ஒழிப்புத் துறை யினருக்கு தகவல் அளிக்கின்றனர். இனிவரும் காலங்களில் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் குறித்து அனைவரும் புகார் தெரிவித்தால் மட்டுமே இதுபோன்ற நிகழ்வினை தடுக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget