மேலும் அறிய

தஞ்சாவூரில் வாய்க்காலில் இறங்கி சடலத்தை எடுத்துச் செல்லும் அவலம்...!

’’வெயில் காலங்களிலும், வாய்க்காலில் தண்ணீர் வராதபோதும் வாய்க்காலில்  இறங்கி மறுகரைக்கு கொண்டு சென்று இறுதிச் சடங்குகள் நடத்தி வருகின்றோம்’’

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள வீரியங்கோட்டை கிராமம் ஆதிதிராவிடர் தெருவைச் சேர்ந்தவர் ராக்கன். முன்னாள் ராணுவ வீரர். இவரது மகன் மகாலிங்கம் (50) விவசாயி. இவர் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார். இந்நிலையில் அவருடைய இறுதிச் சடங்கு நடைபெற்று,  பின்னர் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. அப்போது, வீரியங்கோட்டை ஆதிதிராவிடர் தெருவில் இருந்து முடச்சிக்காடு செல்லும் சாலையில் உள்ள ஆதி திராவிடர்களுக்கான மயானத்திற்கு செல்லும் பாதையின் குறுக்கே கல்லணை கால்வாயின், கிளை பாசன வாய்க்கால் உள்ளது.

அந்த வாய்க்காலில், தற்போது அதிகமாக தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. அதனை பொருட்ப்படுத்தாமல், இறந்தவரின்,  சடலத்துடன் உறவினர்கள் வாய்க்காலில் இறங்கி அதனை கடந்து மறுபுறம் சென்று, சுடுகாட்டில், மகாலிங்கம் உடலுக்கு இறுதி நிகழ்ச்சிகளை  செய்தனர். இதனால் அக்கிராம மக்கள் மிகவும் வேதனைக்குள்ளாகியுள்ளனர். கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இது போன்ற நிலைஇருப்பது குறித்து, எந்த அதிகாரியும் கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனையான விஷயமாகும்.

எனவே, மாவட்ட நிர்வாகம், வீரியங்கோட்டை கிராமம் ஆதிதிராவிடர் தெருவில் இறந்தவர்களின் உடலை எடுத்து செல்லும் வகையில், பாலம் அமைத்து தர வேண்டும் என அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில்,

வெயில் காலங்களிலும், வாய்க்காலில் தண்ணீர் வராதபோதும் வாய்க்காலில்  இறங்கி மறுகரைக்கு கொண்டு சென்று இறுதிச் சடங்குகள் நடத்தி வருகின்றோம். மழை காலங்களிலும், வாய்க்காலில் தண்ணீர் வரும் போதும், சடலத்தை வாய்க்காலை கடந்து மறுபுறம் கொண்டு செல்ல அவதிப்பட்டு வருகிறோம்.  இது போன்ற அவல நிலையால், வருடந்தோறும் வாய்க்காலில் தண்ணீர் வரும், இறந்தவர்களின் உடலை எடுத்து செல்லும் அவலம் குறித்து, மாவட்ட நிர்வாகத்திடம் புகைப்படத்துடன், பாலம் கட்டித்தரவேண்டும் என புகாரளிப்போம். அதன் பிறகு அதிகாரிகள், கடமைக்காக வந்து பார்வையிட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி விட்டு சென்றுவிடுவார்கள். அதன் பிறகு வாய்க்காலில் தண்ணீர் வராமல் போய் விடும், நாங்களும் அப்படியே விட்டு விடுவோம்.


தஞ்சாவூரில் வாய்க்காலில் இறங்கி சடலத்தை எடுத்துச் செல்லும் அவலம்...!

 சில நேரங்களில் வாய்க்காலில் அதிகமாக தண்ணீர் வந்தால், உடலை எடுத்து செல்வதற்குள் பெரும் சிரமத்துக்குள்ளாகி விடும். நீச்சல் தெரிந்த இளைஞர்கள் என ஒரு சிலர் சென்று விடுவார்கள். ஆனால் முதியவர்கள், சிறுவர்கள் கரையில் அமர்ந்து விடுவார்கள். இதனால் இறுதி நிகழ்ச்சியை கூட நிம்மதியாக செய்ய முடியாத நிலை உள்ளது. சாலை வழியாக சென்றால் சுமார் 5 கிலோ மீட்டர் துாரம் சுற்றி செல்ல வேண்டியிருப்பதால், ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள் இயற்கை எய்தினால், கூடுதலாக செலவாவதால், வேறு வழியில்லாமல் வாய்க்காலில் இறங்கி செல்கின்றனர் என்பது வேதனைக்குரியதாகும்.

கடந்த ஐம்பது ஆண்டுகளாக இதே நிலை நீடித்து வருவதால், எங்களின் நிலையை எந்த அதிகாரியும் கண்டு கொள்ளவில்லை. எங்களின் ஊரில் இறந்தவர்களின் உடலை எடுத்து செல்ல வேண்டுமானால், இறந்த சோகத்தை விட, அந்த உடலை எடுத்து சென்று இறுதி நிகழ்ச்சி செய்வதற்குள் பெரும் மனஉளைச்சலுக்குள்ளாகி வருகின்றோம். எனவே,  கடந்த 50 ஆண்டுகளாக பாலம் கேட்டு கோரிக்கை வைத்துள்ள நிலையில், தற்போது வந்துள்ள தமிழக அரசு, வாய்க்காலின் குறுக்கே உடலை எடுத்து செல்லும் வகையில், காங்கீரீட் பாலம்  அமைத்து தந்தால் சடலத்தைக் கொண்டு செல்ல வசதியாக இருக்கும்  என்று தெரிவித்தனர்.

தலைப்பு செய்திகள்

தஞ்சையில் இஞ்சி விலை கிடுகிடு உயர்வு! வரத்து குறைந்ததால் உச்சம்: இல்லத்தரசிகள் அதிர்ச்சி
தஞ்சையில் இஞ்சி விலை கிடுகிடு உயர்வு! வரத்து குறைந்ததால் உச்சம்: இல்லத்தரசிகள் அதிர்ச்சி
ரேஷன் அரிசி கடத்தினால் கைது மட்டும் இல்லை... குண்டர் சட்டமும் பாயும்!
ரேஷன் அரிசி கடத்தினால் கைது மட்டும் இல்லை... குண்டர் சட்டமும் பாயும்!
பயமுறுத்தும் பட்டுப்போன மரம்... பள்ளி மாணவர்களுக்கு அபாயம்: வெட்டி அகற்ற வலியுறுத்தல்
பயமுறுத்தும் பட்டுப்போன மரம்... பள்ளி மாணவர்களுக்கு அபாயம்: வெட்டி அகற்ற வலியுறுத்தல்
சாலையை இரண்டாகப் பிரிக்கும் பள்ளம்! சித்திரக்குடி – ஆலக்குடி சாலையில் விபத்து அபாயம்
சாலையை இரண்டாகப் பிரிக்கும் பள்ளம்! சித்திரக்குடி – ஆலக்குடி சாலையில் விபத்து அபாயம்

வீடியோ

Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்
ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Layola Mani : ‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர் – தனி மனித தாக்குதல்..?
‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர்..!
DMK vs Vaiko : வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
Iran Hits American Bases: அமெரிக்க தளங்களை போட்டு சாத்திய ஈரான்; ‘கண்ணுக்கு கண்‘ ஆபரேஷனில் பேட்ரியாட் அமைப்புகள் அழிப்பு
அமெரிக்க தளங்களை போட்டு சாத்திய ஈரான்; ‘கண்ணுக்கு கண்‘ ஆபரேஷனில் பேட்ரியாட் அமைப்புகள் அழிப்பு
Trump Vs Iran Hormuz: ட்ரம்ப்பின் வாய்ச்சவடால்.! ஹார்முஸை கட்டுப்பாட்டில் எடுத்து வசூல் செய்யப் போவதாக பேச்சு; ஈரான் பதிலடி
ட்ரம்ப்பின் வாய்ச்சவடால்.! ஹார்முஸை கட்டுப்பாட்டில் எடுத்து வசூல் செய்யப் போவதாக பேச்சு; ஈரான் பதிலடி
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
US Iran War: வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
Yamaha EC 06 Milage: ஒரே சார்ஜில் யமாஹா EC 06 EV ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் என்ன.? இந்த டெஸ்ட் ரிசல்ட்ட பாருங்க
ஒரே சார்ஜில் யமாஹா EC 06 EV ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் என்ன.? இந்த டெஸ்ட் ரிசல்ட்ட பாருங்க
RS BHARATHI : செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
Embed widget